search icon
என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே 10 நிமிடத்தில் சூப்பரான ஸ்நாக்ஸ் செய்யலாம். இன்று பிரெட் சீஸ் பைட்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரட் - 4
    சீஸ் துருவல் - தேவையான அளவு
    சோள மாவு - 3 ஸ்பூன்
    பிரெட் தூள் - 1/2 கப்
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    பிரெட்டின் ஓரங்களை வெட்டி விட்டு முக்கோண வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

    அடுத்து அதன் மீது துருவிய சீஸை தூவி, அதன் மேல் மற்றொரு பிரெட்டை வைக்கவும்.

    சோள மாவில் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    சீஸ் வைத்த பிரெட் துண்டை சோள மாவில் நனைத்து பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த பிரெட்டை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான பிரெட் சீஸ் பைட்ஸ் ரெடி.
    தோசை, நாண், புல்கா, பூரி, இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு பட்டாணி குருமா. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - 2
    பச்சை பட்டாணி - கால் கப்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    உப்பு - தேவைக்கேற்றவாறு

    அரைக்க:

    தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
    கசகசா - 1 டீஸ்பூன்
    பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
    முந்திரிப்பருப்பு - 3
    பூண்டுப்பற்கள் - 2
    இஞ்சி - 1 துண்டு
    பச்சை மிளகாய் - 2

    தாளிக்க:

    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    பட்டை - ஒரு சிறு துண்டு
    கிராம்பு - 2

    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    பட்டாணியையும் வேக வைத்துக் கொள்ளவும்.

    கொத்தமல்லி தழை, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    தேங்காய்த்துருவல், கசகசா, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பு, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்றாக அரைத்தெடுக்கவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின்னர், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியவுடன், தக்காளியைச் சேர்த்து அத்துடன் உப்பு, மஞ்சள் தூளையும் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக மசிந்தவுடன் சாம்பாரி பொடியைச் சேர்த்து கிளறவும்.

    பின்னர் அதில் வேக வைத்த உருளைக் கிழங்கு, பட்டாணியைச் சேர்த்து கிளறி விடவும்.

    அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து பிரட்டி விடவும்.

    பின்னர் அதில் கிழங்கு மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்க்கவும். நன்றாக கிளறி விட்டு, மூடி வைத்து கொதிக்க விடவும். ந

    ன்றாக கொதித்தவுடன், இறக்கி வைத்து கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாற்றை சேர்த்து மீண்டும் ஒரு முறை கிளறி இறக்கவும்.

    இப்போது சூப்பரான உருளைக்கிழங்கு பட்டாணி குருமா ரெடி.
    குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ‘சீஸ் ஸ்டிக்ஸ்' தயாரிக்கும் முறை பற்றி பார்ப்போம். கலக்கலான இந்த ரெசிபியை 10 நிமிடங்களில் செய்யலாம்.
    தேவையான பொருட்கள்:

    சீஸ் துண்டுகள் - 5
    சோளமாவு - 4 தேக்கரண்டி
    மைதா - 4 தேக்கரண்டி
    சமையல் சோடா - ஒரு சிட்டிகை
    மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி
    ரொட்டித்தூள் - ஒரு கப்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மைதா மாவு, சமையல் சோடா, மிளகாய்த் தூள், இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி ரொட்டித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

    அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இப்போது அந்தக் கலவையில் சீஸை சேர்த்து பிசைந்து, ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே வைத்துவிடவும்.

    பிறகு அந்தக் கலவையை நீளமான துண்டுகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். அதை ரொட்டித்தூளில் நன்றாகப் பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், அதில் நீளமாக உருட்டி வைத்த துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுங்கள்.

    இப்போது சீஸ் ஸ்டிக்ஸ் தயார். அதை சூடாக பரிமாறவும்.
    அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச்சத்து என அனைத்துச் சத்துக்களுமே அதிகம்கொண்ட தானியம் கம்பு. இன்று கம்பு சாம்பார் சாதம் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு - ஒரு கப்
    துவரம்பருப்பு - அரை கப்
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
    மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
    புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
    உப்பு தேவையான அளவு

    தாளிக்க:

    கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
    தேங்காய் எண்ணெய் தேவையான அளவு

    செய்முறை:

    புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்.

