search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மனித உரிமை ஆணையம் நோட்டீசால் சூடுபிடித்துள்ள ஸ்ரீலீக்ஸ் விவகாரம்
    X

    மனித உரிமை ஆணையம் நோட்டீசால் சூடுபிடித்துள்ள ஸ்ரீலீக்ஸ் விவகாரம்

    ஸ்ரீலீக்ஸ் விவகாரம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டு விஷயத்தில் மனித உரிமை ஆணையம் அனுப்பிய நோட்டீசால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #SriLeaks #SriReddy
    சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி நடிகர்களும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறி போராடி வருகிறார்.

    மேலும் முகநூல் பக்கத்தில் ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் அவர்கள் பெயர்களையும், புகைப்படங்களையும் செல்போன் குறுந்தகவல்களையும் ஆதாரத்தோடு வெளியிட்டு வருகிறார். மேலும் தனக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று கூறி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் தெலுங்கு நடிகர் சங்கம் ஸ்ரீரெட்டியுடன் யாரும் நடிக்கக் கூடாது என்று தடை விதித்தது. ஸ்ரீரெட்டிக்கு மகளிர் அமைப்புகளும் மாணவர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு தெலுங்கானா அரசுக்கும், மத்திய செய்தி ஒளிபரப்பு துறைக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.



    நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும், அவருக்கு நடிக்க வாய்ப்பு அளிக்காமல் தடுப்பதும் தனி மனிதனின் உரிமையை பறிப்பதாகும். இந்த விவகாரத்தில் 4 வார காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீரெட்டி நடிக்க விதித்திருந்த தடையை தெலுங்கு நடிகர் சங்கம் திடீரென்று நீக்கியது. சங்கத்தில் உள்ள 900 ஆயிரம் உறுப்பினர்களும் ஸ்ரீரெட்டியுடன் நடிக்கலாம் என்றும் அறிவித்தது.

    பாலியல் புகார் குறித்து விசாரிக்க 20 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும் என்று தெலுங்கு பிலிம் சேம்பர் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஸ்ரீரெட்டி விவகாரம் சூடு பிடித்துள்ளது. அவரது புகார் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து போலீஸ் தரப்பில் ஆலோசிக்கப்படுவதாகவும், இதன்மூலம் ஸ்ரீரெட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. #SriLeaks #SriReddy
    Next Story
    ×