search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    • இலைகளை பயன்படுத்தி பாதிப்பை சரிபடுத்திவிடலாம்.
    • சருமத்தில் ஏற்படும் வீக்கத்தையும் கட்டுப்படுத்தலாம்.

    கொய்யா பழத்தை போலவே அதன் இலைகளும் உடல் நலனை பாதுகாப்பதில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கொய்யா இலைகளை பயன்படுத்தி பல்வேறு விதமான சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். அதுபற்றி பார்ப்போம்.

    * சருமத்தில் நமைச்சல், ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்பட்டால் கொய்யா இலைகளை பயன்படுத்தி பாதிப்பை சரிபடுத்திவிடலாம். சருமத்தில் ஏற்படும் வீக்கத்தையும் கட்டுப்படுத்தலாம். கொய்யா இலைகளை நன்கு அரைத்து சரும பாதிப்புக்குள்ளான இடங்களில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

    * இயற்கையாகவே சருமத்திற்கு அழகிய நிறத்தை கொடுக்கும் தன்மை கொய்யா இலைகளுக்கு உண்டு. கொய்யா இலைகளை மிக்சியில் அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து முகத்தில் பூசி வரலாம். அவை நன்கு உலர்ந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இரவில் தூங்க செல்லும் முன்பாக இவ்வாறு செய்து வந்தால் சருமம் புது பொலிவு பெறும்.

    * கோடை காலங்களில் சருமம் கருமை நிறத்திற்கு மாறத்தொடங்கும். கொய்யா இலைகளை பயன்படுத்தி கருமை நிற முகத்தோற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். கொய்யா இலைகளை நன்கு அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி வர வேண்டும். அது முகத்தில் உள்ள துளைகளில் படிந்திருக்கும் அழுக்கை அப்புறப்படுத்தி பிரகாசமான தோற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.

    * கொய்யா இலைகளை அரைத்து அடிக்கடி முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் முகப்பரு பிரச்சினையும் எட்டிப்பார்க்காது. சரும சுருக்கங்களை போக்கி வயதான தோற்றத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடும்.

    * அரைத்த கொய்யா இலையுடன் ரோஸ் வாட்டர், முல்தானி மெட்டி கலந்து முகத்தில் தடவி வரலாம். இவ்வாறு தினமும் செய்துவந்தால் சருமத்தில் அழுக்கு படிவதை தவிர்த்துவிடலாம். சருமத்திற்கு கூடுதல் அழகும் சேர்க்கலாம்.

    * பொடுகு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தலையில் தேய்த்து குளித்து வரலாம். இதன் மூலம் முடி உதிர்வு பிரச்சினைக்கும் தீர்வு கண்டுவிடலாம்.

    * எண்ணெய் சருமம் கொண்டவர்கள் கொய்யா இலைகளை பேஸ்ட் செய்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வர வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். தினமும் இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மின்னும்.

    • தலைமுடி வளர்வதற்கு முறையான பராமரிப்பும் ஊட்டச்சத்தும் தேவை.
    • முடியின் வேரை பலப்படுத்தவும் முடி உதிர்வை தடுக்கவும் உதவுகிறது.

    தலைமுடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர்வதற்கு முறையான பராமரிப்பும் ஊட்டச்சத்தும் தேவை. நம்முடைய வீட்டில் உள்ள பொருட்களான கடுகு எண்ணெய், கறிவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தலைக்கு தேய்க்கும் எண்ணெயை எளிதாக தயார் செய்யலாம்.

    தொடர்ந்து 3 முதல் 6 மாதங்களுக்கு ரோஸ்மேரி எண்ணெயை பயன்படுத்தி வந்தால் மினாக்சிடிலில் கிடைக்கும் பயன்கள் அனைத்தும் இதிலும் கிடைக்கும் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. வெந்தயம் தலைமுடி வளர்ச்சியை தூண்டி, உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. மேலும் வெந்தயத்தில் உள்ள புரதம் முடி உதிர்வை குறைத்து புதிய தலைமுடி வளர உதவுகிறது

    தேவையான பொருட்கள்:

    கடுகு எண்ணெய்

    கறிவேப்பிலை

    ரோஸ்மேரி இலை

    வெந்தயம்

    பாதாம் எண்ணெய்

    விளக்கெண்ணெய்

    செய்முறை:

    முதலில் பாத்திரத்தில் கடுகு எண்ணெயை சூடுபடுத்தவும். அதோடு ரோஸ்மேரி, கறிவேப்பிலை, வெந்தயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்கவும். பின்னர் அடுப்பை அனைத்து எண்ணெய் குளிரானதும் பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும். இதில் பாதாம் மற்றும் விளக்கெண்ணெய் சமமான அளவில் சேர்க்க வேண்டும்.

