search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    • இந்த ஸ்மார்ட்போன் இதே பெயரில் தான் விற்பனைக்கு வரும்.
    • இந்த ஸ்மார்ட்போன் கொமெட் என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது.

    கூகுள் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிக்சல் 9 ப்ரோ போல்டு எனும் பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இதே பெயரில் தான் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் கூகுள் நிறுவனம் 2024 ஆண்டு வெளியாகும் பிக்சல் சாதனங்களின் பெயரை மாற்ற இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி பிக்சல் 9 மாடல் டோகே எனும் குறியீட்டு பெயரிலும், பிக்சல் 9 ப்ரோ கைமேன் என்ற பெயரிலும், பிக்சல் 9 ப்ரோ XL மாடல் கொமோடோ என்ற பெயரிலும் பிக்சல் 9 ப்ரோ போல்டு மாடல் கொமெட் என்ற பெயரிலும் உருவாக்கப்படுகிறது.

    முன்னதாக கொமெட் பெயரில் உருவாக்கப்படும் ஸ்மார்ட்போன் பிக்சல் போல்டு 2 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. தற்போது இந்த சாதனம் பிக்சல் 9 ப்ரோ போல்டு பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பாக இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

    பெயரிடும் வழக்கத்தை கூகுள் மாற்றும் பட்சத்தில், அந்நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிக்சல் 9 சீரிசில் இணைக்கப்படும். இது சாத்தியமாகும் படச்த்தில் பிக்சல் போல்டபில் சாதனங்களில் குறிப்பிடத்தக்க மாற்றமாக அமையும். 

    • இந்த டேப்லெட் மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • ரியல்மி பேட் 2 மாடலில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி பேட் 2 வைபை மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய P1 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் இந்த டேப் அறிமுகமாகி இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ரியல்மி பேட் 2 வைபை மாடலில் 11.5 இன்ச் 2K LCD ஸ்கிரீன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    7.2mm அளவில் மிக மெல்லிய மெட்டல் பாடி மற்றும் குளோயிங் ஸ்பைஸ் டிசைன் கொண்டிருக்கும் ரியல்மி பேட் 2 வைபை மாடல் 8360 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

     


    ரியல்மி பேட் 2 வைபை அம்சங்கள்:

    11.5 இன்ச் 2K 2000x1200 LCD ஸ்கிரீன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர்

    Arm Mali-G57 MC2 GPU

    6 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யு.ஐ. 4

    8MP பிரைமரி கேமரா

    8MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ்

    குவாட் ஸ்பீக்கர்கள்

    வைபை, ப்ளூடூத் 5.3, யு.எஸ்.பி. டைப் சி

    8360 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    ரியல்மி பேட் 2 வைபை மாடல் இமேஜினேஷன் கிரே மற்றும் இன்ஸ்பிரிஷேன் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • பத்து மணி நேரம் வரை பயன்படுத்த முடியும்.
    • IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

    சியோமி நிறுவனம் இரண்டு புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. சியோமி சவுண்ட் பாக்கெட் மற்றும் சியோமி சவுண்ட் அவுட்-டோர் என இவை அழைக்கப்படுகின்றன.

    இரு மாடல்களில் சியோமி சவுண்ட் அவுட்டோர் மாடல் பிளாக், புளூ மற்றும் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. பெரும்பாலான பைகளில் எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இந்த ஸ்பீக்கர் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ரப்பர் மற்றும் ஸ்டிராப் இதை கைகளிலேயே சுலபமாக எடுத்து செல்ல வைக்கிறது.

     


    அளவில் சிறியதாக இருந்தாலும், இந்த ஸ்பீக்கர் அதிகபட்சம் 30 வாட் திறனில் ஆடியோவை வெளிப்படுத்துகிறது. இதற்காக இந்த மாடலில் பில்ட்-இன் சப்-வூஃபர், இரண்டு பேசிவ் ரேடியேட்டர்கள் மற்றும் டுவீட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

    ப்ளூடூத் 5.4 தொழில்நுட்பம் கொண்டிருக்கும் இந்த ஸ்பீக்கர் 2600 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்து 50 சதவீத சத்தம் வைத்து கேட்கும் படச்சத்தில் இது 12 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.

