search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    • புதிய கார் பற்றிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே உள்ளது.
    • முக்கிய அறிவிப்பை வெளியிட எம்.ஜி. மோட்டார்ஸ் திட்டம்.

    எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பயன்படுத்துவதற்காக புதிய பெயரை டிரேட்மார்க் செய்துள்ளது. இந்த பெயரில் தான் எம்.ஜி. நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

    புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் எக்செல்லார் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது. சர்வதேச சந்தையில் எம்.ஜி. நிறுவனம் எந்த மாடலுக்கும் எக்செல்லார் பெயரை பயன்படுத்துவதில்லை. அந்த வகையில், இந்த வாகனம் பற்றிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே உள்ளது.

     


    இந்த எலெக்ட்ரிக் கார் கொமெட் மற்றும் ZS EV மாடல்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தப்படும் என்று தெரிகிறது. புதிய எலெக்ட்ரிக் கார் டாடா நெக்சான் EV மாடலுக்கு போட்டியாக அமையும். மார்ச் 20-ம் தேதி மிக முக்கிய அறிவிப்பை வெளியிட எம்.ஜி. மோட்டார்ஸ் திட்டமிட்டு வருகிறது.

    அந்த வகையில், புதிய எக்செல்லார் எலெக்ட்ரிக் கார் பற்றிய விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. புதிய எலெக்ட்ரிக் கார் மட்டுமின்றி எம்.ஜி.மோட்டார்ஸ் நிறுவனம் தனது குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை டெஸ்டிங் செய்து வருகிறது. வரும் மாதங்களில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.

    • டெஸ்டிங் செய்யப்படும் மாடலில் டிஜிட்டல் டேஷ்போர்டு உள்ளது.
    • இந்த யூனிட்-இல் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படலாம்.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது பல்சர் சீரிஸ் மாடல்களை முற்றிலுமாக மாற்றியமைத்து வருகிறது. அந்த வகையில் பல்சர் N250 மோட்டார்சைக்கிள் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. டெஸ்டிங் செய்யப்படும் மாடலில் டிஜிட்டல் டேஷ்போர்டு உள்ளது.

    சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பல்சர் N150 மற்றும் பல்சர் N160 மாடல்களிலும் இதே போன்ற டிஜிட்டல் யூனிட் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது இவை பல்சர் சீரிசின் பெரிய மாடல்களிலும் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. இந்த யூனிட்-இல் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படும் என்று தெரிகிறது.

     


    முந்தைய ஸ்பை படங்களில் புதிய பல்சர் N250 மாடலில் யு.எஸ்.டி. ஃபோர்க் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது பல்சர் NS160 மற்றும் பல்சர் NS200 மாடல்களில் உள்ளதை போன்றே இருக்கும் என்றும் N250 மாடலுக்கு ஏற்ற டியூனிங் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட மற்ற பஜாஜ் பல்சர் மோட்டார்சைக்கிள்களை போன்றே புதிய 250 சீரிஸ் மாடல்களிலும் மெக்கானிக்கல் மாற்றங்கள் செய்யப்படாது என்றே தெரிகிறது. புது அப்டேட்களுக்கு ஏற்ப புதிய பல்சர் 250 மாடல்களின் விலையும் சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • இந்திய ராணுவத்திற்காக விசேஷமாக உருவாக்கி இருக்கிறது.
    • பாதுகாப்பு மற்றும் பல்வேறு இதர பணிகளில் இதனை பயன்படுத்த முடியும்.

    இந்திய ராணுவத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஆயுதம் தாங்கிய இலகுரக வாகனம்- அர்மாடோ (Armoured Light Specialist Vehicle-ASLV) 2024 குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டது. மஹிந்திரா நிறுவனம் இந்த வாகனத்தை இந்திய ராணுவத்திற்காக மிகவும் விசேஷமாக உருவாக்கி இருக்கிறது.

    முழுக்க முழுக்க இந்தியாவிலேயே டிசைன் செய்யப்பட்ட மஹிந்திரா அர்மாடோ ராணுவ பயன்பாட்டுக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பங்கள், அதிகளவு பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கிறது. பலவிதங்களில் பயன்படுத்தக்கூடிய மிக முக்கிய வாகனங்களில் ஒன்றாக ஆயுதம் தாங்கிய இலகுரக வாகனம் விளங்குகிறது.

