search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கணவர் சொன்னதை பின்பற்றுவதால் கவலையில்லை - சமந்தா
    X

    கணவர் சொன்னதை பின்பற்றுவதால் கவலையில்லை - சமந்தா

    திருமணமத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு என படங்களில் பிசியாக நடித்து வரும் சமந்தா, தன் கணவர் நாக சைதன்யா சொல்வதை பின்பற்றுவதால் தான் கவலையில்லாமல் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். #Samantha #NagaChaithanya
    திருமணத்துக்கு பிறகும் சமந்தா பிசியாக நடிக்கிறார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாகவே இருந்து வருகிறார். பட வாய்ப்புகள் அவரைத் தேடி வருகின்றன.

    சமந்தா, ராம்சரண் தேஜாவுடன் நடித்து சமீபத்தில் வெளியான ‘ரங்கஸ்தலம்’ படத்திற்கும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை கிடைத்துள்ளது. இந்த படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டியிருக்கிறது. இதனால் சமந்தா மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.

    கணவர் நாகசைதன்யாவின் அறிவுரையை கேட்டு மிகவும் மன நிறைவுடன் இருப்பதாக சமந்தா கூறியுள்ளார். இது பற்றி அவர் அளித்த பேட்டி...



    “ஒவ்வொரு படத்திலும் 100 சதவீதம் ஈடுபாட்டுடன் உழைக்க வேண்டும். ரசிகர்கள் தீர்ப்பு நம் கையில் இல்லை என்று என் கணவர் நாகசைதன்யா கூறியதை பின்பற்றுகிறேன். நடிக்கும் படம் பற்றியும், அந்த கதை பற்றியும் அவரிடம் பேச மாட்டேன். சினிமாவையும், குடும்பத்தையும் நாங்கள் மிக்ஸ் பண்ணமாட்டோம்.

    தோல்விகளை கையாளுவது எப்படி என்பதை கணவரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். முன்பு எல்லாம் என்படம் ஓடாவிட்டால் கவலையுடன் இருப்பேன். இப்போது, கணவர் சொல்வதை பின்பற்றுவதால் ஒரு படம் ஓடாதது பற்றி கவலைப்படுவதே இல்லை. தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ரங்கஸ்தலம்’ என் உழைப்புக்கு ரசிகர்கள் தந்த நற்சான்றிதழ்”. #Samantha #NagaChaithanya
    Next Story
    ×