search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • கர்நாடகாவில் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்
    • ஓபிசி சமூகத்தின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ். அவர்களின் உரிமைகளை காங்கிரஸ் பறித்துள்ளது

    தற்போது கர்நாடகாவில், முஸ்லிம் மதத்தில் உள்ள அனைத்து சாதிகளையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அம்மாநில காங்கிரஸ் அரசு சேர்த்துள்ளது.

    கர்நாடகாவில் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, இவ்வாறு தெரிவித்தார்.

    அக்கூட்டத்தில் பேசிய மோடி, "மீண்டும் ஒருமுறை அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்காத மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் முஸ்லிம் மதத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து பின்கதவு வழியாக இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓபிசி மக்களிடமிருந்து பெருமளவிலான இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் எதிர்கால தலைமுறைகளை அழிக்கும் இந்த ஆபத்தான விளையாட்டில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. 2004ல் கர்நாடகாவில் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்போது, அரசியல் சாசன சிற்பி டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை முதுகில் காங்கிரஸ் குத்தியது

    "ஓபிசி சமூகத்தின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ். அவர்களின் உரிமைகளை காங்கிரஸ் பறித்துள்ளது. காங்கிரஸ் சமூக நீதியை கொலை செய்துள்ளது. அரசியலமைப்பை மீறி பாபாசாகேப் அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்துள்ளது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், கர்நாடகாவில் ஓபிசி இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு காங்கிரஸ்தான் மாற்றியது என மோடி கூறியது அப்பட்டமான பொய் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    மோடி அரசுடன் கூட்டணி அமைத்திருக்கும் தேவ கவுடா தான், 1995ஆம் ஆண்டு இஸ்லாமியர்களை ஓபிசி பட்டியலில் இணைத்தார். ஆனால், அதனை காங்கிரஸ் தான் செய்தது என மோடி தெரிவித்திருக்கிறார்.

    முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவோம் என்று ஒரு காலத்தில் தம்பட்டம் அடித்த தேவகவுடா இன்னும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறாரா? அல்லது நரேந்திர மோடியிடம் சரணடைந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரா? என்பதை கர்நாடக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று சித்தராமையா கூறினார்.

    1995 ஆம் ஆண்டில், தேவகவுடா அரசாங்கம் கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு நான்கு சதவீத இடஒதுக்கீட்டை ஓபிசி ஒதுக்கீட்டிற்குள் 2பி என்ற தனித்துவமான வகைப்பாட்டின் கீழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை கடந்தாண்டு அம்மாநில பாஜக அரசு ரத்து செய்து, முஸ்லிம்களை பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டில் சேர்த்தது.

    ஆனால் பாஜக அரசின் இந்த முடிவை அமல்படுத்த கூடாது என்று உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் மீண்டும் ஓபிசி பட்டியலில் முஸ்லிம்களை காங்கிரஸ் அரசு சேர்த்துள்ளது.

    • 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது சுமார் 66 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது அதை விட இரண்டு மடங்கு அதிகமாக செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • தேர்தல் ஆணையம், அரசு, வேட்பாளர்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவை தேர்தல் தொடர்பாக நேரடி மற்றும் மறைமுகமாக செலவினங்களை உள்ளடக்கியதாகும்.

    2024 மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படும். அதன்பின் ஒவ்வொரு கட்சிகளும் செலவு செய்வது தேர்தல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

    மேலும், தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான வேலைகளை செய்யும். வாக்குச்சாவடி அமைத்தல், வாக்குச் சாவடிக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட வேலைகளை கவனிக்கும். ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும்.

    மொத்தமாக தேர்தல் தொடர்பாக செலவிடப்படும் தொகை எவ்வளவு என்பது குறித்த தகவலை மீடியா ஆய்வுகளுக்கான மையம் (The Centre for Media Studies) வெளியிட்டுள்ளது.

    லாபம் நோக்கத்தோடு செயல்படாத இந்த அமைப்பின் தலைவர் என். பாஸ்கர ராவ், இந்த தேர்தலுக்காக சுமார் 1.35 லட்சம் கோடி ரூபாய் செலவு ஆகும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

    2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது சுமார் 66 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் ஆணையம், அரசு, வேட்பாளர்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவை தேர்தல் தொடர்பாக நேரடி மற்றும் மறைமுகமாக செலவினங்களை உள்ளடக்கியதாகும்.

