search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    • மாலை நேரங்களில் டீ காபியுடன் சுட சுட ஸ்னாக்சாக சாப்பிடலாம்.
    • குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    மாலை நேரங்களில் டீ காபியுடன் சுட சுட ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடுவதற்கு அல்லது மதிய உணவு உடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இந்த முட்டை 65 இருக்கும். இதுபோன்று மாலை நேரங்களில் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையை வைத்து பொடிமாஸ், ஆம்லெட், கிரேவி, குழம்பு என பல வகைகளிலும் ருசித்து சாப்பிட்டு இருப்போம், இன்று முட்டையை வைத்து 65 வித்தியாசமாக செய்வது எப்படி என பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    முட்டை- 5

    மிளகுத்தூள்- கால் ஸ்பூன்

    மிளகாய் தூள்- 1ஸ்பூன்

    காஷ்மீர் மிளகாய்த்தூள்- 1ஸ்பூன்

    மஞ்சள்தூள்- கால் ஸ்பூன்

    சோளமாவு- 1ஸ்பூன்

    கரம் மசாலா- 1ஸ்பூன்

    இஞ்சிபூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்

    எலுமிச்சை- பாதியளவு

    அரிசிமாவு-1ஸ்பூன்

    எண்ணெய்- தேவையான அளவு

    உப்பு சிறிதளவு

    செய்முறை:

    ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய் லேசாக தடவி முட்டைகளை உடைத்து ஊற்றிக் கால் ஸ்பூன் மிளகுத்தூள், கால் ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக அடித்து கலக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் சிறிதளவு ஊற்றி முட்டை கலவையை அந்த பாத்திரத்தை மேல் வைத்து ஒரு மூடி போட்டு அதை மிதமான சூட்டில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

    அதன்பிறகு ஆவியில் வேகவைத்த முட்டையை எடுத்து சிறு சிறு பீசாக வெட்டிக்கொள்ள வேண்டும். ஒரு தட்டில் மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் காஷ்மீர் மிளகாய்த்தூள், சோள மாவு, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து மீன் பொரிப்பதற்கு மசாலா ரெடி செய்வது போல் செய்து அதில் வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை பிரட்டி எடுக்க வேண்டும்.

    பின்னர் மற்றொரு பாத்திரத்தில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்த்து பொரித்தெடுக்கவும். மசாலா பிரியாமல் வரும். இப்போது மொறு மொறுவென முட்டை 65 ரெடி. நம் குழந்தைகளுக்கு இந்த மாதிரி புதுமையான முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

    • காரசாரமான பிரெட் சில்லி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    • திரும்பத் திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

    சிக்கன் சில்லி சாப்பிட்டு பார்த்திருப்பீங்க. ஆனால் சுவையான இந்த சைவ சில்லி பிரட் போன்றவற்றை சாப்பிட்டதுண்டா? ஒரு முறை இந்த மாதிரி பிரட் வைத்து சில்லி பிரட் காரசாரமா ருசியா செஞ்சி பாருங்க, எல்லோருமே திரும்பத் திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. காரசாரமான பிரெட் சில்லி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சாண்ட்விச் பிரட் – 5

    எண்ணெய் – தேவையான அளவு

    பூண்டு – ஒரு டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

    இஞ்சி – ஒரு டேபிள் ஸ்பூன்

    வெங்காயம் – ஒன்று

    குடைமிளகாய் – ஒன்று

    பச்சை மிளகாய் – இரண்டு

    உப்பு – தேவையான அளவு

    மிளகுத்தூள் – முக்கால் ஸ்பூன்

    சில்லி பேஸ்ட் – ஒரு டேபிள் ஸ்பூன்

    வெங்காயத்தாள், வெங்காயம் – ஒரு டேபிள் ஸ்பூன்

    கான்பிளவர் மாவு – ஒன்றரை ஸ்பூன்

    தக்காளி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்

    கொத்தமல்லித்தழை – சிறிதளவு

    செய்முறை

    20 மிளகாய்களை மூழ்கும் அளவு தண்ணீரில் 15 நிமிடம் வேக வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் வற்றியதும் மிளகாயை ஆறவைத்து ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரத்தில் இருக்கும் பகுதிகளை வெட்டி எடுத்து விட வேண்டும். பிரெட்டை சதுர சதுரமாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் வைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் விட்டு பிரட் துண்டுகளை சேர்த்து எல்லா புறமும் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பொடிதாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.

