search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தாய் மொழிக்கு ரஜினி துரோகம் செய்கிறார் - பாரதிராஜா
    X

    தாய் மொழிக்கு ரஜினி துரோகம் செய்கிறார் - பாரதிராஜா

    நான் ஒரு தமிழன் என ரஜினி கூறுவது அவரது தாய் மொழிக்கு செய்யும் துரோகம் என்று இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார். #Rajinikanth #Bharathiraja
    காவிரி மேலாண்மை அமைக்க கோரி பாரதிராஜாவின் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டு பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த், ‘வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து’ என்று கூறினார்.

    இதற்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரஜினி தமிழன் அல்லாத கர்நாடக்காவியின் தூதுவர் என்று கூறியிருந்தார். இதற்கு ரஜினி மன்றம் சார்பில் விளக்கம் அளித்தனர். மேலும் பாரதிராஜா உங்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறாரா என்று ரஜினியிடம் கேட்டதற்கு, அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்று கூறினார்.

    இந்நிலையில் பாரதிராஜா, ‘நான் ஒரு தமிழன் என ரஜினி கூறுவது அவரது தாய் மொழிக்கு செய்யும் துரோகம். தாய் மொழிக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவர்களை எப்படி ரஜினி காப்பாற்றுவார்? முதலில் எதிரியை துரத்துவோம்; பின்னர் அண்ணன், தம்பி பிரச்னைகளை பார்த்துக்கொள்வோம்’ என்று கூறியிருக்கிறார்.
    Next Story
    ×