search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    • பிங்கான் பாத்திரங்கள் பலரது விருப்பமாக இருக்கின்றன.
    • பிங்கான் பாத்திரங்கள் வெப்பத்தை அதிகமாக உட்கிரகிக்காது.

    பார்ப்பதற்கு பளபளப்பாகவும், கண்ணைக் கவரும் டிசைன் மற்றும் வடிவமைப்புகளிலும் கிடைக்கும் 'செராமிக்' எனப்படும் 'பிங்கான்" பாத்திரங்கள் பலரது விருப்பத் தேர்வாக இருக்கின்றன. சீனாவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட பிங்கான், தற்போது உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    சமைப்பதைவிட சமையலுக்கு உபபோகித்த பாத்திரங்களை சுத்தம் செய்வது பலருக்கும் கடினமான வேலையாக இருக்கிறது. அந்த வகையில், பாத்திரம் கழுவும் நேரத்தையும் செராமிக் பாத்திரங்கள் குறைக்கின்றன. காரணம், இவற்றில் எண்ணெய், உணவுத் துகள்கள் ஆகியவை அதிகமாக ஒட்டுவது இல்லை. இதனால் செராமிக் பாத்திரங்களை விரைவாக சுத்தப்படுத்த முடியும்.

    சில பாத்திரங்களின் மேற்பகுதியில் பூசப்பட்டுள்ள பூச்சுகள் அதிக வெப்பத்தை உட்கிரகிக்கும். இதன் விளைவாக, அதில் உள்ள ரசாயனங்கள் சமைக்கப்படும் உணவிலும் கலந்து சாப்பிடுபவர்சுளுக்கு தீங்கு விளைவிக்கும். பிங்கான் பாத்திரங்கள் வெப்பத்தை அதிகமாக உட்கிரகிக்காது. இதன் மூலம் உணவில் எவ்விதமான ரசாயனமும் கலக்காது. பிங்கான் பூச்சு பூசப்பட்ட பாத்திரங்களை 500 டிகிரி பாரன்ஹீட் வரை சூடுபடுத்தினாலும் அது எவ்விதமான ரசாயன புகையையும் வெளியிடாது. தரமான பீங்கான் பாத்திரங்களை வாங்கி பயன்படுத்துவது முக்கியமானது.

    பிங்கான் பூச்சு பூசப்பட்ட உலோகப் பாத்திரங்களை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் விரிசலோ, கீறலோ ஏற்பட்டால் அடிப்பகுதியில் உள்ள உலோகத்தின் நன்மை சமைக்கும் உணவுடன் கலக்க நேரிடும். கீறல் விழுந்த பிங்கான் பாத்திரங்களை சுத்தப்படுத்துவது கடினமாக இருக்கும்.

    ஒழுங்கற்ற வடிவம் கொண்ட, சேதம் அடைந்த, தரம் குறைந்த பிங்கான் பாத்திரங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். மேலும் ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் வண்ணங்கள் அதிகமாக பூசப்பட்ட பீங்கான் பாத்திரங்களை வாங்குவதையும் தவிர்க்கவும். ஏனெனில் இந்த வண்ணங்களை அடர்த்தியாக காட்டுவதற்காக அவற்றுடன் ஈயம் அதிகமாக கலக்கப்படுகிறது.

     பிங்கான் பூச்சு பூசப்பட்ட பாத்திரங்கள் பராமரிப்பு:

    செராமிக் பூச்சு பூசப்பட்ட பாத்திரங்களை மென்மையான திரவம் கொண்டே சுத்தப்படுத்தவேண்டும். கரடு முரடான ஸ்கிரப்பர்களை பயன்படுத்தாமல் ஸ்பாஞ்சு கொண்டு இவற்றை சுத்தப்படுத்துவது நல்லது. செராமிக் பாத்திரங்களில் சமைக்கும்போது குறைவான அல்லது மிதமான தீயை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக குடாக இருக்கும் செராமிக் பாத்திரங்களை உடனடியாக குளிர்ச்சியான வெப்பநிலைக்கு உட்படுத்தகூடாது.

    செராமிக் பாத்திரங்களை டிஷ்வாஷர் சுத்தப்படுத்துவதைவிட கைகளால் சுத்தப்படுத்துவதே சிறந்தது. செராமிக் பாத்திரங்களில் சமைப்பதற்கு பிளாஸ்டிக் அல்லது மரத்தால் ஆன கரண்டிகளையே பயன்படுத்த வேண்டும். உலோகக் கரண்டிகள் செராமிக் பூச்சுகளில் கீறலை உண்டாக்கும்.

    • 'கேக் அலங்காரம்' பற்றிய சில ஆலோசனைகள்.
    • பெண்கள் பலரும் 'கேக்' தயாரிப்பை சுயதொழிலாக செய்து வருகிறார்கள்.