     


    சியோமி சவுண்ட் பாக்கெட் மாடல் அளவில் மிகச் சிறியதாகவும், பிளாக் நிறத்திலும் கிடைக்கிறது. 5 வாட் திறனில் ஆடியோவை வெளிப்படுத்தும் இந்த ஸ்பீக்கரிலும் IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதி வழங்கப்படுகிறது. இதை 40 சதவீத சத்தத்தில் கேட்கும் போது பத்து மணி நேரம் வரை பயன்படுத்த முடியும்.

    • பிரைமரி கேமராவுடன் மூன்று கேமரா சென்சார்கள் உள்ளன.
    • மீடியாடெக் டிமென்சிட்டி 7020 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    இன்பினிக்ஸ் நிறுவனத்தின் நோட் 40 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் நோட் 40 ப்ரோ 5ஜி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இரு மாடல்களிலும் மீடியாடெக் டிமென்சிட்டி 7020 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    இத்துடன் இன்பின்க்ஸ் நிறுவனத்தின் சொந்த சீட்டா X1 பவர் மேனேஜ்மெண்ட் சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் கர்வ்டு AMOLED டிஸ்ப்ளே, 108MP பிரைமரி கேமராவுடன் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.

     


    இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 45 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் மாடலில் 4600 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 100 வாட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

    முன்னதாக இரு மாடல்களும் மார்ச் மாத வாக்கில் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது இந்த மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அப்சிடியன் பிளாக் மற்றும் வின்டேஜ் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி மாடலின் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வின்டேஜ் கிரீன் மற்றும் டைட்டன் கோல்டன் நிறங்களில் கிடைக்கிறது. இரு மாடல்களும் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

    • நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 மாடலில் ட்ரூசின்க் தொழில்நுட்பம் உள்ளது.
    • இதில் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.

    நாய்ஸ் நிறுவனத்தின் புதிய நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 மாடலில் 1.46 இன்ச் ஹைப்பர் விஷன் AMOLED டிஸ்ப்ளே, 466x466 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 600 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏராளமான ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மெட்டல் பில்டு கொண்டிருக்கும் நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 மாடலில் சீராக இயங்கும் கிரவுன் உள்ளது. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 மாடலில் ட்ரூசின்க் தொழில்நுட்பம் உள்ளது. இதன் மூலம் இடையூறு இல்லாமல் ப்ளூடூத் காலிங் மேற்கொள்ளலாம். இந்த வாட்ச்-இல் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி உள்ளது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 10 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும்.

     


    நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 அம்சங்கள்:

    1.46 இன்ச் ஹைப்பர் விஷன் AMOLED டிஸ்ப்ளே

    ப்ளூடூத் 5.3

    ட்ரூ சின்க் மூலம் ப்ளூடூத் காலிங் வசதி

    150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்

    அதிகபட்சம் 10 நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

    24x7 இதய துடிப்பு மாணிட்டரிங், SpO2, ஸ்லீப் டிராக்கிங்

    100-க்கும் அதிக வொர்க்-அவுட் மோட்கள்

    நோட்டிஃபிகேஷன் டிஸ்ப்ளே, வானிலை அப்டேட்கள்

    கேமரா கண்ட்ரோல், மியூசிக் கண்ட்ரோல், டைமர்

    ரிமைண்டர், கால்குலேட்டர்

    நாய்ஸ்ஃபிட் ஆப்

    IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்

    நாய்ஸ்ஃபிட் ஆக்டிவ் 2 ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 3 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் கோநாய்ஸ் வலைதளங்களில் நடைபெறுகிறது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் கிளாசிக் பிரவுன், கிளாசிக் பிளாக், விண்டேஜ் பிரவுன், காப்பர் பிளாக், மிட்நைட் பிளாக் மற்றும் காப்பர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் லெதர் ஸ்டிராப் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

    • வேறுசில சாதனங்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
    • மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    ஹூவாய் நிறுவனம் விரைவில் தனது P70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு ஏற்கனவே சில முறை தாமதமாகிவிட்டது. இந்த நிலையில், ஹூவாய் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் மட்டுமின்றி வேறுசில சாதனங்களை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

    அந்த வகையில், ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மூன்று நிலைகளில் மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    இதுதவிர ஹூவாய் நிறுவனம் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும், இதற்கான பணிகள் முழுமை பெற்றுவிட்டதாகவும் சீன தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் Z அல்லது S வடிவில் மூன்றாக மடிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் அளவு 10 இன்ச் ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஹூவாயின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு BOE பேனல்களை வினியோகம் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனத்தின் ஹீன்ஜ் (கீல்) ஹௌலி மற்றும் ஃபுஸ்டா போன்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்வதாக தெரிகிறது. இந்த சாதனத்தை பெரியளவில் விற்பனைக்கு கொண்டு வரும் பணிகளில் ஹூவாய் ஈடுபட்டு வருகிறது.

