search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் புதிய வாகனம் வெளியிட நிசான் திட்டம்
    X

    ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் புதிய வாகனம் வெளியிட நிசான் திட்டம்

    நிசான் மோட்டார் கம்பெனி நிறுவனம் ஒவ்வொரு ஆறு மாதங்களில் புதிய வாகனங்களை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.
    சென்னை:

    பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான நிசான் மோட்டார் கம்பெனி ஒவ்வொரு ஆறு மாதங்களில் புதிய வாகனங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் 2022-ம் ஆண்டு வாக்கில் ஐந்து சதவிகித பங்குகளை அடையும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிசான் மற்றும் டேட்சன் பிரான்டுகளின் புதிய வாகனங்கள் இந்த பண்டிகை காலம் முதல் வெளியிடப்பட இருக்கிறது. இந்தியாவின் ஊரக பகுதிதளை குறிவைத்து ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் வெளியிட நிசான் திட்டமிட்டுள்ளது. இதுதவிர எஸ்யுவி மாடல் மற்றும் எலெக்ட்ரிக் வாகனம் ஒன்றை வெளியிட இருக்கிறது.

    2022-ம் ஆண்டு வாக்கில் எட்டக்கூடிய இலக்கு என அந்நிறுவனத்தின் குஹல் தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்டோமொபைல் சந்தையில் நிசான் மாடல் 1.6 சதவிகிதமாக இருக்கிறது. வரும் 12 முதல் 18 மாத காலத்தில் மேலும் ஒரு சதவிகித வரை அதிகரிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
    Next Story
    ×