    பெண்கள் பலரும் 'கேக்' தயாரிப்பை சுயதொழிலாக செய்து வருகிறார்கள். கேக்குகளை சுவைப்பதற்கு முன்பாக, அவற்றின் மேல் செய்யப்படும் அலங்காரம்தான் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்படி செய்கிறது. தயாரிப்பில் புதிதாக ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு 'கேக் அலங்காரம்' பற்றிய சில ஆலோசனைகள்...

     புரூட் கேக்

    வெள்ளை நிற கேக்கின் மேல் பகுதியில் ஒரு பக்கத்தில் மட்டும் மாதுனை முத்துகள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி இலைகளை வைக்கவும். அதைச் சுற்றிலும் சிறிய அளவுள்ள சர்க்கரை முத்துகளை தூவவும். இது பார்ப்பதற்கு அழகாகவும், நேர்த்தியாகவும் காட்சி அளிக்கும்.

     சாக்லெட் மற்றும் ஸ்பிரிங்கஸ் கேக்

    கேக்கின் மேல் பகுதியை தவிர்த்து, பக்கவாட்டுப் பகுதியைச் சுற்றிலும் சாக்லெட், ஸ்பிரிங்கஸ் (சிறிய அளவு சர்க்கரை பூக்கள்) மற்றும் கான்பெட்டி (வண்ணமயமான சாக்லேட் துணுக்குகள்) ஆகியவற்றை கொண்டு கேக்கை அலங்கரிக்கவும். அது பார்ப்பதற்கு வண்ணமயமான தோற்றத்தைத் தரும்.

     ரோஸ் கேக்

    'கேக்' அலங்கரிக்கும் ஐசிங் முனைகள் கொண்டு கேக்கின் கீழ்ப்பகுதியில் இருந்து மேல்பகுதி வரையிலும் 'ஐசிங் கிரிம் மூலம் ரோஜா பூக்கள் போன்று வடிவமைக்கவும். ஒவ்வொரு அடுக்குக்கும் வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டு அலங்கரித்தால் அழகாக இருக்கும்.

     ஸ்ட்ராபெர்ரி கேக்

    வெனிலா கேக்கின் மேல்பகுதியின் மையத்தில் ஸ்ட்ராபெர்ரி கிரீமை பூசவும், அதற்கு மேல் ஸ்ட்ராபெர்ரி இலைகளை வைக்கவும், இது பார்ப்பதற்கு நேர்த்தியான தோற்றமளிக்கும் பெர்ரி பழங்கள், உண்ணக்கூடிய ரோஜா பூக்கள் மற்றும் ஸ்டாப்பேரி இலைகளை வைக்கவும் இது பார்ப்பதற்கு நேர்த்தியான தோற்றமளிக்கும்.

     பைப்பிங் கேக்:

    'கேக்'கின் நிறத்துக்கு ஏற்றவாறு டபுள் கலர் கிரீமைகொண்டு மேல் பகுதியில் பைப்பிங் செய்யவும். அது பார்ப்பதற்கு எளிமையாகவும், கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இருக்கும்.

     டஸ்டிங் பவுடர் கேக்:

    கேக்கின் மீது பொடித்த சர்க்கரை, கோகோ பவுடர் அல்லது உண்ணக்கூடிய மினுமினுப்பு கிளிட்டர்களை லேசாக தெளிக்கவும். இது எளிதாக செய்யக் கூடிய அலங்காரமாகும்.

     மக்ரூன்ஸ் கேக்:

    கேக்'கின் மேல்புறத்தில் மக்ரூன்களை கொண்டு பூ போன்ற வடிவத்தில் அடுக்கவும். கேக்கின் பக்க வாட்டுப் பகுதியையும் மக்ரூன்களை கொண்டு அலங்கரிக்கலாம்.

     பாஸ்கெட் வீவ் கேக்:

    கேக்கைச் சுற்றிலும் 'பாஸ்கெட் வீவ் (கூடை பின்னுவது போன்ற அமைப்பு) பைப்பிங் செய்யவும். பின்பு கிரீம் கொண்டு கேக்கின் மேலே ரோஜா பூக்கள் வடிவமைக்கவும். வெள்ளை நிற முத்துக்கள் கொண்டும் அலங்கரிக்கலாம்.

     பான்டன்ட் ரிப்பன் கேக்:

    'பான்டன்ட் ரிப்பன்' மூலம் வடிவமைத்த ரோஜாக் களைக் கொண்டு 'கேக்'கைச் சுற்றி வட்ட வடிவில் அலங்கரிக்கவும். பின்பு 'கேக்'கின் மேல் ஸ்பிரிங்கின்ஸ் அல்லது வெள்ளி நிற பால்களை தூவவும்.

    • அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஹெல்த்தியான கொரின் டிஷ்.
    • 5 நிமிடத்தில் ஈஸியா செய்து சாப்பிடலாம்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய ஹெல்த்தியான கொரின் ஸ்பெஷல் பனானா ஃபிரை 5 நிமிடத்தில் ஈஸியா செய்து சாப்பிடலாம். பொதுவாக மாலை நேரங்களில் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று அனைவருக்கும் தோன்றும். வாழைப்பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் பி 6, வைட்டமின் சி, கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. எனவே ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வித்தியாசமான பனானா ஃபிரை செய்து சுவைத்து பாருங்கள்.

    தேவையான பொருட்கள்:

    கார்ன்பிளார்- 3 ஸ்பூன்

    சோடா உப்பு- கால் டீஸ்பூன்

    முட்டை- 2

    பால்- 50 மில்லி

    பிரெட் தூள்- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் வாழைப்பழங்களை இரண்டாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வாழைப்பழ துண்டுகளில் ஐஸ் கிரீம் குச்சிகளை சொருகி லாலிபாப் போன்று வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு பவுலில் கார்ன்பிளார் மாவு, சோடா உப்பு மற்றும் முட்டையை அதில் உடைத்து ஊற்றி நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். இதில் பால் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்துகொள்ள வேண்டும்.

    இப்போது வாழைப்பழங்களை இந்த கார்ன்பிளார் மாவுக் கலவையில் தோய்த்து, பின்னர் பிரெட் தூள்களில் புரட்டி எடுத்து ஒரு பிளேட்டில் வரிசையாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைப்பழ துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான கொரியன் ஸ்பெஷல் பனானா ஃபிரை தயார். இதனை தேனுடன் தொட்டுக்கொள்ள சுவை இன்னும் அற்புதமாக இருக்கும். நீங்களும் உங்களது வீடுகளில் செய்து சுவைத்துப் பாருங்கள்.

    • வெல்லம் பாகு காய்ச்சி இடியாப்பத்தில் ஊற்றி சாப்பிட ருசியாக இருக்கும்.
    • முருங்கைக்காயை பேப்பரை சுற்றி பிரிட்ஜில் வைத்தால்காயாது.

    * பீட்ரூட் துருவலுடன் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி இடியாப்பத்தில் ஊற்றி சாப்பிட சத்துக்கு சத்து, சுவைக்கு சுவை. ருசியாகவும் இருக்கும்.

    * உளுந்து வடை செய்யும்போது மாவில் சிறிது சேமியாவை தூள் செய்து போட்டால் சுவையாக இருக்கும். மாவு அரைக்கும்போது சிறிது துவரம் பருப்பும் சேர்த்து அரைக்க வடை மிருதுவாக இருக்கும்.

    * முருங்கைக்காயை அப்படியே பிரிட்ஜில் வைத்தால் காய்ந்துவிடும். அதில் ஒரு பேப்பரை சுற்றி வைத்தால் காயாது.

    * பிரட் காய்ந்து போனால் இட்லி சட்டியில் வைத்து ஐந்து நிமிடம் வேகவிட்டு எடுக்க மிருதுவாகும்.

    * தோசைக்கு மாவு அரைக்கும்போது வெண்டைக்காய் கொஞ்சம் சேர்த்து அரைக்க தோசை பஞ்சு மாதிரி இருக்கும்.

    * எலுமிச்சை, நார்த்தங்காயில் ஊறுகாய் செய்யும்போது அவைகளில் உள்ள விதைகளை நீக்கிவிட்டால் ஊறுகாயில் கசப்பு இருக்காது.

    * சட்னியில் காரம் அதிகமாக இருந்தால் சிறிது தயிர் கலக்க காரம் போய்விடும். சுவையும் கூடும்.

    * கொத்தமல்லி துவையலுக்கு புளிக்கு பதிலாக தக்காளி சேர்க்க ருசியாக இருக்கும்.

    * பூண்டுவை கொஞ்ச நேரம் தண்ணீரில் போட்டால் உரிப்பதற்கு எளிதாக இருக்கும்.

    * தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்க்க சுவை கூடும்.

    * டீ தயாரிக்கும்போது ஆரஞ்சு பழத்தோலை சிறிது சேர்த்து கொதிக்க வைத்தால் டீ சுவையாக இருக்கும்.

    * காய்கறிகளை நறுக்கி உப்பு கலந்த நீரில் போட்டு வைத்திருந்து சமைக்க நிறம் மாறாது. உப்பு சேர்க்க வேண்டிய அவசியமும் இருக்காது.

    * சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து விட்டால் அதில் இரண்டு, மூன்று சொட்டு எலுமிச்சை சாறு சேர்க்க உதிரியாகி சுவையாக இருக்கும்.

    * தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்துக்கு பதில் கொள்ளு சேர்க்க தோசை மிருதுவாகிவிடும்.

    * இட்லி மாவு நீர்த்துப் போனால் எண்ணெய் இல்லாமல் வறுத்த ரவையை சேர்த்துவிட்டு பத்து நிமிடங்கள் கழித்து இட்லி சுட்டால் சுவையாகவும் இருக்கும்.