    குக்கரில் கம்பு, துவரம்பருப்பு சேர்த்து, மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மூடி 4 விசில்விட்டு இறக்கவும்.

    வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வேர்க்கடலை தாளிக்கவும்.

    அதனுடன் புளிக்கரைசல், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

    பிறகு, வேகவைத்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.
    ரவையில் உப்புமா, தோசை மட்டுமின்றி விதவிதமான பலகாரங்களையும் தயார் செய்து ருசிக்கலாம். ரவையை கொண்டு சூப்பரான ஸ்நாக்ஸ் சீடை செய்வது பற்றி பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - 2 கப்
    ரவை - கால் கப்
    ஜவ்வரிசி - அரை கப்
    பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
    புளித்த தயிர் - ஒரு கப்
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    எள் - ஒரு டேபிள்ஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    அரிசியை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி நிழலில் உலர்த்தவும். ஓரளவு ஈரப்பதத்துடன் இருக்கும்போது மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். சிறு தீயில் கடாயை வைத்து அதில் மாவை கொட்டி வறுத்தெடுக்கவும். பின்பு ஆறவைத்து சலித்துக்கொள்ளவும்.

    ஜவ்வரிசி, ரவையுடன் தயிரை ஊற்றி ஐந்து மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.

    நன்கு ஊறியதும் அதனுடன் சலித்த மவை சேர்த்து கிளறவும்.

    பின்னர் அதனுடன் மிளகாய் விழுது, பெருங்காயத்தூள், எள், உப்பு சேர்த்து பிசைந்து சிறு உருண்டை களாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான ரவா சீடை ரெடி.
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கன் வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    எலும்பு நீக்கிய கோழி இறைச்சி - 500 கிராம்
    உருளைக்கிழங்கு - 250 கிராம்
    இஞ்சி, பச்சை மிளகாய் - தலா 10 கிராம்
    வெங்காயம் - 100 கிராம்
    எண்ணெய் - 100 மில்லி
    ரொட்டித்தூள் - 50 கிராம்
    கறிவேப்பிலை - தேவைக்கு
    உப்பு, மிளகுதூள் - தேவையான அளவு

    செய்முறை:

    இறைச்சியை நன்கு சுத்தம் செய்து அரைத்து கொள்ள வேண்டும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை நறுக்கி கறிவேப்பிலையுடன் சேர்த்து எண்ணெயில் வதக்கவும்.

    அடுத்து அதில் உருளைக் கிழங்கு, அரைத்த இறைச்சி, மிளகுதூள், உப்பு ஆகியவற்றை அவற்றுடன் சேர்த்து அனைத்தும் நன்றாக கலந்தவுடன் இறக்கி ஆற வைத்து உருண்டை பிடித்து வட்டமாக தட்டி வைத்து கொள்ள வேண்டும்.

    ரொட்டித் தூளை அதன் மீது தூவவும்.

    பின்னர் தோசை கல்லில் எண்ணெய் விட்டு தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு இருபுறமும் சிவக்க வறுத்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான சிக்கன் கட்லெட் ரெடி.
    சிக்கன் ரோலை ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் சிக்கன் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    எலும்பு நீக்கிய கோழி இறைச்சி - 500 கிராம்
    மைதா - 400 கிராம்
    சோயாச்சாறு, மிளகாய் சாஸ் - தலா ஒரு பெரிய தேக்கரண்டி
    கேரட், குடைமிளகாய்- தலா 1
    மிளகுத்தூள், எண்ணெய், நீர், உப்பு போன்றவை தேவையான அளவு
    வெங்காயம் - மூன்று

    செய்முறை:

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி சோயாச்சாறு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

    குடைமிளகாயை நீளவடிவில் வெட்டவும்.

