search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    • சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய மிட்சைஸ் எஸ்யுவி மாடல் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
    • புதிய சிட்ரோயன் மிட்சைஸ் எஸ்யுவி மாடல் இருவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    சிட்ரோயன் நிறுவனத்தின் முற்றிலும் புதிய எஸ்யுவி மாடல் ஏப்ரல் 27 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய எஸ்யுவி குறித்து சிட்ரோயன் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த கார் டிசைன் மற்றும் பொறியியல் பணிகள் முழுக்க முழுக்க இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டது என சிட்ரோயன் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் சிட்ரோயன் நிறுவனத்தின் அடுத்த மாடல் மிட்சைஸ் எஸ்யுவி-ஆக இருக்கும் என ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் இந்த கார் C3 ஹேச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. ப்ரோடக்ஷன் வடிவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய எஸ்யுவி மாடல் C3 ஏர்கிராஸ் எனும் பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

     

    புதிய சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடலில் 1.2 லிட்டர் டர்போ, 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்பட இருக்கிறது. இது அதிகபட்சம் 110 ஹெச்பி பவர், 190 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இதே எஞ்சின் தற்போது விற்பனை செய்யப்படும் C3 ஹேச்பேக் மாடலிலும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கார் இருவித இருக்கை அமைப்புகள்: ஐந்து மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய வகையில் கிடைக்கும். அந்த வகையில், புதிய மாடல் ஹூண்டாய் கிரெட்டா, டொயோட்டா ஹைரைடர் மற்றும் கியா செல்டோஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். இதன் 7 சீட்டர் மாடல் கியா கரென்ஸ், மாருதி சுசுகி XL6 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    Photo Courtesy: Rushlane

    • ஹோண்டா, டிவிஎஸ் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • பல்வேறு முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய திட்டங்களை மார்ச் 29 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது. இதே வரிசையில் டிவிஎஸ் நிறுவனமும் தனது புதிய எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர பிரிவு தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.

    ஏத்தர் எனர்ஜி மற்றும் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனங்கள் தொடர்ந்து விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதுதவிர மேலும் பல்வேறு நிறுவனங்கள் புதிதாக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் மேலும் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

     

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர டிவிஎஸ் நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் மேலும் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. புதிய டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 5 கிலோவாட் முதல் 25 கிலோவாட் வரையிலான திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இதுதவிர டிவிஎஸ் நிறுவனத்தின் எதிர்கால எலெக்ட்ரிக் வாகனங்கள் முற்றிலும் புதிய பவர்டிரெயின் கொண்டிருக்கும் என காப்புரிமை விண்ணப்பங்களில் தெரியவந்து இருக்கிறது.

    ஹோண்டா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விவரங்களை மார்ச் 29 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது. புதிய காப்புரிமையில் எலெக்ட்ரிக் மோட்டார், சார்ஜர் மற்றும் பேட்டரி பேக் கண்ட்ரோலர் என பல்வேறு பாகங்களின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    காப்புரிமை வரைபடங்களின் படி இது இ-ஸ்கூட்டராக இருக்கும் என தெரிகிறது. மேலும் இதில் பேட்டரி பேக் புளோர்போர்டின் கீழ் பொருத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இதன் பின்புறம் ஹப் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஹோண்டா நிறுவனம் கழற்றக்கூடிய பேட்டரி பேக் பயன்படுத்துவது பற்றிய பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி ஹோண்டா நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் ஆக்டிவா 6ஜி மாடலை எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகம் செய்யும் என கூறப்பட்டது.

    • இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரித்து வருகிறது.
    • எலெக்ட்ரிக் வாகன விற்பனை குறித்த கேள்விக்கு மத்திய மந்திரி நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.

    இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 2 லட்சத்து 78 ஆயிரத்திற்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார்.

    ஆந்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் வாகன போர்டலில் இணையும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதே போன்று தெலுங்கானா மற்றும் லக்ஷதீப் பகுதிகளுக்கான விவரங்கள் மத்திய அரசு முனையத்தில் இடம்பெறவில்லை. இதன் காரணமாக இந்த பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகன விவரங்கள் இதில் சேர்க்கப்படவில்லை.