    * இடியாப்பத்திற்கு மாவு பிசையும்போது சிறிதளவு வெண்ணெய் சேர்த்தால் பிழிவது எளிதாகும். இடியாப்பமும் நல்ல பதத்துடன் வரும்.

    * சுண்டலை தாளித்த பிறகு சிறிதளவு கசகசாவை வறுத்து தூவ சுவை கூடும்.

    * கீரைகளை வேகவைக்கும்போது எலுமிச்சை பழ சாறை சிறிது விட்டால், கீரையின் நிறம் மாறாது. கீரை இலையும் ஒன்றுக்கொன்று ஒட்டாமல் இருக்கும். ருசியும் அமோகமாக இருக்கும்.

    * உப்பு சேமித்து வைத்திருக்கும் ஜாடியில் சிறிது அரிசியை துணியில் முடிச்சு போட்டு வைத்தால் உப்பு ஈரமாகாது.

    * காளான்களை அலுமினிய பாத்திரத்தில் சமைத்தால் பாத்திரம் கறுத்துவிடும்.

    * உருளைக்கிழங்கை வேக வைக்கும்போது உப்பை சேர்க்க, விரைவில் வேகும். வெடிப்பும் வராது.

    * பஜ்ஜி மாவை மிக்சியில் போட்டு லேசாக அரைத்துவிட்டு பஜ்ஜி செய்தால் மிருதுவாகவும், உப்பியும் இருக்கும்.

    * பிரிட்ஜில் பேக்கிங் சோடா டப்பாவை திறந்த நிலையில் வைத்தால் துர்நாற்றம் வராது.

    * பாத்திரங்களில் எண்ணெய் பிசுபிசுப்பு இருந்தால் சிறிது தயிர் ஊற்றி தேங்காய் நார் கொண்டு அழுத்தி தேய்த்தால் பிசுபிசுப்பு நீங்கிவிடும்.

    • குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய இனிப்புகளில் ஒன்று சேமியா கேசரி.
    • மாலை வேளையில் தேனீருடன் சுவைக்கலாம்.

    குழந்தைகள் பலரும் விரும்பி சாப்பிடக் கூடிய இனிப்புகளில் ஒன்று தான் சேமியா கேசரி. இதனை மாலை வேளையில் தேனீருடன் சுவைக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 500 கிராம்

    சர்க்கரை - 400 கிராம்

    நெய் - தேவையான அளவு

    முந்திரி, பாதாம் - 2 (தேவையான அளவு)

    ஏலக்காய் - ஒரு ஸ்பூன்

    குங்குமப்பூ - சிறிதளவு

    செய்முறை:

    அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி அதில் முந்திரி, பாதாம் சேர்த்து வறுக்க வேண்டும். அதனுடன் சேமியாவையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். பின்னர் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சேமியாவை வேக வைக்க வேண்டும்.

    அதன்பிறகு சேமியா வெந்த பிறகு சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும். அதனுடன் பாலில் குங்குமப்பூ சேர்த்து கலந்து சேமியா கேசரியில் சேர்க்க வேண்டும். நன்றாக கிளறி இறக்கினால் சேமியா கேசரி தயார்.

    • உஷ்ணத்தை தணிப்பதற்கு மிகவும் உதவியாக இருப்பது இளநீர்.
    • வித்தியாசமாக இளநீர் அல்வா செய்யலாம் வாங்க.

    உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கு மிகவும் உதவியாக இருப்பது இளநீர். இந்த இளநீரை வைத்து பலர் இளநீர் பாயாசம், இளநீர் சர்பத் போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அதுமட்டுமில்லாமல் இதுவரை நீங்கள் எத்தனையோ அல்வாவை சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இளநீர் அல்வா செய்யலாம் வாங்க. இது பார்ப்பதற்கு கிளாசியா இருப்பது மட்டுல்ல சுவைப்பதற்கு சூப்பராக இருக்கும். நாக்கில் வைத்தவுடன் கரைந்துவிடும் அளவிற்கு சுவையாக இருகும் இந்த இளநீர் அல்வா.

    தேவையான பொருட்கள்:

    இளநீர்- 1

    கார்ன்பிளார் மாவு- ஒரு கப்

    சர்க்கரை- அரை கப்

    ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்

    முந்திரி, பாதாம்- 10

    செய்முறை:

    ஒரு பவுலில் இளநீரின் தண்ணீரை ஊற்றி அதில் கான்பிளார் மாவினை கட்டி இல்லாமல் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முந்திரி, பாதாம் துண்டுகளை போட்டு வறுத்து எடுத்து தனியே வைத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு மீண்டும் அதே வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி அதில் நாம் ஏற்கனவே கரைத்து வைத்துள்ள இளநீர் கலவையினை ஊற்ற வேண்டும். இதனை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த கலவை சிறிது கெட்டியாக ஆரம்பித்தவுடன் அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும்.

