search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    • ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் இரட்டை மோட்டார்கள் கொண்டுள்ளது.
    • ஸ்பெக்டர் மாடலில் 102 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    பிரிட்டனை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளர் ரோல்ஸ் ராய்ஸ் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மாடலின் விலை ரூ. 7 கோடியே 50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    2030 ஆண்டிற்குள் முழுமையான எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளராக மாற ரோல்ஸ் ராய்ஸ் திட்டம் கொண்டிருக்கிறது. டிசைனை பொருத்தவரை ஸ்பெக்டர் மாடலில் இலுமினேட் செய்யப்பட்ட பாந்தியன் முன்புற கிரில், ஸ்பிரிட் ஆஃப் எக்டசி, ஸ்ப்லிட் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஸ்லோபிங் ரூஃப்லைன், செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், 21 இன்ச் ஏரோ டிசைன் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

     


    காரின் உள்புறம் டச் ஸ்கிரீன் கொண்ட அளவில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், வயர்லெஸ் மொபைல் கனெக்டிவிட்டி, முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் டோன் பிரீமியம் இன்டீரியர், கதவு மற்றும் டேஷ்போர்டில் இலுமினேட் செய்யப்பட்ட பேனல்கள், இருக்கை மேற்கவர்களுக்கு ஏராளமான கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    ரோல்ஸ் ராய்ஸ் 3.0 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஸ்பெக்டர் மாடலில் 102 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் காரை 195 கிலோவாட் டி.சி. ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 34 நிமிடங்களே ஆகும். இந்த காரில் இரட்டை மோட்டார்கள் வழங்கப்பட்டு உள்ளன.

     


    இவை இணைந்து 575 ஹெச்.பி. பவர், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 530 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது. 

    • பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் மாடல் மூன்று வெர்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
    • இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் முழு சார்ஜ் செய்தால் 582 கி.மீ. ரேன்ஜ் வழங்கும்.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 8-வது தலைமுறை 5 சீரிஸ் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த காருடன் அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கார் முற்றிலும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் E கிளாஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது. நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் உடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் பி.எம்.டபிள்யூ. கார் மாடல் என்ற பெருமையை புதிய 5 சீரிஸ் மாடல் பெற இருக்கிறது.

    புதிய 5 சீரிஸ் காரின் லாங்-வீல்பேஸ் வெர்ஷன் G60 5 சீரிஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. 5 சீரிஸ் LWB மாடலில் இலுமினேட் செய்யப்பட்ட கிரில், மெல்லிய டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. சீன சந்தையில் விற்பனை செய்யப்படும் பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் LWB 5175mm நீளமும், 1520mm உயரம், வீல்பேஸ் 3105mm அளவில் உள்ளது.

     


    இந்திய சந்தையில் பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் 520Li அல்லது 530Li, 520Ld வெர்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிகிறது. இவற்றில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல், டீசல் என்ஜின்கள் வழங்கப்படும். இவற்றுடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    பி.எம்.டபிள்யூ. i5 மாடல் இ-டிரைவ்40 வடிவில் கிடைக்கும் என்றும் இதில் 340 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் மோட்டார் மற்றும் 81.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 582 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று பி.எம்.டபிள்யூ. தெரிவித்துள்ளது. புதிய பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் மாடல்கள் பண்டிகை காலக்கட்டத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    • டாடா பன்ச் EV மாடல் இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது.
    • புதிய பன்ச் EV மாடல் ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பன்ச் எலெக்ட்ரிக் வெர்ஷனின் விலை விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. டாடா பன்ச் EV விலை ரூ. 10 லட்சத்து 99 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 14 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    டாடா மோட்டார்ஸ்-இன் ஜென் 2 EV ஆர்கிடெக்ச்சரில் உருவாகி இருக்கும் முதல் எலெக்ட்ரிக் கார் இது ஆகும். இந்திய சந்தையில் புதிய டாடா பன்ச் EV மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்டது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும்.

