search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • 2 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர்.
    • அசாத்திய கம்ப்யூட்டிங் அனுபவத்தை வழங்குகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தன் விஷன் ப்ரோ ஹெட்செட் ஒருவழியாக விற்பனைக்கு வந்தது. முதற்கட்டமாக அமெரிக்காவில் இதன் விற்பனை துவங்கியுள்ளது. ஏற்கனவே இந்த ஹெட்செட்-க்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வந்தது. முன்பதிவின் போதே, இந்த ஹெட்செட்-ஐ வாங்க 2 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர்.

    புதிய ஹெட்செட் பயனர்கள் தொழில்நுட்பத்துடன் எப்படி உரையாடுகின்றனர் என்பதை மாற்றியமைக்கும் வகையில் பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் முப்பரிமாண டிஜிட்டல் சூழலை நம் கண் முன்னே கொண்டுவருகிறது. இது தனித்துவம் மிக்க, அசாத்திய கம்ப்யூட்டிங் அனுபவத்தை வழங்குகிறது.

     


    ஆப் ஸ்டோரில் பத்து லட்சத்திற்கும் அதிக செயலிகள் உள்ள நிலையில், புதிய ஏ.ஆர். / வி.ஆர். ஹெட்செட்-இல் பயன்படுத்துவதற்கென பிரத்யேகமாக 600 புதிய செயலிகள் மற்றும் கேம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய செயலிகள் ஆப்பிள் விஷன் ப்ரோ அம்சங்களை முழுமையாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்-இன் விலை 3499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 90 ஆயிரத்து 415 என துவங்குகிறது. முதற்கட்டமாக அமெரிக்காவில் இதன் விற்பனை துவங்கியுள்ள நிலையில், மற்ற நாடுகளில் எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • முன்னணி நிறுவனங்கள் அதிகளவில் முதலீடுகளை செய்து வருகின்றன.
    • மெட்டல் மூலம் உருவக்கப்பட்ட இதர மெக்கானிக்கல் பாகங்கள் அடங்கும்.

    இந்தியாவில் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்வதற்காக முன்னணி நிறுவனங்கள் அதிகளவில் முதலீடுகளை செய்து வருகின்றன.

    அந்த வரிசையில், தற்போது இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருப்பதால், ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய அறிவிப்பின் படி மொபைல் போன்களின் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி 15-இல் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    இதில் மொபைல் போன்களின் பேட்டரி கவர், முன்புற கவர், மிடில் கவர், மெயின் லென்ஸ், பேக் கவர், ஜி.எஸ்.எம். ஆன்டெனா, பி.யு. கேஸ், சீலிங் கேஸ்கெட், சிம் சாக்கெட், ஸ்கிரீயூ மற்றும் பிளாஸ்டிக், மெட்டல் மூலம் உருவக்கப்பட்ட இதர மெக்கானிக்கல் பாகங்கள் என அனைத்தும் அடங்கும்.

    இறக்குமதி வரியை குறைக்க மொபைல் போன் உற்பத்தியாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

    • இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 2.9 லட்சம் ஆகும்.
    • விற்பனை பிப்ரவரி 2-ம் தேதி துவங்குகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் அதிக விலை கொண்டிருக்கும் போதிலும், விற்பனையில் அசத்தி வருகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 2.9 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலை வாங்க பத்தே நாட்களில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த ஹெட்செட் விற்பனை அமெரிக்காவில் பிப்ரவரி 2-ம் தேதி துவங்க இருக்கிறது. முன்னதாக இந்த ஹெட்செட் கடந்த ஆண்டு நடைபெற்ற 2023 சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள் விஷன் ப்ரோ இந்தியா உள்பட மற்ற நாடுகளில் எப்போது விற்பனைக்கு வரும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

     


    ஜனவரி 29-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் 2 லட்சத்திற்கும் அதிக விஷன் ப்ரோ ஹெட்செட்களை விற்பனை செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஹெட்செட்டிற்கான முன்பதிவு ஜனவரி 19-ம் தேதி துவங்கியது.

    முன்னதாக சர்வதேச வல்லுனரான மிங் சி கியோ வெளியிட்ட தகவல்களில், ஜனவரி 19 முதல் ஜனவரி 21-ம் தேதிக்குள் மட்டும் 1 லட்சத்து 60 ஆயிரத்தில் இருந்து 1 லட்சத்து 80 ஆயிரம் விஷன் ப்ரோ யூனிட்களை விற்பனை செய்திருக்கலாம் என்று தெரிவித்து இருந்தார். மேலும் 5 லட்சம் யூனிட்கள் வரை வினியோகம் செய்வதிலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு சவாலாக இருக்காது என்று அவர் தெரிவித்து இருந்தார்.