    கலவை வதங்கியதும் வினிகர், சோயா சாஸ், சில்லி பேஸ்ட் சேர்த்துக்கொள்ள வேண்டும். வினிகர் இல்லை என்றால் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம். இவைகளை வதக்கி விட்டு தக்காளி சாஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயத்தாளுடன் கூடிய வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.

    ஒரு ஸ்பூன் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து இதில் சேர்க்க வேண்டும். கிரேவி பதத்திற்கு கெட்டியாக வந்ததும், வறுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்துவிட வேண்டும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து மசாலா பிரெட்டில் ஊரும் அளவிற்கு நன்கு கலந்து விட வேண்டும். இதில் கொத்தமல்லித்தழையை தூவி இறக்கினால் சுவையான சில்லி பிரெட் தயார்.

    • கோதுமையில் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
    • கோதுமை மாவிலும் இடியாப்பம் தயாரிக்கலாம்.

    அரிசியை காட்டிலும் கோதுமையில் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. புரோட்டீன் உள்ளிட்ட அத்தியாவசிய சத்துகள் இதில் உள்ளன. இடியாப்பம் என்றாலே நாம் பெரும்பாலும் அரிசிமாவில்தான் தயாரிப்போம். நாம் கோதுமை மாவிலும் இடியாப்பம் தயாரிக்கலாம். இது அனைத்து வயதினருக்கும் மிகவும் ஏற்றதாக இருக்கும். வாங்க கோதுமை இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - ஒரு கப்

    தண்ணீர் - ஒரு கப்

    தேங்காய் எண்ணெய் - ஒரு ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, கடாய் லேசாக சூடானதும் கோதுமை மாவை சேர்த்து, லேசான தீயில் வாசம் வரும் வரை வறுக்க வேண்டும். (மாவு தீய்ந்து விடாமல் பக்குவமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்) வறுத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து விட வேண்டும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து, அதில் தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இவை அனைத்தும் நன்றாக கொதித்த பிறகு இந்த தண்ணீரை எடுத்து நாம் வறுத்து வைத்திருக்கும் கோதுமை மாவில் சிறிது சிறிதாக சேர்த்து கரண்டியைக் கொண்டு மாவை நன்றாக கிளறி விட வேண்டும்.

    சிறிது சூடு ஆறியதும் மாவை, கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளலாம். பிசைந்த மாவை 5 முதல் 10 நிடங்கள் மூடி போட்டு அப்படியே ஊற வைக்க வேண்டும்.

    இப்பொழுது இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மூடி வைத்து விட வேண்டும். இடியாப்பம் அல்லது இட்லி தட்டில் எண்ணெய் தடவி, பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து தேவையான அளவு உருண்டையாக உருட்டி இடியாப்பம் பிழியும் கட்டைக்குள் சேர்த்து இடியாப்ப தட்டில் பிழிந்துவிட வேண்டும்.

    இட்லி சட்டியில் தண்ணீர் கொதித்த பின், பிழிந்து வைத்திருக்கும் இடியாப்பத்தை அதற்குள் எடுத்து வைத்து மூடி போட்டு குறைவான தீயில் ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். வறுத்த மாவை சுடு தண்ணீரில் பிசைந்துள்ளதால், இடியாப்பம் விரைவிலேயே வெந்து விடும்.

    இந்த இடியாப்பம் தேங்காய் பால் மற்றும் குருமாவுடன் வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

    • ரசமலாய் பலரும் விரும்பி சாப்பிடும் ரெசிபியாக உள்ளது.
    • தித்திக்கும் சுவையுடன் கேக்

    பாலில் தயாராகும் இனிப்பு பலகாரங்களில் ரசமலாய் பலரும் விரும்பி சாப்பிடும் ரெசிபியாக உள்ளது. அதன் தித்திப்பை மேலும் மெருகேற்றி சுவைத்து சாப்பிடுவதற்கு, சுவையான ரசமலாய் கேக். விழா நாள்களிலும், பூஜை நாள்களிலும் ஒரே மாதிரியான ஸ்வீட் பலகாரங்கள் சாப்பிட்டு சோர்வடைந்து விட்டீர்களா. இதேபோல் உங்களுக்கான மாறுபட்ட ரெசிபியான தித்திக்கும் சுவையுடன் கூடிய ரசமலாய் கேக் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பால்- 1 லிட்டர்