     


    அந்த வகையில், மஹிந்திரா உருவாக்கும் அர்மாடோ மாடலில் பி7 மற்றும் ஸ்டனாக் லெவல் II பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதிநவீன வாகனம் என்ற வகையில், இது சிறப்பு படையினர், தீவிரவாத தடுப்பு படை, எல்லை பாதுகாப்பு மற்றும் பல்வேறு இதர பணிகளில் இதனை பயன்படுத்த முடியும். அர்மாடோ மாடலில் 3.2 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டைரக்ட் இன்ஜெக்ஷன் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் பலவித எரிபொருள்களில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. செயல்திறனை பொருத்தவரை இந்த யூனிட் 215 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஆல்-வீல் டிரைவ் வசதி மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

     


    வாகனத்தில் 1000 கிலோ எடை ஏற்றப்பட்ட நிலையிலும் அர்மாடோ மாடல் மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த வாகனத்தின் டயர்களில் காற்று இல்லாமலோ அல்லது பன்ச்சர் ஆன நிலையில்கூட 50 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும். கடினமான சூழலிலும் பயன்படுத்த ஏதுவாக இதில் செல்ஃப்-கிளீனிங் எக்சாஸ்ட் மற்றும் ஃபில்ட்ரேஷன் சிஸ்டம் உள்ளது.

    இவைதவிர அர்மாடோ மாடலில் ஆயுதங்களை பொருத்திக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் ஹம்மர் போன்ற டிசைன் கொண்டிருக்கும் அர்மாடோ அசாத்திய செயல்திறன், அதிநவீன தொழில்நுட்பத்துடன் ராணுவ பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா அர்மாடோ குறித்த பதிவை தனது எக்ஸ் அக்கவுண்டில் பகிர்ந்து இருக்கிறார்.



    • காரின் அம்சங்கள் செடான் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த காரில் லெவல் 2 ADAS, 360 டிகிரி சரவுண்ட் கேமரா, பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

    பி.ஒய்.டி. நிறுவனம் தனது 2024 அட்டோ 3 மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மேம்பட்ட மாடலின் வெளிப்புறம் காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, புதிய நிற ஆப்ஷன்கள் மற்றும் மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சில அம்சங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சீல் செடான் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது.

    புதிய கார் காஸ்மோஸ் பிளாக் பெயரில் புது நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் புதிய பேட்டன் டிசைன் கொண்ட 18-இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இதன் பின்புறம் பில்டு யுவர் டிரீம்ஸ் லோகோவுக்கு மாற்றாக பி.ஒய்.டி. எழுத்துக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. உள்புறத்தில் 15.6 இன்ச் அளவில் சுழலக்கூடிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.

     


    பி.ஒய்.டி. அட்டோ 3 மாடலில் டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், பவர்டு டிரைவர் சீட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், வயர்லெஸ் சார்ஜர், லெவல் 2 ADAS, 360 டிகிரி சரவுண்ட் கேமரா, பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

    புதிய அட்டோ 3 மாடலில் 60.48 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 521 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது. இதில் உள்ள பேட்டரி பேக் 80 கிலோவாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதை கொண்டு காரை 50 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும்.

    சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்த மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பி.ஒய்.டி. அட்டோ 3 மாடலின் விலை ரூ. 33 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • கே.டி.எம். நிறுவனத்தின் 2024 RC 8C மாடல் மொத்தத்தில் 100 யூனிட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
    • இந்த மாடலில் 889சிசி, டுவின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கே.டி.எம். நிறுவனம் 2024 RC 8C மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இது லிமிடெட் எடிஷன் என்பதால் மொத்தத்தில் 100 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த மாடலுக்கான முன்பதிவுகள் மார்ச் 20-ம் தேதி மதியம் 3 மணிக்கு கே.டி.எம். அதிகாரப்பூர்வ வலைதளத்தில் துவங்க இருக்கிறது.

    2024 கே.டி.எம். RC 8C மாடலின் முன்பதிவு கட்டணம் 1000 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 90 ஆயிரத்து 462 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் கே.டி.எம். நிறுவனத்தின் RC 16 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் மெல்லியதாகவும், பெரிய ஏர் இன்டேக் உடன் ஏரோடைனமிக் டிசைன் கொண்டிருக்கிறது. இந்த மாடலின் ஒட்டுமொத்த எடை 142 கிலோ ஆகும்.