    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஹூவாய் நிறுவனம் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் ஒன்றை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த சாதனம் ஹூவாய் விஷன் ப்ரோ என்று அழைக்கப்பட இருக்கிறது. இதில் உள்ள டாப் எண்ட் பிராசஸர் பயனர்களுக்கு அசத்தலான அனுபவத்தை வழங்கும்.

    இந்த அணியக்கூடிய சாதனம் அதிநவீன கூலிங் மெக்கானிசம் கொண்டு, பரவலான மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்கள் ஏற்படுத்தும் வெப்ப உணர்வை தடுக்கும். புதிய மடிக்கக்கூடிய சாதனம் மற்றும் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் தொடர்பாக ஹூவாய் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • தவளை, வண்டு உள்ளிட்டவைகளின் படங்கள் இடம்பெற்றுள்ளது.
    • விரைவில் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம்.

    நத்திங் நிறுவனம் ஏப்ரல் 18 ஆம் தேதி புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அறிவித்து இருக்கிறது. மேலும், இது தொடர்பாக டீசரையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. டீசரின்படி புதிய சாதனம் நத்திங் இயர் 3 மாடலாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    டீசரில் தவளை மற்றும் வண்டு உள்ளிட்டவைகளின் படங்கள் இடம்பெற்றுள்ளது. எனினும், இயர்பட்ஸ் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. நத்திங் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை தொடர்ந்து நத்திங் இயர்பட்ஸ் பற்றிய விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது. அதன்படி, நத்திங் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய சாதனம் இயர்பட்ஸ் ஆகவே இருக்கும்.

     


    பொதுவாக பி.ஐ.எஸ். வலைதளத்தில் சான்று பெறும் சாதனங்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். அப்படியாக சமீபத்தில் சான்று பெற்றுள்ள நத்திங் இயர்பட்ஸ், இயர் 3 மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    நத்திங் நிறுவனத்தின் மற்ற மாடல்களை போன்றே புதிய இயர் 3 மாடலிலும் டிரான்ஸ்பேரண்ட் டிசைன், ஸ்டெம் ஸ்டைல் டிசைன், சதுரங்க வடிவம் கொண்ட கேஸ், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இயர் 2 மாடலில் LDAC கோடெக் சப்போர்ட், டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருந்தது.

    டிசைன் மட்டுமின்றி நத்திங் இயர் 3 மாடலில் ஏராளமான அப்டேட்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. எனினும், நத்திங் நிறுவனம் புதிய டீசர் தொடர்பாக வேறு எந்த தகவலும் வழங்கவில்லை. வரும் நாட்களில் இது தொடர்பான தகவல்கள் படிப்படியாக வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    • இரு மாடல்களின் ஹார்டுவேரில் எந்த மாற்றமும் இல்லை.
    • பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

    சோனி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பி.எஸ். 5 கன்சோல் டிஸ்க் மற்றும் டிஸ்க்-லெஸ் வெர்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் பி.எஸ். 5 மாடலை விட அதிக மெமரி கொண்டிருக்கிறது. எனினும், இரு மாடல்களின் ஹார்டுவேரில் எந்த மாற்றமும் இல்லை.

    அமெரிக்க சந்தையில் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் இந்திய சந்தையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பிளே ஸ்டேஷன் 5 வெளியான மூன்று ஆண்டுகள் கழித்தே பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

     


    பெயருக்கு ஏற்றார்போல் பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடல் அதன் முந்தைய மாடலை விட மெல்லியதாக இருக்கும் படி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது பிளே ஸ்டேஷன் 5 மாடலை விட 25 சதவீதம் எடை குறைவாக இருக்கிறது. அளவீடுகளை பொருத்தவரை பி.எஸ். 5 மாடல் 104mm x 390mm x260mm என்றும் பி.எஸ். 5 ஸ்லிம் மாடல் 96mm x 358mm x216mm அளவு கொண்டிருக்கிறது.

