என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பொது மருத்துவம்
- சுமார் 7 மணி நேரம் இரவில் நன்கு தூங்க வேண்டும்.
- ஒருவர் படுத்து 15 நிமிடங்களுக்குள் தூங்க வேண்டும்.
பல விலங்குகள், பறவைகள் நின்றுகொண்டே தூங்கும் வழக்கம் உள்ளவை. ஆனால், மனிதன் உட்கார்ந்து கொண்டே தூங்குவது என்பது இயற்கையான செயல் அல்ல. அதிக உடல் எடை, மிகப்பெரிய தொப்பை, சுவாசக்கோளாறு போன்றவை உள்ளவர்கள், இரவு நேர வேலை செய்பவர்கள், தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் உட்கார்ந்த சில நிமிடங்களிலேயே தூங்கி விடுவதுண்டு.
20 வயது நிரம்பிய ஒருவர் சுமார் 7 மணி நேரம் இரவில் நன்கு தூங்க வேண்டும் என்பது ஒரு அறிவியல் கணக்கு. உடலியல் கணக்கும் கூட. ஒருவர் உட்கார்ந்த இடத்தில் எல்லாம் சுமார் 5 நிமிடங்களில் தூங்கி விடுகிறார் என்றால் அவரது உடலில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.
உட்கார்ந்த நிலையில் தூங்கும் போது இடுப்பு, கழுத்து, முதுகு பகுதிகளில் வலி, தசை-மூட்டுகள்- தோள்பட்டை இறுக்கம் போன்ற பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக வர ஆரம்பித்துவிடும்.
உட்கார்ந்து கொண்டே அசைவற்ற நிலையில் தூங்கும் போது உடலின் எல்லா பாகங்களுக்கும் முறையாக ஒழுங்காக கிடைக்க வேண்டிய ரத்த ஓட்டம் சற்று குறைய நேரிடும். இது எல்லாவற்றையும் விட 'டி.வி.டி' என்று சொல்லக்கூடிய `ஆழ்சிரை ரத்த உறைவு' என்கிற மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
சாய்வு நாற்காலியில் முக்கால்வாசி படுத்தது போன்று தூங்கலாம். கர்ப்பிணி பெண்களுக்கு, தூக்கத்தில் மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கு, நெஞ்செரிச்சல், வயிற்றில் அமிலப்பின்னோட்ட நோய் உள்ளவர்களுக்குத் தான் இது உபயோகமாக இருக்கும். சாதாரணமாக இருப்பவர்களுக்கு அல்ல.
உட்கார்ந்து கொண்டே தூங்கும் பழக்கத்தை எப்படி நிறுத்துவது?
1) நீங்கள் உட்கார்ந்திருக்கும் அறையில் உள்ள விளக்குகளை எரிய விடுங்கள்.
2) பக்கத்தில் இருக்கும் யாரிடமாவது எதையாவது பேச ஆரம்பித்துவிடுங்கள்.
3) உடனடி சக்தி கொடுக்கக்கூடிய ஏதாவது ஒரு பானத்தைக் குடித்து, உடலுக்கு சக்தியை உடனே வரவழையுங்கள்.
4) ஒரு பெருமூச்சை இடையில் இடையில் இழுத்து விட்டுக்கொண்டு சில விநாடிகள் அல்லது சில நிமிடங்கள் ஓய்வாக இருங்கள்.
5) கண்களுக்கு வேலை கொடுங்கள்.
6) உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்து எழுந்து வீட்டிற்குள்ளோ, அலுவலகத்திற்குள்ளோ ஒரு ரவுண்டு சுற்றி வாருங்கள்.
ஒருவர் படுத்து 15 நிமிடங்களுக்குள் தூங்க வேண்டும். இதுதான் இயற்கையான தூக்க முறை. ஒருவர் ½ மணி நேரத்திற்கு மேலும் தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறார் என்றால், அது தூக்கமின்மை நோயின் ஆரம்ப அறிகுறி ஆகும். இது உடல் பிரச்சினையாகவும் இருக்கலாம், மனப்பிரச்சினையாகவும் இருக்கலாம். உங்கள் குடும்ப டாக்டரை சந்தித்து ஆலோசனை மற்றும் சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள். பயப்படத் தேவையில்லை.
- ஐஸ்கிரீமை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
- அதிகமான அளவு ஐஸ்கிரீம் உட்கொள்ள கூடாது.
ஐஸ்கிரீமை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சர்க்கரை நோயாளிகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அவர்கள் ஐஸ்கிரீமை சாப்பிடவே கூடாது என்பதல்ல. தங்கள் ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும் போது ஐஸ்கிரீமை எப்பொழுதாவது சாப்பிடலாம். ஒரு அரை கப் ஐஸ்கிரீமில் 137 கலோரிகள், 7 கிராம் கொழுப்பு, 16 கிராம் கார்போஹைட்ரேட், 14 கிராம் இனிப்பு இருக்கிறது.
ஐஸ்கிரீமில் அதிகமான அளவு கார்போஹைட்ரேட், சர்க்கரை, கலோரி மற்றும் நிறைவுற்ற கொழுப்பு இருப்பதாலும், ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பதாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த உணவாக கருதப்படுவதில்லை. இருப்பினும் சர்க்கரை நோயாளிகள் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டால் மூன்று வாரத்துக்கு ஒருமுறை, அரை கப் ஐஸ்கிரீம் சாப்பிடலாம். அப்போது அவர்கள் கீழ்கண்டவற்றை பின்பற்ற வேண்டும்.
1) ஐஸ்கிரீம் சாப்பிடும் போது குறைந்த கார்போஹைட்ரேட், கலோரி, சுகர், கொழுப்பு மற்றும் அதிக புரதம் உள்ள ஐஸ்கிரீம்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
2) உணவுக்கு பின் ஐஸ்கிரீம் சாப்பிடுவது நல்லது. அப்போது ஐஸ்கிரீமில் உள்ள அதிக கார்போஹைட்ரேட் அளவை சமன் செய்ய அன்று உட்கொள்ளக்கூடிய உணவில் கார்போஹைட்ரேட் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
3) ஐஸ்கிரீமின் மேலே டாப்பிங்ஸாக பாதாம், பிஸ்தா போன்றவற்றை உபயோகிக்க வேண்டும். இது ஐஸ்கிரீம் சாப்பிட்ட உடனே ஏற்படும் சுகர் ஸ்பைக்ஸை திடுக்க உதவுகிறது.