    முதலில் 1.2 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் பத்திரம் தொடர்பான விவரம் வெளியிடப்பட்டநிலையில் 1.35 லட்சம் கோடி ரூபாயாக எதிர்பார்க்கப்படுகிறது என என். பாஸ்கர ராவ் தெரிவித்துள்ளார்.

    96.6 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், ஒரு வாக்காளருக்கான செலவு சுமார் ரூ.1,400 என மதிப்பிடப்பட்டுள்ளது.

    இது 2020 அமெரிக்க தேர்தலில் செலவிடப்பட்டதை விட அதிகமானது. அமெரிக்க தேர்தல் செலவுக்கு 1.2 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. OpenSecrets.org இணைய தளம் வெளியிட்ட தகவலின்படி இவ்வளவு செலவு என தெரியவந்துள்ளது.

    பல்வேறு தளங்களை கொண்ட மீடியா மூலமாக பிரசாரம் மேற்கொள்ள 30 சதவீதம் செலவிடப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    • இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்.
    • ஓட்டலில் இன்னும் சிலர் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    பீகார் மாநிலம் பாட்னாவில் ரெயில்வே நிலையம் அருகே உள்ள மூன்று அடுக்கு மாடி ஓட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் காயமடைந்தோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில், இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், ஓட்டலில் இன்னும் சிலர் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் ஓட்டலின் உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 742 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானதாகவும், 1,161 வாக்குச்சாவடிகள் பிரச்சனைக்குரியவையாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது.
    • கேரள மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 49ஆயிரத்து 159 பேர் ஆவர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 194 பேர் போட்டியிடுகின்றனர்.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடது சாரி ஜனநாயக முன்னணி, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் முடிந்ததில் இருந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் கேரள மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று மத்திய மந்திரி அமித்ஷா, பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். பல இடங்களில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் கட்சியினருக்கிடையே மோதலும் நடந்தது.

    இந்நிலையில் 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நாளை (26-ந்தேதி) நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஓட்டுப்பதிவை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

    வாக்காளர்கள் ஓட்டு போடுவற்காக 25,231 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    742 வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமானதாகவும், 1,161 வாக்குச்சாவடிகள் பிரச்சனைக்குரியவையாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த 1,903 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அங்கு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    காசர்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு, திருச்சூர், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் அனைத்து வாக்குச்சாவடிகளும் ஓட்டுப்பதிவு நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் 75 சதவீத வாக்குச்சாவடிகள் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது.

    கேரள மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 49ஆயிரத்து 159 பேர் ஆவர். அவர்களில் ஆண் வாக்காளர்கள் 1 கோடியே 34லட்சத்து 15ஆயிரத்து 293 பேர், பெண் வாக்காளர்கள் 1 கோடியே 43 லட்சத்து 33ஆயிரத்து 499 பேர், மூன்றாம் பாலினத்தினர் 367 பேர்.

    மக்களவை தேர்தலை முன்னிட்டு கேரளாவில் திருவனந்தபுரம், திருச்சூர், காசர்கோடு, கோழிக்கோடு, பத்தினம்திட்டா ஆகிய 5 மாவட்டங்களில் 144 தடையை அமல்படுத்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். திருவனந்தபுரம், திருச்சூர், காசர்கோடு, கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் 144 தடை நேற்று(24-ந்தேதி) நேற்று மாலை 6 மணிக்கே அமலுக்கு வந்தது.

    அந்த மாவட்டங்களில் வருகிற 27-ந்தேதி வரை தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பத்தினம்திட்டா மாவட்டத்தில் இன்று மாலை 6 மணிமுதல் 144 தடை உத்தரவு அமலாக இருக்கிறது.

    இந்த மாவட்டங்களில் 5 பேருக்கு மேல் கூடுதல், பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துதல் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • காலேஷ்வரம் திட்டம் அல்லது நில மோசடி தொடர்பாக டிஆர்எஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் விசாரணை மேற்கொள்ளவில்லை.
    • டிஆர்எஸ்- காங்கிரஸ் கட்சிகள் கூட்டு வைத்துள்ளன.

    மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான அமித் ஷா தெலுங்கானா மாநிலத்தின் மேடக் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ரகுநந்தன் ராவை ஆதரித்து தேர்தல் பேரணியில் பேசினார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    இந்த குறைந்த நாட்களுக்குள் (தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த டிசம்பர் மாதத்தில் இருந்து) காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவை டெல்லியின் ஏடிஎம் ஆக்கியுள்ளது. காலேஷ்வரம் திட்டம் அல்லது நில மோசடி தொடர்பாக டிஆர்எஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் விசாரணை மேற்கொள்ளவில்லை. டிஆர்எஸ்- காங்கிரஸ் கட்சிகள் கூட்டு வைத்துள்ளன. நீங்கள் வாக்களித்து பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக்கினால், அவர் ஊழலில் இருந்து தெலுங்கானாவை விடுவிப்பார்.

    இந்த முறை தெலுங்கானா மக்கள் பிரதமர் மோடியின் பக்கம் உள்ளனர். எல்லா இடங்களிலும் பா.ஜனதா வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய தெலுங்கானா மக்கள் முடிவு செய்துள்ளனர். தெலுங்கானாவின் விரிவான வளர்ச்சிக்கு மத்தியில் பா.ஜனதா வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • கடந்தாண்டு பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக புகார் எழுந்தன
    • இது தொடர்பாக யூடியூபர் மணிஷ் காஷ்யப்பை பீகார் போலீசார் கைது செய்தனர்.

    கடந்தாண்டு பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக புகார் எழுந்தன. இதுதொடர்பாக பல போலி வீடியோக்கள் வெளியானது. இது தொடர்பாக பீகார் சட்டசபையில் பாஜகவினர் பிரச்சினை கிளப்பினர்.

    இந்த பிரச்சினையில் தமிழ்நாடு மற்றும் பீகார் மாநில அரசுகள் ஒன்றிணைந்து குழுக்களை அமைத்து கடும் நடவடிக்கையில் இறங்கின. இதையடுத்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

    இது தொடர்பாக யூடியூபர் மணிஷ் காஷ்யப்பை பீகார் போலீசார் கைது செய்தனர். பீகாரை சேர்ந்த இவர் 4 ஆண்டுகளாக யூடியூப் சேனலில் அரசுகளுக்கு எதிராக தவறான கருத்துக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதற்காக அவருக்கு மாதம் ரூ.5 லட்சம் வரை வருவாய் கிடைத்துள்ளது.

    பணம் சம்பாதிக்க தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோ காட்சிகளை தயாரித்துள்ளார். மணீஷின் சேனலில் 30 போலி வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

    மணிஷ் காஷ்யப் மீது தமிழ்நாட்டிலும், பீகாரிலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

    தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ள யூடியூபர் மனீஷ் டெல்லியில் பாஜக எம்,.பி மனோஜ் திவாரி முன்னிலையில் காஷ்யாப் பாஜகவில் இணைந்துள்ளார்.

    பாஜகவில் இணைந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய மணீஷ் காஷ்யப், "பாஜகவுடன் இணைந்து பீகாரை வலுப்படுத்துவேன். என் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் பாட்னா நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியது மட்டுமின்றி என்னை விடுதலையும் செய்துள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் என் மீது போடப்பட்ட வழக்கும் வாபஸ் பெறப்பட்டது. சனாதனத்தை அவதூறு செய்பவர்களுக்கும், தேசியவாதத்திற்கு எதிரானவர்களுக்கும் எதிரான எனது போராட்டம் தொடரும்" என்று அவர் தெரிவித்தார்.

    • கேரள மாநிலம் வயநாட்டில் தற்போது எம்.பி.யாக இருந்து வரும் ராகுல் காந்தி கடந்த தேர்தலில் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டார்.
    • ராகுல் காந்தியும், பிரியங்காவும் மே மாதம் 1-ந்தேதியில் இருந்து 3-ந்தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பத்தின் கோட்டையாக ரேபரேலி தொகுதி இருந்து வருகிறது. கடந்த 1999-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இத்தொகுதி எம்.பி.யாக உள்ளார். சென்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற ஒரே தொகுதி ரேபரேலி ஆகும்.

    ஆனால் இம்முறை சோனியா காந்தி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இதையடுத்து அவர் மேல்- சபை எம்.பியாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் வருகிற தேர்தலில் ரேபரேலியில் யார் போட்டியிட போகிறார்கள்? என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இதுவரை காங்கிரஸ் சார்பில் இங்கு போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.

