search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மஞ்சள் நிறத்தில் ஏ.பி.எஸ். வசதியுடன் யமஹா ஆர். 15
    X

    மஞ்சள் நிறத்தில் ஏ.பி.எஸ். வசதியுடன் யமஹா ஆர். 15

    யமஹா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த YZF R15 V3.0 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிள் புதிய மஞ்சள் நிற வெர்ஷனின் புகைப்படம் வெளியாகியுள்ளது. #YamahaYZFR15 #Motorcycle



    இந்தியாவில் இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பின் அறிமுகமாகும் வாகனங்கள் அனைத்தும் ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம் (ஏ.பி.எஸ்.) எனப்படும் வசதியுடன் தயாரிக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. 

    இதன் எதிரொலியாக யமஹா நிறுவனம் தனது பிரபலமான ஆர்.15 மோட்டார்சைக்கிளில் இத்தகைய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார்சைக்கிளின் விலை இந்தியாவில் ரூ. 1.39 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், புதிய மோட்டார்சைக்கிள் மஞ்சள் நிற எடிஷனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    முன்னதாக யமஹா ஆர்15 ஏ.பி.எஸ். வெர்ஷன் புதிய டார்க்நைட் நிறசத்தில் மேட் பினிஷ் செய்யப்பட்டிருந்தது. இந்த வசதி FZ, , சல்யூடோ RS, யமஹா ரே ZR ஆகிய மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய யமஹா ஆர்15 மோட்டார்சைக்கிள் 155 சி.சி. திறன் கொண்டது. 4-வால்வ் லிக்விட் கூல்டு ஃபியூயல் இன்ஜெக்ஷன் தன்மை கொண்டது. 19.3 பி.ஹெச்.பி. திறன் 10 ஆயிரம் ஆர்.பி.எம். 15 என்.எம். டார்க் செயல்திறன் வெளிப்படுத்தக் கூடியது. இதில் 6 கியர்கள் உள்ளன. இத்துடன் ஸ்லிப் கிளட்ச் வசதியும் கொண்டது.

    இது முழுவதும் டிஜிட்டல் செயல்பாடுகளைக் கொண்டது. இதில் எல்.இ.டி. முகப்பு விளக்கு, பின்புற விளக்குகள் உள்ளன. புதுப்பொலிவோடு கூடுதல் பாதுகாப்பு அம்சமான ஏ.பி.எஸ். வசதி வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    Next Story
    ×