4) அதிகமான அளவு ஐஸ்கிரீம் உட்கொள்ள கூடாது.
5) ரத்த சர்க்கரை அதிகமாக இருக்கும் போது, அந்த சூழலில், ஐஸ்கிரீம் உண்ண முயற்சிக்க கூடாது.
ஐஸ்கிரீமில் உள்ள டிரிப்டோபான் எனும் அமினோஆசிட் "பீல் குட்" ஹார்மோன் என்று அழைக்கப்படும் "செரட்டோனின்" சுரப்பதை அதிகப்படுத்துகிறது. இது மன அழுத்தத்தை குறைத்து உற்சாகமாக வைத்திருக்க உதவுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
- ஆத்மாவில் மூன்று நிலை உள்ளது.
- மூச்சு விடுதலில் இறுக்கம் அதிகமாக இருக்கும்.
நாம் தூங்கி எழுந்த உடனே அதிக தும்மல் வருவதும், மழை மற்றும் பனி காலத்தில் மீண்டும் மீண்டும் சளி ஜலதோஷம் வருவது, சளி பிடித்த போது மூச்சு வெளியே விடுவதில் சிரமமாக இருப்பது, மார்பை இறுக்கி பிடித்தது போன்ற உணர்வு, மூச்சை வெளியே விடும் போது wheeze என்னும் விசில் போன்ற சத்தம் வந்தால் இது மிதமாக இருக்கும் போது ஸ்டெதஸ்கோப் வழியாக கேட்க முடியும். அதுவே தீவிரமாக இருந்தால் மார்பிற்கு அருகில் வந்தாலே கேட்க முடியும். இதை தான் bronchial asthma என்பார்கள்.
இந்த அறிகுறிகள் சிறு வயதிலும் இருக்கலாம் அல்லது வளர வளர வர தொடங்கலாம். சிறு வயதில் இருந்தே அடிக்கடி ஆக்ஸிஜன் மாஸ்க், நெபுலைஸர் வைப்பதை பார்த்திருப்போம். இந்தியாவில் மட்டும் 25 மில்லியன் மக்களுக்கு ஆஸ்துமா இருக்கிறது, அதில் 6 மில்லியன் குழந்தைகள் என கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்துமா வருவதற்கான காரணம் குறிப்பாக இது மட்டும் தான் என்று இன்றுவரை எந்த அறிவியலும் கண்டுப்பிடிக்கவில்லை.
ஆத்மாவில் மூன்று நிலை உள்ளது. mild, moderate, severe. சிலருக்கு வெறும் அலர்ஜியோடு நின்ருவிடும். இன்னும் சிலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவிற்கு தீவிரமாக இருக்கலாம். இது சிறுகுழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
மூச்சு விடுதலில் சிரமம் இருக்கும். மூச்சு விடுதலில் இறுக்கம் அதிகமாக இருக்கும். சிலருக்கு மைல்டாக இருக்கும். சிலருக்கு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் அளவுக்கு இருக்கும்.
தொண்டையிலிருந்து நுரையீரலுக்கு செல்லும் டியூப் முடிச்சுகள் இறுக்கமாகி மூடிக்கொள்ளும். சளி தூசி, மாசு, புகையால் நுரையீரல் பாதிக்கப்படும் போது சளி அதிகமாக வருகிறது. இயல்பாகவே நுரையீரலில் சளி உற்பத்தி இருக்கும். ஆனால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு சளி bronchioles துவாரத்தை அடைப்பதால் சுவாசிக்க சிரமம் ஏற்படும்.
மூச்சு உள்ளிழுத்து வெளியே விடும்போது மிகவும் சிரமமாக இருக்கும் ஏனென்றால் அந்த பாதை முழுவதும் அடைத்துவிடும். மிகச்சிறு துவாரத்தால் மட்டுமே மூச்சு விடுதல் இருக்கும். அதனால் தான் ஆஸ்துமாவின் போது சுவாசிக்க சிரமமாக இருக்கிறது.
தடுப்பது எப்படி
ஆஸ்துமாவை முழுவதுமாக குணப்படுத்த முடியாது. ஆனால் அறிகுறியை கட்டுப்படுத்தலாம். இதற்கான குறிப்பிட்ட காரணங்கள் இல்லையென்றாலும் சில காரணங்களால் ஆஸ்துமா வரலாம் என்று சொல்லப்படுகிறது.
அப்படி சொல்லப்படும் காரணங்களில் மரபணு போக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். குடும்பத்தில் பெற்றோர்களுக்கு ஆஸ்துமா இருக்கும்போது அவை அப்படியே குழந்தைகளுக்கு மாறுகிறது. இதை முழுவதுமாக குணப்படுத்த முடியவில்லை என்றாலும் ஆஸ்துமாவை தூண்டும் காரணங்களை கட்டுப்படுத்தலாம்.
புகை பிடிக்கும் இடம், காற்று மாசடைந்த இடங்களில் ஆஸ்துமா தூண்டுதல் அதிகரிக்கலாம். அந்த இடத்தில் போகாமல் இருப்பதன் மூலம் இதை தடுக்கலாம்.
- அதிக உதிரபோக்கு என்றாலும் மென்சுரல் கப் அசெளகரியம் அளிக்காது.
- மருத்துவரை அணுகி மென்சுரல் கப் பயன்படுத்துவது நல்லது.
மென்சுரல் கப் மலிவு விலையில் கிடைக்கிறது. இதன் விலை அதிகம் என்றாலும் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை கணக்கிடும் போது அது மலிவானது தான். இது டாம்பன்கள் (Tampons) பயன்படுத்துவதை விட பாதுகாப்பானது.
* நாப்கின் மற்றும் டாம்பன்களை விட மென்சுரல் கப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு சிறந்தது.
* அதிக உதிரபோக்கு என்றாலும் மென்சுரல் கப் அசெளகரியம் அளிக்காது.
