என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அருள்நிதியுடன் இணையும் பிக்பாஸ் பிரபலம்
Byமாலை மலர்26 Nov 2017 6:09 AM GMT (Updated: 26 Nov 2017 6:09 AM GMT)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரபலமான நடிகை ஒருவர், அருள்நிதி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பலர், தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்கள். அப்படி, அதில் கலந்துக் கொண்ட பிந்து மாதவி தற்போது அருள்நிதி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
அருள்நிதி நடிப்பில் 'புகழேந்தி எனும் நான்' என்ற படத்தை இயக்கி வருகிறார் கரு பழனியப்பன். அரசியல் படத்தை அவர் அறிவித்த நாளில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. படத்தை பற்றிய சின்ன சின்ன அறிவிப்பையும் ரசிகர்கள் தீவிரமாக கவனித்து வருகிறார்கள். தற்போது இந்த படத்தின் நாயகியாக பிந்து மாதவியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதை பற்றி நடிகை பிந்து மாதவி கூறும்போது, "எனக்கு பல பட வாய்ப்புகள் வந்தாலும், நான் சிறந்த கதைகளையே தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறேன். நல்ல கதை மட்டுமல்லாமல், நடிக்க வாய்ப்புள்ள நல்ல கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி சமீபத்தில் எனக்கு அமைந்த படம் தான் 'புகழேந்தி எனும் நான்'. இது அரசியல் சார்ந்த படம் என்றாலும் என் கதாபாத்திரத்திமும் முக்கியத்துவம் வாய்ந்தது.
எப்போதும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதும் கரு பழனியப்பன் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அருள்நிதியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி, புகழேந்தி எனும் நான் படத்தில் அவரின் திரை ஆளுமை இன்னும் அதிகமாகவே வெளிப்படும். டிசம்பரில் தொடங்கும் இந்த புகழேந்தி எனும் நான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன்" என்றார்.
அருள்நிதி நடிப்பில் 'புகழேந்தி எனும் நான்' என்ற படத்தை இயக்கி வருகிறார் கரு பழனியப்பன். அரசியல் படத்தை அவர் அறிவித்த நாளில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. படத்தை பற்றிய சின்ன சின்ன அறிவிப்பையும் ரசிகர்கள் தீவிரமாக கவனித்து வருகிறார்கள். தற்போது இந்த படத்தின் நாயகியாக பிந்து மாதவியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதை பற்றி நடிகை பிந்து மாதவி கூறும்போது, "எனக்கு பல பட வாய்ப்புகள் வந்தாலும், நான் சிறந்த கதைகளையே தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறேன். நல்ல கதை மட்டுமல்லாமல், நடிக்க வாய்ப்புள்ள நல்ல கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி சமீபத்தில் எனக்கு அமைந்த படம் தான் 'புகழேந்தி எனும் நான்'. இது அரசியல் சார்ந்த படம் என்றாலும் என் கதாபாத்திரத்திமும் முக்கியத்துவம் வாய்ந்தது.
எப்போதும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதும் கரு பழனியப்பன் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அருள்நிதியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி, புகழேந்தி எனும் நான் படத்தில் அவரின் திரை ஆளுமை இன்னும் அதிகமாகவே வெளிப்படும். டிசம்பரில் தொடங்கும் இந்த புகழேந்தி எனும் நான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன்" என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X