    பின்னர் இளநீர் துண்டுகளில் உள்ள வலுக்கைகளை சிறிது சிறிதாக பொடித்து அந்த அல்வாவில் சேர்க்க வேண்டும். இளநீர் அல்வா கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி, பாதாம் மற்று சிறிதளவு நெய் சேர்த்து கிளறி இறக்கலாம்.

    அல்வா சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கண்டிப்பாக இளநீர் பிரியர்களுக்கு ஃபேவரட் அல்வாவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    • ஜப்பான் சிக்கன் இணையம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.
    • பல உணவகங்கள் தங்கள் மெனுவில் சேர்க்கத் தொடங்கி உள்ளன.

    ஜப்பான் சிக்கன் இணையம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. இது அம்மன் மெஸ் எனப்படும் ஈரோடு உணவகத்தில் பிரபலமான உணவு. இந்த உணவு இணையத்தில் மிகவும் புகழ் பெற்று வருகிறது தமிழகம் முழுவதும் உள்ள பல உணவகங்கள் இதை தங்கள் மெனுவில் சேர்க்கத் தொடங்கி உள்ளன. இந்த வித்தியாசமான மற்றும் சுவையான ஜப்பான் சிக்கன் வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்ப்போம்...

    தேவையான பொருட்கள்:

    சிக்கன்- அரை கிலோ

    மைதா- 3 ஸ்பூன்

    சோள மாவு- 2 ஸ்பூன்

    மிளகு-1 டீஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    வெண்ணெய்- 3 டீஸ்பூன்

    பூண்டு- 3 பல்

    பச்சை மிளகாய்- 2

    பால்- 1/2 லிட்டர்

    முந்திரி- 10

    சர்க்கரை-1 டீஸ்பூன்

    கொத்தமல்லி இலை- சிறிதளவு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்துள்ள சிக்கன், மைதா, சோள மாவு, உப்பு, மிளகுதூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனை 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.

    பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கலந்துவைத்துள்ள சிக்கனை பொன்னிறமாக பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    முந்திரியை மிக்சி ஜாரில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும்.

    அடுத்து மற்றொரு கடாயில் வெண்ணெய் சேர்த்து நறுக்கிய பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வதங்கிய பின்பு அதில் காய்ச்சி ஆறவைத்த பால் மற்றும் பொத்த முந்திரியை சேர்த்து கிளற வேண்டும்.

    இதனைத்தொடர்ந்து அதில் தேவையான அளவு உப்பு மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரை, மிளகுத்தூள் சேர்த்து கிளறி கடைசியாக பொரித்த சிக்கனை சேர்க்க வேண்டும்.

    இறுதியாக கிரேவி பதத்திற்கு வந்ததும் அதில் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான ஜப்பான் சிக்கன் தயார்.

    • உடல் எடையை குறைக்க உதவும் குதிரைவாலி ராகி களி.
    • உடலுக்கு தேவையான புரதச்சத்து, நார்ச்சத்தை கொண்டுள்ளது.

    அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து மற்றும் நார்ச்சத்தை அதிகம் கொண்டுள்ளது. இதனை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்:

    குதிரைவாலி அரிசி- ஒரு கப்

    கேழ்வரகு மாவு- ஒன்றரை கப்

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் குதிரைவாலி அரிசியை 3 முறை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை அரைமணிநேரம் மூடி போட்டு ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு பங்கிற்கு 3 மக்டங்கு தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ள வேண்டும். அரைப் பதத்திற்கு அரிசி வெந்தவுடன் கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டி இல்லாமல் மிதமான தீயில் வைத்து  கிளற வேண்டும். பருப்பு மத்து கொண்டு நன்றாக கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

    அவ்வாறு கிளறும்போது ஒட்டாமல் நன்றாக வெந்துவரும் அப்போது தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, களியை தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் இருக்கவேண்டும். குதிரைவாலி ராகி களி தயார்.

    இந்த களியை கீரைக்குழம்பு, மீன்குழம்பு, கறிக்குழம்பு, கருவாட்டுக்குழம்பு ஆகியவை வைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். ஆனால் உடல் எடை குறைக்கும் முயற்சியை மேற்கொள்பவர்கள் இதனை மோரில் சின்னவெங்காயம் சேர்த்து இந்த களியையும் கரைத்து காலை வேளைகளில் குடிக்கலாம். கீரை வகைகளை சைட் டிஷ்சாக வைத்து மதிய சாப்பாடாகவும் சாப்பிடலாம்.

     பலன்கள்

    கால்சியம் இருப்பதால் எலும்புகளுக்கு வலு சேர்க்கும். இரும்புச்சத்து இருப்பதால் ரத்த உற்பத்திக்கு உதவும். கொழுப்பைக் குறைக்கும். குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும். கேழ்வரகு உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தந்து வலுவைச் சேர்க்கும். எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சாப்பிடலாம். பெண்கள், இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்ல உணவு.