    கேரட்டை சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வறுத்து அதில், கேரட், குடைமிளகாயை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் வேக வைத்த சிக்கனை போட வேண்டும்.

    அடுத்து மிளகாய் சாஸ், உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றையும் உடனே சேர்த்திட வேண்டும். இவைகள் அனைத்தையும் நன்கு கலந்து 5 முதல் 6 நிமிடம் வேகவைத்து அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

    மைதாவை நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    எண்ணெய் அல்லது உருக்கிய வெண்ணெய்யை ஒரு பக்கத்தில் தடவி ஒன்றின் மீது ஒன்றாக மூன்று அடுக்குகளாக வைத்து அடுக்கி, நன்கு அழுத்தி உருட்ட வேண்டும்.

    தோசைக்கல்லை சூடாக்கி, அதை வைத்து இருபுறமும் புரட்டிப்போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு அதை வெளியில் எடுத்து மூன்று அடுக்குகளையும் பிரித்தெடுக்க வேண்டும். ஒவ்வொன்றின் மத்தியிலும் இறைச்சி கலவையை வைத்து உருட்டி பக்கவாட்டு முனைகளை மூடிவிடவும். அதை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக வறுத்து, சூடாக தக்காளி அல்லது மிளகாய் சாஸ் கலந்து சுவைக்கலாம்.

    தற்போது இவை பெருமளவு விற்பனையாகின்றன. இவைகளை தயார் செய்து விற்கும் தொழிலில் நிறைய பெண்கள் ஈடுபடுகிறார்கள்.
    வெங்காய பக்கோடா, மெது பக்கோடா, பாகற்காய் பக்கோடா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வாழைப்பூவில் எப்படி பக்கோடா செய்து என்று பார்க்கலாம் வாங்க...
    தேவையானவை:

    வாழைப்பூ - 1
    வெங்காயம் - 1 (நறுக்கவும்)  
    மோர் - 1 கப்
    கடலை மாவு - 1 கப்
    மிளகாய்த் தூள் - தேவைக்கு
    சோள பிளவர் மாவு- 1 டேபிள்ஸ்பூன்
    நறுக்கிய கறிவேப்பிலை - தேவைக்கு
    எண்ணெய், தண்ணீர் - தேவைக்கு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வாழைப்பூவை சுத்தப்படுத்தி பொடிதாக நறுக்கி மோரில் போட்டு அலசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதனுடன் கடலை மாவு, சோள பிளவர் மாவு, மிளகாய் தூள், வெங்காயம், கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக மாவு கலவையை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும்.

    சூப்பரான வாழைப்பூ பக்கோடா ரெடி.
    வாழைக்காய், பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி என்று வெரைட்டியாக சாப்பிட்ட உங்களுக்கு இன்று பீட்ரூட் வைத்து பஜ்ஜி செய்வது எப்படி என்று சொல்லி தருகிறேன் வாங்க...
    தேவையான பொருட்கள்:

    கடலை மாவு - 1 கப்,
    பீட்ரூட் - 100 கிராம்
    அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்,
    காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்,
    பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்,
    பெருங்காயம் - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவிற்கு
    எண்ணெய் - தேவையான அளவிற்கு.

    செய்முறை:


    பீட்ரூட்டை தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டிகொள்ளவும்.

    பீட்ரூட்டை வில்லைகளாக நறுக்கி தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் சிறிது நேரம் போட்டு எடுக்கவும் (ஈரப்பதம் இல்லாமல் இருந்தால்தான் பஜ்ஜி எண்ணெய் குடிக்காது).