* இதை கருத்தடை சாதனம் ஐயூடி உடன் அணியலாம்.
* மென்சுரல் கப் பெரும்பாலான பெண்களின் விருப்பமாக உள்ளது. இது டேம்பன் போல் அல்லாமல் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை.
* ஒரு முறை விலை கொடுத்து வாங்கினால் நீண்ட காலம் பயன்படுத்தலாம்.
* மென்சுரல் கப் பாதுகாப்பானவை. இது ரத்தத்தை உறிஞ்சுகொள்ளாமல் சேகரிக்கிறது. இதனால் ரத்தம் உறிஞ்சும் டேம்பன், நாப்கின் போன்று தொற்று பரவுவதற்கு வாய்ப்பு இல்லை.
* தொற்று அபாயம் இல்லை. இந்த மென்சுரல் கப்பானது ஒன்று முதல் இரண்டு அவுன்ஸ் வரை உதிரத்தை வைத்திருக்கும்.
* டேம்பன் பயன்பாடு ஒரு அவுன்சிலும் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வைத்திருக்க முடியும். இது சுற்றுப்புற சூழலுக்கு உகந்தவை அல்ல.
தீமைகள்
* மென்சுரல் கப் பயன்பாடு குழப்பமானதாக இருக்கலாம். செருகுவது அல்லது அகற்றுவது சிலருக்கு கடினமாக இருக்கும். சரியான பொருத்தத்தை கண்டறிவது சிரமமாக இருக்கலாம்.
* சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினை உண்டாகலாம். பிறப்புறுப்பு எரிச்சல் ஏற்படலாம்.
* சில நேரங்களில் மென்சுரல் கப் அகற்றும் போது கசிவு உண்டாகலாம். செயல்முறையின் போது கசிவுகளை தவிர்க்க முடியாது. இதை செருகுவதற்கு அல்லது அகற்றுவதற்கு கடினமாக இருக்கும். காரணம் நீங்கள் சரியான அளவை அணிந்திருக்க மாட்டீர்கள்.
* மென்சுரல் கப் சரியான மடிப்பை பெறாத நிலையை சில நேரங்களில் உணரலாம். கப்பை வெளியே இழுப்பது சிரமமாக இருக்கலாம்.
* மென்சுரல் கப் எல்லாமே ஒரே அளவு கிடையாது. உங்கள் யோனிக்கும் பொருத்தமான ஒன்றை கண்டுப்பிடிப்பதற்கு முன்பு நீங்கள் சரியான பிராண்டுகளை முயற்சிக்க வேண்டியிருக்கும்.
* பெரும்பாலான மென்சுரல் கப் லேடெக்ஸ் இல்லாத பொருள்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இது லேடெக்ஸ் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் சிலருக்கு சிலிக்கான் அல்லது ரப்பர் பொருள் ஒவ்வாமையை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. இது யோனி பகுதியில் எரிச்சலையும் அரிப்பையும் மற்றும் பெண் உறுப்பில் பிரச்சனைகள் கூட உண்டு செய்யலாம்.
* மென்சுரல் கப் சரியாக சுத்தம் செய்து பராமரிக்கப்படாவிட்டால் யோனி எரிச்சல் அரிப்பு உண்டாகும். லூப்ரிகேஷன் இல்லாமல் கப் உள்ளே வைத்தால் அது அசெளகரியத்தை உண்டு செய்யலாம்.
* மென்சுரல் கப் சரியாக சுத்தம் செய்யாத நிலையில் அது அந்தரங்க உறுப்பில் அதிக தொற்றை உண்டு செய்யலாம். அதனால் முறையாக மருத்துவரை அணுகி மென்சுரல் கப் பயன்படுத்துவது நல்லது.
- உதிரபோக்கு ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
- மென்சுரல் கப்பானது மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை.
ஒவ்வொரு பெண்களும் பூப்படைந்த காலம் முதல் மெனோபாஸ் காலம் வரை மாதவிடாய் சுழற்சியை எதிர்கொள்கிறார்கள். உதிரபோக்கு ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இந்த நேரத்தில் அவர்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் கவனமாக இருக்க வேண்டும்.
முன்னோர்கள் காலத்தில் துணிகளை பயன்படுத்தி வந்தவர்கள் பிறகு நாப்கினுக்கு மாறினார்கள். தற்போது பெருமளவு நாப்கின் பயன்பாடு இருந்தாலும் அதை தொடர்ந்து டேம்பன், மென்சுரல் கப் பயன்படுத்துவதும் உண்டு. இந்த மென்சுரல் கப் பயன்பாடு குறித்து தான் இப்போது பார்க்க போகிறோம்.
மென்சுரல் கப் சிறிய நெகிழ்வான கோப்பை சிலிகான் அல்லது லேடெக்ஸ் ரப்பரால் ஆனது. இது பார்க்க புனல் வடிவத்தில் இருக்கும். இது மாதவிடாய் திரவத்தை பிடிக்கவும் சேகரிக்கவும் பயன்படும். நாப்கின் போன்று ரத்தத்தை உறிஞ்சாமல் சேகரித்து வைக்கும்.
மென்சுரல் கப் பயன்படுத்தும் போது அதிக உதிரபோக்கையும் அது சேமிக்க கூடும். இதனால் நாப்கின், டேம்பன் போன்று இல்லாமல் இது சுற்றுசூழல் நட்பு பொருளாகவும் செயல்படுகிறது. உதிரபோக்கு அளவை பொறுத்து நீங்கள் 12 மணி நேரம் வரை கூட இந்த கப் வைத்திருக்கலாம். மென்சுரல் கப் பல வகைகளில் கிடைக்கிறது.
முதல் முறையாக மென்சுரல் கப் பயன்படுத்தினால் அது சங்கடமாக இருக்கும். அதனால் கப்பின் விளிம்பில் சுத்தமான எண்ணெய் அல்லது லூப்ரிகண்ட் பயன்படுத்தி உயவூட்டவும். ஈரமான மாதவிடாய் கோப்பை செருகுவதற்கு எளிதானது.