    கண்டன்ஸ்டு மில்க்- 250 கிராம்

    சர்க்கரை- 300 கிராம்

    குங்குமப்பூ- தேவையான அளவு

    கிரீம்- தேவையான அளவு

    பாதாம், பிஸ்தா- அலங்கரிக்க

    பேக்கிங் பவுடர்- ஒரு ஸ்பூன்

    பேக்கிங் சோடா- கால் டீஸ்பூன்

    எண்ணெய்- ஒரு மூடி

    வினிகர்- ஒரு ஸ்பூன்

    ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகை

    ரோஸ் வாட்டர்- ஒரு ஸ்பூன்

    டோண்டு மில்க்- 200 மில்லி

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பானை பாலை ஊற்ற வேண்டும். அதில் குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்தால் அது மஞ்சள் நிறமாக மாறி இருக்கும். பின்னர் அதில் வினிகர், ரோஸ் வாட்டர், எண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

    அதன்பிறகு அதில் கோதுமை மாவு அல்லது மைதா மாவு ஆகியவற்றை சலித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் ஏலக்காய் தூள், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து கட்டி இல்லாமல் கேக் மாவு பதத்திற்கு கலந்து அதனை கேக் பவுலில் உள்ளே வெண்ணெய் தடவி அதில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து 15 நிமிடத்துக்கு ஃப்ரிஹீட் செய்ய வேண்டும். அதன்பிறகு கேக் கலவையை உள்ளே வைத்து 45 நிமிடங்களுக்கு மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

    அதன்பிறகு கேக்கை வெளியே எடுக்க வேண்டும். இப்போது ஒரு பவுலில் பால் மற்றும் கண்டன்ஸ்டு மில்க், கொழுப்பு நீக்கப்படாத பால், குங்குமப்பூ சேர்த்து நனறாக கலந்துகொள்ள வேண்டும்.

    இப்போது வேகவைத்த கேக்கை எடுத்து ஒரு பிளேட்டில் வைத்து அதில் பல் குத்தும் குச்சை வைத்து கேக்கின் மேல் குத்திவிட வேண்டும். பின்னர் நாம் ஏற்கனவே கலந்துவைத்துள்ள பாலை மேலே ஊற்ற வேண்டும். அதன்பிறகு கேக்கின் மீது கிரீம் தடவி பாதாம், பிஸ்தா கலவையை மேலே தூவி அலங்கரித்து எடுத்தால் தித்திப்பான ரசமலாய் கேக் தயார்.

    • கத்தரிக்காய் குழம்பு சமைக்கும்போது நெய்யில் வதக்கி சேர்த்தால் மணம் கூடும்.
    • ஊறுகாய்களில் கடுகு எண்ணெய்யை சேர்த்தால் கெடாமல் இருக்கும்.

    * புதினா, தக்காளி இரண்டையும் அரைத்து, பஜ்ஜி மாவில் கலந்து கலர்புல் பஜ்ஜிகள் செய்யலாம்.

    * ரசத்திற்கு புளி கரைக்கும்போது சிறிது வெல்லமும் சேர்த்து கரைத்தால் சுவை கூடும்.

    * கடைகளில் இருந்து வாங்கி வரும் காய்கறிகளை சிறிது நேரம் எலுமிச்சை சாறு கலந்த நீரில் முக்கி வைத்தால் அவற்றின் மீது தெளிக்கப்பட்டிருக்கும் ரசாயனத்தின் வீரியம் குறையும்.

    * வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, தேன், வாழைப்பழம், பூசணி இவற்றை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

    * தேங்காய் சட்னியில் தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக சிறிது தேங்காய் பால் கலந்தால் மணமும், சுவையும் கூடும்.

    * மாங்காய், எலுமிச்சை ஊறுகாய்களில் சிறிது கடுகு எண்ணெய்யை சேர்த்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

    * கேரட், பீட்ரூட்டை துருவி தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் கண்ணைக் கவரும் கலர்புல் தோசை ரெடி.

    * கத்தரிக்காய் குழம்பு சமைக்கும்போது கத்தரிக்காயை தனியாக நெய்யில் வதக்கி குழம்பில் சேர்த்தால் மணம் கூடும்.

