search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    விரைவில் இந்தியா வரும் ஹோன்டா எக்ஸ் பிளேடு ஃபேஸ்லிஃப்ட்
    X

    விரைவில் இந்தியா வரும் ஹோன்டா எக்ஸ் பிளேடு ஃபேஸ்லிஃப்ட்

    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் எக்ஸ் பிளேடு மோட்டார்சைக்கிளின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #HondaXBlade



    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ் பிளேடு மோட்டார்சைக்கிளின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் பண்டிகை காலத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக எக்ஸ் பிளேடு மோட்டார்சைக்கிள் ஆட்டோ எக்ஸ்போ 2018 இல் காட்சிக்கு வைக்கப்படு பின் மார்ச் 2019 இல் அறிமுகம் செய்யப்பட்டது. துவக்கத்தில் இந்த மோட்டார்சைக்கிள் அமோக வரவேற்பை பெற்றிருந்த போதும், 2018 ஆண்டின் இறுதி காலாண்டில் இதன் விற்பனை சரிய துவங்கியது.



    விற்பனை சரிவுக்கான காரணத்தை ஆய்வு செய்த ஹோன்டா நிறுவனம் மோட்டார்சைக்கிளின் நிறம் வாடிக்கையாளர்களை கவரவில்லை என்பதை கண்டறிந்துள்ளது. அந்த வகையில் புதிய மோட்டார்சைக்கிளை புதிய நிறங்களில் அறிமுகம் செய்து தோற்றத்தை மேலும் ஸ்போர்ட்டியாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மோட்டார்சைக்கிளின் தோற்றம் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் தற்போதைய மாடலில் உள்ளதை போன்ற 162சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 14 பி.ஹெச்.பி. பவர், 13.9 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.

    இந்த மோட்டார்சைக்கிளில் முன்புறம் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்படும். ஹோன்டா எக்ஸ் பிளேடு விலையிலும் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.81,668 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.
    Next Story
    ×