search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது.
    • நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக சோதி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பாபர் அசாம் - சைம் அயூப் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். சைம் அயூப் 32 ரன்களிலும் பாபர் அசாம் 37 ரன்களிலும் அவுட் ஆகினர்.

    இதனையடுத்து உஸ்மான் கான் 5 ரன்களுக்கும், முகமது ரிஸ்வான் 22 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க பாகிஸ்தான் அணி 104 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த இர்ஃபான் கான் - ஷதாப் கான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஷதாப் கான் 41 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

    இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக சோதி 2 விக்கெட்டுகளையும், ஜேக்கப் டஃபி, மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.

    • இரு அணிகளும் இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி உள்ளன.
    • குஜராத் அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மொஹாலியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் சாம் கர்ரன் மற்றும் பிரப்சிம்ரன் சிங் சுமாரான துவக்கத்தை கொடுத்தனர்.

    இந்த ஜோடி முறையே 20 மற்றும் 35 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. அடுத்து வந்த ரோசோ, ஜிதேஷ் ஷர்மா, லியம் லிவிங்ஸ்டன் முறையே 9, 13 மற்றும் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    போட்டி முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை குவித்தது. குஜராத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாய் கிஷோர் நான்கு விக்கெட்டுகளையும், மோகித் சர்மா, நூர் அகமது தலா இரண்டு விக்கெட்டுகளையும் ரஷித் கான் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • வில் ஜாக்ஸ் மற்றும் பட்டிதர் ஜோடி அரைசதம் அடித்து அசத்தியது.
    • சிறப்பாக பந்துவீசிய ஆன்ட்ரெ ரசல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரரான பில் சால்ட் 14 பந்துகளில் 48 ரன்களை குவித்து அதிரடியான துவக்கத்தை கொடுத்தார்.

    இவருடன் களமிறங்கிய சுனில் நரைன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அங்ரிஷ் ரகுவான்ஷி 3 ரன்களிலும், வெங்கடேஷ் அய்யர் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் பொறுப்பாக ஆடினார். ரிங்கு சிங் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

    போட்டி முடிவில் கொல்கத்தா 6 அணி விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் சிறப்பாக பந்துவீசிய யாஷ் தயால் மற்றும் கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், பெர்குசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    கடின இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு விராட் கோலி மற்றும் பாப் டு பிளெசிஸ் ஜோடி சுமாரான துவக்கத்தை கொடுத்தது. இருவரும் முறையே 18 மற்றும் 7 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து களமிறங்கிய வில் ஜாக்ஸ் மற்றும் பட்டிதர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

    இந்த ஜோடி அரைசதம் அடித்து அசத்திய நிலையில், ஜாக்ஸ் 55 ரன்களுக்கும், பட்டிதர் 52 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 6 ரன்களையும், லோம்ரோர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், பெங்களூரு அணி ரன் குவிப்பில் ஈடுபட்டது.

    அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 25 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இவருடன் விளையாடிய கர்ண் ஷர்மா கடைசி வரை போராடினார். இவர் 7 பந்துகளில் 20 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் பெங்களூரு அணி 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    கொல்கத்தா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆன்ட்ரெ ரசல் மூன்று விக்கெட்டுகளையும், சுனில் நரைன், ஹர்ஷித் ரானா தலா இரண்டு விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • இரு அணிகளும் இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி உள்ளன.
    • குஜராத் அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மொஹாலியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் இரு அணிகளும் இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி உள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்று போட்டிகளில் வெற்றி நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

    பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி, ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. புள்ளிகள் பட்டியலில் இரு அணிகளும் பின்தங்கியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.

    • பில் சால்ட் அதிரடியாக ஆடி 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • யாஷ் தயால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரரான பில் சால்ட் 14 பந்துகளில் 48 ரன்களை குவித்து அதிரடியான துவக்கத்தை கொடுத்தார்.

    இவருடன் களமிறங்கிய சுனில் நரைன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அங்ரிஷ் ரகுவான்ஷி 3 ரன்களிலும், வெங்கடேஷ் அய்யர் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் பொறுப்பாக ஆடினார். ரிங்கு சிங் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

    போட்டி முடிவில் கொல்கத்தா 6 அணி விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் சிறப்பாக பந்துவீசிய யாஷ் தயால் மற்றும் கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், பெர்குசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • கொல்கத்தா அணி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
    • வெற்றி பெறும் முனைப்பில் பெங்களூரு அணி களமிறங்குகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி உள்ள கொல்கத்தா அணி நான்கு போட்டிளில் வெற்றி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

    பெங்களூரு அணி ஏழு போட்டிகளில் ஒரே ஒரு வெற்றி மற்றும் ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. அந்த வகையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் பெங்களூரு அணி களமிறங்குகிறது.

    • ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி டெல்லியை வீழ்த்தி 5வது வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் அந்த அணி 10 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 266 ரன் குவித்தது.

    டிராவிஸ் ஹெட் 32 பந்தில் 89 ரன்னும் (11 பவுண்டரி, 6 சிக்சர்), ஷாபாஸ் அகமது 29 பந்தில் 59 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்), அபிஷேக் சர்மா 12 பந்தில் 46 ரன்னும் (2 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தனர். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், முகேஷ்குமார், அக்ஷர் படேல் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    ஐதராபாத் அணியின் தொடக்க வீரரான டிரெவிஸ் ஹெட்-அபிஷேக் சர்மா ஜோடி பவர் பிளேயில் 125 ரன் விளாசி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19.1 ஓவரில் 199 ரன்னில் சுருண்டது. இதனால் ஐதராபாத் அணி 67 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரேசர் 18 பந்தில் 65 ரன்னும் (5 பவுண்டரி, 7 சிக்சர்), கேப்டன் ரிஷப் பண்ட் 35 பந்தில் 44 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) அபிஷேக் போரல் 22 பந்தில் 42 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    தமிழக வீரர் டி.நடராஜன் 4 விக்கெட்டும். மார்கண்டே, நிதிஷ்குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும் வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஐதராபாத் அணி 5-வது வெற்றியை பதிவுசெய்தது. இதன்மூலம் அந்த அணி 10 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறி யுள்ளது.

    டெல்லி அணி 5-வது தோல்வியை தழுவியது.

    இந்நிலையில், தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில், முதலில் நாங்கள் பந்து வீசும்போது பனி இருக்கும் என நினைத்தோம். ஆனால் பனித்துளி ஏற்படவில்லை. ஐதராபாத்தை 220 முதல் 230 ரன்களுக்கு கட்டுப்படுத்தினால் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன். முதல் 6 ஓவர், அதாவது பவர்பிளே தான் 2 அணிகளுக்கும் உள்ள வித்தியாசம். இதுதான் ஆட்டத்தை மாற்றிவிட்டது. நாங்கள் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவோம். ஜேக் பிரேசர் பேட்டிங் அற்புதமாக இருந்தது. அடுத்த ஆட்டத்தில் எங்களை மேம்படுத்திக் கொள்வோம் என தெரிவித்தார்.

    • 13 சுற்றுகள் முடிவில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.
    • மற்ற ஆட்டங்களில் பிரக்ஞானந்தா-நிஜாத் அப்சோவ், விதித் குஜராத்தி, பிரவுசியா இயன் நெ போம்னியாச்சி, பேபியானோ மோதுகிறார்கள்.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. 14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 13-வது சுற்று நேற்று நடந்தது

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் பிரான்ஸ் வீரர் அலிரேசா பிரவுசியாவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் இந்த ஆட்டத்தில் 63-வது நகர்த்தலுக்கு பிறகு வெற்றி பெற்றார். அவர் பெற்ற 5-வது வெற்றியாகும்.

    பிரவுசியாவிடம் ஏற்க னவே தோற்று இருந்தார். இதற்கு குகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். இந்த வெற்றி மூலம் அவர் மட்டுமே முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 13-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த பேபியானோவுடன் மோதினார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா இந்த சுற்றில் தோல்வியை தழுவினார். அவருக்கு ஏற்பட்ட 3-வது தோல்வியாகும்.

    மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தி அஜர்பை ஜான் வீரர் நிஜாத் அப்சோ வாவிடம் டிரா செய்தார்.

    இன்னொரு ஆட்டத்தில் இயன் நெபோம்னியாச்சி ( ரஷியா)- ஹிகாரு நகமுரா (அமெரிக்கா) மோதி னார்கள். இந்த ஆட்டமும் டிரா ஆனது.

    13 சுற்றுகள் முடிவில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.

    இயன் நெபோம்னியாச்சி, ஹிகாரு நகமுரா , பேபி யானோ ஆகிய 3 வீரர்கள் தலா 8 புள்ளிகளுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

    பிரக்ஞானந்தா 6 புள்ளி களுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5. 5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் இருக்கிறார்கள். பிரவுசியா (4.5 புள்ளி) 7-வது இடத்திலும், நிஜாத் அப்சோவ் ( 3.5 ) கடைசி இடத்திலும் உள்ளனர்.