    இரு மாடல்களிடையே குறிப்பிடத்தக்க வித்தியாசமாக பி.எஸ். 5 ஸ்லிம் மாடல் 1 டி.பி. ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது. பி.எஸ். 5 மாடலில் 825 ஜி.பி. ஸ்டோரேஜ் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.

    சோனி பி.எஸ். 5 ஸ்லிம் அம்சங்கள்:

    சோனியின் புதிய பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடலில் x86-64-AMD Ryzen Zen 2 CPU மற்றும் AMD Radeon RDNA 2 சார்ந்த கிராஃபிக்ஸ் என்ஜின், ரே டிரேசிங் அக்செல்லரேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 16 ஜி.பி. ரேம், 1 டி.பி. ஸ்டோரேஜ், இரண்டு யு.எஸ்.பி. டைப் சி போர்ட்கள், இரண்டு யு.எஸ்.பி. டைப் ஏ போர்ட்கள் வழங்கப்படுகின்றன.

    பி.எஸ். 5 ஸ்லிம் மாடல் 4K 120Hz டி.வி. மற்றும் 8K டி.வி.க்களிலும் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. பி.எஸ். 5 ஸ்லிம் மாடலில் பி.எஸ். 4 கேம்களையும் விளையாட முடியும். இதில் டெம்பெஸ்ட் 3டி ஆடியோ தொழில்நுட்பம், 60Fps-இல் 4K கேமிங், ரே டிரேசிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. பி.எஸ். 5 ஸ்லிம் டிஸ்க் மற்றும் டிஸ்க் லெஸ் வெர்ஷன்களில் ஒரே மாதிரியான அம்சங்கள் உள்ளன.

    விலை, விற்பனை விவரங்கள்:

    சோனி பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடலின் டிஜிட்டல் எடிஷன் விலை ரூ. 44 ஆயிரத்து 990 என்றும் டிஸ்க் வெர்ஷன் விலை ரூ. 54 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏப்ரல் 5 ஆம் தேதி ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் துவங்குகிறது.

    • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது.
    • 465 கிராம் எடையில் மிக மெல்லிய டிசைன் கொண்டுள்ளது.

    லெனோவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய டேப்லெட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய லெனோவோ டேப் M11 மாடல் முன்னதாக 2024 சர்வதேச நுகர்வோர் மின்சாதன நிகழ்வில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய லெனோவோ டேப் M11 மாடல் 7.15mm அளவில், 465 கிராம் எடையில் மிக மெல்லிய டிசைன் கொண்டுள்ளது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை 11 இன்ச் 90Hz டிஸ்ப்ளே, 1920x1200 WUXGA ரெசல்யூஷன், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டி.யு.வி. ரெயின்லாந்து மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் HD சான்று பெற்றுள்ளது. இந்த டேப்லெட் மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர், மாலி G52 GPU, 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டிருக்கிறது.

     


    லெனோவோ டேப் M11 அம்சங்கள்:

    11 இன்ச் 1920x1200 WUXGA டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர்

    மாலி G52 GPU

    8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    13MP பிரைமரி கேமரா

    8MP செல்ஃபி கேமரா

    ஆண்ட்ராய்டு 13

    குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி

    3.5mm ஆடியோ ஜாக், வைபை, ப்ளூடூத் 5.1

    7040 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    15 வாட் சார்ஜிங் வசதி

    லெனோவோ டேப் பென் மற்றும் கீபோர்டு சப்போர்ட்

    லெனோவோவின் புதிய டேப் M11 மாடல் சீஃபார்ம் கிரீன் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் இந்தியா வலைதளத்தில் நடைபெறுகிறது.

    • போக்கோ C51 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
    • இந்த மாடலில் இரட்டை கேமராக்கள் வழங்கப்படுகிறது.

    போக்கோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் (மார்ச் 26) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை போக்கோ இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    இது தொடர்பான டீசர்களில் புதிய போக்கோ C61 ஸ்மார்ட்போன் அதிக ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, பெரிய பேட்டரி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என்று தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய போக்கோ C51 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

     


    போக்கோ C61 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் மார்ச் 26 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு விர்ச்சுவல் முறையில் நடைபெற இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கும் டீசர்களின் படி புதிய போக்கோ C61 ஸ்மார்ட்போன் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட HD+ டிஸ்ப்ளே, 6 ஜி.பி. ரேம், 6 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கிளாஸ் பேக் மற்றும் கேமராவை சுற்றி கோல்டன் ரிங் டிசைன் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. போக்கோ C61 ஸ்மார்ட்போன் ரெட்மி A3 மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று கூறப்படுகிறது.