     


    புதிய கே.டி.எம். RC 8C மாடலில் 889சிசி, LC8c பேரலல் டுவின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 135 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 43mm WP அபெக்ஸ் ப்ரோ ஃபோர்க்குகள், WP அபெக்ஸ் ரிமோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது.

    பிரேக்கிங்கிற்கு பின்புறம் 290mm டூயல் டிஸ்க்குகள், முன்புறத்தில் 230mm டிஸ்க் மற்றும் பிரெம்போ 19RCS கோர்சா கார்டா ரேடியல் மாஸ்டர் பிரேக் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு உள்ளது. 2024 கே.டி.எம். RC 8C மாடலில் 5 இன்ச் அளவில் டி.எஃப்.டி. ரேஸ் டேஷ், டேட்டா லாகர் மற்றும் பில்ட்-இன் ஜி.பி.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

     


    புதிய 2024 கே.டி.எம். RC 8C மாடலுக்கான முன்பதிவு ஐரோப்பா, அமெரிக்கா, மெக்சிகோ, கனடா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் மட்டுமே நடைபெறுகிறது. இதன் விலை 41 ஆயிரத்து 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 34 லட்சத்து 37 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • இந்த சலுகைகள் இம்மமாத இறுதிவரை வழங்கப்படும்.
    • சலுகைகள் கார் மாடல், வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.

    வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு மார்ச் மாத சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி வோக்ஸ்வேகன் டுகன், விர்டுஸ் போன்ற எஸ்.யு.வி. மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகின்றன. இவை ரொக்க தள்ளுபடி, கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் போனஸ் வடிவில் வழங்கப்படுகின்றன.

    இந்த சலுகை மற்றும் பலன்கள் மார்ச் மாத இறுதி வரை வழங்கப்படுகின்றன. இதில் வோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 75 ஆயிரம் வரையிலான பலன்கள் கிடைக்கும். இதில் ரூ. 30 ஆயிரம் ரொக்க தள்ளுபடி, ரூ. 30 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 15 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும்.

     


    வோக்ஸ்வேகன் டைகுன் மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 60 ஆயிரம் ரொக்க தள்ளுபடி, ரூ. 40 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 30 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும்.

    இந்த சலுகைகள் ஸ்டாக் இருப்பு, வேரியண்ட், பகுதி விற்பனை மையம், காரின் நிறம், பவர்டிரெயின் மற்றும் இதர நிலைகளுக்கு ஏற்ப வேறுபடும். 

    • ஸ்கோடா மாடல்களில் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.
    • கார்களை அப்டேட் செய்யும் பணிகளில் அந்நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

    ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் மற்றும் ஸ்லேவியா மாடல்கள் அப்டேட் செய்யப்பட்டு விரைவில் இவற்றின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ஸ்கோடா இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் கார் மாடல்களை அப்டேட் செய்யும் பணிகளில் அந்நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில், ஸ்கோடா ஃபேஸ்லிஃப்ட் கார் மாடல்களில் கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இதனை ஸ்கோடா இந்தியா பிரான்டு இயக்குநர் பீட்டர் ஜனேபா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.


     

    ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா போன்ற மிட்சைஸ் செடான்கள், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற மிட்சைஸ் எஸ்.யு.வி. மாடல்களில் தற்போது லெவல் 2 ஆட்டோனோமஸ் டிரைவல் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதி வழங்கப்பட்டு விட்டது. எனினும், ஸ்கோடா மாடல்களில் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.

    இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜனேபா, "ADAS 2.0-வை பொருத்தவரை MQB AO-IN பிளாட்ஃபார்மில் உருவான அனைத்து கார்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களிலும் படிப்படியாக வழங்கப்பட்டு விடும்," என்று தெரிவித்தார்.


     

    தொடர்ந்து பேசிய அவர், "இந்திய சந்தை மிகவும் அதிவேகமான ஒன்று. எங்களது போட்டியாளர்கள் இன்றைய சூழலில் அதிவேகமாக செயல்படுகின்றனர், ஆனால் நாங்கள் விரைவில் இந்த நிலையை எட்டிவிடுவோம். ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் மட்டுமின்றி இடையில் வேறுசிலவற்றையும் கொண்டுவருவோம்."

    "அந்த வகையில், 2.5 மாடல்களான காம்பேக்ட் எஸ்.யு.வி.-யில் தற்போது குஷக் மாடலில் இல்லாத சில அம்சங்களும் வழங்கப்படும். இதில் ஒன்று 360-டிகிரி கேமரா," என்று அவர் தெரிவித்தார்.