    கடுகு எண்ணெயில் அதிகளவு ஆல்பா ஃபேட்டி ஆசிட் உள்ளது. முடியில் ஈரப்பதத்தை தக்கவைக்கவும், முடியின் வேர் முதல் நுனி வரை நல்ல ஊட்டம் கிடைக்கவும் இந்த ஆசிட் உதவுகிறது.

    வெந்தயம் தலைமுடியை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள புரதம் மற்றும் வைட்டமின் பி3 முடி உதர்வை தடுத்து பொடுகுத் தொல்லையை போக்குகிறது.

    ஆண்டி ஆக்சிடெண்ட் அதிகமுள்ள கறிவேப்பிலை, முடியின் வேரை பலப்படுத்தவும் முடி உதிர்வை தடுக்கவும் உதவுகிறது. இதில் உள்ள பீட்டா கரோடின் உச்சந்தலையை புத்துணர்ச்சி அடைய வைக்கிறது.

    விளக்கெண்ணெயில் ரிசினோலெசிக் ஆசிட் உள்ளது. இதில் உள்ள நுண்ணியிர் எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலைக்கு நன்மை செய்கிறது. தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுத்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

    தலைமுடி ஆரோக்கியமாக இருப்பதற்கு பல வழிகளில் உதவி செய்கிறது பாதாம் ஆயில். வைட்டமின் ஏ, டி மற்றும் இ போன்ற கொழுப்பு கரையும் வைட்டமின்கள் முடிக்கு தேவையான ஊட்டச்சத்தையும் பளபளப்பையும் தருகிறது. மேலும் இதில் மெக்னீசியம், கால்சியம், ஓமேகா 6 மற்றும் ஓமேகா 9 ஃபேட்டி ஆசிட் உள்ளது.

    இத்தகைய இயற்கை எண்ணெய்கள் பொதுவான தலைமுடி பிரச்சினைகளை சரி செய்வதோடு வறட்சியை போக்கி, வழுக்கையை கட்டுப்படுத்தி, முடியின் அடர்த்தி குறையாமல் பார்த்துக் கொள்வதோடு நரை முடி வராமலும் பார்த்துக் கொள்கிறது.

    எனினும் உங்களுக்கு குறிப்பிட்ட தலைமுடி சார்ந்த பிரச்னைகள் இருந்தால், மருத்துவரை நேரடியாக சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. ஏனென்றால் இந்த எண்ணெயில் பயன்படுத்தப்படிருக்கும் சில பொருட்கள், ஒருசிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

    • தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது.
    • மென்மையாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைக்கும்.

    குளிர்ந்த காலநிலையானது அதன் இயற்கையான ஈரப்பதத்தை தோலில் இருந்து அகற்றி, சருமத்தை உலர்ந்ததாகவும் மந்தமானதாகவும் மாற்றும். குளிர்காலத்தின் உறைபனி காற்று, சருமத்தை எளிதில் வறண்டு போக வைக்கின்றன. இருப்பினும், பயப்பட வேண்டாம், சரியான பராமரிப்பு நடைமுறைகள் மூலம், உங்கள் சருமத்தை கடுமையான பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும்.

    உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தை வலுப்படுத்தும் அத்தியாவசிய பேஸ் மாஸ்க்குகளை கண்டறிய வேண்டும் மற்றும் குளிர்கால மாதங்கள் முழுவதும் உங்கள் சருமம் நீரேற்றமாகவும் பிரகாசமாகவும் இருப்பதை உறுதிசெய்யவும் வேண்டும். குளிர்காலம் முழுவதும் உங்கள் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

     தேன் மற்றும் தயிர் மாஸ்க்

    தேனின் ஈரப்பதமூட்டும் பண்புகளை தயிரின் ஊட்டமளிக்கும் நன்மையுடன் இணைக்க வேண்டும். இரண்டு தேக்கரண்டி தயிருடன் ஒரு தேக்கரண்டி தேனை கலக்க வேண்டும். கலவையை உங்கள் முகத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தேன் ஈரப்பதத்தை சேர்க்கிறது, அதே நேரத்தில் தயிர் சருமத்தை மென்மையாக்குகிறது மற்றும் சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டுகிறது. இது மென்மையாகவும் நீரேற்றமாகவும் இருக்கும்.

