search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அஜித்துக்கு வாழ்த்து சொல்லி சர்ச்சையில் சிக்கிய சுசீந்திரன்
    X

    அஜித்துக்கு வாழ்த்து சொல்லி சர்ச்சையில் சிக்கிய சுசீந்திரன்

    இயக்குனர் சுசீந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். #Thala #Ajith #Suseenthiran
    நேற்று நடிகர் அஜித்துக்கு பிறந்த நாள். இவருக்கு திரையுல பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறினார்கள். அதுபோல் இயக்குனர் சுசீந்திரனும் அஜித் சார் எனக்கு உதவினார் என்ற தலைப்பில் ஒரு பதிவு செய்தார்.

    அதில், “நான் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கும்போது எனது நண்பன் உதவி இயக்குனர் ரோஜா ரமணன் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனது ஆபரேசனுக்கு 3 லட்ச ரூபாய் பணம் தேவைப்பட்டது. நானும், எனது நண்பர்களும் சேர்ந்து சினிமா துறையில் உள்ள அனைவரிடமும் பண உதவி பெற்றோம்.

    அப்பொழுதுதான் முதன் முதலில் ஜனா படத்தின் படப்பிடிப்பில் அஜித் சாரை சந்தித்தேன். ரோஜா ரமணனின் நிலையை கூறினேன். அப்பொழுதே முகம் தெரியாத சகதொழிலாளிக்கு அதிக பணம் கொடுத்து உதவியவர் அஜித் சார் தான். அன்று முதல் அஜித் சார் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. அஜித் சாருக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று பதிவு செய்தார். இதற்கு அஜித் ரசிகர்கள் பலரும் சுசீந்திரனை பாராட்டி வந்தனர்.

    பின்னர், சுசீந்திரனின் இந்தப் பதிவு தவறு, பொய் என்று சக இயக்குனரான இலக்கியன் கூறினார்.



    “இந்த செய்தி முற்றிலும் பொய். இதை ரோஜா ரமணின் ஆன்மாவே மன்னிக்காது. அஜித்திடம் பேசியது நான். அஜித் சார் அந்த சமயத்தில் பெரியதாக பண உதவி செய்யவில்லை. அஜித் சாரிடம் கால்ஷீட் வாங்கவே அஜித் சாரை பற்றி சுசீந்திரன் தொடர்ந்து தவறான தகவலை பரப்பி வருகிறார்.’’

    பி.கு : இது நடந்த சமயம் ஜனா பட சூட்டிங் கிடையாது.
    வில்லன் பட சூட்டிங்” என இலக்கியன் பதிவிட்டுள்ளார்’ என்று கூறினார்.

    இலக்கியன் இவ்வாறு பதிவு செய்தது, சூசிந்திரனின் சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை காரணமாக அஜித் நல்லவரா, கெட்டவரா, உதவி செய்தாரா, இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
    Next Story
    ×