     

    மத்திய அரசின் வாகன பதிவு முனையத்தில் உள்ள விவரங்களின் படி 2021 ஆம் ஆண்டு 3 லட்சத்து 29 ஆயிரத்து 808 யூனிட்கள் பதிவாகி இருந்தது. கடந்த ஆண்டு 10 லட்சத்து 20 ஆயிரத்து 679 யூனிட்கள் பதிவானது. இந்த வரிசையில், இந்த ஆண்டு துவங்கிய முதல் மூன்று மாதங்களிலேயே சுமார் 2.78 லட்சம் யூனிட்கள் பதிவாகி இருக்கின்றன.

    நாட்டில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு குறித்த கேள்விக்கு மத்திய மந்திரி நிதின் கட்கரி மக்களைவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் முற்றிலும் புதிய வெர்னா மாடல் முன்பதிவில் அசத்தி வருகிறது.
    • சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 2023 ஹூண்டாய் வெர்னா டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.37 லட்சம் ஆகும்.

    ஹூண்டாய மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் முற்றிலும் புதிய வெர்னா மாடலை சமீபத்தில் தான் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2023 வெர்னா மாடலின் விலை ரூ. 10 லட்சத்து 89 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 37 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    2023 ஹூண்டாய் வெர்னா மாடல் EX, S, SX, மற்றும் SX(O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றுடன் இரண்டு பெட்ரோல் என்ஜின்கள், அதிக டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. நேற்று இந்த காருக்கான முன்பதிவு துவங்கியது. இந்த நிலையில், 2023 ஹூண்டாய் வெர்னா மாடலை வாங்க சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

     

    சில நாட்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடலுக்கு போட்டியாக அறிமுகமாகி இருக்கும் நிலையில், 2023 வெர்னா துவக்கத்திலேயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே வெர்னா காரை பயன்படுத்துவோர் மற்றும் இளம் வாடிக்கையாளர்கள் புதிய வெர்னா மாடலை வாங்குவர் என ஹூண்டாய் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    முற்றிலும் புதிய 2023 ஹூண்டாய் வெர்னா மாடல் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் T-GDi யூனிட் ஆகும். இது 158 ஹெச்பி பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இதன் NA பெட்ரோல் என்ஜின் 113 ஹெச்பி பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை கொண்டிருக்கிறது. டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், IVT யூனிட், 7 ஸ்பீடு DCT யூனிட் வழங்கப்படுகிறது. புதிய மாடலில் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் நிறுத்தப்பட்டு விட்டது.

    புதிய வெர்னா மாடலின் வெளிப்புறம் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் டிசைன், எல்இடி டிஆர்எல், முன்புறம் பம்ப்பர், கிரில், பம்ப்பரின் மேல் எல்இடி லைட் பார், டூயல் டோன் அலாய் வீல்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, 2-பீஸ் எல்இடி டெயில் லைட்கள், பூட் லிட் மீது எல்இடி லைட் பார் மற்றும் முற்றிலும் புதிய பின்புற பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் மாருதி சுசுகி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லேவியா மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரெஸ்ஸா CNG மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய பிரெஸ்ஸா CNG மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பிரெஸ்ஸா CNG மாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. முற்றிலும் புதிய எஸ்யுவி மாடலுக்கான காத்திருப்பு காலம் அதற்குள் ஆறு மாதங்களாக அதிகரித்துவிட்டது. மாருதி சுசுகி நிறுவனம் புதிய பிரெஸ்ஸா CNG மாடலுக்கான முன்பதிவை சமீபத்தில் துவங்கியது.

    முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் மாருதி சுசுகி பிரெஸ்ஸா CNG மாடல் - LXi, VXi மற்றும் ZXi என மூன்று விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய பிரெஸ்ஸா CNG மாடலில் 1.5 லிட்டர், டூயல்ஜெட் டூயல் VVT NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த பெட்ரோல் என்ஜின் 99.2 ஹெச்பி பவர், 136 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. CNG மோடில் இதன் செயல்திறன் 86.63 ஹெச்பி பவர், 121.5 நியூட்டன் மீட்டர் டார்க் ஆக குறைந்துவிடும்.

     

    இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. மேலும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய CNG மாடல் லிட்டருக்கு 25.51 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை பிரெஸ்ஸா CNG டாப் எண்ட் மாடலில் 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, குரூயிஸ் கண்ட்ரோல், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், பவர்டு ரியர்-வியூ மிரர்கள் வழங்கப்படுகின்றன.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மாடல் நான்கு நிறங்கள், ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்திய சந்தையில் டாடா பன்ச் மாடலின் விலை ரூ. 6 லட்சத்தில் இருந்து துவங்குகிறது.