சுத்தம் செய்யும் முறை
மாதவிடாய் சுழற்சி காலத்தில் மென்சுரல் கப்பானது மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை. ஒவ்வொரு முறையும் மாதவிடாய் சுழற்சி முடிவடைந்த பிறகு, மென்சுரல் கப் எடுத்து சுத்தமான வெந்நீரில் கொதிக்க வைத்து நன்றாக வெயிலில் உலர்த்தி அதற்குரிய உறையில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இரண்டு முறையாவது மாற்ற வேண்டும்.
இவை நீடித்து பயன்படுத்தக்கூடியவை. 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை இவை நீடிக்கும். எனினும் நீங்கள் வாங்கும் மென்சுரல் கப் வகைகள் பொறுத்து இவை மாறுபடலாம். பயன்பாட்டுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு இதை பயன்படுத்த வேண்டாம்.
- கருத்தரிப்பு பிரச்சனைக்கான ஆபத்து காரணியாகும்.
- பிஎம்ஐ என்பது பெண்ணின் உயரத்தை பொறுத்து வேறுபடும்.
உடல் பருமன் என்பது கருத்தரிப்பு பிரச்சனைக்கான ஆபத்து காரணியாகும். இது சாதாரணமாக கருமுட்டை வெளிவரும் பெண்களின் மலட்டுத்தன்மைக்கு பங்களிக்கிறது என்கிறது ஆராய்ச்சி.
உடல் பருமன் அதிகம் கொண்ட பெண்கள், சாதாரண எடையுள்ள பெண்களை காட்டிலும் 43 சதவீதம் குறைவாகவே கர்ப்பம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது கண்டறியப்பட்டது. மேலும் இந்த ஆய்வில் வழக்கமான கூடுதல் ஆபத்து காரணியாக உடல் பருமன் இருப்பதையும் கண்டறிந்தனர்.
பெண்களின் உடல் எடை மற்றும் கருவுறாமைக்கு இடையிலான உறவை ஆய்வு செய்த முதல் ஆய்வு இது தான் என்பதால் உடல் பருமனுக்கும், கருவுறுதலுக்கும் இடையில் தொடர்பு உண்டு.
ஒரு பெண் கர்ப்பத்துக்கு முன் மற்றும் கர்ப்ப காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த, 25-க்கும் குறைவான பிஎம்ஐ கொண்டிருக்க வேண்டும். ஆனால் கர்ப்பத்துக்கான ஆரோக்கியமான பிஎம்ஐ என்பது பெண்ணின் உயரத்தை பொறுத்து ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
சிறந்த பிஎம்ஐ வரம்பில் உள்ள பெண்ணுக்கு ஒழுங்கற்ற மாதவிடாயின் காரணமாக ஹார்மோன் சமநிலையின்மை இருக்கலாம். மற்றொரு பெண்ணுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய், தைராய்டு போன்ற வேறு காரணத்தால் உடல் பருமன் இருக்கலாம்.
ஆனால் ஒவ்வொரு மாதமும் கருமுட்டையை வெளியேற்றுவதும் வழக்கமான மாதவிடாயையும் கொண்டிருந்தால் அவர்களுக்கு கர்ப்பம் தரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இவர்கள் கர்ப்பத்துக்கு பிறகு அநேக விஷயங்களில் கவனம் செலுத்தினால் போதுமானது.
உடல் எடை அதிகளவில் இருக்கும் போது மாதவிடாயை தூண்டும் ஹார்மோன்கள் மற்றும் உங்கள் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் அளவுகளுக்கு இடையில் சிக்கல் உண்டாகிறது.
கொழுப்பு செல்கள் பெரும்பாலும் அதிக ஈஸ்ட்ரோஜன் அளவை உண்டாக்குவதால் இது அண்டவிடுப்பின் போது உங்கள் உடலுக்கு எதிராக வேலை செய்யும். இதனால் அண்டவிடுப்பின் நாள் மாறுபடும்.
சமநிலையற்ற ஹார்மோன் அளவுகள் எப்போதுமே கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை குறிக்காது. ஆனால் வழக்கமான அண்டவிடுப்புமற்றும் மாதவிடாய் சுழற்சிகளை அனுபவிப்பார்கள். இது கருத்தரிப்பதை கடினமாக்குகிறது.
உடல் எடையோடு கர்ப்பத்தின் எடை அதிகரிப்பு அதைவிட மோசமாக்குகிறது. இவை அனைத்தும் கர்ப்பத்தை பாதிக்கும் என்பதோடு பிறக்காத குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கலாம். மேலும் கருச்சிதைவு, கர்ப்பகால நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தால் ஆகியவை ஏற்படும்.
- ஸ்க்ரீனிங் சோதனைகள் கருவின் சாத்தியக்கூறுகளை மதிப்பிடுகிறது.
- கர்ப்பத்தின் 11 முதல் 14 வாரங்களுக்கு இடையில் செய்யப்படுகிறது.
30 வயதுக்கு மேல் கர்ப்பமாக இருக்கும் 1000 பெண்களில் ஒருவர் டவுன் சிண்ட்ரோம் குழந்தையை பெற்றெடுக்க வாய்ப்பு உள்ளது. 35 வயதுக்கு மேல் கர்ப்பமாக இருந்தால் 400 பெண்களில் ஒருவர் டவுன் சிண்ட்ரோம் குழந்தையை பெற்றெடுக்க வாய்ப்புண்டு. 42 வயதில் கர்ப்பமாக இருந்தால் 60 பெண்களில் ஒருவர் டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளை பெற்றெடுக்க வாய்ப்புண்டு. 49 வயதில் கர்ப்பமாக இருந்தால் 12 பெண்களில் ஒருவர் டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளை பெற்றெடுக்க வாய்ப்புண்டு.
டவுன் நோய்க்குறிக்கான ஸ்க்ரீனிங் சோதனைகள் கருவின் சாத்தியக்கூறுகளை மதிப்பிடுகிறது. இதற்கு செலவு குறைவு கண்டறிவதும் எளிதாக இருக்கும். டவுன் சிண்ட்ரோம் குழந்தைகளை கண்டறிய சோதனைகளை நடத்தலாமா என்பதை பெற்றோருக்கு தீர்மானிக்க இவை உதவுகின்றன.
