என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஸ்ரீ ரெட்டி மீதான தடையை நீக்கியது நடிகர் சங்கம்
Byமாலை மலர்13 April 2018 1:47 PM GMT (Updated: 13 April 2018 1:47 PM GMT)
இயக்குனர்கள், நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை எழுப்பி வரும் நடிகை ஸ்ரீரெட்டி மீதான தடையை நடிகர் சங்கம் நீக்கியுள்ளது. #SriReddy
தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த முன்னணி தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை எழுப்பி ஓட்டுமொத்த தென்னிந்திய திரைத்துறையை அதிரவைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி.
தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் பற்றிய விவரங்களை விரைவில் ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் டுவிட்டரில் வெளியிடுவேன் என கூறி இருந்தார்.
இதன் காரணமாக தெலுங்கு நடிகர் சங்கம், ஸ்ரீரெட்டி நடிப்பதற்கான அங்கீகார அட்டையை ரத்து செய்தது. மேலும், அவருடன் இனி யாரும் இணைந்து பணியாற்ற மாட்டார்கள் என்று அறிவித்தது.
தெலுங்கு நடிகர் சங்கத்தின் அறிவிப்புக்கு எதிராக ஐதாராபத்தில் உள்ள தெலுங்கு பிலிம்சேம்பர் முன்பு, ஸ்ரீரெட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினார். இதனால் அவரை காவல்துறை கைது செய்தது.
இதனிடையே ’ஃபிடா’ பட இயக்குனரான சேகர் கம்முலா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம் டகுபதி ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டதாக ஸ்ரீரெட்டி புகார் கூறினார். இது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை கூட்டியது.
இந்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களை புகைப்படத்துடன் வெளியிட்ட அந்த நடிகை, தெலுங்கு சினிமாவின் முன்னணி கதையாசிரியர் மற்றும் இயக்குனரான வெங்கட் மீது பாலியல் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன்படி நடிகை ஸ்ரீரெட்டி கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி தெலுங்கானா தலைமைச்செயலாளர் மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை செயலாளர் ஆகியோர் 4 வார காலத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தற்போது தெலுங்கு பிலிம்சேம்பர், ஸ்ரீரெட்டி கூறிய பாலியல் புகார்கள் குறித்து முழுமையாக விசாரிக்க விசாரணைக்குழு ஒன்று 4 நாட்களில் அமைக்கப்படும் என்று கூறியுள்ளது. 20 பேர் கொண்ட இந்த குழுவில் 10 பேர் திரைத்துறையில் இருந்தும் மற்றவர்கள் வேறு துறையைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நடிகை படங்களில் நடிக்க விதித்திருந்த தடையை தெலுங்கு நடிகர் சங்கம் நீக்கிக்கொண்டுள்ளது. இதுப்பற்றி பேசிய அச்சங்கத்தின் தலைவர் சிவாஜி ராஜா, நடிகை கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு தெலுங்கு பிலிம்சேம்பர் விசாரணைக்குழுவை அமைத்துள்ளதால், அவர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், நடிகை ஸ்ரீரெட்டி படங்களில் தொடர்ந்து நடிக்கலாம் என்றும், நடிகை கூறிய குற்றச்சாட்டுகள் சங்க உறுப்பினர்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவர் சிவாஜி ராஜா தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X