    இந்திய சந்தையில் டாடா பன்ச் மாடல் விற்பனையில் 1.75 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது. 2021 அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா பன்ச் மாடலின் விலை ரூ. 6 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 87 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    டாடா பன்ச் மாடல்: அடோமிக் ஆரஞ்சு-பிளாக் ரூஃப், டொர்ணடோ புளூ-வைட் ரூஃப், கலிப்சோ ரெட் - வைட் ரூஃப், ஆர்கஸ் வைட் - பிளாக் ரூஃப், டேடோனா கிரே - பிளாக் ரூஃப், டிராபிக்கல் மிஸ்ட் - பிளாக் ரூஃப் மற்றும் மீடியோர் பிரான்ஸ் - பிளாக் ரூஃப் என ஏழு டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. இந்த கார் பியுர், அட்வென்ச்சர், அகம்ப்லிஷ்டு மற்றும் கிரேயடிவ் என நான்கு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

     

    இந்திய சந்தையில் டாடா பன்ச் மாடல் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் கொண்ட ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 84 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், AMT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் மாடலின் CNG வெர்ஷனை காட்சிக்கு வைத்திருந்தது. வரும் மாதங்களில் டாடா பன்ச் CNG மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். 

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஜிம்னி மாடல் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது.
    • புதிய மாருதி ஜிம்னி மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது புதிய ஜிம்னி மாடலின் டிஸ்ப்ளே யூனிட்கள் விற்பனையகம் வரத்துவங்கி உள்ளன. புதிய மாருதி ஜிம்னி மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ஜிம்னி மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மாருதி சுசுகி ஜிம்னி மாடல் டெஸ்ட் டிரைவ் மே மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

    மாருதி ஜிம்னி மாடலுக்கான டெஸ்டிங் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மாருதி ஆல்டோ அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் ஜிம்னி மாடல் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய ஜிம்னி மாடல் டோன்டு-டவுன் ப்ரோஃபைல் கொண்டிருக்கிறது.

     

    ஒட்டுமொத்தமாக சதுரங்க வடிவில் பாக்சி ப்ரோஃபைல் கொண்டிருக்கும் ஜிம்னி மாடலில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள், 5 ஸ்லாட் க்ரோம் பிலேட் செய்யப்பட்ட கிரில், பம்ப்பர், கிளாம்ஷெல் பொனெட், ரூஃப் ரெயில் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. பக்கவாட்டில் சதுரங்க வடிவ வீல் ஆர்ச்கள், அகலமான பாடி கிளாடிங், பக்கவாட்டில் இண்டிகேட்டர்கள், பிளாக் ரியர் வியூ மிரர்கள், பாடி நிற டோர் ஹேண்டில்கள் உள்ளன.

    உள்புறம் ஜிம்னி மாடலில் 9 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்மார்ட்பிளே ப்ரோ பிளஸ், சரவுண்ட் சென்ஸ் ஆர்கமிஸ் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் குரூயிஸ் கண்ட்ரோல், லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் உள்ளன.

    Photo Courtesy: Rushlane

    • கியா நிறுவனத்தின் முற்றிலும் புதிய செல்டோஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய கியா செல்டோஸ் மாடலின் விலை அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் 2023 செல்டோஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2023 கியா செல்டோஸ் மாடலின் விலை ரூ. 10 லட்சத்து 89 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 65 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய மிட்சைஸ் எஸ்யுவி மாடலின் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. புதிய மாடல்களின் என்ஜின்கள் RDE மற்றும் E20 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. கடுமையான புகை விதிகள் காரணமாக செல்டோஸ் மாடலில் வழங்கப்பட்டு வந்த 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் நீக்கப்பட்டு இருக்கிறது.