    அதன்படி மார்ச் 2025 அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஸ்கோடா காம்பேக்ட் எஸ்.யு.வி.-க்களில் லெவல் 2 ADAS மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகள் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

    • எலெக்ட்ரிக் மோட்டார் உடன் 48 வோல்ட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது.
    • கவாசகி நிறுவனம் தனது ஹைப்ரிட் மோட்டார்சைக்கிளுக்கு இந்தியாவில் காப்புரிமை பெற்றது.

    கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது நின்ஜா 7 ஹைப்ரிட் மோட்டார்சைக்கிளுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது. அந்த வகையில், இந்த மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    புதிய நின்ஜா 7 ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள், உலகின் முதல் ஸ்டிராங் ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. இந்த மாடல் சந்தையில் வெற்றி பெறும் பட்சத்தில், இதே போன்ற மாடல்கள் சந்தையில் அதிகளவில் அறிமுகம் செய்யப்படலாம்.

     


    கவாசகி நின்ஜா 7 ஹைப்ரிட் மாடலில் 451சிசி, பேரலல் டுவின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 12 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்ட டிராக்ஷன் மோட்டார் வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த மாடலின் ஒட்டுமொத்த திறன் 60 ஹெச்.பி. வரை இருக்கும் என்று தெரிகிறது.

    இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் உடன் 48 வோல்ட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்படும் என்று தெரிகிறது. நின்ஜா 7 ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள், சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் வழக்கமான 650சிசி முதல் 700சிசி மோட்டார்சைக்கிளுக்கு இணையான திறன் கொண்டிருக்கும் என்று கவாசகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

     


    செயல்திறன் ஒருபக்கம் அதிகளவில் இருக்கும் போதும், ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள் என்பதால் நின்ஜா 7 ஹைப்ரிட் மாடல் சந்தையில் தற்போது கிடைக்கும் 250சிசி மாடல்கள் வழங்கும் மைலேஜ் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த மாடலின் செயல்திறன் மற்றும் மைலேஜ் அடிப்படையில் இது சந்தையில் நிச்சயம் வெற்றி பெறும் என்றே தெரிகிறது.

    கவாசகி நின்ஜா 7 ஹைப்ரிட் மாடலில் அதிக தரமுள்ள டி.எஃப்.டி. டேஷ்போர்டு மற்றும் ரைடாலஜி செயலி, வாக் மோட், ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளன. இந்த பைக்கின் முன்புறம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. இத்துடன் முன்புறம் இரு டிஸ்க் பிரேக்குகள், பின்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் அறிமுகமாகும் போது புதிய கவாசகி நின்ஜா 7 ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் நின்ஜா ZX-6R மாடலின் மேல் நிலைநிறுத்தப்படலாம்.

    • மொத்தத்தில் 120 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
    • இந்த மாடலில் 6.75 லிட்டர் டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி12 என்ஜின் உள்ளது.

    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய கோஸ்ட் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்நிறுவனத்தின் 120-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் அறிமுகமாகி இருக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ப்ரிசம் என்று அழைக்கப்படும் இந்த கார் மொத்தத்தில் 120 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளது.

    புதிய கோஸ்ட் ப்ரிசம் மாடலில் ஏராளமான காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இவை இந்த காலத்துக்கு ஏற்ற வகையில் டிரெண்டிங் டிசைன் மற்றும் அழகு சாதன துறையை தழுவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் வெளிப்புறம் கன்மெட்டல் கிரே நிறம் கொண்டிருக்கிறது.

    இதுதவிர புதிய கோஸ்ட் ப்ரிசம் மாடல்- ஃபீனிக்ஸ் ரெட், டர்சீஸ், மாண்டரின் மற்றும் ஃபோர்ஜ் எல்லோ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இவை காரின் பம்ப்பர் இன்சர்ட்கள், பிரேக் கேலிப்பர்கள மற்றும் கோச்லைன் உள்ளிட்டவைகளில் இடம்பெற்றுள்ளன. இதன் இன்டீரியர் பற்றிய விவரங்கள் அதிகளவு வெளியாகவில்லை.

    ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ப்ரிசம் மாடலில் 6.75 லிட்டர் டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 555 ஹெச்.பி. பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. 

    • இந்த மாடல் முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட்டு வருகிறது.
    • இந்த மாடலில் 399 சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படலாம்.

