search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கார்த்திக் நரேனின் நாடக மேடையில் முன்னணி நடிகர்களின் மகன்கள்
    X

    கார்த்திக் நரேனின் நாடக மேடையில் முன்னணி நடிகர்களின் மகன்கள்

    கார்த்திக் நரேன் இயக்கத்தில் `நரகாசூரன்' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், அவரது அடுத்த படமான நாடக மேடையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் மகன்கள் இருவர் நடிப்பதாக கூறப்படுகிறது. #NaadagaMedai
    `துருவங்கள் பதினாறு' படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் அடுத்ததாக `நரகாசூரன்' படத்தை இயக்கி முடித்திருக்கிறார். 
    அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரியோ சரண், ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. 

    இந்நிலையில், அவரது அடுத்த படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. `நாடக மேடை' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை கார்த்திக் நரேன் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான `நைட் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட்' மூலம் தயாரிக்க இருக்கிறார். 



    இந்நிலையில், இந்த படத்தில் நடிக்கவுள்ள கதாபாத்திரங்கள் குறித்து சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதன்படி இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் காளிதாஸ் ஜெயராம் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் `துருவங்கள் பதினாறு' படத்தில் நாயகனாக நடித்த ரகுமான் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    சுஜித் சரங் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு ரோன் ஈத்தன் யோகன் இசையமைக்கிறார். ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பு பணிகளையும், சிவசங்கர் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். #NaadagaMedai
    Next Story
    ×