search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பாதுகாப்பு உபகரணங்கள் நிறைந்த ரெனால்ட் கேப்டுர்
    X

    பாதுகாப்பு உபகரணங்கள் நிறைந்த ரெனால்ட் கேப்டுர்

    இந்தியாவில் மேம்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் ரெனால்ட் கேப்டுர் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #RenaultCaptur



    பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் நிறுவனத்தின் ‘கேப்டுர் மாடல்’ பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்தியாவில் புகிய கேப்டுர் காரின் விலை ரூ.9.50 லட்ச என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் கேப்டுர் ஆர்.எக்ஸ்.இ மற்றும் கேப்டுர் பிளாடைன் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. பிளாடைன் டீசல் மாடல் விலை ரூ.12 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய மேம்படுத்தப்பட்ட மாடலில் 7 இன்ச் தொடுதிரை மீடியா எவல்யூஷன் இன்ஃபோடைன்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் பாதுகாப்பு அம்சமாக இரட்டை ஏர் பேக் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஏற்கனவே ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் ரியர் பார்க்கிங் சென்சார் சேர்க்கப்பட்டுள்ளது.



    இதேபோன்று முன் சீட்டில் அமரும் பயணி மற்றும் டிரைவர் சீட் பெல்ட் அணிந்திருப்பதை உணர்த்தும் ரிமைண்டர் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. அதிக வேகத்தில் சென்றால் எச்சரிக்கும் ஹை ஸ்பீடு அலெர்ட் போன்றவை கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாக இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

    முந்தைய மாடலில் வழங்கப்பட்டிருப்பதை போன்று, புதிய காரிலும் 106 ஹெச்.பி. பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 110 ஹெச்.பி. பவர் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை கொண்டிருக்கிறது. இந்த என்ஜின்கள் 5 மற்றும் 6 கியர்களுடன் வருகிறது. 

    முந்தைய பெட்ரோல் மாடலைக் காட்டிலும் இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் விலை ரூ.50 ஆயிரம் குறைவாகும். இந்த கார் நிசான் கிக்ஸ், டாடா ஹாரியர், ஹுண்டாய் கிரெட்டா ஆகிய மாடல் கார்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.
    Next Story
    ×