     

    இதுதவிர புதிய செல்டோஸ் மாடலில் 1.5 லிட்டர் NA நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இவற்றில் பெட்ரோல் என்ஜின் 115 பிஎஸ் பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் 116 பிஎஸ் பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    வரும் மாதங்களில் இந்த காரில் முற்றிலும் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 160 பிஎஸ் பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும். இந்த என்ஜின் ஏற்கனவே கியா கரென்ஸ் மற்றும் ஹூண்டாய் அல்கசார் போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை விவரங்கள்:

    2023 கியா செல்டோஸ் HTE 1.5 லிட்டர் டீசல் MT ரூ. 12 லட்சத்து 39 ஆயிரம்

    2023 கியா செல்டோஸ் HTK 1.5 லிட்டர் டீசல் MT ரூ. 13 லட்சத்து 69 ஆயிரம்

    2023 கியா செல்டோஸ் HTK+ 1.5 லிட்டர் டீசல் MT ரூ. 15 லட்சத்து 2 ஆயிரம்

    2023 கியா செல்டோஸ் HTX 1.5 லிட்டர் டீசல் MT ரூ. 16 லட்சத்து 59 ஆயிரம்

    2023 கியா செல்டோஸ் HTX+ 1.5 லிட்டர் டீசல் MT ரூ. 17 லட்சத்து 59 ஆயிரம்

    2023 கியா செல்டோஸ் HTX 1.5 லிட்டர் டீசல் AT ரூ. 17 லட்சத்து 59 ஆயிரம்

    2023 கியா செல்டோஸ் GTX+ 1.5 லிட்டர் டீசல் AT ரூ. 19 லட்சத்து 35 ஆயிரம்

    2023 கியா செல்டோஸ் X லைன் 1.5 லிட்டர் டீசல் AT ரூ. 19 லட்சத்து 65 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

    • ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டியது.
    • 2017 ஆம் ஆண்டு ஒகினவா தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

    ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர்களில் முன்னணி இடத்தில் உள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஒகினவா உற்பத்தி ஆலையில் இருந்து 2.5 லட்சமாவது வாகனம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஒகினவா நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியில் 2.5 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டி அசத்தி இருக்கிறது.

    2015 ஆம் ஆண்டு இந்தியாவில் பணிகளை துவங்கிய ஒகினவா 2017 ஆண்டு சந்தையில் களமிறங்கி தனது முதல் வாகனத்தை அறிமுகம் செய்தது. இந்த நிறுவனத்தின் ஒகினவா ரிட்ஜ் மாடல் 2017 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன்பின் ஒகினவா பிரைஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

     

    மத்திய அரசின் ஃபேம் 2 திட்டத்தின் கீழ் மாணியம் பெற்ற முதல் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக ஒகினவா ஆட்டோடெக் உள்ளது. ஒகினவா நிறுவனம் தற்போது ஐபிரைஸ் பிளஸ், ஐபிரைஸ் ப்ரோ, லைட் மற்றும் ஆர்30 போன்ற மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. 2020 வாக்கில் ஒகினவா நிறுவனம் இந்தியவின் முதல் கஸ்டமைசேஷன் வசசதி கொண்ட B2B எலெக்ட்ரிக் இருசக்கர வானத்தை 2020 வாக்கில் அறிமக செய்தது.

    2021 ஆண்டு இந்திய விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்த ஒகினவா, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒகினவா கேலக்ஸி ஸ்டோர்களை திறந்தது. இந்திய சந்தையில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் நிறுவனம், விற்பனையில் இத்தனை இலக்கை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை ஒகினவா பெற்று இருக்கிறது.

    • டொயோட்டா நிறுவனத்தின் புதிய இன்னோவா க்ரிஸ்டா மாடல் நான்கு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய இன்னோவா க்ரிஸ்டா டீசல் மாடலில் 2.4 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட GD சீரிஸ் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் புதிய இன்னோவா க்ரிஸ்டா மாடலுக்கான முன்பதிவுகளை சில நாட்களுக்கு முன் துவங்கியது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய இன்னோவா க்ரிஸ்டா டீசல் மாடல் G, GX, VX மற்றும் ZX என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 19 லட்சத்து 13 ஆயிரம் என துவங்குகிறது. இன்னோவா க்ரிஸ்டா GX வேரியண்ட் விலை ரூ. 19 லட்சத்து 99 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    இதில் உள்ள 2.4 லிட்டர் டீசல் என்ஜின் 150பிஎஸ் பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் E20 ரக எரிபொருளில் இயங்கும் வசதியும், RDE விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த காரில் 8 இன்ச் டச் ஸ்கிரீன், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இந்த எம்பிவி மாடலில் 8 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஒட்டுனர் இருக்கை, டிஜிட்டல் டிஸ்ப்ளே ரியர் ஆட்டோ ஏசி, சீட் பேக் டேபில் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் உள்ளது. இத்துடன் ஏழு ஏர்பேக், ஏபிஎஸ், பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஆடி இ பைக் மாடலில் 250 வாட் பிரோஸ் மோட்டார் உள்ளது.
    • ஆடி நிறுவனம் முற்றிலும் புதிய இ பைக் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

