
புதுடெல்லி:
ஹோன்டா நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட எலெக்ட்ரிக் கார் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹோன்டா எலெக்ட்ரிக் மாடல் கார் அந்நிறுவனத்தின் குறைந்த விலை மாடலான ப்ரியோவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஹோன்டா ப்ரியோ அந்நிறுவனத்திற்கு வெற்றிகர மாடலாக இருக்கிறது. எனினும் ஹோன்டா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் மாடல் ஹேட்ச்பேக் மாடலாக இருக்குமா அல்லது செடான் மாடலாக இருக்குமா என்பதை ஹோன்டா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ஹேட்ச்பேக் மற்றும் செடான் மாடல்களை விரும்புவோர் அதிகம் கொண்ட இந்திய சந்தையில் காம்பேக்ட் செடான் மாடலை எலெக்ட்ரிக் பதிப்பாக வெளியிட இருக்கிறோம். டாடா மற்றும் மஹேந்திரா நிறுவனங்கள் ஏற்கனவே டிகோர் எலெக்ட்ரிக் மற்றும் இவெரிட்டோ மாடல்களை தயாரிக்கும் பணிகளை துவங்கியுள்ளன.

அந்த வகையில் ஹோன்டா நிறுவனமும் இந்தியாவில் லித்தியம் அயன் பேட்டரிகளை தயாரிக்கும் ஆலையை துவங்க திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் ஹிடாச்சி எலெக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்து எலெக்ட்ரிக் கார் பேட்டரிகளை தயாரிக்க ஒப்பந்தமிட்டுள்ளது. என ஹோன்டா இந்தியா நிறுவன மூத்த துணை தலைவர் ஞானேஸ்வர் சென் தெரிவித்துள்ளார்.
ஹைப்ரிட் வாகனங்களுக்கான வரி 43 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருப்பதை தொடர்ந்து ஹைப்ரிட் வாகனங்களை குறைத்து, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் மீது கவனம் செலுத்த ஹோன்டா முடிவு செய்துள்ளது. இந்தியாவில் 2030-ம் ஆண்டிற்குள் அனைத்து வாகனங்களையும் எலெக்ட்ரிக் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் பதிப்பை தயாரிக்க திட்டமிட்டு வருகின்றன.
மாருதி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து எலெக்ட்ரிக் கார் மற்றும் லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான டென்சோக்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளன. மஹேந்திரா நிறுவனத்திற்கான எலெக்ட்ரிக் கார் பிரிவு இயங்கி வருவதோடு, டாடா நி்றுவனமும் டிகோர் எலெக்ட்ரிக் மாடலை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன. இதேபோன்று ரெனால்ட் நிறுவனமும் குவிட் எலெக்ட்ரிக் காரை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
ஹோன்டா நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட எலெக்ட்ரிக் கார் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹோன்டா எலெக்ட்ரிக் மாடல் கார் அந்நிறுவனத்தின் குறைந்த விலை மாடலான ப்ரியோவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஹோன்டா ப்ரியோ அந்நிறுவனத்திற்கு வெற்றிகர மாடலாக இருக்கிறது. எனினும் ஹோன்டா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் மாடல் ஹேட்ச்பேக் மாடலாக இருக்குமா அல்லது செடான் மாடலாக இருக்குமா என்பதை ஹோன்டா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ஹேட்ச்பேக் மற்றும் செடான் மாடல்களை விரும்புவோர் அதிகம் கொண்ட இந்திய சந்தையில் காம்பேக்ட் செடான் மாடலை எலெக்ட்ரிக் பதிப்பாக வெளியிட இருக்கிறோம். டாடா மற்றும் மஹேந்திரா நிறுவனங்கள் ஏற்கனவே டிகோர் எலெக்ட்ரிக் மற்றும் இவெரிட்டோ மாடல்களை தயாரிக்கும் பணிகளை துவங்கியுள்ளன.

அந்த வகையில் ஹோன்டா நிறுவனமும் இந்தியாவில் லித்தியம் அயன் பேட்டரிகளை தயாரிக்கும் ஆலையை துவங்க திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் ஹிடாச்சி எலெக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்து எலெக்ட்ரிக் கார் பேட்டரிகளை தயாரிக்க ஒப்பந்தமிட்டுள்ளது. என ஹோன்டா இந்தியா நிறுவன மூத்த துணை தலைவர் ஞானேஸ்வர் சென் தெரிவித்துள்ளார்.
ஹைப்ரிட் வாகனங்களுக்கான வரி 43 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருப்பதை தொடர்ந்து ஹைப்ரிட் வாகனங்களை குறைத்து, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் மீது கவனம் செலுத்த ஹோன்டா முடிவு செய்துள்ளது. இந்தியாவில் 2030-ம் ஆண்டிற்குள் அனைத்து வாகனங்களையும் எலெக்ட்ரிக் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் பதிப்பை தயாரிக்க திட்டமிட்டு வருகின்றன.
மாருதி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து எலெக்ட்ரிக் கார் மற்றும் லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான டென்சோக்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளன. மஹேந்திரா நிறுவனத்திற்கான எலெக்ட்ரிக் கார் பிரிவு இயங்கி வருவதோடு, டாடா நி்றுவனமும் டிகோர் எலெக்ட்ரிக் மாடலை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன. இதேபோன்று ரெனால்ட் நிறுவனமும் குவிட் எலெக்ட்ரிக் காரை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.