    • முன்னதாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்தது.
    • ஐ.ஒ.எஸ். வெர்ஷனில் இந்த வசதி டெஸ்டிங் செய்யப்படுகிறது.

    வாட்ஸ்அப் நிறுவனம் ஐ.ஒ.எஸ். வெர்ஷனில் பாஸ்கீ வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பாஸ்கீ அம்சம் பயனர்கள் வாட்ஸ்அப்-ஐ பாஸ்வேர்டு இன்றி பயோமெட்ரிக் மூலம் லாக்-இன் செய்யும் வசதியை வழங்குகிறது. முன்னதாக இதே போன்ற வசதி ஆண்ட்ராய்டு வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    அந்த வரிசையில், தற்போது ஐ.ஒ.எஸ். வெர்ஷனில் பாஸ்கீ வசதி வழங்கப்படுகிறது. தற்போது டெஸ்டிங் செய்யப்படும் நிலையில், விரைவில் இந்த வசதி வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். வெர்ஷனிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா 2.24.2.73 வெர்ஷனில் பாஸ்கீ அம்சத்திற்கான வசதி டெஸ்டிங் செய்யப்படுகிறது.

     


    பாஸ்கீ அம்சம் ஹார்டுவேர் சார்ந்து இயங்கும் அம்சம் ஆகும். இது ஃபிடோ அலையன்ஸ் மூலம் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் உடனான கூட்டணி மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் டச் ஐ.டி. அல்லது ஃபேஸ் ஐ.டி. மூலம் சைன் இன் செய்ய முடியும்.

    ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் பாஸ்கீ விவரங்கள் கூகுளின் பாஸ்வேர்டு மேனேஜரில் சேமிக்கப்படுகிறது. தற்போது டெஸ்டிங் செய்யப்படும் நிலையில், வாட்ஸ்அப் பாஸ்கீ அம்சம் முதலில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் பீட்டா வடிவில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் விரைவில் மற்ற பயனர்களுக்கும் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும்.

    • ஸ்மார்ட்போனிற்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • ஸ்மார்ட்போனை ரூ. 27 ஆயிரத்து 999-க்கு வாங்கிடலாம்.

    ஐகூ நிறுவனம் கடந்த ஜூலை மாதம் நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் ஐகூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இருவித நிறங்கள் மற்றும் இரண்டு ரேம், ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும் ஐகூ நியோ 7 ப்ரோ விலை ஐகூ க்வெஸ்ட் டேஸ் சிறப்பு விற்பனையில் குறைந்துள்ளது.

     


    ஐகூ நியோ 7 ப்ரோ 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 34 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 37 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனினை ரூ. 27 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்கிட முடியும். அமேசான் மற்றும் ஐகூ இ ஸ்டோரில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனிற்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    ஜனவரி 31-ம் தேதி வரை நடைபெறும் சிறப்பு விற்பனையில் தள்ளுபடி மட்டுமின்றி வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்படுகிறது. அதன்படி பயனர்கள் ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3000 வரை உடனடி தள்ளுபடி பெறலாம். இதே போன்ற சலுகை ஐகூ Z7 ப்ரோ மற்றும் Z6 லைட் போன்ற மாடல்களுக்கும் வழங்கப்படுகிறது.


     

    ஐகூ நியோ 7 ப்ரோ அம்சங்கள்:

    6.78 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்

    அட்ரினோ 730 GPU

    8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

    12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS, எல்இடி ஃபிளாஷ்

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யுஎஸ்பி டைப் சி ஆடியோ

    ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் பிலாஷ் சார்ஜிங்

    • சந்தாவின் கீழ் இலவசமாகவே பயன்படுத்த முடியும்.
    • பிரீபெயிம் சலுகையை பெற விரும்புவோர் ரூ. 999 செலுத்த வேண்டும்.

    ஒ.டி.டி. சந்தாவுடன் கூடிய பிரீபெயிட் சலுகைகளை வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில், சோனி லிவ் உடன் வி நிறுவனம் இணைந்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் விளையாட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களை கண்டுகளிக்க முடியும்.

