search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நான் சம்பளத்தை உயர்த்தினால் மற்றவர்களுக்கு என்ன? - மணிரத்னம் பட நாயகி
    X

    நான் சம்பளத்தை உயர்த்தினால் மற்றவர்களுக்கு என்ன? - மணிரத்னம் பட நாயகி

    மணிரத்னம் படத்தில் கதாநாயகியாக நடித்த அதிதிராவ் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் சம்பளத்தை உயர்த்தினால் மற்றவர்களுக்கு என்ன என்று கூறியிருக்கிறார். #AditiRao
    தமிழ், இந்தி, மலையாள படங்களில் நடித்து வருபவர் அதிதிராவ். மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். இப்போது மீண்டும் மணிரத்னம் இயக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார்.

    தனது திரை உலக பயணம் பற்றி அதிதிராவ் அளித்த பேட்டி....

    “நான் தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பது தனி அனுபவம். நான் சம்பளத்தை உயர்த்திவிட்டதாக சிலர் பேசுகிறார்கள். இதுபற்றி கவலைப்பட வேண்டியது தயாரிப்பாளர்கள் தான். மற்றவர்களுக்கு என்ன வந்தது என்று தெரியவில்லை.

    சம்பளத்தை விட நல்ல படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். நான் மார்டன் உடை அணிந்தாலும் குடும்பபாங்கான பெண் போலவே தெரியும். எனக்கு கவர்ச்சி வேடம் பொருத்தமாக இருக்காது”.



    ‘காற்று வெளியிடை’ படத்தில் அதிதிராவ் நடிப்பு நன்றாக இருந்ததால், ‘செக்கச்சிவந்த வானம்’ படத்திலும் மணிரத்னம் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். இதில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். எனவே, இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    Next Story
    ×