    * கிழங்கு வகைகளை சமைக்கும்போது அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயம் கலவையில் கிழங்குகளை புரட்டி எடுத்து பின் வதக்கினால், காரம், மணம் சூப்பராய் இருக்கும்.

    * கீரை சமைக்கும்போது மஞ்சள்தூள் கலந்த சுடுநீரில் சிறிது நேரம் மூழ்க வைத்துவிட்டு சமைத்தால் கீரையின் நிறமும் மாறாது, ரசாயன பாதிப்பும் இருக்காது.

    • வாழைப்பழம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது.
    • வாழைப்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

    வாழைப்பழம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. ஏனெனில், அதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் அவை ஆற்றலின் களஞ்சியமாகும். எனவே, நாம் தினமும் வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். ஒருவேளை உங்களுக்கு வாழைப்பழம் சாப்பிட பிடிக்கவில்லை என்றால், வாழைப்பழம் அல்வா செய்து சாப்பிடுங்கள்.

    பொதுவாகவே, கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா போன்றவற்றை தான் வீடுகளில் செய்வார்கள். ஆனால் வாழைப்பழ அல்வாவை ருசித்தவர்கள் வெகு சிலரே. நீங்கள் இனிப்புகளை சாப்பிட விரும்புபவர்கள் என்றால் வாழைப்பழத்தில் செய்யப்படும் அல்வாவை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள். வாழைப்பழம் அல்வா செய்யும் முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

    தேவையான பொருட்கள்:

    வாழைப்பழம் - 5

    சர்க்கரை - 1/4 கப்

    நெய் - 1/2 கப்

    ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்

    தண்ணீர் - 1/4 கப்

    முந்திரி, உலர் திராட்சை - தேவையான அளவு

    செய்முறை:

    வாழைப்பழம் அல்வா செய்ய முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். இப்போது அந்த துண்டுகளை மசிக்க வேண்டும் அல்லது மிக்சி ஜாரில் அரைக்க வேண்டும். அதே நேரத்தில், அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நெய் சேர்த்து சூடாக்க வேண்டும். நெய் சூடானதும் அதில் முந்திரி உலர் திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    பின்னர் அதே பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை பாகு நிலைக்கு வந்தவுடன் அதனுடன் அதில் அரைத்து வைத்த வாழைப்பழத்தை சேர்க்க வேண்டும். இதனுடன் சிறிதளவு நெய்யும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றை நன்கு வதக்கிக் கொண்டே இருக்க வேண்டும். வாழைப்பழம் நன்கு வெந்தவுடன் நிறம் மாறும். கடைசியாக ஏலக்காய் தூள் வருத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கிளர வேண்டும். அவ்வளவுதான் இப்போது சுவையான வாழைப்பழ அல்வா ரெடி.

    • ஒடிசாவின் பாரம்பரிய இனிப்பு வகை.
    • `சேனா போடா' என்றால் எரிக்கப்பட்ட சீஸ் என அர்த்தம்.

    இந்தியாவின் கிழக்கில் அமைந்திருக்கும் ஒடிசா மாநிலத்தில் உள்ள பிரபலமான உணவுகளில், `சேனா போடா' எனப்படும் ஒருவகை இனிப்பு தனித்துவமான சுவை கொண்டதாகும். `சேனா போடா' என்றால் எரிக்கப்பட்ட சீஸ் என அர்த்தம். இது ஒடிசாவின் பாரம்பரிய இனிப்பு வகை. இந்த அற்புதமான சுவை நிறைந்த இனிப்பை நாம் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்:

    பனீர்-கால் கிலோ

    சர்க்கரை- 1 கப்

    ரவை- 2 ஸ்பூன்

    நெய்- 2 ஸ்பூன்

    ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்

    முந்திரி, பாதாம், பிஸ்தா நட்ஸ்- 2 ஸ்பூன்

    திராட்சை- 1 ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் பன்னீரை எடுத்து கைகளாலேயே நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதிலேயே ரவை சேர்த்து கலக்கி 15 நிமிடங்கள் அப்படியே ஊற விட வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, நெய் சேர்த்து ஒன்றாகக் கலந்து, பன்னீர் மற்றும் ரவை கலவையை அதில் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அதில் கொஞ்சம் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்தால், நல்ல கிரீமி பதத்திற்கு மாறிவிடும். அதை அப்படியே நன்றாக சில நிமிடங்கள் பிசைந்து கொண்டே இருங்கள்.