     அவகேடா மற்றும் ஆலிவ் எண்ணெய் ஃபேஸ் மாஸ்க்

    அரை அவகேடோ பழத்தை மசித்து, ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயுடன் கலக்க வேண்டும். கலவையை உங்கள் முகத்தில் தடவவும், அதை 15-20 நிமிடங்கள் வைத்து பிறகு கழுவ வேண்டும். அவகேடா பழத்தில் இயற்கை எண்ணெய்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அதே நேரத்தில் ஆலிவ் எண்ணெய் தீவிர நீரேற்றத்தை வழங்குகிறது. எனவே இந்த பேஸ் மாஸ்க் வறண்ட சருமத்தை மென்மையாக்க உதவுகிறது.

     வாழைப்பழம் மற்றும் பாதாம் எண்ணெய் ரேடியன்ஸ் மாஸ்க்

    ஒரு பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதில் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்க்க வேண்டும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் விட்டுவிட்டு கழுவ வேண்டும். வாழைப்பழங்கள் வைட்டமின்கள் மற்றும் ஈரப்பதத்துடன் நிரம்பியுள்ளன. மேலும் பாதாம் எண்ணெய் உங்கள் சருமத்திற்கு கதிரியக்க பிரகாசத்தை சேர்க்கிறது. மந்தமான குளிர்கால சருமத்திற்கு உயிர் சக்தியை மீட்டெடுக்க இந்த மாஸ்க் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

    • பருக்கள் வந்தால் அதனை தொடாதீர்கள்.
    • கொலாஜென் செல்களை உயிர்பிக்க ஆவி பிடிக்க வேண்டும்.

    சருமம் பொலிவாகவும், அழகாகவும் இருக்க அனைவரும் விரும்புவோம். ஆனால் முக அழகை கெடுக்கும் ஓர் விஷயம் பருக்கள். பருக்கள் எரிச்சலூட்டுவதாக இருக்கும்.

    பருக்கள் வந்தால் அதனை தொடாதீர்கள், கிள்ளாதீர்கள், கிழிக்காதீர்கள். அப்படி செய்தால் தோல்களில் உள்ள கொலாஜென் என்னும் செல்கள் இறந்து அந்த இடத்தில் பெரிய குழி அல்லது அது தழும்பாக மாறிவிடும். கொலாஜென் செல்களை உயிர்பிக்க ஆவி பிடிக்க வேண்டும். பின்னர் முகத்தில் உள்ள சதைகளை குறைந்தது 5 நிமிடங்களாவது மசாஜ் செய்து இலகுவாக செய்ய வேண்டும்.

     தக்காளி, முல்தானி மட்டி, ரோஸ் வாட்டர் ஆகிய மூன்றையும் சேர்த்து மிக்சி ஜாரில் போட்டு அரைத்து அந்த கலவையை தினமும் 30 நிமிடம் தடவி வந்தால் நிச்சயமாக 30 நாட்களுக்குள் முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் பருக்கள் மறைந்துவிடும்.

     தக்காளியில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் முகத்தில் உள்ள எண்ணெய் தன்மையை கண்ட்ரோல் செய்யும். அதுமட்டுமல்லாது ஆன்டி ஏஜிங் கொலாஜென் செல்கள் உயிர்பிக்க வழிவகுக்கும்.

    தினமும் சீரகம் கலந்த தண்ணீர் 4 லிட்டர் கண்டிப்பாக அருந்த வேண்டும். ரத்த சுத்திகரிப்புக்காக தினமும் ஏ.பி.சி. ஜூஸ் பருக வேண்டும். ஐஸ் கியூப் கொண்டு தினமும் 2 நிமிடமாவது மசாஜ் செய்ய வேண்டும்.அவ்வாறு செய்யும் போது முகத்தில் உள்ள பருக்கள் மறைந்து ஒரு பளபளப்புத்தன்மை உருவாகும்.

    • கண்களின் மேல் வெள்ளரி'யை வைத்துக்கொள்வது சிறந்தது.
    • முக சுருக்கங்களை குறைக்க தக்காளி ஃபேஷியல் உதவுகிறது.