     


    தோற்றத்தில் டாடா பன்ச் EV மாடலின் முன்புறம் நெக்சான் EV போன்றே காட்சியளிக்கிறது. இந்த கார் எம்பவர்டு ஆக்சைடு டூயல் டோன், சீட்வுட் டூயல் டோன், ஃபியர்லெஸ் ரெட் டூயல் டோன், டேடோனா கிரே டூயல் டோன் மற்றும் ப்ரிஸ்டைன் வைட் டூயல் டோன் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.

    இத்துடன் ஸ்மார்ட், ஸ்மார்ட் பிளஸ், அட்வென்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு பிளஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் பன்ச் EV லாங் ரேன்ஜ் மாடலில் 90 கிலோவாட் மோட்டார் உள்ளது. இது 190 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

     


    டாடா பன்ச் EV லாங் ரேன்ஜ் மாடலில் 35 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 421 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றிருக்கிறது. டாடா பன்ச் EV ஸ்டான்டர்டு மாடலில் 25 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றிருக்கிறது.

    இத்துடன் 3.3 கிலோவாட் பாக்ஸ் சார்ஜர் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. டாடா பன்ச் EV லாங் ரேன்ஜ் வெர்ஷனில் 7.2 கிலோவாட் ஏ.சி. ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது. 

    • கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • மெக்லாரென் 750S அந்நிறுவனத்தின் 720S மாடலின் மேம்பட்ட வெர்ஷன்.

    பிரிட்டனை சேர்ந்த சூப்பர் கார் உற்பத்தியாளர் மெக்லாரென் இந்திய சந்தையில் தனது சக்திவாய்ந்த சூப்பர் கார் 750S மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 5 கோடியே 91 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மெக்லாரென் 750S தற்போது இந்தியா வந்துள்ளது.

    புதிய மெக்லாரென் 750S அந்நிறுவனத்தின் 720S மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய மெக்லாரென் 750S மாடல் கூப் மற்றும் ஹார்டு-டாப் கன்வெர்டிபில் என இருவித பாடி ஸ்டைல்களில் கிடைக்கிறது. தோற்றத்தில் இந்த கார் 720S போன்றே காட்சியளிக்கிறது. புதிய 750S மாடலில் ரி-டிசைன் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப் மற்றும் டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன.

     


    இத்துடன் அளவில் பெரிய ஸ்ப்லிட்டர் கொண்ட ஏர் டேம்கள், புதிய வீல் ஆர்ச் வென்ட்கள், நீட்டிக்கப்பட்ட ரியர் டெக், அகலமான ஆக்டிவ் விங் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறம் ஃபுல் லப்பா லெதர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், செங்குத்தாக பொருத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ, போயர்ஸ் மற்றும் வில்கின்ஸ் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மெக்லாரென் 750S மாடலில் 4.0 லிட்டர், டுவின் டர்போ, வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 740 ஹெச்.பி. பவர், 800 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.

    மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 331 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மெக்லாரென் இதுவரை உற்பத்தி செய்ததிலேயே இது மிகவும் சக்திவாய்ந்த மாடல் ஆகும். புதிய 750S மாடல் முந்தைய 720S காரை விட 30 கிலோ குறைவாக இருக்கும் படி உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

    • இந்த கார் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.
    • வெளிப்புறம் மாற்றப்பட்டு, புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் உள்ளது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது அதிகம் எதிர்பாக்கப்பட்ட கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த கார் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது இந்த கார் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.

    2024 ஹூண்டாய் கிரெட்டா மாடலின் முன்புறம் முழுமையாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதில் முற்றிலும் புதிய கிரில், ரிவைஸ்டு எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், மேம்பட்ட பம்ப்பர், ஸ்கிட் பிலேட், புதிய பொனெட் மற்றும் அதிக கவர்ச்சிகர எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள் வழங்கப்பட்டுள்ளன.