    • உணவு பிரியர்களுக்கு மட்டுமின்றி பலருக்கும் மிகவும் பிடிக்கும்.
    • பலவிதமான சிக்கன் சைடிஷ்களை செய்திருப்போம்.

    சிக்கனை வைத்து செய்யப்படும் அனைத்து உணவுகளும் பொதுவாக உணவு பிரியர்களுக்கு மட்டுமின்றி பலருக்கும் மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும். பொதுவாக நாம் பலவிதமான சிக்கன் சைடிஷ்களை சப்பாத்தி, நான், புல்கா, மற்றும் பரோட்டாவிற்கு செய்து சுவைத்து இருப்போம். ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது சிக்கன் மலாய் கறி.

    தேவையான பொருட்கள்:

    தயிர்- 1 கப்

    பெரிய வெங்காயம்- 2

    பச்சை மிளகாய்- 2 to 3

    பூண்டு- 6 பல்

    இஞ்சி- 2 துண்டு

    மஞ்சள் தூள்- ¼ மேஜைக்கரண்டி

    மல்லி தூள்- 2 மேஜைக்கரண்டி

    கரம் மசாலா- 1 மேஜைக்கரண்டி

    க்ரீம்- 2 மேஜைக்கரண்டி

    முந்திரி- 8 to 10

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    கொத்தமல்லி- சிறிதளவு

    கருவேப்பிலை- சிறிதளவு

    செய்முறை:

    முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ள வேண்டும்.

    அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து மிதமான அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு நன்கு பொன் நிறம் ஆகும் வரை அதை வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு பொன்னிறம் ஆனதும் அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விட வேண்டும்.

    இப்பொழுது முந்திரி பருப்புகளை எடுத்து அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு பேஸ்ட் ஆக்கி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ள வேண்டும்.

    பின்னர் நாம் நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் சிக்கனை எடுத்து ஒரு பவுலில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாயை போட்டு அதை நன்கு கலந்து விடவும். பின்னர் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் முந்திரி பேஸ்ட்,  நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து ஒன்றரை மணி நேரம் வரை அதை ஊற விடவும்.

    ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 3 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை பக்குவமாக கொட்டி அதை நன்கு கிளறி விட்டு  வேக விட வேண்டும்.

    இப்பொழுது நாம் வதக்கி ஆற வைத்திருக்கும் வெங்காயத்தை எடுத்து அதை நன்கு கைகளின் மூலம் நசுக்கி வைத்து கொள்ளவும். அதன்பிறகு அதில் நாம் நசுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு அதை நன்கு கலந்து விட்டு மீண்டும் வேக விடவும். (மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை அதை வேக விடவும்.)

    பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு அடுப்பை குறைத்து விட்டு அதை சுமார் 12 லிருந்து 15 நிமிடம் வரை வேக விட வேண்டும். 15 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதை ஒரு கிளறு கிளறி பின்பு அதில் ஃபிரஷ் க்ரீம்- ஐ சேர்த்து நன்கு கிளறி விட்டு சுமார் 3 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.

    பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை தூவி விடவும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு சிக்கன் மலாய் கறியை அடுப்பிலிருந்து கீழே இறக்கி ஒரு தட்டில் வைத்து அதை சப்பாத்தி அல்லது நான் உடன் சுடச் சுடபரிமாறவும்.

    இப்பொழுது சூடான மற்றும் மிகவும் சுவையான சிக்கன் மலாய் கறி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.


    • முட்டையை அனைவரும் விரும்பி சாப்பிடுவோம்.
    • மிகவும் ஸ்பெஷலானது முட்டை மசாலாதான்.

    நமக்குத் தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் நிறைந்த `உலகின் மிகச் சிறந்த உணவு வகைகளில் ஒன்று முட்டை. முட்டையை அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். அதில் மிகவும் ஸ்பெஷலானது முட்டை மசாலாதான். அதுவும் தபாக்களில் செய்யப்படும் முட்டை மசாலா அதன் சுவையே தனி தான். அந்த தாபா ஸ்டைல் ஸ்பெஷல் முட்டை குழம்பு வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.

    தேவையான பொருட்கள் :

    வேகவைத்த முட்டை - 6

    பெரிய வெங்காயம் - 2

    தக்காளி விழுது - 3

    பூண்டு - 2 டீஸ்பூன் (நறுக்கியது)

    இஞ்சி - 2 டீஸ்பூன் (நறுக்கியது)

    கடலை மாவு - 2 டீஸ்பூன்

    சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி

    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்

    காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - 3/4 டீஸ்பூன்

    கசூரி மேத்தி (உலர்ந்த வறுத்து பொடித்தது) - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    காய்ந்த சிவப்பு மிளகாய் - 2

    எண்ணெய் - 3 டீஸ்பூன்

    வெண்ணெய் - 1 டீஸ்பூன்

    நறுக்கிய கொத்தமல்லி இலை - 3-4 டீஸ்பூன்

    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை :

    மசாலாவிற்கு தேவையான வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை நன்றாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு நன்கு பழுத்த தக்காளியை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அடுப்பில் ஒரு வாணலியை வைத்து கசூரி மேத்தியை போட்டு 30 வினாடிகள் வறுத்து ஆறவைத்து கரடுமுரடான பொடியாக நசுக்கி எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி முட்டைகளை போட்டு வேகவைத்து அதன் ஓட்டை நீக்கி கொள்ள வேண்டும்.

