search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஏ.பி.எஸ். வசதியோடு மஹிந்திரா தார் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்
    X

    ஏ.பி.எஸ். வசதியோடு மஹிந்திரா தார் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்

    அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் சந்தையில் களமிறங்கியிருக்கும் மஹி்ந்திரா தார் ஸ்பெஷல் எடிஷன் கார் விவரங்களை பார்ப்போம். #Mahindra



    சாகச பயண வாகனமான தார், இந்தியாவில் ஏ.பி.எஸ். (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) வசதியோடு ஸ்பெஷல் எடிஷன் காராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களும் விபத்து சோதனை (கிராஷ் டெஸ்ட்) சான்று பெற்றிருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. முந்தைய தலைமுறை மாடல்கள் அனைத்துமே இத்தகைய சோதனைக்கு உள்படுத்தப்படாதவை. 

    இதனால் முந்தைய மாடல்கள் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்திவிட மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது அறிமுகமாகும் ஸ்பெஷல் எடிஷனையே தொடர்ந்து உற்பத்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த காரில் கூடுதல் சிறப்பம்சமாக ஏ.பி.எஸ். வசதி சேர்க்கப்பட்டுள்ளது.



    ஸ்டாண்டர்டு மாடலைக் காட்டிலும் வெளிப்புறத் தோற்றத்திலும் மாறுதல் கொண்டதாக ஸ்பெஷல் எடிஷன் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேவைப்பட்டால் சி.ஆர்.டி.இ. என்ஜினை தேர்வு செய்யும் வசதியும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்பெஷல் எடிஷனில் அலாய் வீல்கள் கூடுதல் சிறப்பம்சமாக இருக்கின்றன. 

    இது முந்தைய மாடலை விட அளவில் பெரியதாகவும், அதிக திறன் கொண்டதாகவும், எரிபொருள் சிக்கனமானதாகவும் இருக்கும் என்று தெரிகிறது. அத்துடன் இது பி.எஸ். VI புகை சோதனை விதிகளை பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

    இந்த விதிமுறை 2020-ம் ஆண்டிலிருந்து அமலுக்கு வருவதாக இருந்தாலும் தனது மாடலில் இந்த வசதியை முன்கூட்டியே வாடிக்கையாளர்களுக்கு அளிக்க மஹிந்திரா திட்டமிட்டு அதை செயல்படுத்தியுள்ளது. 

    இந்த காரில் 140 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 2.0 லிட்டர் என்ஜின் மற்றும் 6 கியர்களைக் கொண்ட மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. இத்துடன் ஏர்பேக், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஸ்பீடு வார்னிங் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×