நுச்சல் ஒளி ஊடுருவல் சோதனை (என்.டி)
இந்த பரிசோதனை பெண் கர்ப்பத்தின் 11 முதல் 14 வாரங்களுக்கு இடையில் செய்யப்படுகிறது. ஒரு அல்ட்ராசவுண்ட் வளரும் குழந்தையின் கழுத்தின் பின்னால் உள்ள திசுக்களின் மடிப்புகளில் தெளிவான இடத்தை அளவிடுகிறது.
டவுன் சிண்ட்ரோம் குழந்தைக்கு இந்த இடத்தில் திரவம் அதிகமாக குவிந்திருக்கும். வழக்கத்தை காட்டிலும் இது பெரியதாக இருக்கும். இந்த பரிசோதனை தாய் வழி ரத்த பரிசோதனையை பின்பற்றி செய்யப்படுகிறது. அனுபவமிக்க நிபுணர்கள் இதை எளிதாக கண்டறிந்துவிட முடியும்.
ட்ரிபிள் ஸ்க்ரீனிங் / நான்கு மடங்கு ஸ்க்ரினிங்
பல மார்க்கர் சோதனை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சோதனை கர்ப்பத்தின் 15 முதல் 18 வாரங்களில் அதாவது 3 மாத கர்ப்பத்தின் முடிவில் இருந்து 5 மாத காலத்துக்குள் செய்யப்படுகிறது. இந்த பரிசோதனையில் தாயின் ரத்தத்தில் பரிசோதனை செய்யப்பட்டு சாதாரணத்தன்மை கணக்கிடப்படுகிறது. 3 பரிசோதனைகளுக்காக மூன்று ஸ்க்ரீனிங் அல்லது நான்கு ஸ்க்ரீனிங் செய்யப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த பரிசோதனை
இந்த பரிசோதனை முதல் மூன்று மாத கர்ப்பகாலத்தில் செய்யப்படுகிறது. இது நுச்சல் ஸ்கேன் போல் இல்லாமல் முதல் மூன்று மாதம் மற்றும் இரண்டாவது மூன்று மாத காலம் போன்றவற்றின் ரத்த சோதனை பரிசோதனைகள் மூலம் பெறப்பட்ட முடிவுகளை ஒருங்கிணைக்கிறது. இது பெற்றோருக்கு துல்லியமான முடிவுகளை வழங்குகிறது.
மரபணு அல்ட்ராசவுண்ட் சோதனை
இந்த சோதனை 18 முதல் 20 வாரங்களுக்கு இடையில் செய்யப்படுகிறது. டவுன் சிண்ட்ரோம் நோய்க்குறியுடன் தொடர்பு கொண்டுள்ள எந்தவொரு உடல் அறிகுறிகள் மற்றும் ரத்த பரிசோதனைகளுடன் விரிவான அல்ட்ராசவுண்ட் கருவை பரிசோதிக்கிறது.
செல் இல்லாத டி.என்.ஏ
இது ரத்த பரிசோதனையாகும். தாயின் ரத்தத்தில் காணப்படும் கரு டி.என்.ஏ வை பகுப்பாய்வு செய்கிறது. இது முதல் மூன்று மாதங்களில் செய்யப்படுகிறது. இந்த சோதனை ட்ரைசோமி 21 ஐ துல்லியமாக கண்டறீகிறது. டவுன் சிண்ட்ரோம் கொண்டிருக்கும் குழந்தையை சுமக்கும் ஆபத்து கொண்ட பெண்களுக்கு இந்த சோதனை பரிந்துரைக்கப்படுகிறது.
- குழந்தைகள் கவனக்குறைவாக இருப்பார்கள்.
- குரோமோசோம் எண்ணிக்கையில் கூடுதல் நகலுடன் பிறப்பதால் உண்டாவதாகும்.
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை எதிர்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துவார்கள். ஒரு பெண் கர்ப்பமானதை உறுதி செய்யும் நாள் முதல் அவர் பிரசவ காலம் வரை அவர் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு உழைப்பு தர வேண்டும். போதுமான ஓய்வு வேண்டும். அவரது குடும்பத்தில் யாருக்கேனும் உடல் ஆரோக்கிய குறைபாடு இருந்தால் இது குறித்து முன்னரே மருத்துவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
டவுன் சிண்ட்ரோம் என்பது குழந்தை 21 குரோமோசோம் எண்ணிக்கையில் கூடுதல் நகலுடன் பிறப்பதால் உண்டாவதாகும். இது ட்ரைசோமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த குறைபாடு இருந்தால் குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் தாமதங்கள் மற்றும் குறைபாட்டை உண்டாக்குகிறது.
குழந்தையின் செல்கள் உருவாகும் போது ஒவ்வொரு கலமும் மொத்தம் 46 குரோமோசோம்கள் என 23 ஜோடிகளை பெற வேண்டும். இந்த குரோமோசோம்கள் பாதி தாயிடம் இருந்தும், பாதி தந்தையிடம் இருந்தும் பெறுகிறது. இது வழக்கமாக நடப்பது.
அறிகுறிகள்
கர்ப்ப காலத்தில் டவுன் சிண்ட்ரோம் குழந்தையை சுமக்கும் போது ஸ்க்ரினிங் பரிசோதனையின் மூலம் கண்டறிந்துவிடலாம்.
* குழந்தையின் தலை சிறியதாக இருக்கும்
* தட்டையான முகத்தை கொண்டிருப்பர்கள்
* காதுகள் சிறியதாக வித்தியாசமாக இருக்கும்
* கழுத்து வீக்கம் கொண்டிருப்பார்கள்.
* நாக்கு மேல் நோக்கி, கண்கள் சாய்வான நிலையை கொண்டிருப்பார்கள்.
* தசை மோசமாக இருக்கும்.
* டவுன் சிண்ட்ரோம் நோய் தாக்கம் கொண்ட குழந்தை சாதாரண குழந்தை போல் பிறக்கும். ஆனால் அவர்கள் வளர்வது மிக மெதுவாக நடைபெறும்.