    • சேவையை பிரபலப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • லின்க் செய்து ஸ்மார்ட்வாட்ச்-ஐ ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

    ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ், மாஸ்டர்கார்டு மற்றும் ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கான்டாக்ட்லெஸ் பேமண்ட் சேவையை பிரபலப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் ஸ்மார்ட்வாட்ச் வாங்குவோர், ஏர்டெல் தேங்ஸ் செயலியில் டிஜிட்டல் முறையில் கணக்கை துவங்க வேண்டும். பிறகு, அதே செயலியில் தங்களது கணக்கை லின்க் செய்து ஸ்மார்ட்வாட்ச்-ஐ ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதனை செய்துமுடிக்க ஒரு நிமிடமே ஆகும்.

     


    ஸ்மார்ட்வாட்ச் கனெக்ட் ஆனதும், பயனர்கள் டேப் அன்ட் பே (tap and pay) வசதி கொண்ட பாயின்ட் ஆஃப் சேல் (point of sale) மெஷின்களில் ஸ்மார்ட்வாட்ச்-ஐ வைத்து பேமண்ட் செய்துவிட முடியும். இவ்வாறு நாள் ஒன்றுக்கு ரூ. 1-இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை செலுத்த முடியும்.

    இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ள என்.எஃப்.சி. (NFC) சிப் மாஸ்டர்கார்டு நெட்வொர்க்-இல் இயங்குகிறது. என்.எஃப்.சி. தொழில்நுட்பம் மூலம் பயனர்கள் கான்டாக்ட்லெஸ் பேமண்ட்களை ரிடெயில் ஸ்டோர், பி.ஒ.எஸ். (POS) டெர்மினல் மற்றும் இதர பேமண்ட் முறைகளில் மிக எளிதாக பணம் செலுத்த முடியும்.

    அம்சங்களை பொருத்தவரை ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் ஸ்மார்ட்வாட்ச்-இல் 1.85 இன்ச் அளவில் சதுரங்க வடிவம் கொண்ட எல்.சி.டி. டிஸ்ப்ளே, 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 150-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள், 130 ஸ்போர்ட்ஸ் மோட்கள், ப்ளூடூத் காலிங் வசதி மற்றும் அதிகபட்சம் பத்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, ஸ்டிரெஸ் மானிட்டர் அம்சம், SpO2 மானிட்டரிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்திய சந்தையில் புதிய ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கிரே, புளூ மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    • மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களிடம் போட்டியை எதிர்கொள்கிறது.
    • குறைந்த விலையில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் அன்பேக்டு நிகழ்ச்சியில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவு அதிக பிரபலம் அடைந்து வருகிறது. இதில் சாம்சங் நிறுவனம் ஹூவாய், ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்களின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களிடம் போட்டியை எதிர்கொள்கிறது.

    அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் புதிய சீரிசை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனம் இந்த முறை இரண்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஒதில் ஒன்று அல்ட்ரா பிரான்டிங் கொண்டிருக்கும் என்றும் மற்றொன்று குறைந்த விலையில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

     


    கொரிய நிறுவனமான சிசா ஜர்னல் வெளியிட்டுள்ள தகவல்களில் சாம்சங் தனது குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை இந்த ஆண்டிலேயே அறிமுகம் செய்யும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் கேமரா தவிர மற்ற அம்சங்கள் பட்ஜெட் விலையில் இருக்கும் என்று தெரிகிறது. இதன் மூலம் ஸ்மார்ட்போனின் விலையை குறைவாக நிர்ணயிக்க முடியும்.

    விலையை பொருத்தவரை சாம்சங்கின் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 800 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 66 ஆயிரத்தில் இருந்து துவங்கும் என்று தெரிகிறது. இது தற்போது விற்பனை செய்யப்படும் கேலக்ஸி ஃபோல்டு 5 ஸ்மார்ட்போனின் விலையை விட 50 சதவீதம் குறைவு ஆகும்.

    ×