    இன்று கடைசி சுற்று ஆட்டம் நடக்கிறது. குகேஷ் இந்த ரவுண்டில் ஹிகாரு நகமுராவுடன் மோதுகிறார். மற்ற ஆட்டங்களில் பிரக்ஞானந்தா-நிஜாத் அப்சோவ், விதித் குஜராத்தி, பிரவுசியா இயன் நெ போம்னியாச்சி, பேபியானோ மோதுகிறார்கள் .

    பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி சீனாவை சேர்ந்த டிங்ஜி லீயை 13-வது சுற்றில் தோற்கடித்தார். மற்றொரு இந்தியரான ஹம்பி உக்ரைன் வீராங்கணை அனாவுடன் டிரா செய்தார்.

    வைஷாலி, ஹம்பி ஆகியோர் தலா 6.5 புள்ளி களுடன் 3 முதல் 6-வது இடங்களில் உள்ளனர்.

    • மாநில கூடைப்பந்து போட்டி நாளை தியாகராயநகர் வெங்கட் நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி மைதானம் மற்றும் நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
    • ரைசிங்ஸ்டார் கூடைப்பந்து கிளப் செயலாளர் சம்பத் தெரிவித்துள்ளார்.

    ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் அரைஸ் அறக்கட்டளை, காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ், பி.ஆர்.டி. ஆதரவுடன் 18-வது மாநில கூடைப்பந்து போட்டி நாளை (திங்கட்கிழமை) முதல் 1-ந்தேதி வரை சென்னை தியாகராயநகர் வெங்கட் நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி மைதானம் மற்றும் நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    ஆண்கள் பிரிவில் ஐ.சி.எப். இந்தியன் வங்கி, எஸ்.ஆர்.எம்., சத்யபாமா பல்கலைக்கழகம் உள்பட 72 அணிகளும், பெண்கள் பிரிவில் ரைசிங் ஸ்டார், ஜே.ஐ.டி, எத்திராஜ். இந்துஸ்தான் பல்கலைக்கழகம் உள்பட 26 அணிகளும் பங்கேற்கின்றன. இதில் இரு பாலரிலும் முதல் இடத்தில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.40 ஆயிரம், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.30 ஆயிரம். 3-வது இடம் பெறும் அணிக்கு ரூ.20 ஆயிரம் வீதம் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று ரைசிங்ஸ்டார் கூடைப்பந்து கிளப் செயலாளர் சம்பத் தெரிவித்துள்ளார்.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 90 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • பாகிஸ்தானின் ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட் வீழ்த்தினார்.

    ராவல்பிண்டி:

    நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி மழையால் ரத்துசெய்யப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. பாகிஸ்தான் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவில் விக்கெட்களை இழந்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 18.1 ஓவரில் 90 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    பாகிஸ்தான் சார்பில் ஷகீன் அப்ரிடி 3 விக்கெட்டும், அமீர் , அப்ரார் அகமது, ஷதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 91 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பொறுப்புடன் ஆடிய முகமது ரிஸ்வான் 45 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இறுதியில் பாகிஸ்தான் 12.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து சார்பில் லிஸ்டர், பேர்ஸ்வெல், இஷ் சோதி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் 5 போட்டி கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது.

    • ஐதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜேக் பிரேசர் மெக்குர்க் 15 பந்தில் அரைசதம் அடித்தார்.
    • டெல்லி அணிக்காக அதிவேக அரைசதம் அடித்த வீரராக மெக்குர்க் சாதனை படைத்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல் தொடரில் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 266 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 89 ரன்கள் அடித்தார். தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 19.1 ஓவரில் 199 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் ஐதராபாத் அணி 67 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி சார்பில் ஜேக் பிரேசர்-மெக்குர்க் 18 பந்தில் 65 ரன்கள் குவித்தார்.

    இந்நிலையில், ஜேக் பிரேசர் மெக்குர்க் இந்த ஆட்டத்தில் 15 பந்தில் அரைசதமடித்து அசத்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் டெல்லி அணிக்காக (பந்துகள் அடிப்படையில்) அதிவேக அரைசதம் அடித்த வீரராக மெக்குர்க் சாதனை படைத்துள்ளார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வீரராகவும் அவர் சாதனை படைத்துள்ளார்.

    • ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
    • பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 35 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது.

    இந்நிலையில், ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 புள்ளிகள் பெற்று 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    கொல்கத்தா, சென்னை மற்றும் குஜராத் அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்று 3,4,5-வது இடங்களில் உள்ளன.

    பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

    ×