இந்த நோய்க்குறி கொண்டிருக்கும் குழந்தைகள் கவனக்குறைவாக இருப்பார்கள், கற்றல் குறைபாட்டை கொண்டிருப்பார்கள், மனக்கிளர்ச்சியோடு இருப்பார்கள், குறுகிய கவனம் இருக்கும்.
பிறவியிலேயே இதய குறைபாடுகள், காது கேட்பதில் சிக்கல், மோசமான பார்வை அதாவது கண்கள் மேக மூட்டத்துடன் காணப்படும்.
இடுப்பு பிரச்சனைகள், லுகேமியா நாள் பட்ட மலச்சிக்கல், தூங்கும் போது மூச்சுத்திணறல், கவனம் கொள்வது, குறைந்த தைராய்டு சுரப்பு ஹைப்போதைராய்டிசம், உடல் பருமன், தாமதமாக பல் வளர்ச்சி பெறுதல், உணவை மென்று விழுங்குவதலில் சிக்கல் போன்றவற்றை உண்டாக்குகிறது.
வயதான காலத்தில் வரக்கூடிய அல்சைமர் என்னும் மறதி நோய் டவுன் சிண்ட்ரோம் கொண்டிருக்கும் குழந்தைகள் அவர்களது எதிர்காலத்தில் அனுபவிக்க வாய்ப்புண்டு.
- மனித வாழ்க்கையில் உணவு பழக்க வழக்கம் என்பது மிகவும் முக்கியமானது.
- நல்ல உணவுகளை எவ்வளவு சாப்பிட்டாலும் தப்பில்லை.
மனித வாழ்க்கையில் உணவு பழக்க வழக்கம் என்பது மிகவும் முக்கியமானது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல சில உணவுகளை அளவோடு எடுத்துக்கொண்டால் நல்லது. பொதுவாக நல்ல உணவுகளை எவ்வளவு சாப்பிட்டாலும் தப்பில்லை. ஆனால், நாம் சாப்பிட்ட உணவு எவ்வளவு நேரத்தில் செரிமானம் ஆகும் என்பதை தெரிந்துகொண்டு சாப்பிட்டால் நல்லது.
இல்லையென்றால் உடல் எடை அதிகரிப்பு, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, சர்க்கரை நோய், போன்ற நோய்கள் தான் நமக்கு பரிசாக கிடைக்கும். உண்ணும் உணவு விரைவாக செரிமானமாக வேண்டும். அப்போதுதான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
நாம் உட்கொள்ளும் உணவின் வகை உள்ளிட்டவற்றை பொறுத்து செரிமான செயல்முறை அமையும். இருப்பினும் சாப்பிடும் உணவை பொறுத்து செரிமான செயல்முறை 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை நடைபெறலாம் என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. எனவே, இந்த கட்டுரையில் எந்தெந்த உணவுகள் செரிமானமாக எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
காய்கறிகள்
தக்காளி, முள்ளங்கி, குடை மிளகாய், வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து அதிகம் கொண்டவைகள் செரிமானமாக குறைந்தபட்சம் 30-40 நிமிடங்கள் ஆகும். முட்டைக்கோஸ், காலிபிளவர், புரோக்கோலி உள்ளிட்ட காய்கறிகள் 40 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளும். கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் செரிமானமாக சுமார் 50 நிமிடங்கள் ஆகும்.
பழங்கள்
ஆரஞ்சு, திராட்சை மற்றும் வாழைப் பழங்கள் சுமார் 30 நிமிடங்களில் செரிமானமாகிவிடும். ஆப்பிள், பேரிக்காய், கிவி, செர்ரி போன்றவை ஜீரணமாக சுமார் 40 நிமிடங்கள் செலவாகும்.
கிழங்கு வகைகள்
காய்கறிகளை காட்டிலும் கிழங்கு வகைகளின் செரிமான நேரம் சற்றே மாறுபடுகிறது. உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சோளம் போன்றவை செரிமானமாக சுமார் 1 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.
முட்டை
முட்டையின் மஞ்சள் கரு மட்டும் செரிமானம் அடைய 30 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளும். அதேநேரம், முழு முட்டையும் செரிமானமாவதற்கு சுமார் 45 நிமிடங்களாகும்.
பால் பொருட்கள்
பாலில் புரதம், கால்சியம், கொழுப்பு, வைட்டமின்கள் என பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பாலாடைக் கட்டிகள் செரிமானம் அடைவதற்கு சுமார் 2 மணி நேரமாகும். கெட்டியான பாலாடைக் கட்டிகள் செரிமானமாக 5 மணி நேரம் கூட ஆகலாம்.
தானிய வகைகள்
கோதுமை, பழுப்பு அரிசி, ஓட்ஸ், சோளம் போன்ற தானியங்கள் செரிமானமாகி வயிற்றில் இருந்து வெளியேற சுமார் 90 நிமிடங்கள் வரை ஆகலாம். அதேபோல் பருப்பு வகைகள், பட்டாணி, பீன்ஸ் போன்றவை செரிமானமாவதற்கு 2 மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும்.
இறைச்சி
எண்ணெய் இல்லாத மீன் வகைகள், கடல் உணவுகளை சாப்பிட்டால் அவை 30 நிமிடங்களுக்குள் செரிமானமாகிவிடும். ஆடு, கோழி, மாடு, போன்ற இறைச்சி உணவுகள் செரிமானம் ஆவதற்கு 4 முதல் 6 மணி நேரமாகும். சில சமயங்களில் முழுமையாக செரிமானம் ஆவதற்கு 24 மணி நேரம் கூட எடுத்துக்கொள்ளும் என்பது உணவியல் நிபுணர்களின் கருத்து.