    நேரு குடும்பத்துக்கு சொந்தமானதாக கருதப்படும் இத்தொகுதியில் சோனியா காந்தியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி களம் இறக்கப்பட உள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் பிரியங்கா முதல் முறையாக தேர்தலை நேரடியாக சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    உத்தரபிரசேதத்தின் மற்றொரு தொகுதியான அமேதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேரள மாநிலம் வயநாட்டில் தற்போது எம்.பி.யாக இருந்து வரும் ராகுல் காந்தி கடந்த தேர்தலில் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டார்.

    கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை எம்.பி.யாக இருந்த அவர் சென்ற தேர்தலில் தற்போதைய மத்திய மந்திரியான ஸ்ருமிதி இரானியிடம் தோல்வியை தழுவினார். இருந்தபோதிலும் இம்முறை பாரதிய ஜனதாவை வீழ்த்தி வெற்றி கனியை எப்படியாவது பறித்து விட வேண்டும் என்ற முனைப்பில் ராகுல் காந்தி அமேதியில் களம் இறங்க உள்ளார். இன்னும் ஓரிரு நாளில் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட உள்ளனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ராகுல் காந்தியும், பிரியங்காவும் மே மாதம் 1-ந்தேதியில் இருந்து 3-ந்தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக இருவரும் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வழிபட முடிவு செய்துள்ளனர்.

    அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் 2-ம் கட்டமாக மே மாதம் 20-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 26-ந்தேதி தொடங்கி மே மாதம் 3-ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது.

    • தேர்தலில் போட்டியிட்டாலும் சரி, போட்டியிடவில்லை என்றாலும் சரி, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன்.
    • ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா சித்தாந்தத்தை முறியடிக்கும் வரை அரசியலில் இருந்து ஓய்வுபெற முடியாது என்று பலமுறை கூறி இருக்கிறேன்.

    பெங்களுரு:

    பாராளுமன்ற தேர்தல் 2-வது கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு நாளை நடக்கிறது.

    இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலையோடு ஓய்ந்தது. 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கலபுர்கி தொகுதியில் (குல்பர்கா) போட்டியிட்டு தற்போதைய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தோல்வி அடைந்தார். இந்த முறை இதே தொகுதியில் அவரது மருமகன் ராதாகிருஷ்ண தொட்டாமணி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மல்லிகார்ஜூன கார்கே பிரசாரம் செய்கிறார்.

    அப்போது அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை எனது இறுதி ஊர்வலத்துக்காவது வாருங்கள் என்று உணர்ச்சிகரமாக பேசினார். தனது சொந்த மாவட்டமான கலபுர்கியின் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே இது தொடர்பாக பேசியதாவது:-

    இந்த முறை இந்த தொகுதியில் காங்கிரசுக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை என்றாலும் இனி எனக்கான இடம் இங்கு இல்லை என்றும், உங்களின் மனங்களை என்னால் வெல்ல முடியாது என்றும் நினைப்பேன்.

    நீங்கள் காங்கிரசுக்கு ஓட்டு போடுகிறீர்களோ இல்லையோ, கலபுர்சிக்காக நான் பாடுபட்டு இருக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் என்னுடைய இறுதி சடங்கிற்கு வாருங்கள்.

    நான் அரசியலுக்காக பிறந்தவன். தேர்தலில் போட்டியிட்டாலும் சரி, போட்டியிடவில்லை என்றாலும் சரி, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன். அதுவரை அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்.

    அதே போல் ஒருவர் தனது கொள்கையில் இருந்து ஒருபோதும் ஓய்வு பெறக்கூடாது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவின் சித்தாந்தங்களை வீழ்த்துவதற்காக நான் பிறந்தேனே தவிர, அவர்கள் முன் சரண் அடைவதற்காக அல்ல.

    சித்தராமையாவிடம் கூட நீங்கள் முதல்-மந்திரி, எம்.எல்.ஏ. போன்ற பதவிகளில் இருந்து ஓய்வு பெறலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா சித்தாந்தத்தை முறியடிக்கும் வரை அரசியலில் இருந்து ஓய்வுபெற முடியாது என்று பலமுறை கூறி இருக்கிறேன்.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே உருக்கமாக பேசினார்.