    எலெக்ட்ரிக் பைக் அல்லது இ பைக் மாடல்கள் சமீப காலங்களில் வழக்கமான மிதிவண்டிகளுக்கு (சைக்கிள்) மாற்றாக அமைந்துள்ளது. காற்று மாசு ஏற்படுத்தாமல் இருப்பது, சுற்றுச்சூழலகுக்கு உகந்தது என ஏராளமான நற்பயன்களை வழங்குவதால் இ-பைக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

    இ பைக் மாடல்களில் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரிசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. இவை பெட்ரோல் என்ஜின் கொண்ட வாகனங்களை விட பெருமளவுக்கு காற்று மாசு ஏற்படுவதை தடுக்கிறது. கார்களுக்கு மாற்றாக இ பைக் வாங்கும் போது காற்று மாசு ஏற்படுவதை தடுப்பசோடு, நகர்ப்புறங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த முடியும்.

     

    ஆடி நிறுவனம் முற்றிலும் புதிய இ பைக் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. எனினும், இந்த இ பைக் விலை தற்போது விற்பனை செய்யப்படும் வாடிக்கையன கார் மாடல்களை விட அதிகம் ஆகும். இந்த இ பைக் அதிநவீன சொகுசு வசதிகளை கொண்டிருக்கிறது. இது ஆடி நிறுவனத்தின் RS Q E-டிரான் E2 டக்கர் ரேலி ரேசர் போன்ற மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த இ பைக்கில் உள்ள ஏராளமான அம்சங்கள் பைக் ப்ரியர்களை நிச்சயம் கவரும் வகையில் இருக்கிறது. இத்தாலியின் ஃபேண்டிக் உருவாக்கிய இந்த இ பைக் XMfF 1.7 சார்ந்து ருவாகி இருக்கும் ஆடி இ பைக் மாடலில் 250 வாட் பிரோஸ் மோட்டார் உள்ளது. இதே மோட்டார் ஹார்லி டேவிட்சன் சீரியல் 1 பேஷ்/Mtn உள்து. இத்துடன் 720 வாட் ஹவர் பேட்டரி கொண்டிருக்கிறது. இவை அதிகபட்சம் 66ft/lb டார்க் வெளிப்படுத்துகிறது.

    ஆடியின் புதிய இ பைக் மாடல் மூன்று வித அளவுகளில் கிடைக்கிறது. இதன் விலை 8 ஆயிரத்து 499 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 8 லட்சத்து 43 ஆயிரத்து 541 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    • சிட்ரோயன் நிறுவன கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • புதிய புகை விதிகள் அமலுக்கு வரவுள்ளதை அடுத்து பழைய மாடல்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தியாவில் புதிய பிஎஸ்6 2 புகை விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இதை அடுத்து பல்வேறு கார் உற்பத்தியாளர்களும் தங்களின் பழைய கார் மாடல்களை விரைவில் விற்றுத்தீர்க்க அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. இந்த வரிசையில் தற்போது சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது கார்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    பிரென்ச் நாட்டு கார் உற்பத்தியாளரான சிட்ரோயன் அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரையிலான பலன்களை வழங்குகிறது. இதில் சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் ஃபிளாக்ஷிப் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் கூடுதல் தள்ளுபடி மற்றும் பேக்கேஜ்கள் வழங்கப்படுகின்றன.

     

    சிறப்பு சலுகைகளை அடுத்து C5 ஏர்கிராஸ் விலை பலரையும் கவரும் வகையில் உள்ளது. சிட்ரோயன் C3 காரை வாங்குவோருக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு 100 சதவீதம் வரை ஆன்-ரோட் நிதி சலுகை வழங்கப்படுகிறது.

    தற்போது சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் எஸ்யுவி மற்றும் சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் மார்ச் 31 ஆம் தேதி வரை பொருந்தும். விருப்பமுள்ள பயனர்கள் இவற்றை அருகாமையில் உள்ள சிட்ரோயன் இந்தியா விற்பனையகம் சென்று சலுகை பற்றிய தகவல்களை அறிந்துகொண்டு பயன்பெறலாம். 

    ×