என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பன் சாப்பிட்டுகிட்டு குரல் கொடுத்த சமந்தா
Byமாலை மலர்19 April 2018 1:41 PM GMT (Updated: 19 April 2018 1:41 PM GMT)
சமந்தா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘நடிகையர் திலகம்’ படத்திற்காக பன் சாப்பிட்டுகிட்டு தன்னுடைய டப்பிங்கை முடித்துக் கொடுத்திருக்கிறார். #Samantha
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் தமிழிலும், ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கிலும் உருவாகி வருகிறது. இப்படத்தை நாக் அஷ்வின் இயக்கி வருகிறார். சாவித்ரி 1950, 60-களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்து பல அற்புதமான படங்களில் நடித்துள்ளார்.
இதில் சாவித்ரியின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும், ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். சமந்தா ரிப்போர்டராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். மேலும் முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நடிகை சமந்தா, தனது காட்சிகளுக்கான டப்பிங் பணியை முடித்திருக்கிறார். அதுவும் பன் சாப்பிட்டுகிட்டே டப்பிங் பேசி முடித்திருக்கிறார். இதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் சமந்தா.
இப்படத்தை வருகிற மே 9-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X