    • மக்களின் எதிர்காலத்துடன் விளையாடி, எப்படியாவது நாற்காலியைப் பெற வேண்டும் என்று பல்வேறு விளையாட்டுகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.
    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பரம்பரை வரி மூலம் உங்கள் வருமானத்தில் பாதிக்கும் மேல் பறித்து விடும்.

    போபால்:

    பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதாவுக்கு நாட்டை விட பெரிது எதுவுமில்லை. காங்கிரசுக்கு அதன் சொந்த குடும்பமே முக்கிய அளவுகோல். நாட்டிற்காக அதிகபட்ச பங்களிப்பையும், உழைப்பையும், அர்ப்பணிப்பையும் செய்பவரை பின்னால் நிறுத்த வேண்டும் என்பதே காங்கிரசின் கொள்கை. எனவே, பல ஆண்டுகளாக, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் போன்ற ராணுவ வீரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற காங்கிரஸ் அனுமதிக்கவில்லை.

    எங்களது அரசு அமைந்தவுடன் ஒன் ரேங்க்-ஒன் பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தினோம்.

    காங்கிரஸ், வளர்ச்சிக்கு எதிரான கட்சி. காங்கிரஸ் மீண்டும் மதத் துவேஷத்தை கைக்கூலியாகப் பயன்படுத்துகிறது. கர்நாடக காங்கிரஸ் அரசு அங்குள்ள முஸ்லிம் சமுதாய மக்களை இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் என்று அறிவித்துள்ளது.

    இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் சமூகத்தில் பல புதிய நபர்களை காங்கிரஸ் சேர்த்தது. முன்பு இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் கல்வி, அரசு வேலைகளில் இடஒதுக்கீடு பெற்றனர். ஆனால் தற்போது அவர்கள் பெற்ற இட ஒதுக்கீடு ரகசியமாக அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.

    முஸ்லிம்களை இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் பிரிவில் சட்டவிரோதமாக காங்கிரஸ் சேர்த்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினரின் உரிமையை கர்நாடக காங்கிரஸ் அரசு பறித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான ஒதுக்கீட்டை தடுக்க காங்கிரஸ் விரும்புகிறது.

    பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் பல ஆண்டுகளாக சதி செய்து வருகிறது. நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்குத்தான் முதல் உரிமை என்று காங்கிரஸ் சொல்கிறது, அதே சமயம் ஏழைகளுக்குத் தான் முதல் உரிமை என்று நான் சொல்கிறேன்.

    பா.ஜ.க. அரசு 80 கோடி மக்களுக்கு மத பாகுபாடு இல்லாமல் இலவச ரேஷன் வழங்கியுள்ளது. ஒரு முஸ்லிம் என்பதற்காக ஒருவருக்கு இலவச ரேஷன் கிடைப்பதில்லை என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அம்பேத்கர் மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை எதிர்த்தார். ஆனால் அதை காங்கிரஸ் பின்வாசல் வழியாக அளித்துள்ளது.

    மக்களின் எதிர்காலத்துடன் விளையாடி, எப்படியாவது நாற்காலியைப் பெற வேண்டும் என்று பல்வேறு விளையாட்டுகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பரம்பரை வரி மூலம் உங்கள் வருமானத்தில் பாதிக்கும் மேல் பறித்து விடும். மக்களின் சொத்துக்கள் மற்றும் விலை மதிப்பற்ற பொருட்களை எக்ஸ்ரே மூலம் சோதனை செய்து, மக்களின் நகைகள் மற்றும் சிறு சேமிப்புகளை பறிமுதல் செய்ய காங்கிரஸ் விரும்புகிறது. உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • மலையில் இருந்து மழைநீர் அருவி போல் கொட்டியதில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் பாறை மற்றும் மணல்கள் விழுந்தன.
    • சீன எல்லையில் ராணுவ முகாம்களுக்கு செல்லக்கூடிய சாலை கடும் சேதமடைந்துள்ளதால் அங்கு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இட்டாநகர்:

    அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சீன எல்லையையொட்டி உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லையையொட்டி உள்ள திபாங் பள்ளத்தாக்கை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 33-ல் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.