     


    இதன் வெளிப்புறம் மாற்றப்பட்டு, புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள், பின்புறத்தில் கனெக்டெட் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் பின்புற பம்ப்பரில் புதிய டெயில்கேட் வழங்கப்பட்டுள்ளது. புதிய காரின் கேபின் மாற்றப்பட்டு அதிக பிரீமியம் தோற்றம் கொண்டிருக்கிறது. இதில் புதிய டேஷ்போர்டு, சென்டர் கன்சோல், ஏ.சி. வென்ட் உள்ளது.

    இத்துடன் 10.25 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 10.25 இன்ச் அளவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. அம்சங்களை பொருத்தவரை 6 ஏர்பேக், 70-க்கும் அதிக கனெக்டெட் தொழில்நுட்பங்கள், 19 அம்சங்கள் கொண்ட லெவல் 2 ADAS, ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்படுகிறது.

    • இரண்டு புதிய கார்களும் 7 சீட்டர் மாடல்கள் என தகவல்.
    • இந்த கார் YDB என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இரண்டு புதிய கார் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு புதிய கார்களும் 7 சீட்டர் மாடல்கள் என்றும் கூறப்படுகிறது.

    இதில் ஒன்று காம்பேக்ட் எம்.பி.வி. மாடல் என்றும் இந்த கார் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் எர்டிகா மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும் என்றும் தெரிகிறது. இந்த காம்பேக்ட் எம்.பி.வி. மாடல் 2026-ம் ஆண்டு விற்பனைக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த கார் YDB என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது.

     


    இந்த மாடல் டாடா பன்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையலாம் என்றும் ரெனால்ட் டிரைபர் மற்றும் டிரைபர் சார்ந்து உருவாக்கப்படும் நிசான் எம்.பி.வி. மாடலுக்கு போட்டியாக அமையும் என்றும் கூறப்படுகிறது. மாருதி சுசுகி YDB மாடல் தற்போது ஜப்பானில் விற்பனை செய்யப்பட்டு வரும் சுசுகி ஸ்பேசியா மாடலை தழுவி உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    எனினும், ஸ்பேசியா போன்றில்லாமல், YDB மாடலில் 7 சீட்டர் இருக்கை அமைப்பு வழங்கப்படும் என்றும் இந்த காரில் ஸ்லைடிங் ரக கதவுகள் வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது. இதில் 1.2 லிட்டர் Z சீரிஸ் மைல்டு ஹைப்ரிட் 3 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் மாடல்களிலும் வழங்கப்படும் என தெரிகிறது.

     


    மாருதி சுசுகி நிறுவனம் YDB மட்டுமின்றி 7 சீட்டர் கிரான்ட் விட்டாரா மாடலையும் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த கார் Y17 எனும் குறியீட்டு பெயர் கொண்டு உருவாக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மூன்றடுக்கு இருக்கைகள் கொண்ட இந்த எஸ்.யு.வி. மாடல் டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கசார் மற்றும் எம்.ஜி. ஹெக்டார் பிளஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.

    இந்த காரில் 1.5 லிட்டர் ஸ்டிராங் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த கார் தற்போது விற்பனை செய்யப்படும் கிரான்ட் விட்டாரா மாடலை விட வித்தியாசமாக காட்சியளிக்கும் வகையில் வெளிப்புறம் மற்றும் உள்புற மாற்றங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    • புதிய பென்ஸ் GLS மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • இந்த காரின் டாப் என்ட் விலை ரூ. 1.37 கோடி ஆகும்.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பென்ஸ் GLS ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய GLS ஃபேஸ்லிஃப்ட் விலை ரூ. 1 கோடியே 32 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய காரின் வெளிப்புறம் முற்றிலும் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள், புதிய கிரில், பம்ப்பர்கள், புதிய டிசைன் கொண்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. உள்புறம் புதிய ஸ்டீரிங் வீல், புதிய MBUX இன்டர்ஃபேஸ், கைரேகை சென்சார் கொண்ட டெலிமேடிக்ஸ் சென்சார் வழங்கப்படுகிறது. இந்த எஸ்.யு.வி.-இல் மல்டி-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், இரட்டை டிஜிட்டல் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

