என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சமூக வலைத்தளத்தில் தன்னை விமர்சித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த டாப்சி
Byமாலை மலர்19 April 2018 6:44 AM GMT (Updated: 19 April 2018 6:44 AM GMT)
தமிழில் ஆடுகளம், ஆரம்பம் படங்கள் மூலம் பிரபலமான நடிகை டாப்சியை சமூக வலைத்தளத்தில் விமர்சித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் ஆடுகளம், ஆரம்பம் படங்கள் மூலம் பிரபலமான டாப்சி தெலுங்கு, இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமீபத்தில் அவருடைய புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், “நீ சராசரியான பொண்ணுதான். உன்னையெல்லாம் கதாநாயகி ஆக்கியது யார்?” என்று கேள்வி எழுப்பி கருத்து வெளியிட்டார்.
இது டாப்சிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. “கொஞ்சமாக நடிப்பதால்தான் என்னை கதாநாயகி ஆக்கி விட்டார்கள். நான் சராசரியான பெண்ணாக இருப்பதில் பிரச்சினை இல்லையே. இந்த உலகத்தில் நீங்கள் சொன்ன மாதிரியான சராசரி பெண்கள்தான் அதிகம் பேர் இருக்கிறார்கள்” என்று சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுத்தார். இதனால் விமர்சன கருத்தை அந்த ரசிகர் சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கி விட்டார். டாப்சி இந்தியில் 4 படங்களில் நடித்து முடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
“இந்தியில் தட்கா, சூர்மா, முல்க், மன்மரிஷியான் ஆகிய படங்களில் நடிக்கிறேன். இவற்றின் படப்பிடிப்புகள் முடிந்துள்ளன. நாம் சபானா, பிங்க் படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தின. சில படங்கள் கதாநாயகர்களுக்காகவே ஓடும். பிங்க் படத்தில் அமிதாப்பச்சன் இருந்தது வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அவருக்காக தியேட்டரில் கூட்டம் வந்தது.
சினிமாவில் எனக்கென்று புதிய பாணியை உருவாக்கி இருக்கிறேன். எனது முழு நடிப்பு திறமையை காட்டும் கதையம்சம் உள்ள படம் இன்னும் அமையவில்லை. அந்த கதைக்காக காத்து இருக்கிறேன். சினிமாவில் எனக்கு நண்பர்கள் கிடையாது.”
இவ்வாறு அவர் கூறினார்.
இது டாப்சிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. “கொஞ்சமாக நடிப்பதால்தான் என்னை கதாநாயகி ஆக்கி விட்டார்கள். நான் சராசரியான பெண்ணாக இருப்பதில் பிரச்சினை இல்லையே. இந்த உலகத்தில் நீங்கள் சொன்ன மாதிரியான சராசரி பெண்கள்தான் அதிகம் பேர் இருக்கிறார்கள்” என்று சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுத்தார். இதனால் விமர்சன கருத்தை அந்த ரசிகர் சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கி விட்டார். டாப்சி இந்தியில் 4 படங்களில் நடித்து முடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
“இந்தியில் தட்கா, சூர்மா, முல்க், மன்மரிஷியான் ஆகிய படங்களில் நடிக்கிறேன். இவற்றின் படப்பிடிப்புகள் முடிந்துள்ளன. நாம் சபானா, பிங்க் படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தின. சில படங்கள் கதாநாயகர்களுக்காகவே ஓடும். பிங்க் படத்தில் அமிதாப்பச்சன் இருந்தது வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அவருக்காக தியேட்டரில் கூட்டம் வந்தது.
சினிமாவில் எனக்கென்று புதிய பாணியை உருவாக்கி இருக்கிறேன். எனது முழு நடிப்பு திறமையை காட்டும் கதையம்சம் உள்ள படம் இன்னும் அமையவில்லை. அந்த கதைக்காக காத்து இருக்கிறேன். சினிமாவில் எனக்கு நண்பர்கள் கிடையாது.”
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X