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, காஷ்மீரி மிளகாய்த்தூள், பேக்கிங் சோடா, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பீட்ரூட் வில்லைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சுவையான பீட்ரூட் பஜ்ஜி ரெடி.
    `நன்னாரி சர்பத், எலுமிச்சை சர்பத் கேள்விப்பட்டிருக்கிறோம், இது என்ன `குலுக்கி சர்பத்’.. இன்று இந்த குலுக்கி சர்பத்தை வீட்டிலேயே எளியமுறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சப்ஜா விதைகள் - 1 ஸ்பூன்,
    எலுமிச்சை பழம் - 2,
    பச்சை மிளகாய் - 2,
    புதினா இலைகள் - 10 லிருந்து 15,
    உப்பு - 2 சிட்டிகை,
    சர்க்கரை - 2 ஸ்பூன்,
    சோடா - 1 கப்
    ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.

    செய்முறை

    ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகளை போட்டு, 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள்.

    எலுமிச்சம் பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். 1 எலுமிச்சம் பழத்தை 8 துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

    இப்போது இதை எல்லாம் போட்டு கலக்குவதற்கு, அதாவது மூடி போட்டு குலுக்குவதற்கு ஒரு ஜக்கை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தயாராக இருக்கும் ஜக்கில் சப்ஜா விதை, வெட்டி வைத்திருக்கும் பச்சை மிளகாய், எலுமிச்சை பழத்துண்டுகள், புதினா, உப்பு, சர்க்கரை எல்லாப் பொருட்களையும் ஒன்றாக போட வேண்டும். 1/2 எலுமிச்சம் பழ சாறை இதில் பிழிந்து விடுங்கள்.

    இறுதியாக தேவையான அளவு ஐஸ் கியூப் போட்டுக்கொள்ளுங்கள். கடைசியாக அதில் சோடாவை ஊற்றி ஜாக்கின் மேலே மூடி போட்டு விட்டு, நன்றாக குலுக்க வேண்டும். அதாவது சர்க்கரை கரையும் வரை குலுக்க வேண்டும். அதன் பின்பு இதை வடிகட்ட கூடாது. அப்படியே கிளாஸில் ஊற்றி குடித்து பாருங்கள். வெயிலுக்கு உப்பு காரம் சர்க்கரை எல்லாம் சேர்ந்த ஜில்லுனு குலுக்கி சர்பத் ரெடி!
    மாம்பழ சீசன் தொடங்கி விட்டது. இன்று வீட்டிலேயே எளிய முறையில் குழந்தைகளுக்கு விருப்பமான குளுகுளு மாம்பழ புட்டிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
    தேவையான பொருட்கள்

    மாம்பழம் - 2
    சர்க்கரை - அரை கப்
    பால் - 1 1/4 கப்
    உப்பு - 2 சிட்டிகை
    சோள மாவு - கால் கப்
    பால் - கால் கப்

    செய்முறை

    மாம்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெட்டிய மாம்பழத்தை மிக்சியில் போட்டு அதனுடன் சர்க்கரை, உப்பு சேர்த்து அரைக்கவும்.

    அடுத்து பால்1 1/4 கப் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

    சோள மாவில் கால் கப் பால் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கரைத்து கொள்ளவும்.

    அப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.

    மாம்பழ விழுது திக்கான பதம் வந்தவுடன் அதில் கரைத்து வைத்துள்ள சோள மாவு கரைசலை ஊற்றி கிளறி விடவும்.

    திக்கான பதம் வந்தவுடன் இறக்கி விருப்பமான மோல்டில் ஊற்றி ஆற விடவும்.

    நன்றாக ஆறியதும் பிரிட்ஜில் 4 மணிநேரம் வைத்திருந்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான மாம்பழ புட்டிங் ரெடி.
    குழந்தைகளுக்கு மில்க் ஷேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மாம்பழம் சேர்த்து எளிய முறையில் குளுகுளு மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மாம்பழம் - 2
    குளிர்ந்த பால் - 2 கப்
    வெனிலா ஐஸ்க்ரீம் - 1 ஸ்பூன்
    சர்க்கரை - 3 ஸ்பூன்

    செய்முறை :

    முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, அதனை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் நறுக்கிய மாம்பழ துண்டுகளை போட்டு, அத்துடன் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதில் பால் மற்றும் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து நன்கு அடித்து இறக்கி பரிமாறினால், மாம்பழ மில்க் ஷேக் ரெடி!

    ×