    வசீகர முக அழகிற்கு இயற்கையாக விளையும் பொருட்கள் பயன்தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    பப்பாளிப்பழம், செலவு இல்லா பேஷியலை தரும். பப்பாளிப் பழத்தை கூழ் ஆக்கி, முகத்தில் பூசி, 15 நிமிடத்துக்கு பிறகு வெந்நீரில் முகத்தைக் கழுவினால் முகத்தை பளிச்சிட வைக்கும். வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் பப்பாளி தோலின் அடிப்பகுதியை தொடர்ந்து பூசினால் சருமம் நீரோட்டம் பெற்றுப் பொலிவடையும்.

    அதேபோல வெள்ளரி காய்களை நறுக்கி கண்களில் வைத்து கட்டினால், கண்கள் பிரகாசம் அடையும், கண் எரிச்சலும் குறையும். கருவளையம் மறையும்.

    கணினி முன்னால் அதிக நேரம் குடியிருக்கும் அனைவரும் `கண்களின் மேல் வெள்ளரி'யை வைத்துக்கொள்வது சிறந்தது. விளக்கெண்ணெயையும் தடவலாம். நல்ல தூக்கமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் கருவளையத்தைப் போக்குவதற்கான சிறந்த ஆயுதங்கள்.

    அடுத்ததாக, கற்றாழை கூழை முகத்தில் தொடர்ந்து தேய்த்து சிறிது நேரம் இருப்பதால் பருக்கள் வராமல் தடுக்கலாம். கிருமிநாசினியான கற்றாழை, தோல் சுருக்கங்களை தடுக்கிறது. முகத்தில் எண்ணெய் பசை சருமத்தை கொண்டவர்களுக்குக் கற்றாழை முகப்பூச்சு சிறந்த தேர்வு. இன்றும் கிராமத்து சிறுவர்களின் இயற்கை ஒப்பனை பொருள் குளுகுளு கற்றாழைதான்.

    இதுதவிர, சந்தன சாந்தை நெற்றியில் தடவும் வழக்கம், சங்க கால மக்களிடம் இருந்துள்ளது. முகத்தை மெருகேற்ற நம் மரபோடு பயணித்த சந்தனத்தை, எந்த சிந்தடிக் கிரீம்களாலும் மிஞ்ச முடியாது.

    முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கவும் தடுக்கவும் தக்காளி பேஷியல் உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் தோலுக்கு ஊட்டம் தருகிறது.

    நிறைய தண்ணீர் அருந்துவது மேனியை அழகாக்கும் என்பது காலம்காலமாகத் தொடர்ந்துவரும் அழகு குறிப்பு. முகத்தை நிரந்தரமாக அழகுபடுத்த வெளிப்பூச்சோடு சேர்த்து பச்சை காய்கறிகள், கொய்யா, நெல்லி, மாதுளை, அத்தி, சாத்துக்குடி, திராட்சை போன்ற பழ வகைகளை உட்கொள்ள வேண்டும். அதிகரிக்கும் மன அழுத்தம் முகப் பொலிவைப் பெருமளவு பாதிக்கும். மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதும், அழகை மேம்படுத்துவதற்கான முக்கிய உத்தி.

    • தலைமுடியை தினமும் பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.
    • ஹேர்பின்கள் தலைமுடியின் வெளிப்புற அடுக்கை சேதப்படுத்தும்.

    சருமத்தைப் போலவே தலைமுடியையும் தினமும் பராமரிக்க வேண்டியது அவசியமாகும். அலங்காரத்துக்காக கிளிப்புகள், ஹேர்பின்கள் போன்றவற்றை பயன்படுத்தும்போது தலைமுடியும். அதன் வேர்க்கால்களும் சேதமடைய நேரிடலாம். இதனால் தலைப்பகுதியில் எரிச்சல், காயம், வலி உண்டாகக் கூடும். இதுமட்டுமல்லாமல் தலைமுடி உடைவது. உதிர்வது போன்ற பிரச்சினைகளும் உண்டாகும்.

    கரடுமுரடான ஹேர்பின்கள் தலைமுடியின் வெளிப்புற அடுக்கை சேதப்படுத்தும். கிளிப்புகள், கொண்டை ஊசிகள் அல்லது கொக்கிகளை தொடர்ச்சியாக பயன்படுத்தும்போது அவை தலைமுடியின் வேர்க்கால்களை வலுவிழக்கச் செய்யும். முனைப்பகுதியில் ரப்பர் பூச்சு கொண்ட ஹேர்பின்கள் மற்றும் கிளிப்புகளை பயன்படுத்துவதன் மூலம் முடியின் வேர்க்கால்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும்.