    வி நிறுவனம் கூட்டணி அமைத்து இருப்பதன் மூலம் பயனர்கள் சோனிலிவ் மொபைல் சந்தாவின் கீழ் இவற்றை இலவசமாகவே பயன்படுத்த முடியும். இதே சேவைகளை ஒரு வருடத்திற்கு பெற விரும்புவோர் ரூ. 599 மற்றும் பிரீபெயிம் சலுகையை பெற விரும்புவோர் ரூ. 999 செலுத்த வேண்டும்.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    அந்த வகையில் இந்த பலன்களுக்கு தனியே செலவழிக்க விரும்பாதவர்கள் வி நிறுவனத்தின் ரூ. 698 சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். வி ரூ. 698 சலுகையில் 10 ஜி.பி. வரையிலான டேட்டா, 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. டேட்டா பலன்களை பயன்படுத்துவதற்கு பயனர்கள் வேறு ஏதேனும் பிரீபெயிட் சலுகையை ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும்.

    ஏற்கனவே குறிப்பிட்டதை போன்றே இந்த சலுகையுடன் ஒரு வருடத்திற்கான சோனிலிவ் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இதில் ஒ.டி.டி. சந்தா மட்டுமின்றி 28 நாட்களுக்கு 10 ஜி.பி. வரையிலான டேட்டாவும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு நிகழ்ச்சிகளை அதிக தரத்தில் கண்டுகளிக்க முடியும்.

    • பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • கேமிங் பிரிவில் இருந்து 8 சதவீதம் பேர் வேலையிழக்க உள்ளனர்.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஆக்டிவிஷன் ப்லிசர்ட் மற்றும் எக்ஸ்பாக்ஸ்-இல் பணியாற்றி வருவோரில் சுமார் 1900 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. தொழில்நுட்ப துறையில் பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மைக்ரோசாப்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

    தற்போதைய அறிவிப்பின் மூலம் மைக்ரோசாப்ட் கேமிங் பிரிவில் இருந்து 8 சதவீதம் பேர் வேலையிழக்க உள்ளனர். இதில் பாதிக்கப்படுவதில் பெரும்பாலானோர் ஆக்டிவிஷன் ப்லிசர்ட்-இல் பணியாற்றுவோர் ஆவர்.

     


    ப்லிசர்ட் தலைவர் மைக் யபரா மற்றும் டிசைன் பிரிவின் மூத்த அலுவலர் ஆலென் ஆதெம் ஆகியோரும் நிறுவனத்தை விட்டு வெளியேறுகின்றனர். இதோடு ப்லிசர்ட் ஏற்கனவே அறிவித்து இருந்த கேம் ஒன்றும் நிறுத்தப்படுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்து இருக்கிறது.

    சமீபத்தில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் 5 லட்சத்து 73 ஆயிரத்து 621 கோடி ரூபாய்க்கு ஆக்டிவிஷன் ப்லிசர்ட் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. இதன் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனம் கேமிங் பிரிவில் அதிக கவனம் செலுத்தவும், கேமிங்கில் முன்னணியில் உள்ள சோனியை எதிர்கொள்ளவும் திட்டமிட்டது.

    • என்ட்ரி லெவல் கேலக்ஸி Z ஃபோல்டு உருவாக்கி வருவதாக தகவல்.
    • சாம்சங் நிறுவனம் மூன்றாவது இடம் பிடித்தது.

    சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. உண்மையில் இது நடைபெறுமா என்பது கேள்விக்குறியாவே உள்ளது. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் என்ட்ரி லெவல் கேலக்ஸி Z ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    என்ட்ரி லெவல் கேலக்ஸி Z ஃபோல்டு 6 மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது அரையிறுதி காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் தனது பங்குகளை அதிகப்படுத்தும் முயற்சியில் சாம்சங் நிறுவனம் புதிய என்ட்ரி லெவல் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக தெரிகிறது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் சீனாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் நிறுவனம் 19 சதவீத புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பிடித்தது. அதன்படி என்ட்ரி லெவல் கேலக்ஸி Z ஃபோல்டு 6 மூலம் இந்த நிலையில் மாற்றம் செய்ய சாம்சங் முயற்சிக்கலாம் என கூறப்படுகிறது.

    குறைந்த விலை கேலக்ஸி Z ஃபோல்டு 6 மாடல் இந்த ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதத்திற்குள் நடைபெறும் அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம். அந்த வகையில், இந்த ஆண்டு கேலக்ஸி Z ஃபோல்டு 6, கேலக்ஸி Z ஃப்ளிப் 6 மாடல்களுடன் குறைந்த விலை மாடலையும் சேர்த்து மொத்தத்தில் மூன்று மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை சாம்சங் அறிமுகம் செய்யும் என தெரிகிறது. 

    • வாட்ஸ்அப்-இல் ஒருங்கிணைந்து வேலை செய்ய அனுமதிக்கும்.
    • வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் அம்சம் இடம்பெற்றுள்ளது.

    வாட்ஸ்அப் செயலியில் மூன்றாம் தரப்பு சாட்களுக்கான வசதி விரைவில் வழங்கப்படும் என தெரிகிறது. ஐரோப்பிய யூனியனின் டிஜிட்டல் மார்கெட்ஸ் விதியை ஏற்கும் வகையில் இந்த வசதி வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் மூன்றாம் தரப்பு செயலிகள் வாட்ஸ்அப்-இல் ஒருங்கிணைந்து வேலை செய்ய அனுமதிக்கும்.

    புதிய வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா வெர்ஷனில் இதற்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இதே அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா 24.2.10.72 வெர்ஷனில் இந்த அம்சம் இடம்பெற்று இருக்கிறது. இதனை wabetainfo கண்டறிந்து தெரிவித்து இருக்கிறது.

     


    இது தொடர்பாக வெளியிடப்பட்டு இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில் "Third-Party Chats" (மூன்றாம் தரப்பு சாட்கள்) பெயரில் தனி ஃபோல்டர் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஃபோல்டரில் மற்ற செயலிகளின் சாட்களை பார்க்க முடியும் என்று தெரிகிறது. இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்பது பற்றி அதிக தகவல்கள் இல்லை. மேலும், இதில் எந்தெந்த செயலிகள் இயங்கும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்த அம்சம் வழங்கப்பட்டதும், வாட்ஸ்அப் பயனர்கள் மற்ற குறுந்தகவல் செயலிகளை பயன்படுத்துவோரிடமும் சாட் செய்ய அனுமதிக்கும். வாட்ஸ்அப்-இல் மற்ற கான்டாக்ட்களுக்கு சாட் செய்வதை போன்றே, இதர செயலிகளை பயன்படுத்துவோரிடமும் சாட் செய்ய முடியும்.

    புதிய அம்சம் பற்றி அதிக தகவல்கள் இடம்பெறவில்லை. எனினும், வாட்ஸ்அப் இதனை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். வெர்ஷன்களில் வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவது மட்டும் தற்போதைக்கு உறுதியாகி இருக்கிறது.

    • மேம்பட்ட வெர்ஷன் 2024 ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தது.
    • ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 பிராசஸர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    அசுஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்ஃபோன் 10 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது சென்ஃபோன் சீரிசில் கடைசி மாடலாக இருக்கும் என கூறப்பட்டது. எனினும், இந்த தகவல்களை மறுத்த அசுஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் 2024 ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தது.

    அந்த வகையில், அசுஸ் சென்ஃபோன் 11 விவரங்கள் கூகுள் பிளே கன்சோலில் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 பிராசஸர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில், அசுஸ் சென்ஃபோன் 11 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

     


    அதில், பிராசஸரின் பெயர் சரியாக இடம்பெறவில்லை என்ற போதிலும், அது ஆக்டா கோர் குவால்காம் சிப்செட் மற்றும் அட்ரினோ 830 GPU கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 ஆக இருக்கலாம் என்றே தெரிகிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சென்ஃபோன் 10 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட்டது.

    அந்த வகையில், இதன் மேம்பட்ட வெர்ஷனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சென்ஃபோன் 11 மாடலில் அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 14 ஒ.எஸ். வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இதன் பவர் பட்டன் மற்றும் வால்யூம் பட்டன்கள் ஸ்மார்ட்போனின் வலதுபுறம் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது.

    • ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலில் M2 பிராசஸர், புதிய R1 சிப் உள்ளது.
    • விஷன் ப்ரோ மாடலில் வைபை 6, ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் விஷன் ப்ரோ மாடலுக்கான முன்பதிவு துவங்கியது. முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டுமே விஷன் ப்ரோ ஹெட்செட்டுக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளன. முன்பதிவை தொடர்ந்து பிப்ரவரி 2-ம் தேதி இதன் விற்பனை துவங்குகிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலில் ஆப்பிளின் M2 பிராசஸர் மற்றும் புதிய R1 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    விஷன் ப்ரோ ஹெட்செட் உடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இரு ஹெட்பேன்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் மினிமலிஸ்ட் சோலோ நிட் பேன்ட், ஸ்டேபிலிட்டி கொண்ட டூயல் லூப் பேன்ட் வழங்கப்படுகிறது. இந்த ஹெட்செட்-இன் பெட்டி வெளிச்சம் புகாத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் மென்மையானை குஷன்கள் உள்ளன.

     


    அம்சங்களை பொருத்தவரை விஷன் ப்ரோ மாடலில் 23 மில்லியன் பிக்சல்கள் அடங்கிய, அதிக ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே சிஸ்டம் இரு டிஸ்ப்ளேக்களிடையே வழங்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ், 96 ஹெர்ட்ஸ் மற்றும் 100 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்களை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டுள்ளது.

    இத்துடன் பிரத்யேக டூயல் சிப் டிசைன் மற்றும் ஆப்பிள் சிலிகான் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் அசாத்திய டிஸ்ப்ளே அனுபவத்தை பயனர்களுக்கு கடத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் கொண்டு பயனர்கள் தங்களின் நினைவுகளை திரும்பி பார்க்கலாம்.

     


    ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலில் வைபை 6, ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, அதிகபட்சம் 1080 பிக்சல் தரத்தில் ஏர்பிளே சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் மொத்தம் ஆறு மைக்ரோபோன்கள், இரண்டு பிரைமரி கேமரா சென்சார்கள், ஆறு டிராக்கிங் கேமராக்கள், கண்களை டிராக் செய்ய நான்கு கேமராக்கள், LiDAR ஸ்கேனர், ட்ரூடெப்த் கேமரா மற்றும் ஆறு சென்சார்கள் வழங்கப்படுகின்றன.

    விஷன் ப்ரோ ஹெட்செட் வெளிப்புற பேட்டரி பேக் மூலம் சக்தியூட்டப்படுகிறது. பேட்டரி பேக்-ஐ பயனர்கள் தனி கேபிள் மூலம் விஷன் ப்ரோ ஹெட்செட் உடன் இணைத்து சார்ஜிங் செய்து கொள்ளலாம். இதில் உள்ள பேட்டரிகளின் திறன் குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. விஷன் ப்ரோ ஹெட்செட்-இன் எடை 650 கிராம்கள் வரை இருக்கலாம். தனியே வழங்கப்படும் பேட்டரி பேக் எடை 353 கிராம் ஆகும்.

    ஆப்பிள் விஷன் ப்ரோ பேஸ் மாடல் 256 ஜி.பி. மெமரி விலை 3 ஆயிரத்து 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2.9 லட்சம் என துவங்குகிறது. இதன் 512 ஜி.பி. மற்றும் 1 டி.பி. மெமரி மாடல்களின் விலை முறையே 3 ஆயிரத்து 699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3.07 லட்சம் மற்றும் 3 ஆயிரத்து 899 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 24 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார்.
    • சாட் மற்றும் க்ரூப்களில் இதற்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியில் உள்ள பிராட்காஸ்டிங் அம்சம் சேனல்ஸ்-இல் புதிய வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் அதன் ஃபாளோயர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்யும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள அம்சம் தான் வாட்ஸ்அப் சேனல். இதில் தற்போது கூடுதலாக புதிய வசதிகள் வழங்குவதை மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார்.

    அதன்படி வாட்ஸ்அப் சேனலலில் வாக்களிக்கும் வசதி வழங்கப்படுகிறது. அதன்படி வாட்ஸ்அப் சேனல் வைத்திருப்பவர்கள் தங்களின் உறுப்பினர்கள் இடையே கருத்து கேட்க வாக்கெடுப்பு நடத்த முடியும். ஏற்கனவே வாட்ஸ்அப் சாட் மற்றும் க்ரூப்களில் இதற்கான வசதி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

     


    இத்துடன் வாட்ஸ்அப் சேனல் அப்டேட்களை ஸ்டேட்டஸ் ஆக வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. ஒரே சேனலில் பலரை அட்மின்களாக வைத்துக் கொள்ளும் வசதியும் புதிய அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் சேனல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே, அதில் பல்வேறு புதிய வசதிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    ×