    அடுத்ததாக பிசைந்து வைத்துள்ள கலவையில், காய்ந்த திராட்சை மற்றும் நட்ஸ்களைப் போட்டு கலக்கி விடவும். இவை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் தவிர்த்து விடலாம். அனைத்தும் ஒன்றாகக் கலக்கப்பட்ட மாவை ஒரு பாத்திரத்தில் நெய் தடவி அப்படியே சமமாகப் பரப்பி விடுங்கள்.

    இதை தயாரிப்பதற்கு உங்கள் வீட்டில் மைக்ரோவேவ் ஓவன் இருந்தால் எளிதாக இருக்கும். இல்லை அடுப்புதான் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், முன்கூட்டியே ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி, மாவு ஊற்றி வைத்துள்ள பாத்திரத்தை உள்ளே வைத்து சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக விடுங்கள்.

    பத்து நிமிடத்திற்கு ஒருமுறை திறந்து பார்த்துக் கொண்டே இருங்கள். மேல் பகுதி பொன் நிறமாக மாறியதும் நடுவில் ஏதேனும் குச்சியை வைத்து உள்ளே வெந்துவிட்டதா என குத்திப் பாருங்கள்.

    எல்லாம் சரியாக வெந்ததும் வெளியே எடுத்து, அந்த பாத்திரத்தில் இருந்து சேனா போடாவை வெளியே அகற்றி, அப்படியே சூடாக வெட்டி சாப்பிட்டால் சுவை வேற லெவலில் இருக்கும். இதனுடன் ஒரு ஸ்கூப் வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து சாப்பிட்டால், நீங்கள் சொர்க்கத்திற்கே சென்றது போல உணர்வீர்கள். நிச்சயம் இந்த உணவை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள்.

    • சூறோஸ் ஸ்பெயின் நாட்டில் மிகவும் பிரபலமான ஸ்நாக்.
    • குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    சூறோஸ் ஸ்பெயின் நாட்டில் மிகவும் பிரபலமான ஸ்நாக். இதை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் ஸ்பெயினில் உள்ள ஆடு மேய்பவர்களே. `சூறா' இன ஆடுகளின் கொம்புகளின் வடிவத்தில் இருப்பதால், இந்த இனிப்பிற்கு `சூறோஸ்' என்று பெயர் வந்தது என்று கூறப்படுகிறது.

    தேவையான பொருட்கள்.

    நெய்- 2 தேக்கரண்டி.

    சக்கரை- 2 தேக்கரண்டி.

    உப்பு- கால் தேக்கரண்டி.

    மைதா மாவு- 125 கிராம்

    சக்கரை- கால் கப்.

    ஏலக்காய் தூள்- கால் தேக்கரண்டி.

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு 250 கிராம் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் 2 தேக்கரண்டி நெய், 2 தேக்கரண்டி சக்கரை, கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து தண்ணீரை 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். இப்போது தண்ணீரை இறக்கி விட்டு அதில் ஒரு கப் மைதா மாவு சேர்க்க வேண்டும். மாவை சேர்த்தவுடன் கட்டி இல்லாமல் நன்றாக கலந்து விட வேண்டும்.

    இப்போது மாவை ஒரு பவுலில் மாற்றி விட்டு அதை கைகளால் நன்றாக பிசைய வேண்டும். இப்போது மாவு தயார்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கி தயாராக வைத்திருக்கும் மாவை பைப்பிங் பேக்கில் போட்டு சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு நன்றாக பொரித்து எடுக்க வேண்டும். நன்றாக கோல்டன் பிரவுன் கலர் வந்ததும் அதனை எடுத்து விட வேண்டும்.

    சக்கரையை மிக்சியில் போட்டு கொர கொரப்பாக பவுடர் செய்துகொள்ள வேண்டும். இப்போது ஒரு பவுலில் கால் கப் சக்கரை, அத்துடன் கால் தேக்கரண்டி ஏலக்காய்த்தூள் சேர்த்துவிட்டு இரண்டையும் நன்றாக கலந்துவிட்டு பொரித்து வைத்திருக்கும் சூறோசை அதில் போட்டு பிரட்டி எடுக்க வேண்டும். இப்போது சுவையான சூறோஸ் தயார். இதை நியூட்ரெல்லா அல்லது கட்டியான சாக்லேட் சாசுடன் பரிமாறலாம் மிகவும் சுவையாக இருக்கும். இனி சூறோஸை வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்க, விரும்பி சாப்பிடுவார்கள்.