    மலையில் இருந்து மழைநீர் அருவி போல் கொட்டியதில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் பாறை மற்றும் மணல்கள் விழுந்தன. மேலும் அந்த சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டு துண்டானது. இதனால் ஹுன்லி-அனினி இடையே போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

    சீன எல்லையில் ராணுவ முகாம்களுக்கு செல்லக்கூடிய சாலை கடும் சேதமடைந்துள்ளதால் அங்கு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையை சீரமைக்க மூன்று நாட்கள் ஆகும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    தற்போது வானிலை மோசமாக இருப்பதால் சீரமைப்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் தற்போது உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிரதமர் மோடி மீது காங்கிரசும், ராகுல்காந்தி மீது பாஜகவும் நோட்டீஸ்.
    • நோட்டீஸ் தொடர்பாக வரும் 29ம் தேதிக்குள் விளக்கமளிக்க உத்தரவு.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21-ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    அப்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்களின் சொத்துக்கள், நிலங்கள், தங்கம் ஆகியவற்றை முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடும் என்று பேசினார்.

    பிரதமரின் இந்த பேச்சு வெறுப்பை தூண்டுகின்றன என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தேர்தல் விதிமுறைகளை மீறிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கொண்ட குழு தேர்தல் ஆணையத்தில் கடந்த திங்கட்கிழமை புகார் மனு அளித்தது.

    பிரதமருக்கு எதிரான புகார் குறித்து தேர்தல் ஆணையம் முதலில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இதே குற்றச்சாட்டை பிரதமர் மோடி தொடர்ந்து தேர்தல் பிரசார கூட்டங்களில் காங்கிரஸ் மீது சுமத்தினார். இது காங்கிரஸ் கட்சியை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

    இதற்கிடையே பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் அளித்த புகாரை ஆய்வு செய்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    பிரதமரின் பேச்சு தொடர்பான புகார் பெறப்பட்டு தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்து இருந்தன. அதே நேரத்தில் பிரதமருக்கு எதிராக வழக்கு தொடரவும் காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.

    இந்த நிலையில் முஸ்லிம்கள் குறித்து பேசியது தொடர்பாக காங்கிரஸ் அளித்த புகார் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டது.

    அவதூறாக பேசியது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகும். இது தொடர்பாக வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்குள் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல் தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பேசியது தொடர்பாகவும் அவர் மீது பா.ஜனதா தேர்தல் ஆணயைத்தில் புகார் அளித்து இருந்தது. பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியதாக தெரிவித்தது.

    ராகுல்காந்தியின் பேச்சும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையம் கருதியது. இதைத்தொடர்ந்து ராகுல்காந்தியும் வருகிற 29-ந் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக பா.ஜனதா, காங்கிரஸ் தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது.

    பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    முக்கிய தலைவர்களின் பேச்சு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    • ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்படி நடவடிக்கை.
    • யாருடைய ஆயுதம் தற்செயலாக செயலிழந்தது என்று குறிப்பிடவில்லை.

    சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் தற்செயலாக துப்பாக்கி வெடித்ததால் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) கான்ஸ்டபிள் உயிரிழந்தார். மற்றொரு காவலர் காயமடைந்துள்ளார்.

    நேற்று இரவு 11 மணியளவில், மாநில காவல்துறையின் இரு பிரிவுகளான டிஆர்ஜி மற்றும் பஸ்தர் ஃபைட்டர் ஆகியவற்றின் கூட்டுக் குழு, பர்சூர் காவல் நிலைய எல்லையில் மாவோயிஸ்ட்டுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தண்டேவாடா-நாராயண்பூர் மாவட்ட எல்லையை ஒட்டிய ஹந்தவாடா மற்றும் ஹிட்டாவாடா கிராமங்களில் ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    ரோந்து பணியின் போது, ஜோக்ராஜ் மற்றும் பர்சுராம் அலாமி ஆகிய இரண்டு டிஆர்ஜி கான்ஸ்டபிள்கள் தற்செயலான துப்பாக்கிச் சூட்டில் தோட்டாக்கள் பாய்ந்து காயம் அடைந்தனர்.

    இதில், ஜோக்ராஜ்கிற்கு அதிக ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்தார். அலாமிமை மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் ராய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    யாருடைய ஆயுதம் தற்செயலாக செயலிழந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

    ×