search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் 7900 டீசல் கார்களை திரும்பப் பெறும் பி.எம்.டபுள்யூ.
    X

    இந்தியாவில் 7900 டீசல் கார்களை திரும்பப் பெறும் பி.எம்.டபுள்யூ.

    பி.எம்.டபுள்யூ. நிறுவனம் இந்தியாவில் விற்பபனை செய்த டீசல் கார்களில் 7900 யூனிட்களை திரும்பப் பெறுகிறது. #BMW



    ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. விற்பனை செய்த டீசல் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. பி.எம்.டபுள்யூ. டீசல் கார்களின் எக்சாஸ்ட் சிஸ்டத்தில் கோளாறு இருப்பதை கண்டறிந்ததும், சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான கார்களை திரும்பப்பெறுவதாக அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்தது. 

    அந்த வகையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டதில் கோளாறு இருப்பதாக கண்டறியப்ட்ட சுமார் 7900 கார்களை திரும்பப் பெறுவதாக தற்சமயம் அறிவித்துள்ளது. இந்த கார்கள் 2011 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

    இவற்றில் அக்டோபர் 2011 முதல் ஆகஸ்டு 2016 வரை பி.எம்.டபுள்யூ. உற்பத்தி செய்த 4-சிலிண்டர் மாடல்களும், மார்ச் 2011 முதல் ஜூலை 2015 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்த 6-சிலிண்டர் டீசல் என்ஜின் மாடல்களை திரும்ப பெறுகின்றன. 



    பி.எம்.டபுள்யூ. வாகனங்களில் கண்டறியப்பட்டு இருக்கும் என்ஜின் கோளாறு தீவிரமாகும் பட்சத்தில் கார் தீப்பிடிக்கும் அபாயம் அதிகம் ஆகும். சில டீசல் வாகனங்களில் எக்சாஸ்ட் கியாஸ் கூலரில் இருக்கும் கிளைக்கால் கூலிங் எனும் திரவம் லீக் ஆகிறது, இது பேராபத்தை ஏற்படுத்தக் கூடியது என பி.எம்.டபுள்யூ. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கார்களை சரி செய்து கொடுக்கும் நோக்கில் பி.எம்.டபுள்யூ. சார்பில் விற்பனையாளர்களுக்கு தொடர்ந்து தகவல் வழங்கப்படுகிறது. விற்பனையாளர்கள் தரப்பில் இருந்து வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, அவர்களது வாகனங்கள் சரி செய்யப்படும் என பி.எம்.டபுள்யூ. தெரிவித்துள்ளது.
    Next Story
    ×