    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக் மிகவும் பிடிக்கும்.
    • சோராஃபளியின் மீது மசாலா பொடி தூவி, சட்னியுடன் பரிமாறவும்.

    தேவையான பொருட்கள்:

    கடலைமாவு - 1 கப்

    உளுந்தமாவு- அரை கப்

    பேக்கிங் பவுடர் - கால் டேபிள் ஸ்பூன்

    எண்ணெய் - பொரிப்பதற்கு

    காஷ்மீரி மிளகாய்த்தூள் - கால் டேபிள் ஸ்பூன்

    கொத்தமல்லித்தழை- 2 டேபிள் ஸ்பூன்

    புதினா இலை - 2 டேபிள் ஸ்பூன்

    இஞ்சி - 1 அங்குலத் துண்டு

    பச்சை மிளகாய்- 5

    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

    சிட்ரிக் அமிலம் - அரை சிட்டிகை

    உப்பு - தேவைக்கு

    ஐஸ்கட்டிகள் - தேவைக்கு

    பிளாக் சால்ட் - தேவைக்கு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு மற்றும் பேக்கிங் சோடாவை கலந்து அடுப்பில் வைத்து குறைவான தீயில் 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். அகலமான பாத்திரத்தில் கடலைமாவு ஒரு கப் மற்றும் உளுந்தமாவை கொட்டி சலித்து எடுக்கவும். பின்பு அந்த மாவில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.

    அதன்பிறகு தயாரித்து வைத்திருக்கும் பேக்கிங் சோடா கரைசலை சிறிது சிறிதாக ஊற்றி மாவை கெட்டியான பதத்துக்கு பிசையவும். பின்னர் அதை மூடி அப்படியே வைக்கவும். 25 நிமிடங்களுக்கு பிறகு அந்த மாவை எடுத்து மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி மென்மையாகும் வரை நன்றாகப் பிசையவும். பின்னர் அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

    ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க உருண்டைகளை எண்ணெய்யில் தோய்த்து எடுத்து வைக்கவும். பின்பு ஒவ்வொரு உருண்டையையும் மெல்லிய சப்பாத்திகளாக தேய்க்கவும். பின்னர் அந்த சப்பாத்திகளை மெல்லிய ரிப்பன்களாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    அகன்ற வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவு ரிப்பன்களை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

     மசாலா பொடி:

    ஒரு சிறிய கிண்ணத்தில் காஷ்மீரி மிளகாய்த்தூளுடன் கால் டேபிள் ஸ்பூன் பிளாக் சால்ட் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    சட்னி:

    ஒரு மிக்சி ஜாரில் கொத்தமல்லித்தழை, புதினா இலை, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகுத்தூள், பிளாக் சால்ட், உப்பு, ஐஸ்கட்டிகள் ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக அரைக்கவும். ஐஸ்கட்டிகள் சேர்த்து அரைப்பதால் சட்னி நீண்டநேரம் நிறம் மாறாமல் இருக்கும். அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி கடலை மாவு, எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றை சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடுபடுத்தவும். இந்த கலவை கெட்டியாக மாறும்போது அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைக்கவும். பின்னர் அதில் ஐஸ்கட்டிகள் மற்றும் தயாரித்து வைத்திருக்கும் சட்னியை சேர்த்து கலக்கவும்.

     பரிமாறும் முறை:

    மொறுமொறுப்பான சோராஃபளியின் மீது மசாலா பொடியை பரவலாகத் தூவி, சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்.

    • வீட்ல இருக்கிற பிரெட்டை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யலாம்.
    • எல்லாருக்கும் சாப்பிடறதுக்கு ரொம்ப பிடிக்கும்.

    ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெட்டை வைத்து ஈஸியா செய்யலாம் சீஸ் சிக்கன் பிரெட் ரோல். இந்த சுவையான பிரெட் ரோல் ரொம்ப ரொம்ப சிம்பிளா சட்டுன்னு செய்து முடிச்சிடலாம். அதுலயும் இந்த மாதிரி வித்தியாசமா பிரெட்ல ரோல் பண்ணி கொடுக்கும் போது டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும். எல்லாருக்கும் சாப்பிடறதுக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க செய்து கொடுத்தது டக்குனு காலி ஆகிடும். சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு கூட இந்த பிரட் ரோல் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. சரி வாங்க சுவையான சீஸ் சிக்கன் பிரெட் ரோல் எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பிரெட்- 6

    வெங்காயம்- 1

    தக்காளி-1

    சிக்கன் - கால் கிலோ

    மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

    மிளகாய்தூள்- கால் டீஸ்பூன்

    மல்லி தூள்- கால் டீஸ்பூன்

    கரம் மசாலா தூள்- கால் டீஸ்பூன்

    இஞ்சிபூண்டு விழுது- கால் டீஸ்பூன்

    மொசரல்லா சீஸ்- 100 கிராம்

    செய்முறை:

    முதலில் பிரெட் துண்டுகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். பின்னர் சிக்கனை சமைக்க ஆரம்பிக்கலாம். சிக்கனை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், இஞ்சிபூண்டு விடுது போட்டு வதக்க வேண்டும். பின்னர் தக்காளி மற்றும் சிக்கனை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் கொடுக்கப்பட்டுள்ள மசாலா தூள்களை வரிசையாக சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளரி 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்ததும் சிக்கன் மசாலா தயார்.

    இப்போது வேகவைத்துள்ள பிரெட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை வெட்டி எடுத்து விட்டு அதனை சப்பாத்தி கட்டையை வைத்து தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதன் நடுவே வேகவைத்த சிக்கன் மசாலாவை வைத்து அதனுடன் சீஸ்சை துருவி மசாலாவுடன் வைத்து பிரெட்டை ரோல் செய்து மூடிக்கொள்ள வேண்டும். அதன் ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரெட் ரோல்களை எடுத்து ஒவ்வொன்றாக பொறித்து எடுத்தால் சுவையான சீஸ் சிக்கன் பிரெட் ரோல் தயார்.

    • எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்தது நார்த்தங்காய்.
    • நார்த்தங்காய் இலைகூட மருத்துவ சக்தி வாய்ந்தது.

    ஆயுர்வேத மருத்துவ முறையில் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கியமான காய் வகை, எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்த நார்த்தங்காய். காய் மட்டுமல்ல, இதன் இலைகூட மருத்துவ சக்தி வாய்ந்தது. எலுமிச்சை வகையைச் சேர்ந்தது என்பதால், இதில் சிட்ரிக் அமிலம் அதிகம் இருக்கும். அதனால், வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படும்.

    `நார்த்தங்காய்' என்றவுடன், பலருக்கும் நினைவுக்கு வரும் ரெசிபி ஊறுகாய்தான். பல்வேறு நன்மைகளைக்கொண்டது என்ற போதிலும், ஊறுகாயை இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க அறிவுறுத்தப்படுவதுண்டு. ஆனால், நார்த்தை இலைப் பொடிக்கு அப்படியான எந்த வரைமுறையும் கிடையாது. அனைவரும் சாப்பிடலாம்.

    பயன்கள்:

    * உடல் சூடு அதிகரிப்பதால் ஏற்படும் பித்தம், வாதம் போன்ற பிரச்னைகள் குணமாகும்.

    * செரிமானப் பிரச்னைகள் ஏற்படாது.

    * வயிறு தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் சிறந்த மருந்து.

    * குடல் பிரச்னைகள் சரியாகும்.

    * இரும்புச்சத்து, சோடியம், கால்சியம், பீட்டா கரோட்டீன், மக்னீசியம், அயோடின், நார்ச்சத்துகள் நிறைந்தது என்பதால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கான மிகச்சிறந்த மருந்து இது.

    * நார்த்தையிலுள்ள செலினியம் சத்து, மூளையின் செயல்பாடுகளைத் தூண்டிவிடும். எனவே, சுறுசுறுப்பாகவும் புத்துணர்வுடனும் செயல்பட முடியும்.

    * மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டாக செயல்படும். எனவே, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    * வாந்தி உணர்வு கட்டுப்படும் என்பதால் கர்ப்பிணிகள் தாராளமாகச் சாப்பிடலாம்.

    * அஜீரணத்தால் ஏற்படும் நெஞ்செரிச்சல் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

    * ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைத்திருக்க உதவும்.