     


    மேலும் லெதரால் ஆன இருக்கை மேற்கவர்கள், மசாஜ் வசதி, வயர்லெஸ் போன் மிரரிங், இன்டீரியர் நிற ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரின் வீல்பேஸ் அதன் முந்தைய வெர்ஷனை விட 3 மீட்டர்கள் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மூன்றாவது அடுக்கு இருக்கையில் இருப்பவர்களும் சவுகரியமாக அமர முடியும்.

    மேம்படுத்தப்பட்ட மெர்சிடிஸ் GLS எஸ்.யு.வி. மாடலில் 3.0 லிட்டர் இன்லைன்-சிக்ஸ் டீசல் என்ஜின், 3.0 லிட்டர் இன்லைன்-சிக்ஸ் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இவை முறையே 362 ஹெச்.பி. பவர் / 750 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை மற்றும் 375 ஹெச்.பி. / 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

     


    இருவித என்ஜின்களுடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம், ஆல் வீல் டிரைவ் வசதி, 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த காரில் பல்வேறு டிரைவ் மோட்கள் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் GLS ஃபேஸ்லிஃப்ட் மாடல் பி.எம்.டபிள்யூ. X7, ஆடி Q8, ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மற்றும் வால்வோ XC90 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 2024 மெர்சிடிஸ் பென்ஸ் GLS காரின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 கோடியே 37 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • பன்ச் EV மாடல் acti.ev பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • முன்புறம் நெக்சான் EV போன்றே காட்சியளிக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பன்ச் EV மாடல் விவரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 2024 ஆண்டில் டாடா மோட்டார்ஸ்-இன் முதல் மாடல் இது ஆகும். பன்ச் EV விவரங்களுடன் புதிய காருக்கான முன்பதிவுகளும் துவங்கியுள்ளன. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். அடுத்த சில வாரங்களில் இந்த காரின் வெளியீடு நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

    புதிய பன்ச் EV மாடல் acti.ev பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கும் முதல் டாடா நிறுவன கார் இது ஆகும். டாடா பன்ச் EV மாடலின் முன்புறம் நெக்சான் EV போன்றே காட்சியளிக்கிறது.

     


    இந்த கார் எம்பவர்டு ஆக்சைடு டூயல் டோன், சீட்வுட் டூயல் டோன், ஃபியர்லெஸ் ரெட் டூயல் டோன், டேடோனா கிரே டூயல் டோன் மற்றும் ப்ரிஸ்டைன் வைட் டூயல் டோன் என ஐந்து வித ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட், ஸ்மார்ட் பிளஸ், அட்வென்ச்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு பிளஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கும்.

    டாடா பன்ச் EV மாடலின் டாப் 3 வேரியண்ட்களில் எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆப்ஷனல் அம்சமாக வழங்கப்படுகிறது. இத்துடன் பன்ச்.EV மற்றும் பன்ச்.EV லாங் ரேன்ஜ் என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 3.3 கிலோவாட் பாக்ஸ் சார்ஜர் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    இதன் லாங் ரேன்ஜ் வெர்ஷனுடன் 7.2 கிலோவாட் ஃபாஸ்ட் ஹோம் சார்ஜர் வழங்கப்படுகிறது. இந்த காரின் ஸ்டான்டர்டு மற்றும் லாங் ரேன்ஜ் வெர்ஷன்களில் முறையே 25 கிலோவாட் ஹவர் மற்றும் 35 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். டாடா பன்ச் EV மாடல் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 400 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது. 

    • கார் டிசைனுக்கு காப்புரிமை கோரியுள்ளது.
    • வாகனங்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி.

