என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
படுக்கைக்கு அழைத்தால் சும்மா விட மாட்டேன் - ராஷி கண்ணா காட்டம்
Byமாலை மலர்23 April 2018 7:32 AM GMT (Updated: 23 April 2018 7:32 AM GMT)
நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது சர்ச்சையாகி இருக்கும் நிலையில், என்னை யாராவது அழைத்தால் அவர்களை சும்மா விட மாட்டேன் என்று நடிகை ராஷி கண்ணா கோபமாக தெரிவித்துள்ளார். #rashikhanna
நயன்தாராவுடன் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடிப்பவர் ராஷி கண்ணா. சித்தார்த் ஜோடியாக ‘சைத்தான் கா பச்சா’, ஜெயம் ரவியுடன் `அடங்க மறு' படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார்கள் தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ராஷி கண்ணாவும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. எனக்கு அதுமாதிரி சம்பவங்கள் இது வரை நடக்கவில்லை. என்னை யாரேனும் அழைத்தால் சும்மா விட மாட்டேன். அவர்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பேன். போராடவும் தயங்க மாட்டேன்.
எனக்கு யார்மீதும் பயம் கிடையாது. சமீபத்தில் ஜார்ஜியா சென்ற போது மலைப்பாம்பையே கையில் பிடித்து பக்கத்தில் நின்றவர்களை அதிர வைத்தேன். இந்த தைரியம் எனது பாட்டியிடம் இருந்து வந்தது. அவருக்கும் பயம் கிடையாது” என்றார்.
மேலும் ராஷி கண்ணா கூறியதாவது:-
“காதல் என்பது இனிமையான அனுபவம். 17 வயதில் எனக்கு காதல் வந்து முடிந்துவிட்டது. இப்போது சினிமாவில்தான் முழு கவனமும் இருக்கிறது. நான் காதலித்தால் 100 சதவீதம் உண்மையாக இருப்பேன். காதல் திருமணம் செய்து கொள்ள ஆசை இருக்கிறது. சினிமா நடிகையாவேன் என்று நினைக்கவில்லை. படித்து முடித்ததும் மாடலிங் செய்தேன். அதை பார்த்து இந்தி படங்களில் வாய்ப்பு வந்தது. அதன்பிறகு தெலுங்கு படங்களில் நடித்தேன். தமிழிலும் 3 படங்களில் நடித்து வருகிறேன்.”
இவ்வாறு ராஷி கண்ணா கூறினார்.
ராஷி கண்ணாவும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. எனக்கு அதுமாதிரி சம்பவங்கள் இது வரை நடக்கவில்லை. என்னை யாரேனும் அழைத்தால் சும்மா விட மாட்டேன். அவர்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பேன். போராடவும் தயங்க மாட்டேன்.
எனக்கு யார்மீதும் பயம் கிடையாது. சமீபத்தில் ஜார்ஜியா சென்ற போது மலைப்பாம்பையே கையில் பிடித்து பக்கத்தில் நின்றவர்களை அதிர வைத்தேன். இந்த தைரியம் எனது பாட்டியிடம் இருந்து வந்தது. அவருக்கும் பயம் கிடையாது” என்றார்.
மேலும் ராஷி கண்ணா கூறியதாவது:-
“காதல் என்பது இனிமையான அனுபவம். 17 வயதில் எனக்கு காதல் வந்து முடிந்துவிட்டது. இப்போது சினிமாவில்தான் முழு கவனமும் இருக்கிறது. நான் காதலித்தால் 100 சதவீதம் உண்மையாக இருப்பேன். காதல் திருமணம் செய்து கொள்ள ஆசை இருக்கிறது. சினிமா நடிகையாவேன் என்று நினைக்கவில்லை. படித்து முடித்ததும் மாடலிங் செய்தேன். அதை பார்த்து இந்தி படங்களில் வாய்ப்பு வந்தது. அதன்பிறகு தெலுங்கு படங்களில் நடித்தேன். தமிழிலும் 3 படங்களில் நடித்து வருகிறேன்.”
இவ்வாறு ராஷி கண்ணா கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X