* விதைகள், கொட்டைப்பருப்புகள் (சூரியகாந்தி, பூசணி, எள், பாதாம், முந்திரி)- 60 நிமிடங்கள்
* பதப்படுத்தப்பட்ட இறைச்சி- 3 முதல் 4 மணி நேரம்
* மீன் வகைகள்- 30 நிமிடம்
* நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள் (வெள்ளரி, தக்காளி, முள்ளங்கி)- 30 முதல் 40 நிமிடங்கள்
* இலை காய்கறிகள் (முட்டைக்கோஸ், பிரக்கோலி, காலிபிளவர்)- 40 முதல் 50 நிமிடங்கள்
* மாவுச்சத்துள்ள காய்கறிகள் (சோளம், பூசணி, கிழங்கு)- 60 நிமிடங்கள்
* தானியங்கள் (தினை, ஓட்ஸ்)- 90 நிமிடங்கள்
* பருப்பு வகைகள் (பருப்பு, கொண்டைக்கடலை, பட்டாணி, பீன்ஸ்)-2 முதல் 3 மணி நேரம்
* தண்ணீர் நிறைந்த பழங்கள் (தர்பூசணி)- 20 முதல் 25 நிமிடங்கள்
* குறைந்த தண்ணீர் உள்ள பழங்கள் (ஆரஞ்சு, திராட்சைப் பழம், வாழைப்பழம்)- 30 நிமிடங்கள்
* மிகக் குறைந்த தண்ணீர் உள்ள பழங்கள் (ஆப்பிள், பேரிக்காய், செர்ரி, கிவி)- 40 நிமிடங்கள்
* பழச்சாறு- 15 நிமிடங்கள்
- பழங்களை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
- பழங்கள் மூலம் வைட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் நமக்கு கிடைக்கின்றன.
பழங்களை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். பழங்கள் மூலம் வைட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் நமக்கு கிடைக்கின்றன.
உலகின் விலை உயர்ந்த பழங்களில் ஒன்றான `யுபாரி கிங் முலாம் பழம்' பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இதன் விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்.
யுபாரி கிங் முலாம் பழம், ஜப்பானின் `யுபாரி' பகுதியில் பிரத்தியேகமாக வளர்க்கப்படுகிறது. இதனால்தான் இப்பெயர் பெற்றது. இந்த நகரத்தின் தட்பவெப்பநிலை முலாம் பழங்களை பயிரிடுவதற்கு மிகவும் ஏற்றது. மிகக் குறைந்த அளவு உற்பத்தி மற்றும் அதிக தேவை காரணமாக, இது உலகின் மிக விலை உயர்ந்த பழமாக உள்ளது.
2019-ம் ஆண்டில், ஒரு ஜோடி முலாம்பழம் ரூ.31.6 லட்சத்துக்கு விற்கப்பட்டது. அதாவது ஒரு முலாம்பழத்தின் விலை ரூ.15 லட்சத்துக்கு மேலாகும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் மார்ச் வரை இந்தப் பழம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒவ்வொரு முலாம்பழமும் வளர 100 நாட்கள் ஆகும். இந்த முலாம்பழங்களை உற்பத்தி செய்ய சிறப்பு வகையான உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இவற்றின் நறுமணமும், சுவையும் அதிகரித்தும், குறைவான விதையுடனும் காணப்படுகிறது.
வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற தனிமங்கள் இந்த முலாம்பழத்தில் காணப்படுகின்றன.
உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, ரத்த அழுத்தத்தை குறைப்பது, உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பது மற்றும் சரும பளபளப்பு தருவது போன்றவை இதன் சிறப்பு. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் புற்று நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு கடைகள், அங்காடிகள், சந்தைகள் போன்றவற்றில் இந்த விலை உயர்ந்த பழம் கிடைப்பது கடினம். விலை அதிகமாக இருந்தாலும் ஜப்பான் மக்கள் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
- ஒவ்வொரு பழங்களையும் சாப்பிடுவதற்கு உகந்த நேரம் இருக்கிறது.
- தூங்க செல்வதற்கு முன்பு சில பழங்களை அறவே தவிர்ப்பது நல்லது.
பழங்களில் இயற்கையான இனிப்பு மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதால் அவை தின்பண்டங்கள், நொறுக்குத்தீனிகள், இனிப்பு பலங்காரங்களுக்கு மாற்றுத்தேர்வாக கருதப்படுகின்றன. ஒவ்வொரு பழங்களையும் சாப்பிடுவதற்கு உகந்த நேரம் இருக்கிறது. அதிலும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு சில பழங்களை அறவே தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் சில பழங்கள் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். தூக்கத்தைச் சீர்குலைக்கும். தூங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன்பு உட்கொண்டால் உடல் எடை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கலாம். இரவில் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டிய அத்தகைய பழங்களுள் சிலவற்றை பார்ப்போம்...
சிட்ரஸ் பழங்கள்:
ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் அமிலத்தன்மை கொண்டவை. இரவில் தூங்குவதற்கு முன்பு அவற்றை உட்கொள்ளும்போது அதிலிருக்கும் அதிகளவிலான அமிலத்தன்மை வயிற்றுக்கு தொந்தரவு கொடுக்கும். செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். அசிடிட்டி சார்ந்த பிரச்சினைகள் மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம். அதனால் தூக்கம் சீர்குலைய நேரிடும்.
அன்னாசி:
அன்னாசிப்பழத்தில் புரோமலைன் என்ற நொதி உள்ளது. இது செரிமானத்திற்கு உதவும். அன்னாசி பழத்தை அதிகமாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ உட்கொள்ளும்போது இரைப்பை, குடல் சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்தும். தூங்குவதற்கு முன்பு அன்னாசிப்பழம் சாப்பிடுவது செரிமான கோளாறு, வாயுத்தொல்லை, வயிறு வீக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். அதிலும் புரோமெலைன் நொதி இரைப்பை அமிலத்தின் உற்பத்தியை தூண்டி அஜீரண பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும்.
தர்ப்பூசணி:
தர்ப்பூசணி நீர்ச்சத்து மிகுந்த புத்துணர்ச்சியூட்டும் பழமாகும். அதில் நீர் அதிகம் இருப்பதால் சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். தூங்குவதற்கு முன்பு அதனை உட்கொள்வது வயிறு வீக்கம் மற்றும் அசவுகரியத்தை ஏற்படுத்தும். குறிப்பாக அதிக அளவில் சாப்பிட்டால், அதிகப்படியான நீர் மற்றும் சர்க்கரையை ஜீரணிக்க உடல் கடுமையாக போராடும். அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும் என்பதால் தூக்கம் தடைபடும்.