    பின்னர் அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளற வேண்டும். இப்போது வேகவைத்த முட்டைகளை அதனுடன் சேர்த்து குறைந்த வெப்பத்தில் 1-2 நிமிடங்களுக்கு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அடுத்து மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் மற்றும் காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்க்க வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வெங்காயம் வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை சிறிதளவு உப்பு சேர்த்து சுமார் 8 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வதக்க வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமாக மாறியவுடன் நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து குறைந்த வெப்பத்தில் மற்றொரு 2 நிமிடங்களுக்கு வதக்கவும். இப்போது அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு கலந்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். தக்காளி முழுவதுமாக வெந்து தொக்கு பதத்திற்கு எண்ணெய் பிரியும் வரை நன்கு சமைக்க வேண்டும்.

    பிறகு அதில் 2 டீஸ்பூன் கடலை மாவை 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரில் கலந்து சேர்த்து குறைந்த வெப்பத்தில் 2-3 நிமிடங்கள் தொடர்ந்து கிளறி வதக்க வேண்டும். அடுத்து அதில் 200 மில்லி தண்ணீரைச் சேர்த்து அதனுடன் காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் வறுத்த கசூரி மேத்தி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து மிதமான தீயில் ஒரு நிமிடத்திற்கு சமைக்கவும்.

    தற்போது வறுத்துவைத்துள்ள முட்டைகளை அதில் போட்டு நன்கு கலந்து மூடி வைத்து சுமார் 5 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் சமைக்க வேண்டும். அதனுடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து கலந்து மேலும் இரண்டு நிமிடங்களுக்கு குறைந்த தீயில் வைத்து சமைத்து இறக்க வேண்டும்.

    `தாபா ஸ்டைல் முட்டை மசாலா' தயார்… இதை நீங்கள் சப்பாத்தி, தோசை, இட்லி, ரொட்டி அல்லது சாதத்துடன் சூடாக பரிமாறவும்.

    • தாவரங்களில் இருக்கும் புரதத்தை தனியாக பிரித்து எடுத்து தயாரிக்கப்படுகிறது.
    • சுவை விலங்குகளின் மாமிசத்தைப் போலவே இருக்கும்.

    சைவ இறைச்சி என்பது தாவர இறைச்சி என்றும் அழைக்கப்படுகிறது. இது தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தாவரங்களில் இருந்து, சில கூறுகள் எடுக்கப்பட்டு, இதன் மூலம் சிறப்பு தொழில்நுட்பம் மூலம் சைவ இறைச்சி தயாரிக்கப்படுகிறது

    மீன், கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சியைப் போலவே தாவரங்களில் இருக்கும் புரதத்தை தனியாக பிரித்து எடுத்து தயாரிக்கப்படுவதை 'தாவர இறைச்சி' அல்லது 'சைவ இறைச்சி' என்று அழைக்கிறோம். இதன் சுவை விலங்குகளின் மாமிசத்தைப் போலவே இருக்கும். தாவர இறைச்சி பெரும்பாலும் சோயா, காளான், பீன்ஸ், கோதுமை ஆகிய மூலப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

    இறைச்சியின் சிவப்பு நிறத்தை பிரதிபலிக்க இதனுடன் மாதுளைப்பொடி, பீட்ரூட் சாறு, சோயா லெகிமோ குளோபின் போன்ற நிறமிகள் கலக்கப்படுகின்றன.

    சமீபகாலமாகவே தாவர இறைச்சியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். சர்வதேச சந்தையிலும் இதற்கு வரவேற்பு இருக்கிறது. இருப்பினும், தாவர இறைச்சி உடலுக்கு நல்லதா என்ற கேள்வியும் பலரிடம் இருக்கிறது. இதுகுறித்த தகவல்கள் இங்கே...

    மாமிச உணவை தவிர்க்க நினைப்பவர்களுக்கும், உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் அசைவ பிரியர்களுக்கும் தாவர இறைச்சி ஒரு மாற்று உணவாகும். விலங்குகளின் மூலம் கிடைக்கும் இறைச்சியின் ருசியையும் இது ஈடுசெய்யும். தாவர இறைச்சியில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

    விலங்கு இறைச்சியுடன் ஒப்பிடும்போது தாவர இறைச்சியில் நார்ச்சத்து, வைட்டமின் சி. பிளேவனாய்டுகள் போன்ற சத்துகள் அதிகமாக இருக்கின்றன. அதேசமயம் விலங்கு இறைச்சியில் இருந்து பெறப்படும் இரும்பு, வைட்டமின் டி துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் தாவர இறைச்சியில் குறைந்த அளவே உள்ளன.

