search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த தீபிகா படுகோனே
    X

    ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த தீபிகா படுகோனே

    மும்பையில் நடத்த பட விழாவில் தீபிகா படுகோனே அணிந்து வந்த உடை, ரசிகர்களின் முகங்களை சுளிக்க வைத்திருக்கிறது. #DeepikaPadukone
    மும்பையில் சமீபத்தில் ‘ஹலோ ஹால் ஆப்பேம் விருதுகள் 2018’ வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் ஷாருக்கான் அவருடைய மனைவி கவுரியுடன் கலந்து கொண்டார். இந்தி பட உலகின் பிரபலங்களும் பங்கேற்றனர்.

    இதில், இந்தி நடிகை தீபிகா படுகோனேவுக்கு சிறந்த பொழுதுபோக்கு பெண் கலைஞர் விருது வழங்கப்பட்டது. அவரது காதலர் ரன்வீர்சிங்குக்கு இதே பிரிவில் ஆண் கலைஞருக்கான விருது கொடுக்கப்பட்டது.



    இந்த விழாவுக்கு தீபிகா படுகோனே வெள்ளை நிற கவுன் அணிந்து கலந்து கொண்டார். அது முன் அழகு பளிச்சென்று தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் முகம் சுளித்தனர். பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி விமர்சனம் செய்துள்ள ரசிகர்கள், “தீபிகா அணிந்து வந்த கவுன் அழகாக இருந்தது. முன் அழகை கொஞ்சம் மறைத்து இருந்தால் இன்னும் அழகாக இருந்து இருக்கும்” என்று கூறி உள்ளனர்.



    இது பற்றி கருத்து தெரிவித்துள்ள மும்பை பட உலகினர், “‘ஹாலிவுட்’ நடிகர் வின்டீசல் மும்பை வந்த போது. தீபிகா அணிந்த உடையுடன் ஒப்பிட்டால் இந்த கவுன் எவ்வளவோ பரவாயில்லை” என்று கூறி இருக்கிறார்கள்.
    Next Story
    ×