என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
இருமாதங்களில் 500க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்த ஹோன்டா மோட்டார்சைக்கிள்
Byமாலை மலர்17 April 2019 11:14 AM GMT (Updated: 17 April 2019 11:14 AM GMT)
ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் CB300R மோட்டார்சைக்கிளை இரண்டே மாதங்களில் 500க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. #HondaCB300R
ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிளை இந்தியாவில் இரு மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ஹோன்டா CB300R விலை ரூ.2.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமான இரண்டே மாதங்களில் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளை இரண்டே மாதங்களில் சுமார் 500-க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். மோட்டார்சைக்கிள்கள் விற்று தீர்ந்திருந்தாலும், இவற்றுக்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெறும் என ஹோன்டா அறிவித்துள்ளது.
புதிய ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிளில் 286சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 32 பி.எஸ். மற்றும் 27.5 என்.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது. புதிய CB300R மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சி.கே.டி. முறையில் கொண்டு வரப்படுகிறது.
இந்தியாவில் புதிய CB300R மோட்டார்சைக்கிள் கே.டி.எம். 390 டியூக், கவாசகி நின்ஜா 400 மற்றும் யமஹா YZF-R3 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.
சமீபத்தில் ஹோன்டா CB300R இந்திய விநியோகம் துவங்கப்பட்டது. முதற்கட்டமாக ஹோன்டா CB300R மோட்டார்சைக்கிள்கள் டெல்லி, சண்டிகர், ஜெய்பூர் மற்றும் ஹரியானா உள்ளிட்ட இடங்களில் விநியோகம் செய்யப்படுகிறது. தற்சமயம் இந்த மோட்டார்சைக்கிள் முன்பதிவு செய்வோர் மூன்று மாதங்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X