மாம்பழம்:
இதில் இயற்கையான சர்க்கரை மற்றும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. தூங்குவதற்கு முன்பு மாம்பழம் சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யலாம். மேலும் அதிக நார்ச்சத்து இருப்பதால் செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அதனால் தூக்கமும் தடைபடலாம்.
வாழைப்பழம்:
வாழைப்பழங்களில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் இருப்பதால் இரவு தூங்குவதற்கு முன்பு சாப்பிட வேண்டிய சிற்றுண்டியாக பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் அதிகம் சாப்பிடுவது ஆபத்தானது. நன்கு பழுக்காத பழமாக இருந்தால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் இயற்கை சர்க்கரைகள் நிறைந்துள்ளன. அவை ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும். உடலுக்கு விரைவான ஆற்றலை அளிக்கும். இருப்பினும், படுக்கைக்கு முன்பு வாழைப்பழங்களை அதிகமாக உட்கொள்வது வயிறு வீக்கம், அசவுகரியத்தை ஏற்படுத்தும்.
- உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பதற்கு குடிநீர் பருகுவது அவசியமானது.
- வெப்பம் அதிகமாக இருக்கும் சமயங்களில் பருகும்போது பாதிப்பை ஏற்படுத்தும்.
உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பதற்கு குடிநீர் பருகுவது அவசியமானது. ஆனால் உட்கொள்ளும் நீரின் வெப்பநிலை உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? குளிர்ந்த நீர் புத்துணர்ச்சியூட்டுவது போல தோன்றினாலும், வெப்பநிலை அதிகரிக்கும் கோடை காலங்களில் அதனை உட்கொள்வது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அப்படி குளிர்ந்த நீரை அதிகம் பருகுவதால் ஏற்படும் 10 பக்க விளைவுகள்.
உடல் அதிர்ச்சி
குளிர்ந்த நீரை திடீரென உட்கொள்வது உடலை அதிர்ச்சிக்குள்ளாக்கும். குறிப்பாக உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் சமயங்களில் பருகும்போது பாதிப்பை ஏற்படுத்தும். இந்த அதிர்ச்சி ரத்த நாளங்கள் சுருங்குவதற்கு வழி வகுக்கும். ரத்த ஓட்டத்தையும் பாதிக்கக்கூடும். தலைச்சுற்றல் அல்லது மயக்கம் ஏற்படலாம்.
செரிமானத்தை மெதுவாக்கும்
குளிர்ந்த நீர் வயிறு மற்றும் குடலில் உள்ள தசைகளை சுருங்கச் செய்வதன் மூலம் செரிமான செயல்முறையை மெதுவாக்கும். செரிமானத்தில் ஏற்படும் மந்தநிலை காரணமாக அசவுகரியம், வயிறு வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சினைகள் தலைதூக்கும்.
நீரேற்றம்
அறை வெப்பநிலையில் இருக்கும் சாதாரண தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான தண்ணீரை பருகும் போது உடல் நீரை விரைவாக உறிஞ்சி நீரேற்றத்தை தக்கவைக்கும். ஆனால் குளிர்ந்த நீர் விரைவாக நீரேற்றம் ஆகாது. உடலால் மெதுவாகவே உறிஞ்சப்படும்.
சளியை உண்டாக்கும்
குளிர்ந்த நீரை குடிப்பது சுவாச மண்டலத்தில் சளி உற்பத்தியை தூண்டும். அதிலும் சுவாசம் சார்ந்த பிரச்சினை கொண்டவர்கள் குளிர்ந்த நீரை அதிகமாக பருகினால் சளியும் அதிகமாகி மூக்கு ஒழுகுதல், ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
தலைவலியை அதிகப்படுத்தும்
குளிர்ந்த நீரை பருகினால் சிலருக்கு தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி ஏற்படும். குளிர்ந்த நீரை பருகும்போது உடலில் ஏற்படும் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் தலையில் ரத்த நாளங்கள் சுருங்கலாம். அதனால் அசவுகரியம், தலைவலி ஏற்படும்.
பல் ஆரோக்கியத்தை பாதிக்கும்
உணர்திறன் வாய்ந்த பற்கள் கொண்ட நபர்கள் குளிர்ந்த நீரை குடிப்பது, பல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஏற்கனவே பல் சார்ந்த பிரச்சினை இருப்பவர்கள் குளிர்ந்த நீர் பருகுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
தசைவலியை அதிகரிக்கும்
உடற்பயிற்சி செய்து முடித்ததும் குளிர்ந்த நீரை பருகுவது தசை வலி அல்லது தசைப்பிடிப்பை அதிகப்படுத்திவிடலாம். குறிப்பாக தசை வலியை அனுபவிப்பவர்களாக இருந்தால் குளிர்ந்த நீரை பருகக்கூடாது. ஏனெனில் குளிர்ந்த வெப்பநிலை தசைகளை சுருங்கச் செய்து அசவுகரியத்திற்கு வழிவகுக்கும்.
சீர்குலைக்கும்
குளிர்ந்த நீரைக் குடிப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தை தற்காலிகமாக சீர்குலைக்கும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. குளிர்ந்த நீரை தொடர்ந்து பருகுவது, காலப்போக்கில் வளர்சிதை மாற்றத்தின் செயல்திறனை பாதிக்கலாம்.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கும்
குளிர்ந்த நீரை அதிகமாக குடிப்பது நோய் கிருமிகளை ஊக்குவித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தலாம். குளிர்ந்த நீரை பருவதால் உண்டாகும் குளிர்ச்சியான வெப்பநிலை, உடலை அழுத்தத்திற்கு உள்ளாக்கி, எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாக்கலாம்.
சுவாசக் கோளாறுகள் ஏற்படும்
ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாசக் கோளாறு சார்ந்த நோய் பாதிப்பு கொண்டவர்கள் குளிர்ந்த நீரை குடித்த பிறகு கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். ஏனென்றால் குளிர்ந்த வெப்பநிலை காற்றுப்பாதைகளை சுருக்கி, சுவாசிப்பதை கடினமாக்கும். சுவாசக் கோளாறுகளுக்கு வித்திடும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்