    தேவையான பொருட்கள்:

    நரம்பு நீக்கிய, சுத்தமான இளம் நார்த்தை இலை- 20

    காய்ந்த மிளகாய்- 4

    தேங்காய்- ஒரு கப்

    புளி- எலுமிச்சை அளவு

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    இளம் நார்த்தை இலைகளாக பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் நார்த்தை இலைகளில் அதன் நார்பகுதி அதாவது இலைகளின் நடுவே உள்ள நார்பகுதியை கிள்ளி எடுத்துவிட்டு இலைகளை ஆய்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் காய்ந்த மிளகாயை மட்டும் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

     அதன்பிறகு நார்த்தை இலை, புளி, காய்ந்த மிளகாய் மற்றும் தேங்காய், உப்பு சேர்த்து துவையல் பதத்திற்கு மிக்சி அல்லது அம்மியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான நார்த்தை இலை துவையல் ரெடி. குறிப்பு: இதனை தாளித்தும் சாப்பிடலாம். உடலில் உள்ள பித்தத்தை குறைப்பதற்கு இந்த நார்த்தை இலை துவையல் மிகவும் நல்லது.

    • குளிக்கும்போது தயிரை உடலில் தேய்த்து குளித்தால் வேர்க்குரு மறைந்து விடும்.
    • வாழைப்பழத்தை ஒருபோதும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

    * குழம்பு வடகம் செய்யும்போது துவரம் பருப்பு, உளுந்தம் பருப்புடன் காராமணியும் சேர்த்து ஊறவைத்து அரைத்து விடுங்கள். அதை வடகமாக பொரித்தால் கர கரவென்று ருசியாக இருக்கும்.

    * சமையல் மேடையை நன்கு சுத்தம் செய்து அதில் கொத்தமல்லி தழைகளை பரப்பி, அகன்ற கிண்ணத்தால் மூடி வைத்து விடுங்கள். இரண்டு, மூன்று நாள்கள் பசுமையாக இருக்கும்.

    * ரசத்துக்கு தாளிக்கும் பொழுது சிறிது நெய்யில் கடுகுடன் 4, 5 முழு மிளகையும் சேர்த்து தாளித்தால் ரசம் மணத்துடன் இருக்கும்.

    * கிராம்பை தண்ணீரில் உரசி, முகப்பரு உள்ள இடத்தில் தடவினால் பரு மறைந்து விடும். மீண்டும் பரு வராது.

    * குளிக்கும்போது தயிரை உடலில் தேய்த்து குளித்தால் வேர்க்குரு மறைந்து விடும்.

    * வீட்டில் எந்த ஸ்வீட் செய்தாலும் அதில் சிறிது உப்பு கலந்தால் அதன் சுவை மேலும் கூடும்.

    * சப்பாத்தி அல்லது பூரிக்கு மாவு பிசைந்து, கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால், மேல் பரப்பு காய்ந்து போயிருக்கும். இப்படி நேராமல் இருக்க, மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி வைக்கலாம். அல்லது ஈரத்துணியால் மூடி வைக்கலாம்.

    * நெய்யில் சிறு கட்டி வெல்லத்தை போட்டு வைத்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் கெடாது.

    * வாழைப்பழத்தை ஒருபோதும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

    * வடைக்கு மாவு அரைக்கும்போது நீர் சிறிது அதிகமாகி விட்டால், ஒரு ஸ்பூன் நெய்யை அதில் விடவும். மாவு இறுகி விடும்.

    * அடுப்பில் வைத்திருக்கும் பால் பொங்கி வழியாமல் இருக்க, கடைகளில் விற்கும் எவர் சில்வர் கோலி உருண்டை (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பால்)களை வாங்கி பாலில் போட்டால் போதும். பால் பொங்கவே பொங்காது.

    * பத்து அல்லது பதினைந்து நெல்லை சுத்தமாக கழுவி விட்டு, காலையில் கறந்த பசும் பாலில் போட்டு வையுங்கள். இரவு வரைக்கும் பால் கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும்.

    * கத்தரிக்காய், வாழைக்காய் போன்ற காய்களை நறுக்கியவுடன் நீரில் போட்டு விடுங்கள். இல்லையெனில் அவற்றின் நிறம் மாறி விடும். நிறம் மாறினால் சுவை கெட்டு விடும்.

    ×