    சென்னையில் உள்ள ஆலையை விற்பனை செய்யும் முடிவை மாற்றிக் கொண்டது, புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டது மற்றும் என்டேவர் பெயருக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருப்பது உள்ளிட்டவை ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இந்திய சந்தையில் கால் பதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையில் தான் உள்ளது.

    முன்னதாக இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்து இருந்தது. எனினும், ஃபோர்டு மீண்டும் இந்தியாவில் தனது வாகனங்களை விற்பனை செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகின. அந்த வரிசையில், ஃபோர்டு நிறுவனம் தற்போது தாய்லாந்து போன்ற சர்வதேச சந்தைகளில் ஃபோர்டு எவரஸ்ட் என்ற பெயரில் விற்பனை செய்து வரும் கார் டிசைனுக்கு காப்புரிமை கோரியுள்ளது.

     


    2022-ம் ஆண்டு முதல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதால் இந்த எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் புதிதான ஒன்றாகவே இருக்கும். இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஃபோர்டு நிறுவனம் புதிய என்டேவர் மாடலை சென்னையில் உள்ள ஆலையில் அசெம்பில் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

    தற்போது ஆண்டிற்கு 2500 யூனிட்கள் வரை இந்தியாவுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி வழங்கி வருகிறது. இதன் காரணமாக ஃபோர்டு நிறுவனம் விரைவில் தனது என்டேவர் மாடலை இந்தியாவில் இறக்குமதி செய்யலாம் என்று கூறப்படுகிறது. என்டேவர் மாடலுக்கு இந்தியாவில் நேரடி போட்டியை ஏற்படுத்தும் மாடலாக டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளது.

     


    இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலின் டாப் எண்ட் விலை ரூ. 60 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேரடியாக இறக்குமதி செய்யப்படும் என்டேவர் மாடல் ஃபார்ச்சூனருக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கும். முன்னதாக ஃபோர்டு நிறுவனமும் நேரடியாக இறக்குமதி செய்து வாகனங்கள் விற்பனை செய்ய திட்டமிருப்பதாகவும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இதில் அதிநவீன அம்சங்கள், புதிய டி.எஃப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
    • இரண்டு வேரியண்ட்களை வித்தியாசப்படுத்தும் வகையில் இது இருக்கும்.

    பஜாஜ் நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்டேட் செய்துள்ளது. இந்த மாடல் பஜாஜ் செட்டாக் பிரீமியம் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய பஜாஜ் செட்டாக் பிரீமியம் ஜனவரி 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் அதிநவீன அம்சங்கள், புதிய டி.எஃப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

    தற்போது செட்டாக் மாடல் அர்பேன் மற்றும் பிரீமியம் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் பிரீமியம் வேரியண்ட் அப்டேட் செய்யப்படும் நிலையில், இரண்டு வேரியண்ட்களையும் வித்தியாசப்படுத்தும் வகையில் இது இருக்கும்.

     


    புதிய செட்டாக் பிரீமியம் வேரியண்ட் அறிமுகம் பற்றிய தகவலை பஜாஜ் நிறுவனம் தனது சமூக வலைதள அக்கவுண்ட்களில் வெளியிட்டு உள்ளது. இத்துடன் ஸ்கூட்டரின் பாகங்கள் பற்றிய டீசர்களும் வெளியிடப்பட்டன. டிஸ்ப்ளேவின் படி இந்த மாடலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இத்துடன் ரைடிங் மோட்களும் வழங்கப்படுகிறது.