    கிளிப்புகளை இறுக்கமாக அணிவதன் காரணமாக உச்சந்தலையில் ரத்த ஓட்டம் பாதிக்கும். இதன் மூலம் கூந்தல் சேதம் அடைவதோடு, அடிக்கடி தலைவலியும் உண்டாகும். தூங்கச் செல்வதற்கு முன்பு தலைமுடியில் அணிந்திருக்கும் ஹேர்பின்கள், கொண்டை ஊசிகள் ஆகியவற்றை அகற்றுவது முக்கியமானதாகும். இல்லாவிடில் அவற்றில் உள்ள கூர்மையான பாகங்கள் கூந்தலை சேதப்படுத்தும். தலைமுடியை தளர்வாக பின்னிக்கொண்டு தூங்குவது நல்லது.

    தலைமுடியை சுருளச் செய்வதற்காக கிளிப்புகள் பயன்படுத்துபவர்கள், அவற்றை ஹேர் டிரையர் மூலம் அதிகமாக சூடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதன் அதிகப்படியான வெப்பம். தலைமுடியை சேதம் அடையச் செய்யும்.

    எலாஸ்டிக் பேண்டுகள் பார்ப்பதற்கு மென்மையானவையாகத் தெரிந்தாலும், அவற்றை அணிவதன் மூலமாகவும் தலைமுடி பாதிப்படைய நேரிடலாம். எலாஸ்டிக் பேண்டுகள் அணியும்போது தலைமுடி இறுக்கமாக இழுக்கப்படும். இதன்மூலம் முடியின் வேர்க்கால்கள் சேதமடைவது, கூந்தல் உதிர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    நேரடியாக எலாஸ்டிக் பேண்டுகளை கூந்தலில் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இவற்றை கழற்றும்போது தலைமுடி இழைகளை அறுந்து சேதப்படுத்தும். இவற்றுக்கு பதிலாக துணியின் உள் பகுதியில் வைத்து தைக்கப்பட்ட எலாஸ்டிக் பேண்டுகளை உபயோகிக்கலாம்.

    தலைமுடியை இறுக்கமாக இழுத்து சீவுவதையோ, பின்னுவதையோ தவிர்க்க வேண்டும். ஹேர் பேண்டுகளை தலைமுடியில் இறுக்கமாகக் கட்டுவது. முடியின் இழைகளை சிதைத்து, பலவீனம் அடையச் செய்யும்.

    • தலைமுடியை தினமும் முறையாக சீவுவது அவசியம்.
    • தலைமுடி வறட்சி அடைவதை தடுத்து ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.

    தினமும் தவறாமல் பல் துலக்குவது போல தலைமுடியை தினமும் முறையாக சீவுவது அவசியம். இந்த எளிய விஷயம் நம் தலைமுடிக்கு பல நன்மைகளை அளிக்கிறது. எனவே ஆரோக்கியமான முடியை பெற நீங்கள் தினமும் பின்பற்ற வேண்டிய முக்கியமான ஒரு முடி பராமரிப்பு வழக்கம் தலை முடியை சீவுவது. வறண்ட முடி உள்ளவர்கள் அல்லது அதிகமானமுடி உதிர்தலை சந்திப்பவர்கள் கூடுதல் முடி இழப்பை தவிர்ப்பதற்காக சீப்பு பயன்படுத்த தயங்குவார்கள். ஆனால் தலை முடியை சீவ சீப்பு பயன்படுத்துவது ஒரு சுய பாதுகாப்பு நடைமுறை மட்டுமல்ல பல அறிவியல் நன்மைகளையும் கொண்டுள்ளது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.

    காலை ஒருமுறை, இரவு தூங்கும் முன் ஒருமுறை என சராசரியாக நாளொன்றுக்கு 2 முறை தலைமுடியை முறையாக சீவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது நபருக்கு நபர் மாறுபடும். நீண்ட முடி கொண்டவர்கள் சிக்கு மற்றும் முடி உடைவதை தடுக்க ஒரு நாளைக்கு குறைந்தது 3 முறை தலை சீவ அறிவுறுத்தப்படுகிறது.

    கூந்தலைப் பின்னி ஜடை போடுவதன் மூலம் முடிகளில் சிக்கல் ஏற்படுவதைத் தடுக்க முடியும். கூந்தலைப் பின்னுவதன் மூலம் இயற்கையான எண்ணெய் பசையையும், ஈரப்பதத்தையும் தக்கவைத்து கூந்தல் வறட்சி அடைவதை தடுக்கலாம்.

    தலைமுடியை விரித்த நிலையிலேயே வைத்திருப்பதால் சூரியஒளி, காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுகளால் முடிக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படும். கூந்தலைப் பின்னி ஜடை போடுவதன் மூலம் இத்தகைய பாதிப்புகளை குறைக்க முடியும். கூந்தலை அலைபாயவிடாமல் கட்டி வைப்பதன் மூலம், தலைமுடியின் முனையில் வெடிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    சுருள்முடி கொண்டவர்கள் கூந்தலை பின்னிக்கொள்வதால் தலைமுடி வறட்சி அடைவதைத் தடுத்து ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.

    தினமும் தவறாமல் தலை சீவி வருவது பழைய முடி, இறந்த சரும செல்கள், ஹேர் ப்ராடக்டின் மிச்சங்கள், அழுக்கு, முடி மற்றும் உச்சந்தலையில் உள்ள மற்ற படிந்துள்ள தேவையற்றவற்றை சுத்தம் செய்ய உதவுகிறது.

    உச்சந்தலையையும் கூந்தலையும் சுவாசிக்க அனுமதிக்கிறது மற்றும் பொடுகு நிறைந்த முடியை புதுப்பிக்கிறது. தலைமுடியை தினமும் சீவுவது முடியை பளபளப்பாக வைக்க, அடர்த்தியை அதிகரிக்க, ஆரோக்கியமாக மற்றும் புத்துணர்ச்சியுடனும் பராமரிக்க உதவுகிறது.

    • பாதாம் எண்ணெய் சருமத்திற்கு பிரகாசம் சேர்க்கும்.
    • தேன் சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் பண்புகளை கொண்டது.

    குளிர்காலத்தில் சூழ்ந்திருக்கும் பனியின் ஆதிக்கம் சருமத்தை எளிதில் வறண்டுபோகச் செய்துவிடும். சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை அபகரித்து சருமத்தை உலர்வாகவும், மந்தமாகவும் மாற்றிவிடும். ஒரு சில ஃபேஸ் மாஸ்க்குகளை உபயோகித்து சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மிளிரச் செய்யலாம். அத்தகைய ஃபேஸ் மாஸ்க்குகள் உங்கள் பார்வைக்கு...

     வாழைப்பழம் - பாதாம் எண்ணெய்:

    பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதனுடன் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து பிசைய வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர விட்டு பின்பு கழுவி விடலாம். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின்களும், ஈரப்பதமும் சருமத்திற்கு பாதுகாப்பு கவசமாக அமையும். பாதாம் எண்ணெய் சருமத்திற்கு பிரகாசம் சேர்க்கும். குளிர்காலத்தில் ஏற்படும் மந்த நிலையை போக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்ட இந்த மாஸ்க் சிறந்த தேர்வாக அமையும்.

     தேன் - தயிர் மாஸ்க்:

    தேன் சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் பண்புகளைச் கொண்டது. தயிர் சருமத்தை மென்மையாக்கும். புத்துணர்ச்சியையும் அளிக்கும். இரண்டு டேபிள் ஸ்பூன் தயிருடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால் போதும். சருமம் பொலிவுடன் மிளிரத் தொடங்கும்.

     ஓட்ஸ் - பால்:

    இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்சை மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு பால் கலந்து முகத்தில் வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் உலர விட வேண்டும். ஓட்ஸ் இறந்த சரும செல்களை நீக்கும். பால் சருமத்தை ஈரப்பதமாக்கும். நன்கு உலர்ந்ததும் சருமத்தை நீரில் கழுவி விடலாம். இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தை மென்மையாக்குவதோடு பளபளப்பையும் கொடுக்கும்.

     அவகேடா - ஆலிவ் எண்ணெய்:

    அவகேடா பழத்தை பாதியாக வெட்டி, ஒரு துண்டை மட்டும் நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து சருமத்தை நீரில் கழுவி விடலாம். அவகேடா பழத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களும், வைட்டமின்களும், ஆலிவ் எண்ணெய்யும் சருமத்திற்கு ஈரப்பதமூட்டும். வறண்ட சருமத்தை மென்மையாக்க உதவும்.

     வெள்ளரி - கற்றாழை:

    ஒரு வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் உலர விட வேண்டும். வெள்ளரி சருமத்திற்கு நீரேற்றத்தை வழங்கும். கற்றாழை சருமத்திற்கு மிருது தன்மையை அளிக்கும். புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

    • சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கும்.
    • சருமத் துளைகளில் ஏற்படும் நோய்த்தொற்றை தடுக்கின்றன.

    முக அழகை மெருகேற்றவும், சருமத்தின் இளமை தன்மையை அதிகரிக்கவும் பல்வேறு அழகு பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துகிறோம். அவற்றில் இருக்கும் ரசாயன மூலக்கூறுகள், நாளடைவில் சருமத்துக்கு பாதிப்பை உண்டாக்குகின்றன. சரும பராமரிப்பை பொறுத்தவரை, இயற்கை நமக்கு ஏராளமான பொருட்களை வழங்கியுள்ளது. அந்த வகையில் எளிய முறையில் சருமத்தின் பொலிவை அதிகரித்து, முக அழகை மேம்படுத்த வாதுமை (வால்நட்) எண்ணெய் உதவுகிறது.

    வாதுமையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் நிறைந்திருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் ஆக்சிஜனேற்ற மூலக்கூறுகள் சருமத்தை பிரகாசமாக்கும் தன்மை கொண்டவை. அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகள் நிறைந்த வாதுமை எண்ணெய் பல நூற்றாண்டுகளாகவே சரும பராமரிப்புக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படும்.

    வாதுமை எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும். புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள முடியும்.

     வயது முதிர்ச்சியின்போது ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தின் விளைவாக சருமத்தில் சுருக்கங்களும், கோடுகளும் உண்டாகின்றன. வாதுமை எண்ணெய்யில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்டுகள் பிரீராடிக்கில்களை நடுநிலைப்படுத்தி செல்கள் சேதமடைவதைத் தடுக்கின்றன. இதன்மூலம் சருமம் முதிர்ச்சி அடையும் செயல்பாடு தாமதமடையும்.

    வாதுமை எண்ணெய்யில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், அதிக உணர்திறன் கொண்ட சருமத்தினருக்கு பல நன்மைகளை தருகின்றன. தோல் அழற்சி, அரிப்பு போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் அந்த இடங்களில் வாதுமை எண்ணெய்யை மேற்பூச்சாக பூசி வரலாம்.

    வாதுமை எண்ணெய்யின் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், சருமத் துளைகளில் ஏற்படும் நோய்த்தொற்றை தடுக்கின்றன, முகப்பருக்களை நீக்குகின்றன. இயற்கையான சரும நிறத்தை மேம்படுத்துகின்றன.

    சருமத்தில் ஆழமாக ஊடுருவும் திறன் கொண்ட வாதுமை எண்ணெய் புதிய செல்களின் உற்பத்தியை தூண்டும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கும்.

    • அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்புத் தன்மையையும் நீக்கும்.
    • மஞ்சள் கலந்து முகத்தில் தடவிவர முடிகள் வளர்வது தடைபடும்.

    பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பதோடு சரும பொலிவையும் மெருகூட்டும். முகத்தில் படியும் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்புத் தன்மையையும் நீக்கும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி மென்மையையும், பொலிவையும் பெற்றுத் தரும்.

    * முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவை கூட்டும்.

    * பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிளிரும்.

    * நன்கு பழுத்த பப்பாளி விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் நான்கு ஸ்பூன் தேன், சிறிது கிளிசரின் சேர்த்து கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள பகுதி தவிர மீதி இடங்களில் பற்றுப்போட்டு, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவிவர, முகம் பிரகாசிக்கும்.

     * பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து, அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறிவிடும்.

    * ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை சாறு, சிறிது சீனி கலந்து 30 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தேகம் மினுமினுக்க ஆரம்பித்துவிடும்.

    * பப்பாளி பழத்தை மஞ்சள் தூளுடன் கலந்தும் பயன்படுத்தலாம். சில பெண்களுக்கு முகத்தில் முடி முளைத்துக்கொண்டிருக்கும். பப்பாளி பழத்தை கூழாக்கி அதனுடன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவிவர வேண்டும். அந்த கலவை நன்றாக உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் நாளடைவில் முடிகள் வளர்வது தடைபடும்.

    • கைகளில் உள்ள கருமையை படிப்படியாகப் போக்கலாம்.
    • பப்பாளியில் சரும கருமையைப் போக்கும் பொருள் உள்ளது.

    சிலரது முகம் பார்ப்பதற்கு பளிச்சென்று வெள்ளை நிறமாக இருக்கும். ஆனால், கை கால்கள் மற்றும் கழுத்து போன்றவை அதற்கு எதிர்மாறாக இருக்கும். காரணம், நாம் வெயிலில் அதிகமாக செல்லும்போது, நாம் ஆடை அணிந்திருக்கும் பகுதிகள் தவிர மற்ற இடங்களில் வெயில் படுவதால் கருப்பாக தெரிகிறது.

    ஆனால், முகத்துக்கு கிரீம், பேஷியல் என அப்ளை செய்து கொஞ்சம் வெள்ளையாக்கி விடுகிறோம். அதே, கவனத்தை கொஞ்சம் கைகளிலும் செலுத்தினால் கருப்பாக இருக்கும் கைகளை வெள்ளையாக்கி விடலாம். என்ன செய்யலாம்?

     1. தயிருடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து, அவற்றை மாலை வேளைகளில் கைகளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமையை படிப்படியாகப் போக்கலாம்.

    2. தக்காளியை வெட்டி, அதனை கருமையாக உள்ள கைகளில் தேய்த்து 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் அதில் உள்ள அமிலம் கைகளில் உள்ள கருமையை மறைக்கும்.

    3. பாதாமை இரவில் படுக்கும்போது சிறிது பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பால் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இச்செயலை தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு, கைகளும் மென்மையாக இருக்கும்.

    4. பப்பாளியில் சரும கருமையைப் போக்கும் பொருள் உள்ளது. எனவே, பப்பாளியை அரைத்து அந்த பேஸ்ட்டை கைகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வர, கைகள் வெள்ளையாகும்.

     5. மஞ்சள் தூளில் சரிசம அளவில் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கைகளில் தடவி உலர வைத்து கழுவினால், வெயிலால் கருமையடைந்த கைகளை வெள்ளையாக்கலாம்.

    6. கற்றாழை ஜெல்லை தினமும் கைகளில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், கருமையைப் போக்கி கைகளின் நிறத்தை அதிகரிக்கலாம்.

    • பெண்கள் தங்களது முகத்தை அழகாக காட்டுவதற்கு முயல்வார்கள்.
    • தேன் பயன்படுத்தி வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஸ் பேக்.

    முக அழகை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. எப்போதும் பிரகாசமாக வைத்துக்கொள்வதற்காக அழகு நிலையங்களுக்குச் செல்வது என்பது தற்போது அனைத்து தரப்பட்ட பெண்களிடம் மிகவும் பிரபலமாகி உள்ளது. அதோடு மட்டுமின்றி வீட்டிலேயே சில ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்தியும் பெண்கள் தங்களது முகத்தை அழகாக காட்டுவதற்கு முயல்வார்கள். இதுபோன்ற மேற்கொள்பவர்களாக நீங்கள்? இனி எந்த சிரமமும் வேண்டாம் வீட்டில் உள்ள தேன் உள்ளிட்ட சில பொருள்களைப் பயன்படுத்தி சருமத்தை மிருதுவாக்க முடியும் தெரியுமா?

    ஆம் தேனில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், நியாசின், வைட்டமின் பி 6, வைட்டமின் சி, பிரக்டோஸ், தாதுக்கள், அமிலங்கள் என முக்கிய ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தோடு சருமத்தையும் பாதுகாப்பதற்கு உதவியாக உள்ளது. தேனைப் பயன்படுத்தி வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஸ் பேக் என்பது குறித்து அறிந்துக் கொள்வோம்…

    தேவையான பொருட்கள்

    மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன்

    காபி தூள்- ஒரு ஸ்பூன்

    தேன் ஒரு ஸ்பூன்

    கடலை மாவு- ஒரு ஸ்பூன்

    பால்- 2 ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள்தூள், காபி தூள், கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் பால் மற்றும் தேன் கலந்து ஒரு பேஸ்ட் போல செய்துகொள்ள வேண்டும்.

    இந்த ஃபேஸ் பேக்கை முகத்தை சுத்தம் செய்துவிட்டு பின்னர் முகத்தில் 10-ல் இருந்து 15 நிமிடம் வைத்திருந்து பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவருவதன் மூலம் முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் இருப்பதை நீங்களே உணருவீர்கள்.

    ×