    எனவே தாவர இறைச்சி சாப்பிடும் நாட்களில் பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது. இவ்வாறு சாப்பிடும்போது தாவர இறைச்சியில் கிடைக்காத ஊட்டச்சத்துக்களை மற்ற உணவுகள் சமன் செய்யும்.

    தாவர இறைச்சியில் இருக்கும் நார்ச்சத்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். இதன் மூலம் இதயநோய், புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும்.

     சோயா, காளான், பீன்ஸ் போன்றவை மட்டுமல்லாமல் பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, உருளைக் கிழங்கு. சிலவகை தாவர எண்ணெய்கள், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை கலந்தும் தாவர இறைச்சி தயாரிக்கப்படுகிறது. எனவே தாவர இறைச்சியை வாங்கும்போது குறைந்த உப்பு, அதிக நார்ச்சத்து நிறைந்த தயாரிப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    விலங்கு இறைச்சியுடன் ஒப்பிடும்போது தாவர இறைச்சியில் உள்ள புரதத்தை மனித உடலால் குறைவான அளவே உட்கிரகிக்க முடியும். தாவர இறைச்சி செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இருப்பினும் அது செரிமானம் ஆகும் தன்மையானது.

    சமைக்கும் முறை, சமைப்பதற்காக தாவர இறைச்சியில் சேர்க்கப்படும் பொருட்கள். சாப்பிடுபவரின் செரிமான சக்தி ஆகியவற்றை பொறுத்து மாறக்கூடும். விலங்குகளில் இருந்து கிடைக்கும் இறைச்சியுடன் ஒப்பிடும்போது. தாவர இறைச்சி சுற்றுச்சூழலில் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும்.

    • சமையல் அறையில் வசம்பு தூள் தூவி விட்டால் பூச்சிகள் வராது.
    • காய்ந்த எலுமிச்சை தோலை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

    * இறைச்சி வேகவைக்கும்போது கொஞ்சம் பாக்கு சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

    * வெந்தயத்தை வேகவைத்து, கடைந்து தேன் கலந்து உண்டு வர தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

    * காலிபிளவர் சமைக்கும்போது கொஞ்சம் பால் சேர்த்தால் பூ போன்ற வெள்ளை நிறம் மாறாமல் இருக்கும். பச்சை வாடையும் வராது.

    * பிரிட்ஜில் மாவை வைக்கும்போது உப்பு சேர்க்கக்கூடாது. உப்பு சேர்த்தால் புளித்துவிடும்.

    * அலுமினியப் பாத்திரங்களில் அடிப்பிடிப்பு கறையை நீக்க உப்புக்காகிதம் கொண்டு தேய்த்தால் பாத்திரம் புதுசு போல மின்னும்.

    * ஒரு கைப்பிடி கல் உப்பை துணியில் கட்டி அரிசி மூட்டைக்கு அருகில் வைத்தால் பூச்சிகள் எதுவும் வராது.

    * சமையல் அறையில் வசம்பு தூள் தூவி விட்டால் பூச்சிகள் வராது.

    * எறும்பு தொந்தரவு உள்ள இடங்களில் நான்கைந்து கிராம்பை போட்டு விட்டால் எறும்புகள் வராது.

    * சீடை செய்யும்போது அதனை ஊசியால் குத்தி பின்பு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.

    * புளியை வெந்நீரில் ஊறவைத்து, பிறகு கரைத்தால் சீக்கிரமாக கரைந்துவிடும்.

    * சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலை அகற்றி வட்ட வடிவமாக நறுக்கி சிப்ஸ் செய்தால் மொறு மொறுவென இருக்கும்.

    * அரிசியில் வண்டோ, புழுவோ வராமல் இருக்க வேப்பம் இலைகளைப் போட்டு வைக்கலாம்.

    * உலர்ந்த ஆரஞ்சு தோலை புகை போட்டால் வீட்டுக்குள் கொசு வராது. இது இயற்கையான கொசு விரட்டி.

    * பூஜை செய்யும்போது வீட்டில் புகை அதிகமாக இருந்தால் ஒரு ஈரத்துணியை தொங்கவிடுங்கள். புகை காணாமல் போய்விடும்.

    * சப்பாத்திக்கு மாவு பிசையும் முன்னால் கையில் கொஞ்சம் உப்பை தடவிக்கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.

    * உருளைக்கிழங்கை வேகவைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் அவை ஜொலிக்கும்.

    * காய்ந்த எலுமிச்சை தோலை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

    ×