    டீசர்களின் படி புதிய வேரியண்ட் தற்போது விற்பனை செய்யப்படும் மாடல்களை போன்றே காட்சியளிக்கின்றன. இதில் ஒற்றை பக்க முன்புற சஸ்பென்ஷன், ஸ்மார்ட் அலாய் வீல்கள் மற்றும் மெல்லிய வட்ட வடிவம் கொண்ட டிசைன் வழங்கப்படுகிறது. சீட், லைட்கள், ஃபுளோர்போர்டு மற்றும் ஸ்டோரேஜ் உள்ளிட்டவைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 

    • எப்படி காட்சியளிக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
    • நெக்சான் EV மாடல் 465 கி.மீ. வரையிலான ரேன்ஜ் வழங்கி வருகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் EV எலெக்ட்ரிக் காரின் ப்ரோடக்ஷன் வெர்ஷனை டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. கிட்டத்தட்ட உற்பத்திக்கு தயாரான நிலையில் டாடா ஹேரியர் EV மாடல் உண்மையில் எப்படி காட்சியளிக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இது அமைந்தது.

    அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், டாடா ஹேரியர் EV மாடல் முழு சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று கூறப்படுகிறது. தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வரும் நெக்சான் EV மாடல் முழு சார்ஜ் செய்தால் 465 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கி வருகிறது.

     


    அந்த வகையில், புதிய ஹேரியர் EV மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் நெக்சான் EV மாடலை விட அதிக ரேன்ஜ் வழங்கும் என்று கூறப்படுகிறது. டாடாவின் புதிய எலெக்ட்ரிக் காரின் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் டெம்பரேச்சர் காஜ், டைம், மொபைல் கனெக்டிவிட்டி, மியூசிக், நோட்டிஃபிகேஷன், ஹோம் மற்றும் சர்ச் போன்ற ஐகான்கள் இடம்பெற்றுள்ளன.

    ஹேரியர் EV மாடலில் முக்கோன வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், கிரில் பகுதியில் பிளான்க்டு-ஆஃப் டிசைன், புதிய அலாய் வீல்கள், புதிய எல்.இ.டி. டெயில் லைட்கள், முன்புறம் - பின்புறத்தில் எல்.இ.டி. பார்கள் வழங்கப்படுகின்றன.

    இன்டீரியரில் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், முழுமையான டிஜிட்டல் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எலெக்ட்ரிக் பார்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு அம்சம், வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், பானரோமிக் சன்ரூஃப், டிரைவ் மோட்கள், புதிய கியர் டயல் வழங்கப்படும் என தெரிகிறது. 

    • ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் KA4 கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
    • இந்த கார் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது.

    கியா நிறுவனம் தனது முற்றிலும் புதிய கார்னிவல் மாடலை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், புதிய கார்னிவல் மாடலுக்கான டெஸ்டிங்கை கியா இந்தியா துவங்கியுள்ளது. முன்னதாக இந்த மாடல் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் KA4 கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    தற்போது இந்த மாடலின் டெஸ்டிங் துவங்கியுள்ள நிலையில், கார்னிவல் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று தெரியவந்துள்ளது. ஸ்பை படங்களின் படி இந்த கார் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது.

     


    இதில் அளவில் பெரிய எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், "டைகர் நோஸ்" கிரில், ரி-ப்ரோஃபைல் செய்யப்பட்ட பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் எல் வடிவம் கொண்ட எல்.இ.டி. டெயில்லைட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த மாடலில் புதிய அலாய் வீல்கள் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

    புதிய தலைமுறை கியா கார்னிவல் மாடல் பிரீமியம் கேபின் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. உள்புறம் இரண்டு 12.3 இன்ச் ஸ்கிரீன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் ரிவைஸ்டு ஏ.சி. வென்ட்கள், இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீனின் கீழ்புறம் ஆடியோ கண்ட்ரோல்கள் வழங்கப்படுகிறது.

     


    சர்வதேச சந்தையில் 2024 கியா கார்னிவல் மாடல் 7, 9 மற்றும் 11 பேர் பயணம் செய்யக்கூடிய வகையில் இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இவற்றில் 7 மற்றும் 9 பேர் பயணம் செய்யக்கூடிய மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இத்துடன் சுழலும் வகையிலான டிரைவ் செலக்டர், ஹெட்-அப் டிஸ்ப்ளே, டிஜிட்டல் ரியர்வியூ மிரர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ×