search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • சந்தா முறையை எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் கொண்டுவந்தார்.
    • முன்னணி சமூக வலைதள நிறுவனங்களும் பின்பற்ற துவங்கின.

    டுவிட்டர் தளத்தை வாங்கி அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்தவர் எலான் மஸ்க். இதில் பிரபல சமூக வலைதளத்தை எக்ஸ் என பெயர் மாற்றம் செய்ததும் அடங்கும். பெயர் மாற்றத்தோடு கட்டண முறையில் பயனர்களுக்கு விசேஷ அம்சங்களை வழங்கும் சந்தா முறையை எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் கொண்டுவந்தார்.

    பிறகு, இதேபோன்ற திட்டத்தை மற்ற முன்னணி சமூக வலைதள நிறுவனங்களும் பின்பற்ற துவங்கின. இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் கட்டண முறையில் வழங்கப்பட்டு வரும் எக்ஸ் பிரீமியம் சந்தாவை பயனர்களுக்கு இலவசமாக வழங்க எலான் மஸ்க் முடிவு செய்திருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் வெளியிட்டார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "எக்ஸ் தளத்தில் 2500-க்கும் அதிக வெரிஃபைடு சந்தாதாரர்களை ஃபாளோவர்களாக கொண்டிருக்கும் அக்கவுண்ட்களுக்கு பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படும். மேலும் 5000-க்கும் அதிக வெரிஃபைடு சந்தாதாரர்களை ஃபாளோவர்களாக கொண்ட அக்கவுண்ட்களுக்கு பிரீமியம் பிளஸ் சந்தா இலவசமாக வழங்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    இலவச பிரீமியம் சந்தா பெறுவது எப்படி?

    எலான் மஸ்க்-இன் புதிய அறிவிப்பின் படி எக்ஸ் தளத்தில் 2500 ஃபாளோவர்களை வைத்திருப்போருக்கு பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படாது. மாறாக 2500 ஃபாளோவர்கள் இருப்பின் அவர்கள் எக்ஸ் தளத்தின் பேசிக், பிரீமியம் அல்லது பிரீமியம் பிளஸ் சந்தாக்களில் எதையேனும் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

    இதே போன்று பிரீமியம் பிளஸ் சந்தாவை இலவசமாக பெற, குறிப்பிட்ட எக்ஸ் அக்கவுண்ட்-ஐ குறைந்தபட்சம் 5000 ஃபாளோவர்கள் இந்த சந்தாக்களில் எதையேனும் வாங்கியிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    • 140-க்கும் அதிக வங்கிகளை பயன்படுத்த முடியும்.
    • யு.பி.ஐ. பேமண்ட் கடந்த 2020 ஆண்டு அறிமுகம்.

    வாட்ஸ்அப் நிறுவனம் சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட்களை மேற்கொள்ளும் வசதியை இந்திய பயனர்களுக்கு வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக வெளியான ஸ்கிரீன்ஷாட்களில் புது வசதி யு.பி.ஐ. செட்டிங்ஸ் (UPI Settings) பகுதியில் இன்டர்நேஷனல் பேமண்ட்ஸ் (International Payments) ஆப்ஷனில் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.

    இதனை தேர்வு செய்யும் போது, சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்து, எவ்வளவு காலம் இது செயல்படுத்த வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். யு.பி.ஐ. பேமண்ட் வசதியை வழங்கும் போன்பே (PhonePe) மற்றும் ஜிபே (GPay) உள்ளிட்டவைகளில் இந்த வசதி ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    அந்த வரிசையில் தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப்-இல் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் யு.பி.ஐ. பேமண்ட் சேவை கடந்த 2020 நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 140-க்கும் அதிக வங்கிகளை பயன்படுத்த முடியும்.

    சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட் மேற்கொள்ளும் வசதி தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போதைக்கு இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இதர விவரங்கள் மற்றும் வெளியீட்டு அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    • பதவியை ராஜினாமா செய்து அமேசான் நிறுவனத்தில் இணைந்தார்.
    • மிகைல் பராகின் விண்டோஸ் பிரிவுக்கு தலைமை வகித்தார்.

    ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர் பவன் தவுலுரி மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பொறுப்பில் பனோஸ் பனய் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு பனோஸ் தனது பதவியை ராஜினாமா செய்து அமேசான் நிறுவனத்தில் இணைந்தார்.

    முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் குழுக்களை தனியாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனி அதிகாரிகளை தலைமை பதவிகளில் நியமித்து இருந்தது. அதன்படி தவுலுரி சர்பேஸ் பிரிவுக்கு தலைமை வகித்து வந்தார். மிகைல் பராகின் விண்டோஸ் பிரிவுக்கு தலைமை வகித்தார்.

    பராகின் புதிய பதவிகளில் பணியாற்ற விரும்பியதை அடுத்து, தவுலுரி விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவுகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தவுலுரி ஐ.ஐ.டி. மெட்ராஸ்-இல் பட்டம் பெற்றவர் ஆவார். இதன் மூலம் இவர் உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமை பொறுப்பேற்ற இந்தியர்கள் பட்டியலில் தவுலுரி இணைந்துள்ளார்.

    • பயனர்கள் எளிதில் மிகமுக்கிய தகவல்களை இயக்கிட முடியும்.
    • சமீபத்தில் பின் செய்யப்படும் தகவல் சாட்களில் முதலில் தெரியும்.

    வாட்ஸ்அப் செயலியில் ஒரே சமயம் மூன்று குறுந்தகவல்களை பின் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் உரையாடல், காண்டாக்ட் அல்லது க்ரூப்-இல் ஒற்றை மெசேஜை பின் செய்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது மார்க் ஜூக்கர்பர்க் தனது அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலில் வெளியிட்டுள்ள தகவலின் படி பயனர்கள் சாட் ஒன்றில் அதிக குறுந்தகவல்களை பின் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பயனர்கள் எளிதில் மிகமுக்கிய தகவல்களை இயக்கிட முடியும்.

     


    பயனர்கள் டெக்ஸ்ட் (Text), புகைப்படம் (Image) அல்லது கருத்து கணிப்பு (Polls) உள்ளிட்டவைகளை பின் செய்ய முடியும். இப்படி பின் செய்யப்படும் மெசேஜ்கள் 24 மணி நேரம், 7 நாட்கள் அல்லது 30 நாட்கள் வரை சாட்களின் மேல் பேனர் போன்று காட்சியளிக்கும். அதிக குறுந்தகவல்களை பின் செய்யும் போது, சமீபத்தில் பின் செய்யப்படும் தகவல் சாட்களில் முதலில் தெரியும்.

    குறுந்தகவல்களை பின் செய்ய, குறிப்பிட்ட மெசேஜ்-ஐ அழுத்தி பிடித்து "பின்" (Pin) ஆப்ஷனை க்ளிக் செய்து எவ்வளவு நேரம் பின் செய்யப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

    ஆண்ட்ராய்டில் இந்த அம்சத்தை இயக்க மெசேஜ்-ஐ அழுத்தி பிடித்து மோர் ஆப்ஷன்ஸ் (More Options) - பின் (Pin) - எவ்வளவு நேரம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்து பின் (Pin) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

    ஐபோனில் இந்த அம்சத்தை இயக்க மெசேஜ்-ஐ அழுத்தி பிடித்து மோர் ஆப்ஷன்ஸ் (More Options) - பின் (Pin) - எவ்வளவு நேரம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

    வெப் மற்றும் டெஸ்க்டாப்-இல் இந்த அம்சத்தை இயக்க மெசேஜ்-ஐ க்ளிக் செய்து மெனு ஆப்ஷனில் பின் மெசேஜ் (Pin Message) - எவ்வளவு நேரம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்து பிறகு பின் (Pin) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

    க்ரூப் சாட் பின் செய்யும் முறை:

    க்ரூப் சாட்களில் மெசேஜ்களை பின் செய்ய க்ரூப் அட்மின்கள் அனுமதிக்க முடியும். மெசேஜ் பின் செய்யப்படுவதை சிஸ்டம் மெசேஜ் க்ரூப் பயனர்களுக்கு தெரிவிக்கும். எனினும், மெசேஜ் பின் செய்யப்பட்ட பிறகு க்ரூப்-இல் சேர்க்கப்படுவோருக்கு இது தெரியாது.

    • சலுகைகளின் பலன்களும் மாற்றப்பட்டு இருக்கின்றன.
    • அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது.

    பாரதி ஏர்டெல் நிறுவனம் ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரை ஒட்டி சிறப்பு சலுகைகள் மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு, பழைய சலுகைகள் விலை மாற்றப்பட்டு, அவற்றின் பலன்களும் மாற்றப்பட்டு இருக்கின்றன.

    ஏர்டெல் ரூ. 49 மற்றும் ரூ. 99 சலுகைகளின் விலை முறையே ரூ. 39 மற்றும் ரூ. 79 என மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த இரு சலுகைகளும் ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடருக்காக மாற்றப்பட்டு இருப்பதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த சலுகைகள் பயனர்களுக்கு தடையற்ற கனெக்டிவிட்டி வழங்கும்.

    ஏர்டெல் ரூ. 39 விலை சலுகையில் 20 ஜி.பி. டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 20 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டு விடும். ஏர்டெல் ரூ. 49 விலை சலுகையில் வின்க் பிரீமியம் சந்தா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் நாள் ஒன்றுக்கு அன்லிமிடெட் டேட்டா (அதிகபட்சம் 20 ஜி.பி.) வழங்கப்படுகிறது.

    ஏர்டெல் ரூ. 79 சலுகையில் அன்லிமிடெட் டேட்டா (அதிகபட்சம் 20 ஜி.பி.) இரண்டு நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 20 ஜி.பி. தீர்ந்ததும், டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டு விடும். இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தமாக 40 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.

    • ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இதுவே முதல் முறை ஆகும்.
    • திட்டத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

    நத்திங் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் இதுவரை நடந்திராத முதல் முறை திட்டத்தை அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த திட்டம் தொடர்பான டீசர் வெளியானது. தற்போது இந்த திட்டம் பற்றிய விவரங்களை நத்திங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

    அதன்படி நத்திங் நிறுவனம் "கம்யுனிட்டி எடிஷன் திட்டம்" என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் நத்திங் போன் 2a மாடலில் தாங்கள் விரும்பும் வகையில் டிசைன் செய்யலாம். இந்த திட்டத்தில் நத்திங் கம்யுனிட்டி மற்றும் நத்திங் குழு இணைந்து செயல்படும் என்று நத்திங் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய் தெரிவித்துள்ளார்.

     


    ஸ்மார்ட்போன் தயாரிப்பில் கம்யுனிட்டியை ஈடுபட வைப்பது சந்தையில் இதுவே முதல் முறை ஆகும். முதற்கட்டமாக ஸ்மார்ட்போன், அதன்பிறகு ஒ.எஸ். உள்ளிட்டவைகளை டிசைன் செய்வதிலும் கம்யுனிட்டியை ஈடுபட வைக்க நத்திங் திட்டமிட்டுள்ளது. புதிய கம்யுனிட்டி எடிஷன் திட்டத்தில் பயனர்கள் டிசைன், வால்பேப்பர் மற்றும் பேக்கேஜ் செய்வது தொடர்பான யோசனைகளை நத்திங் நிறுவனத்திடம் தெரிவிக்க முடியும்.

    இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ள முடியும். விருப்பமுள்ளவர்கள் நத்திங் போன் 2a புதிய வேரியண்ட் தொடர்பான யோசனைகளை நத்திங் கம்யுனிட்டி தளத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் விசேஷ வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த திட்டம் ஆறு மாத காலத்திற்கு செயல்பாட்டில் இருக்கும். இதில் நான்கு நிலைகள் உள்ளன.

    இந்த திட்டத்தில் முதல் நிலை- ஹார்டுவேர் டிசைன் சார்ந்தது ஆகும். பயனர்கள் புதிய ஸ்மார்ட்போனின் ஹார்டுவேர் தொடர்பான யோசனைகளை மார்ச் மாதத்திற்குள் சமர்பிக்க வேண்டும். இதைத் தொடர்ந்த மே மாத வாக்கில் வால்பேப்பர் டிசைன் பற்றிய யோசனைகளையும், ஜூன் மாதத்திற்குள் பேக்கேஜ் டிசைன் தொடர்பான யோசனைகளையும், விளம்பரம் தொடர்பான யோசனைகளை ஜூலை மாதத்திற்குள் சமர்பிக்க வேண்டும்.

     

    பயனர்கள் விரும்பும் வகையில், அவர்களது யோசனைகள் தெளிவாக புரியும்படி எந்த வடிவில் வேண்டுமானாலும் பதிவேற்றம் செய்யலாம் என நத்திங் தெரிவித்துள்ளது. பயனர்கள் சமர்பிக்கும் யோசனைகள் தேர்வாகும் படச்த்தில் அவை கம்யுனிட்டி எடிஷன் திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

    யோசனைகளை சமர்பிப்பதற்கான அவகாசம் நிறைவு பெற்றதும், யோசனைகள் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படும். வாக்கெடுப்பிலும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். சமர்பிக்கப்பட்ட யோசனைகள் அனைத்தையும், இந்த திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக குழு மதிப்பீடு செய்து ஒவ்வொரு நிலையிலும் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவர்.

    நத்திங் கம்யுனிட்டி எடிஷன் திட்டம் ஆறு மாதங்கள் நடைபெறும். இந்த திட்டத்தில் நான்கு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு புதிய சாதனம் உருவாக்கப்பட இருக்கிறது.

    • அமெரிக்க பயனர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் இருந்து வருகிறது.
    • விஷன் ப்ரோ விர்ச்சுவல் கீபோர்டில் அதிக மொழிகள் சேர்க்கப்பட இருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ ஹெட்செட்டின் விர்ச்சுவல் கீபோர்டில் 12 புதிய மொழிகளை சேர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது விஷன் ப்ரோ விர்ச்சுவல் கீபோர்டில் ஆங்கிலம் (அமெரிக்க) மொழி மற்றும் எமோஜி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் விஷன் ப்ரோ சாதனம் அமெரிக்க பயனர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் இருந்து வருகிறது.

    இந்த நிலையை மாற்றும் வகையில், ஆப்பிள் நிறுவனம் விஷன் ப்ரோ சாதனத்தை அதிக நாடுகளுக்கு கொண்டு செல்லும் முயற்சியாக அதிக மொழிகளை சேர்க்க இருக்கிறது. அதன்படி கான்டோனீஸ் (டிரேடிஷனல்), சைனீஸ் (சிம்ப்லிஃபைடு), இங்லீஷ் (ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சிங்கப்பூர், பிரிட்டன்), ஃபிரென்ச் (கனடா, ஃபிரான்ஸ்), ஜெர்மன் (ஜெர்மனி), ஜேப்பனீஸ் மற்றும் கொரியன் போன்ற மொழிகள் விஷன் ப்ரோ விர்ச்சுவல் கீபோர்டில் சேர்க்கப்பட இருக்கிறது.

     


    புதிய மொழிகள் சேர்க்கப்பட இருப்பதால், விஷன் ப்ரோ மாடல் விரைவில் ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதேபோன்று ஹாங்காங் மற்றும் தாய்வானிலும் இந்த சாதனம் அறிமுகம் செய்யபப்டலாம் என்று கூறப்படுகிறது.

    முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ மாடலை இந்த ஆண்டிற்குள் மேலும் அதிக நாடுகளில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து இருந்தது. எனினும், எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    இந்த நிலையில், ஆப்பிள் வல்லுநரான மிங்-சி-கியூ ஆப்பிள் தனது விஷன் ப்ரோ மாடலை இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டிற்கு முன்பே அதிக நாடுகளில் விற்பனைக்கு கொண்டுவரலாம் என்று தெரிவித்து இருக்கிறார். 

    • உலகின் முதல் ஏ.ஐ. மென்பொருள் பொறியாளர் ஆகும்.
    • மனித பொறியாளர்களுக்கு மாற்றாக உருவாக்கப்படவில்லை.

    கோடிங் செய்வது, வலைதளங்கள் மற்றும் மென்பொருள்களை உருவாக்கும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு சேவை உருவாக்கப்பட்டு இருக்கிறது. காக்னிஷன் என்ற நிறுவனம் உருவாக்கி இருக்கும் புதிய சேவைக்கு டெவின் என பெயரிடப்பட்டு உள்ளது. இதுவே உலகின் முதல் ஏ.ஐ. மென்பொருள் பொறியாளர் ஆகும்.

    இந்த சேவையிடம் நீங்கள் என்ன சொன்னாலும் அதனை சிறப்பாக செய்து முடித்துவிடும். புதிய சேவை மனித பொறியாளர்களுக்கு மாற்றாக உருவாக்கப்படவில்லை என்று இதனை உருவாக்கி இருக்கும் காக்னிஷன் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    மனித பொறியாளர்களுடன் இணைந்து பணியாற்றும் வகையில் தான் டெவின் உருவாக்கப்பட்டு இருக்கிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மனித பொறியாளர்களுக்கு மாற்றாக இல்லாமல், அவர்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    டெவினின் குறிப்பிடத்தக்க திறன்களில் ஒன்றாக இது கடினமான பணிகளையும் சிந்தித்து, திட்டமிட்டு செய்து முடிக்கும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட முடிவுகளை எடுப்பது, தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது மற்றும் நாளடைவில் சிறப்பாக தன்னை மேம்படுத்திக் கொள்வது என டெவின் கிட்டத்தட்ட மனிதர்கள் மேற்கொள்ளும் பணிகளை சிறப்பாக செய்யும் ஆற்றல் கொண்டிருக்கிறது.

    மென்பொருள் பொறியியல் துறையில் SWE-bench கோடிங் பென்ச்மாரக்கில் மென்பொருள்களை மதிப்பிடுவதில் டெவின் அதிநவீன தீர்வை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான பரிசோதனைகளில் டெவின் எதிர்பார்ப்புகளை மிஞ்சும் வகையில் செயல்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நிஜ உலகின் சவால்களில் டெவின் முந்தைய ஏ.ஐ. மாடல்களை விட அதிகளவு சிறப்பாக செயல்பட்டுள்ளது. அந்த வகையில், இது மென்பொருள் பொறியியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட Samsung Galaxy Ring வருகிற ஆகஸ்டு மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது
    • வருங்காலங்களில் உடல் நலனைக் கண்காணிக்கும் வசதிகள் இதில் சேர்க்கப்பட உள்ளன

    கொரியன் நிறுவனமான 'சாம்சங்' செல்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி வகித்து வருகிறது.

    இந்நிலையில் தற்போது புதிதாக சாம்சங் 'கேலக்ஸி ரிங்'  என்ற மிக இலகுவான கை விரல்களில் அணிய வசதியாக உள்ள மோதிர வடிவில் புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும், இந்த மோதிரத்தில் மேம்பட்ட ஆரோக்கியம், செயல்பாடு மற்றும் தூக்கத்தை கண்காணிக்கும் வசதிகள் அமைந்து உள்ளன.




     

    நவீன ஸ்மார்ட் வாட்சுகளை விட, கேலக்ஸி ரிங் ஒரு ஆரோக்கிய சாதனம் என்று அழைக்கப்படும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை நீடிக்கும். புதிய ஆரோக்கிய சாதனமாக அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த மோதிரத்தின் விலை ரூ.25,000 முதல் ரூ.42,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட Samsung Galaxy Ring வருகிற ஆகஸ்டு மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வருங்காலங்களில் உடல் நலனைக் கண்காணிக்கும் வசதிகள் இதில் சேர்க்கப்பட உள்ளன.

    • ஜியோ டிஜிட்டல் வங்கித் துறையில் காலடி எடுத்து வைக்கிறது. ஜியோ' UPI என்ற பெயரில் பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது
    • இதன் மூலம் Paytm, PhonePe, Google Pay ஆகியவற்றுக்கு கடும் போட்டியை கொடுக்க முகேஷ் அம்பானி தயாராகி வருகிறார்

    பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, தற்போது டிஜிட்டல் வங்கித் துறையில் காலடி எடுத்து வைக்கிறது. ஜியோ' UPI என்ற பெயரில் புதிய டிஜிட்டல் வங்கி வணிக பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது ரிலையன்ஸ். Paytm, போன்று 'ஜியோ' சில்லரை விற்பனை கடைகளில் பணம் செலுத்தும் சேவையை வெற்றிகரமாக நடத்த திட்டமிட்டுள்ளது.

    தற்போது 'ஜியோ பே' செயலி தொழில்நுட்பம் மூலம் இந்த விரிவாக்கத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 'ஜியோ' நிறுவனம் இதனை சோதனை அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் சில்லறை விற்பனைக் கடைகளில் உடனடி பணப் பரிமாற்றங்கள் செய்ய முடியும்.

    மேலும் Paytm, PhonePe, Google Pay போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் 'ஜியோ' இதனை அமைத்துள்ளது. விரைவில் ஜியோ UPI செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதன் மூலம் Paytm, PhonePe, Google Pay ஆகியவற்றுக்கு கடும் போட்டியை கொடுக்க முகேஷ் அம்பானி தயாராகி வருகிறார்.

    டிஜிட்டல் வங்கித் துறையில் போட்டியை உருவாக்கும் ஜியோவின் நடவடிக்கை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • ஆப்பிள் மீமோஜி மற்றும் ஸ்னாப்சாட்-இன் பிட்மோஜி போன்றதாகும்.
    • ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் டெஸ்டிங் செய்யப்படுகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் தங்களை நகைப்பூட்டும் வகையில் வெளிப்படுத்திக் கொள்ள செய்யும் விதமாக கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அம்சம் தான் அவதார்ஸ். இதை கொண்டு பயனர்கள் தங்களை வெளிப்படுத்தும் உருவங்களை வாட்ஸ்அப் செயலியிலேயே உருவாக்கிக் கொள்ளலாம். இந்த வசதி ஆப்பிள் மீமோஜி மற்றும் ஸ்னாப்சாட்-இன் பிட்மோஜி போன்றதாகும்.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் உள்ள அவதார்ஸ்-ஐ யார் யார் பார்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்யும் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா 2.24.6.8 வெர்ஷனில் டெஸ்டிங் செய்யப்படுகிறது.

     


    இந்த அம்சத்தின் படி பயனர்கள் தங்களின் அவதார்ஸ்-ஐ யார் யார் பார்க்க வேண்டும் என்பதை- காண்டாக்ட் (My Contacts), தேர்ந்தெடுக்கப்பட்ட காண்டாக்ட்கள் (Selected Contacts) அல்லது யாருக்கும் வேண்டாம் (Nobody) என மூன்று ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

    நீங்களும், நீங்கள் தேர்வு செய்யும் காண்டாக்ட்-ம் இந்த அம்சத்தை ஒருவருக்கொருவர் தேர்வு செய்யும் பட்சத்தில் இருவரின் ஸ்டிக்கர்களும் அவரவர் சாட்களில் காணப்படும். புதிய அம்சம் மூலம் பயனர்களின் தனியுரிமை பாதுகாக்கப்படும்.

    இது ஒருவரின் ஸ்டிக்கர்களை அவர்களுக்கு அறிமுகமில்லாதவர்கள் பார்ப்பதையும், பயன்படுத்துவதையும் தவிர்க்க செய்கிறது. இந்த அம்சம் தற்போது டெஸ்டிங்கில் உள்ள நிலையில், அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் எப்போது வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    • பேட்டரிகளில் இருந்து அதிக நச்சுக்கள் காற்றில் கலக்கிறது
    • பெட்ரோல் காரை விட 400 மடங்கு அதிகம்

    பெட்ரோல், டீசல், மின்சார கார்களின் காற்று மாசு குறித்து 'எமிஷன் அனலைடிக்ஸ்' (Emission Analytics)என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. ஆய்வு முடிவில் மின்சார கார்களில் அதிக காற்று மாசு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

    பெட்ரோல், டீசல், கார்களை விட மின்சார வாகனங்கள் அதிக காற்று மாசு துகள்களை வெளியிடுகிறது. அதன் டயர்களில் பயன்படுத்தப்படும் ரப்பர் மற்றும் பேட்டரிகளில் இருந்து அதிக நச்சுக்கள் காற்றில் கலக்கிறது. அரை டன் பேட்டரி மின்சார வாகனத்தில் இருந்து வெளியாகும் மாசு, பெட்ரோல் காரை விட 400 மடங்கு அதிகம் என்கிறது ஆய்வு.

    மின்சார வாகனங்கள் காற்றுமாசை குறைக்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் காற்று மாசை விட, எலெக்ட்ரிக் வாகனங்களில் இருந்து தான் அதிக காற்று மாசு வெளியேறுகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலக வெப்பமயமாதல் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.

    எனவே, கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், காற்று மாசை கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்கள் தற்போது உபயோகப்படுத்தப்படுகின்றன.

    பெட்ரோல், டீசல் வாகனங்கள் அதிக மாசை வெளியேற்றுவதாக கூறி மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது வெளியான இந்த ஆய்வு முடிவால் வாகன ஓட்டிகள், நுகர்வோர்கள் கடும் குழப்பம் அடைந்து உள்ளனர்.

    ×