    கே.டி.எம். நிறுவனத்தின் அடுத்த தலைமுறை 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், புதிய மாடல் இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. சேசிஸ் முதல் டிசைன் வரை இந்த மாடல் முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே இந்த பைக் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் புதிய கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ஆஃப் ரோடு டெஸ்டிங் செய்யப்படுகிறது. இந்த பைக்கின் டிசைன் கே.டி.எம். ரேலி பைக்குகளை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     


    இதில் ஹை-மவுன்ட் ஃபேரிங், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் லைட்கள், உயரமான வின்ட் ஸ்கிரீன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் ஃபியூவல் டேன்க் மெல்லியதாக காட்சியளிக்கிறது. புதிய 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலில் சமீபத்தில் அறிமுகமான 390 டியூக் மாடல்களில் வழங்கப்பட்ட 399 சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த என்ஜின் 45.3 ஹெச்.பி. பவர், 39 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதும் இந்த மாடல் ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 மாடலுக்கு போட்டியாக அமையும்.

    • ஆடியின் எதிர்கால இ டிரான் மாடல்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.
    • இந்த எஸ்.யு.வி. இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும்.

    ஆடி நிறுவனம் தனது முற்றிலும் புதிய கியூ6 இ டிரான் மாடல் மார்ச் 18-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ஆடியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எஸ்.யு.வி. மாடல் முற்றிலும் புதிய PPE (பிரீமியம் பிளாட்ஃபார்ம் எலெக்ட்ரிக்) பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் ஆடியின் எதிர்கால இ டிரான் மாடல்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.

    புதிய காரின் புகைப்படங்களை ஆடி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி கியூ4 மற்றும் கியூ8 இ டிரான் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.-க்களை போன்ற டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி பல்கேரியன் பியர்டு கிரில் மூடப்பட்டு மெல்லிய லைட் கிளஸ்டர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    போர்ஷே மக்கன் மாடலை போன்றே புதிய கியூ6 மாடலிலும் ஸ்ப்லிட் ஹெட்லைட் டிசைன், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள் வழங்கப்படுகின்றன. புதிய கியூ6 இ டிரான் உள்புறத்தில் இரட்டை டிஜிட்டல் ஸ்கிரீன்கள்- ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டராக வழங்கப்படுகின்றன.

    புதிய ஆடி கியூ6 இ டிரான் மாடலில் 800 வோல்ட் எலெக்ட்ரிக் ஆர்கிடெக்ச்சர் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் பவர்டிரெயின் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன. இந்த எஸ்.யு.வி. மாடல் 2-வீல் மற்றும் ஆல்-வீல் டிரைவ் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    • இரண்டு பெயர்களுக்கு அந்நிறுவனம் காப்புரிமை கோரியுள்ளது.
    • அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்று டி.வி.எஸ். XL100.

    டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது பிரபலமான XL100 மொபெட் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனில் பயன்படுத்துவதற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. முதற்கட்டமாக டி.வி.எஸ். XL எலெக்ட்ரிக் வெர்ஷனில் பயன்படுத்துவதற்காக E-XL மற்றும் XL EV என இரண்டு பெயர்களுக்கு அந்நிறுவனம் காப்புரிமை கோரியுள்ளது.

    காப்புரிமை கோரியிருப்பதை அடுத்து, டி.வி.எஸ். நிறுவனம் தனது XL மொபெட் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டி.வி.எஸ். நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக டி.வி.எஸ். XL100 விளங்குகிறது.

     


    ஐகியூப் மாடலின் வெற்றியை தொடர்ந்து டி.வி.எஸ். நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் E-XL மற்றும் XL EV மாடல்களை பயன்படுத்த டி.வி.எஸ். நிறுவனம் காப்புரிமை கோரியிருக்கிறது.

    எனினும், இதுபற்றி அந்நிறுவனம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. தற்போது டி.வி.எஸ். XL100 பெட்ரோல் மாடலின் விலை ரூ. 44 ஆயிரத்து 999 என துவங்கி அதிகபட்சம் ரூ. 59 ஆயிரத்து 695, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் மொபெட் பிரிவில் விற்பனை செய்யப்படும் ஒற்றை மாடலாக கைனடிக் E லூனா விளங்குகிறது. இதன் விலை ரூ. 64 ஆயிரத்து 990 என துவங்கி அதிகபட்சம் ரூ. 74 ஆயிரத்து 990, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ×