search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • பொதுவான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும்.
    • முதல் மூன்று மாதங்களில் இருந்து தொடங்குகிறது.

    கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது கர்ப்பத்தின் மிகவும் பொதுவான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும். இது முதல் மூன்று மாதங்களில் தொடங்குகிறது. பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பத்தின் பிற்பகுதியில், இன்னும் அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது.

     அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணங்கள்:

    ஹார்மோன் மாற்றங்கள்

    கர்ப்பத்தின் தொடக்கத்தில் ஹார்மோன் மாற்றங்கள் உடலில் ரத்த ஓட்டம் மற்றும் திரவத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது. அதற்கு மேல், உங்கள் சிறுநீரகங்கள், உங்கள் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்ற கடினமாக உழைக்கின்றன.

    அதிக திரவம் கொண்ட சிறுநீரகங்களுடன், சிறுநீர்ப்பை கருப்பையை அழுத்தினால், அதை அடிக்கடி காலி செய்ய வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இதனால் தான் கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்கிறார்கள்.

    வயிறு மற்றும் கருப்பை வளர்தல்

    உங்கள் கர்ப்ப காலம் தொடரும் போது, உங்கள் உடல் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப மாறத் தொடங்குகிறது. அதேநேரத்தில், உங்கள் வளர்ந்து வரும் கருப்பை வயிற்று குழிக்குள் உயர்ந்து, உங்கள் சிறுநீர்ப்பையின் அழுத்தத்தை குறைக்கிறது.

    இந்த காரணங்களுக்காக, இரண்டாவது ட்ரிமெஸ்டரில் கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்லுவார்கள். மேலும் உங்கள் கருப்பையில் உங்கள் கருவில் உள்ள குழந்தை இடுப்புக்குள் மூழ்கி சிறுநீர்ப்பையில் அழுத்துவதால், அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஏற்படும்.

    சிறுநீர் பாதை நோய் தொற்று

    அடிக்கடி சிறுநீர் கழிப்பது கர்ப்பத்தின் ஒரு பகுதியா அல்லது சிறுநீர் பாதை நோய் தொற்று என்று பல பெண்கள் கவலைப்படுகிறார்கள்.

    சிறுநீர் பாதை நோய் தொற்று என்றால், சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல் உணர்வு, காய்ச்சல், சிறுநீர் அடர்த்தியாக இருப்பதைக் காணலாம் அல்லது கழிப்பறையில் ரத்தத்தைப் பார்க்கலாம். சிறுநீர் கழிப்பதற்கான வலுவான தூண்டுதலையும் நீங்கள் உணரலாம், ஆனால் சில துளிகள் மட்டுமே வெளியே வரும்.

    பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் 6 முதல் 24 வாரங்கள் வரை சிறுநீர் பாதை நோய் தொற்று ஆபத்தை எதிர்கொள்கின்றனர், ஏனெனில் வளர்ந்து வரும் கருப்பை சிறுநீர் பாதையில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இது பாக்டீரியா தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

    உங்களுக்கு சிறுநீர் பாதை நோய் தொற்று இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், மருத்துவரை அணுகலாம். ஏனெனில் இந்த நோய்த்தொற்றுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படும்.

    கர்ப்ப கால நீரிழிவு

    கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது சில சமயங்களில் கர்ப்பகால நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம், பொதுவாக கர்ப்பத்தின் இது ஒரு தற்காலிக நீரிழிவு நோயாகும். கர்ப்பத்தின் 24 முதல் 28 வாரங்களுக்கு இடையில் கர்ப்ப கால நீரிழிவு நோயை மருத்துவர்கள் பொதுவாக பரிசோதிப்பார்கள்.

    கர்ப்ப கால நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப்பட்டால், குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படாது, மேலும் நீங்கள் குழந்தையை பெற்றெடுத்த பிறகு நீரிழிவு பொதுவாக மறைந்துவிடும்.

    தொடர்ச்சியான தாகம், குமட்டல் அல்லது சோர்வுடன் கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகளை நீங்கள் கண்டால், உங்கள் மருத்துவரை தாமதிக்காமல் அணுகவும்.

    மேலும் சில காரணங்கள்:

    கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக நிறைய தண்ணீர் அல்லது பிற திரவங்களை இரவு நேரத்தில் குடிப்பது. கர்ப்ப காலத்தில் காஃபின் அதிகம் குடிப்பது.

    • ஃபோலிக் அமிலம் வைட்டமின் பி9 என்று அழைக்கப்படுகிறது.
    • சரியான கரு வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

    ஃபோலிக் அமிலம் வைட்டமின் பி9 என்று அழைக்கப்படுகிறது. இது ஆரோக்கியமான உயிரணுப் பிரிவை ஆதரிக்கிறது மற்றும் பிறப்பு குறைபாடுகளின் அபாயத்தைக் குறைக்க சரியான கரு வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது உடலில் பல முக்கிய செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. ஃபோலிக் அமிலம் உணவுகளின் மூலம் பெறலாம்.

    முட்டை

    நீங்கள் அசைவ உணவை சேர்ப்பதாக இருந்தால் முட்டைகளை சேர்ப்பது ஃபோலேட் சத்துக்களை உங்களுக்கு அளிக்கும். முட்டைகளில் புரதம், செலினியம், ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் பி12 போன்றவையும் உள்ளன. இது லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் போன்றவையும் கொண்டுள்ளன. இவை எளிதாக கிடைக்கின்றன தினமும் ஒரு முட்டை உங்கள் உணவில் சேர்த்து வரலாம்.

    கல்லீரல்

    அசைவ உணவு உண்பவராக இருந்தால் நீங்கள் கல்லீரல் மூலம் சிறந்த சத்தை பெறலாம். இது செலினியத்தின் சிறந்த ஆதாரங்கள். கல்லீரலில் ட்ரான்ஸ் ஃபேட் மற்றும் கொழுப்பு உள்ளதால் மிதமான அளவில் சாப்பிடுவது நல்லது.

     அவகேடோ

    அவகேடோ பழம் எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடியது. மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதில் சக்திவாய்ந்த பைட்டோ கெமிக்கல் உள்ளது.

     பருப்பு வகைகள்

    பீன்ஸ், பட்டாணி, பருப்பு வகைகளில் ஃபோலேட்டின் மிகச்சிறந்த மூலமாகும். பருப்பு வகைகள் புரதம், நார்ச்சத்து மற்றும் ஆக்சிஜனேற்றத்தின் சிறந்த மூலமாகும். பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் ஆகும்.

     ப்ரக்கோலி

    உணவில் சேர்க்ககூடிய சிறந்த ஃபோலேட் உள்ள உணவுகளில் ப்ரக்கோலியும் ஒன்று. தினமும் வேண்டிய ஃபோலேட் அளவில் 14 சதவீதம் உள்ளது. ப்ரக்கோலியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே உள்ளது.

     விதைகள் மற்றும் கொட்டைகள்

    ஆளிவிதைகள் ஒரு கப் அளவில் 168 கிராமுக்கு 146 மில்லி கிராம், சூரியகாந்தி விதைகள் 1 கப் 46 கிராமுக்கு 104 மில்லி கிராம், பாதாம் அளவு 1 கப்-95 கிராமுக்கு 48 மில்லி கிராம் அளவுகளில் ஃபோலேட் நிறைந்துள்ளது. ஃபோலேட் சத்து சேர சாலட்டில் இதை சேர்க்கலாம்.

     அஸ்பாரகஸ்

    அஸ்பாரகஸில் ஃபோலிக் அமிலம் 1 கப் அளவில் 134 கிராம். ஒரு அஸ்பாரகஸின் சுமார் 70 மில்லி கிராம் ஃபோலேட் உள்ளது. 27 கலோரிகள் மட்டுமே உள்ளன. வளர்சிதை மாற்றத்தில் ஃபோலேட் ரிஃபோஃப்ளேவின் முக்கிய பங்கு வகிக்கிறது.

     வாழைப்பழங்கள்

    வாழைப்பழத்தில் 1 கப் அளவில் மசித்ததில் 225 கிராம் அளவில் 45 மில்லி கிராம் ஃபோலேட் உள்ளது. தினசரி வைட்டமினில் 11

    சதவீதம் உள்ளது. வைட்டமின் பி6 வளமான ஆதாரங்களாக உள்ளது. ஃபோலேட் உடன் உடலுக்கு ஆன் டி பாடிகளை தயாரிக்கவும் செய்கிறது.

    தக்காளி

    1 கப் தக்காளியில் 22 மில்லி கிராம் ஃபோலேட் உள்ளது. தக்காளியில் நிறைவுற்ற கொழுப்பு, சோடியம், கொழுப்பு குறைவாக உள்ளது. மேலும் பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் கரோட்டினாய்டு சிறந்த ஆதாரங்களாக இருக்கின்றன.

    சிட்ரஸ் பழங்கள்

    ஆரஞ்சு பழங்களில் 1 கப் அளவில் 180 கிராம் அளவுக்கு 54 மில்லி கிராம் ஃபோலேட் சத்தும், ஸ்ட்ராபெர்ரி 1 கப் (152 கிராம்) 36.5 மில்லி கிராம் அளவுக்கு திராட்சைப்பழம் 1 கப் சாறு 230 கிராம் அளவுக்கு 29.9 மில்லி கிராம் போன்ற சிட்ரஸ் பழங்களில் நல்ல அளவு ஃபோலேட் உள்ளது.

     அடர் பச்சை இலை காய்கறிகள்

    அடர் பச்சை இலை காய்கறிகள், பச்சை காய்கறிகள் ஃபோலிக் அமிலம் கொண்ட சிறந்த உணவுகளில் ஒன்றாக சொலப்படுகிறது. அடர் கீரைகள், முட்டைக்கோஸ் நல்ல அளவு ஃபோலிக் அமிலத்தை கொண்டுள்ளது. கீரையில் கரோட்டினாய்டுகள் மற்றும் பல்வேறு சேர்மங்கள் நிறைந்துள்ளன. ஒரு கப் 30 கிராம் அளவுடைய கீரையில் 58.2 கீரையில் 58.2 மில்லி கிராம் ஃபோலேட் உள்ளது.

     பீட்ருட்

    பீட்ரூட் காய்கறிக்கு சிறந்த வண்ணம் வழங்குகிறது என்பதோடு பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ஃபோலேட்டின் சிறந்த ஆதாரம். ஒரு கப் பீட்ரூட் 136 கிராம் அளவில் 148 மில்லி கிராம் ஃபோலேட் உள்ளது. மேலும் இதில் நைட்ரேட்டுகளும் உள்ளன. இது பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடைய ஒரு வகை தாவர கலவை.

    தானியங்கள்

    1 பாக்கெட் வலுவூட்டப்பட்ட தானியங்கள் 28 கிராம் கொண்டவற்றில் 80.1 மில்லி கிராம் ஃப்லேட் உள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டை குறைப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ரொட்டி மற்றும் பாஸ்தா போன்ற பல வகையான தானியங்கள் ஃபோலிக் அமில உள்ளடக்கத்தை பலப்படுத்தப்பட்டுள்ளன. இதன் தயாரிப்பை பொறுத்து ஃபோலிக் அமில அளவு மாறுபடலாம்.

    வலுவூட்டப்பட்ட உணவுகளில் உள்ள ஃபோலிக் அமிலம் இயற்கையாக உணவில் இருக்கும் ஃபோலேட்டை காட்டிலும் எளிதில் உறிஞ்சப்படலாம் என்கிறது.

    வெண்டைக்காய்

    வெண்டைக்காய் 1 கப் அளவில் 100 கிராம் இருக்கும் போது 88 மில்லி கிராம் ஃபோலேட் உள்ளது. மேலும் இது நார்ச்சத்து வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் கால்சியம் நல்ல மூலமாகும். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்தும்.

    பப்பாளி

    பப்பாளி ருசியாகவும் சுவையுடன் இருப்பது போன்று ஃபோலேட் நிறைந்தது. ஒரு கப் 140 அளவு பப்பாளியில் 53 மில்லி கிராம் ஃபோலேட் உள்ளது. பப்பாளியில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்றவையும் உள்ளது.

     பிரஸ்சல்ஸ் முளைகள்

    பிரஸ்சல்ஸ் முளைகளில் ஃபோலேட் அதிகம் உள்ளது. ஒரு பிரஸ்சல்ஸ் முளைகளில் 53.7 மில்லி கிராம் வைட்டமின் உள்ளது. பிரஸ்சல்ஸ் முளைகள் வேறு வழியில் பயனளிக்கின்றன. கீரைக்கு பிறகு பிரஸ்ஸல்ஸ் முளைகளில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.

    வேர்க்கடலை

    வேர்க்கடலை ஆரோக்கியமான கொட்டைகள். 146 கிராம் வேர்க்கடலையில் 359.16 யூஜி உள்ளது. வேர்க்கடலையில் உள்ள ஃபோலிக் அமிலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    ஸ்வீட் கார்ன்

    ஸ்வீட் கார்ன் அடர்த்தியான ஊட்டச்சத்து விவரத்தை கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் மற்றும் பிற அமினோ அமிலங்களும் உள்ளன. 100 கிராம் ஸ்வீட் கார்னில் 42 மில்லிகிராம் ஃபோலிக் அமிலம் உள்ளது.

    காலிஃப்ளவர்

    ஒரு கப் காலிஃப்ளவர் 100 கிராம் அளவில் 57 மில்லி கிராம் ஃபோலேட் உள்ளது. தினசரி அளவில் 14% ஆகும். காலிஃப்ளவர்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகம்.

    கேரட்

    கேரட்டில் ஃபோலிக் அமிலம் நிறைவாக உள்ளது. 1 கப் கேரட்டில் 128 கிராம் அளவில் 24.3 மில்லிகிராம் ஃபோலேட் உள்ளது. இதில் உள்ள பீட்டா கரோட்டின், நார்ச்சத்து மற்றும் பல நுண்ணூட்டச்சத்துக்களின் வளமான மூலம்.

    மாம்பழம்

    ஃபோலேட் அதிகம் உள்ள உணவுகளில் மாம்பழமும் ஒன்று. அனைவருக்கும் பிடித்தமான பழமும் கூட. 100 கிராம் மாம்பழத்தில் ஃபோலிக் ஆசிட் 43 மில்லிகிராம் உள்ளது. மாம்பழத்தில் உள்ள ஃபோலேட் உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

    ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகள் எல்லாமே நமக்கு எளிதாக கிடைக்கும். இதை திட்டமிட்டு எடுத்துகொள்வதன் மூலம் உடலுக்கு வேண்டிய ஃபோலிக் ஆசிட் போதுமான அளவு கிடைக்கும்.

    • மாதவிடாய் இல்லாத நாட்களில் யோனி ரத்தப்போக்கு ஏற்படுவதை குறிக்கும்.
    • கருச்சிதைவு அல்லது எக்டோபிக் கர்ப்பம் ஏற்படுவதற்கான அறிகுறி.

    ஸ்பாட்டிங் என்பது வழக்கமான மாதவிடாய் இல்லாத நாட்களில் யோனி ரத்தப்போக்கு ஏற்படுவதை குறிக்கும். ரத்தக்கசிவு என்பது புள்ளி ரத்தப்போக்கு. இது சிறிய அளவிலான ரத்தத்தை உள்ளடக்கியது. கழிவறையை பயன்படுத்திய பிறகு உங்கள் உள்ளாடையில் அல்லது கழிப்பறை பேப்பரில் இதை கவனிக்கலாம். பெரும்பாலும் இதை பேண்டி லைனர் கொண்டே கண்டறிந்துவிடலாம்.

    மாதவிடாய் ஏற்படுவதை தவிர வேறு நேரத்தில் ரத்தபோக்கு ஏற்படுவது அசாதாரண ரத்தப்போக்கு அல்லது மாதவிடாய்க்கு இடையில் ரத்தப்போக்கு என்று சொல்லப்படுகிறது. ரத்தக்கசிவு புள்ளிகள் என்றாலும் சில நேரங்களில் இது தீவிர பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

    புள்ளியிடுதல் கவலைப்பட வேண்டியது அல்ல. உங்களுக்கு அதிக ரத்தப்போக்கு அல்லது இடுப்புவலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில் இது கருச்சிதைவு அல்லது எக்டோபிக் கர்ப்பம் ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

    அண்டவிடுப்பின் ரத்தக்கசிவு என்பது உங்கள் மாதவிடாய் சுழற்சியின் போது கருப்பை முட்டையை வெளியிடும் போது ஏற்படும் லேசான ரத்தப்போக்கு ஆகும். இது பொதுவாக மாதவிடாய்க்கு 14 நாட்களுக்கு முன்பு நிகழ்கிறது.

    அண்டவிடுப்பின் புள்ளிகள் வெளிர் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமாக இருக்கலாம். மற்றும் உங்கள் சுழற்சியின் நடுவில் 1 முதல் 2 நாட்கள் வரை நீடிக்கும்.

    கர்ப்பப்பை பரிசோதனை அவசியமா?

    கருத்தரிப்பை எதிர்நோக்கி இருந்தால் அதற்கான வயதை கொண்டிருந்தால் வீட்டிலேயே ரத்தப்பரிசோதனை செய்து உறுதி செய்யலாம்.

    உங்கள் சோதனை எதிர்மறையாக இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

    மாதவிடாய்க்கு இடையில் ஸ்பாட்டிங் விவரிக்க முடியாத அளவுக்கு இருந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை சந்தியுங்கள். இது பெரும்பாலும் கவலைப்பட ஒன்றுமில்லாதது. தானாகவே சரியாகிவிடக்கூடும். ஆனால் சிலசமயங்களில் அது தீவிரமான ஒன்றின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

    • தொற்றுநோய் கிருமிகளை அழிக்கும் சக்தி செவ்வாழை பழத்திற்கு இருக்கிறது.
    • செவ்வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

    வாழை பழங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த பழம் என்றால் அது செவ்வாழை தான். இதில் அதிக அளவு உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என அளப்பரிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. ஏனைய வாழைப்பழங்களை விட செவ்வாழை மிகவும் சுவையாக இருப்பதோடு இதில் ஊட்டச்சத்தும் அதிகமாக காணப்படுகின்றது.

    தினசரி செவ்வாழைப்பழம் சாப்பிடுவதனால் கிடைக்கும் அளப்பரிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

    சிவப்பு நிற வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

    மாலைக்கண்நோய் கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழைப்பழம் சிறந்த மருந்தாகும்.

    பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டியாக மாறிவிடும்.

    செவ்வாழைப் பழத்தை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் தொற்று நோய் பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும்.

    தொற்றுநோய் கிருமிகளை அழிக்கும் சக்தியும் செவ்வாழைப் பழத்திற்கு இருக்கிறது. எல்லா வகை வாழைப்பழங்களும் நல்ல செரிமான சக்தி கொண்டவையாக இருக்கின்றன. அந்த வகையில், செவ்வாழைப் பழமும் நமது ஜீரணசக்திக்கு உதவும் முக்கிய வாழைப்பழமாக இருக்கிறது.

    நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வர நரம்புகள் பலம் பெறும். ஆண்மை தன்மை சீரடையும்.

    குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு இவ்வாறு சாப்பிட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

    • உடலை ஒரு பிளாங் நிலையில் சமப்படுத்தவும்.
    • உடலை ஒரு பிளாங் நிலையில் சமப்படுத்தவும். பலர் இடுப்பு வலி, முதுகுவலி பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

    அலுவலகத்தில் சரியான இருக்கை இல்லை என்றாலும், வீட்டில் இருந்து வேலை செய்யும் போது இருக்கையில் ஏற்படும் தவறான உடல் தோரணை இல்லாததால், ஒருவர் முதுகுவலியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பலர் இடுப்பு வலி மற்றும் முதுகுவலி பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், சில பயிற்சிகளை முறையாக செய்வதன் மூலம் முதுகுவலியில் இருந்து விடுபடலாம்.

     ஒற்றை பக்க உடற்பயிற்சி

    இது கீழ் முதுகு, அடிவயிறு மற்றும் தொடைகளின் தசைகளை வலிமையாக்குகிறது. இதை செய்ய, இரு பிட்டங்களும் தனித்தனியாகவும், இரு கைகளும் தரையில் தோள்களுக்கு வெளியே இருக்கும் வகையிலும் உங்கள் உடலை ஒரு பிளாங் நிலையில் கொண்டு வாருங்கள். மெதுவாக உங்கள் நேரான கைகளையும் இடது முழங்காலையும் உயர்த்தி சமநிலையை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். அதே தோரணையில் இருக்கும்போது, கை மற்றும் காலை இழுத்து, சில நொடிகள் உங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். இப்போது இந்த பயிற்சியை இடது கை மற்றும் வலது காலால் செய்யுங்கள்.

    பாந்தர் தோள்பட்டை தட்டு உடற்பயிற்சி

    இது பின்புறம், கால்கள் மற்றும் உடலின் நடுத்தர பகுதியை பலப்படுத்தும். இந்த பயிற்சியை தரையிறக்க, முதலில் பிளாங்க் நிலைக்கு வாருங்கள். உடலின் முழு எடை பலகைகள் மற்றும் கைகளில் பலகைகளில் இருக்கும், முதுகெலும்பு நேராக இருக்கும். இப்போது உங்கள் முழங்கால்கள் இரண்டையும் தரையில் இருந்து இரண்டு முதல் மூன்று அங்குலங்கள் மெதுவாக உயர்த்தவும், பிட்டம் சீராக இருக்க முயற்சிக்கவும். வலது தோள்களை இடது தோளில் வைக்கவும். தரையில் விரல்களைக் கொண்டு, இடது கையை வலது தோளில் நகர்த்தவும்.

     லெக் லிப்ட் பயிற்சிகளுடன் பிளாங்

    இது முதுகெலும்பை வலுவாகவும் பிட்டம் மிகவும் நெகிழ்வாகவும் ஆக்குகிறது. அனைத்து எடையும் கை மற்றும் கால்விரல்களில் இருக்கும் வகையில் உடலை ஒரு பிளாங் நிலையில் சமப்படுத்தவும். உடலை காற்றில் வைத்து முதுகெலும்பை நேராக வைக்கவும்.

    இப்போது மெதுவாக வலது காலை உடலில் மேல்நோக்கி உயர்த்தி சிறிது நேரம் பிடித்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த காலை கீழே கொண்டு வந்து இடது காலை உயர்த்தி காற்றில் நிறுத்துங்கள். இதை முடிந்தவரை பல முறை செய்யுங்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண் கருவுறுதலை அறிவதற்கு முன்பு கருச்சிதைவு உண்டாகலாம்.
    • கரு வளராத காரணத்தாலும் கருச்சிதைவுகள் உண்டாகக் கூடும்.

    கர்ப்ப காலத்தில் கருச்சிதைவு என்பது 20 வாரங்களுக்கு முன்பு அதாவது ஐந்து மாதங்களுக்கு முன்பு நடைபெறும் ஒரு தன்னிச்சை இழப்பு ஆகும். கருச்சிதைவு, 10 சதவீதம் முதல் 20 சதவீதம் கர்ப்பங்களில் உண்டாகிறது. ஆனால் இதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். ஏனெனில் சில பெண்களுக்கு கருச்சிதைவு என்பது தாங்கள் கர்பம் என்று தெரியும் முன்னரே நிகழ்ந்துவிடும்.

    ஒரு பெண் கருவுறுதலை அறிவதற்கு முன்பு கருச்சிதைவு உண்டாகலாம். கருவை சுமப்பதில் ஏதேனும் தவறு இருக்கலாம். இது அரிதாக இருந்தாலும் இதுவும் ஒரு காரணம். கரு வளராத காரணத்தாலும் கருச்சிதைவுகள் உண்டாகக் கூடும்.

    கர்ப்பத்தின் 12 வது வாரங்களுக்கு அதாவது மூன்று மாதங்களுக்கு முன்கூட்டியெ இவை பெருமளவு நிகழும் என்பதால் இந்த காலத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

    கருவானது சரியான காலத்தில் வளர்ச்சியடையாததால் பெரும்பாலான கருச்சிதைவுகள் உண்டாகிறது. எனினும் பெரும்பாலும் கருச்சிதைவுகளில் சுமார் 50 சதவீதம் குரோமோசோம்களுடன் தொடர்பு கொண்டது.

    குரோமோசோம்களால் உண்டாகும் அசாதாரணங்களால் கருச்சிதைவு உண்டாகக் கூடும். கருமுட்டை வெளுத்து காணப்படுவது, கரு உருவாகாத போது கருமுட்டை உண்டாவது. கர்ப்பகாலத்தில் ரத்த போக்கு உண்டு என்றாலும் அரிதாக சிலருக்கு மட்டுமே இருக்கும். எனினும் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது.

     சில துளி ரத்த போக்கு வந்தாலே மருத்துவரை அணுகினால் கரு பாதிப்பு இருந்தாலோ கரு சேதமடைவதாக இருந்தாலோ காப்பாற்ற வாய்ப்பு உண்டு.

    சில சமயங்களில் கருவை தாங்கும் வலுவுக்கு கர்ப்பப்பை இல்லை என்பதும் காரணமாகும். கருச்சிதைவு பெரும்பாலும் அறிகுறிகள் தெரியாது. அல்ட்ரா சவுண்ட்டு பரிசோதனை செய்தால் மட்டுமே தெரியும்.

    கர்ப்பிணி பெண்ணின் உடல் நிலையும் கூட கருச்சிதைவுக்கு வழிவகுக்கும். கர்ப்பபையில் பிரச்சனைகள், கர்ப்பப்பை அசாதாரணங்கள், பலவீனமான கர்ப்பப்பை வாய் திசுக்கள் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்க கூடும். அதே நேரம் கர்ப்பகாலத்தில் எந்தவிதமான வேலையும் செய்யக்கூடாது எப்போதும் ஓய்வாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    கர்ப்பிணி பெண்கள் தங்கள் மருத்துவர் முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தாத பட்சத்தில், அவர்கள் தங்கள் அன்றாட வேலைகளை தாராளமாக பார்க்கலாம். அதிக எடை தூக்குவது, அதிக நேரம் நிற்பது, அதிகம் பயணிப்பது போன்றவற்றை தவிர்க்கவும்.

    ஆனால் கர்ப்பகாலத்தில் ஜாகிங், சைக்கிள் பயிற்சி, கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதால், ஏதேனும் பாதிப்பு உண்டா என்பதை முன்கூட்டியே மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது.

    அதேபோன்று அதிக பளு தூக்கும் பணி அல்லது அதிக அளவு பணி செய்பவர்கள் கருச்சிதைவு குறித்து பயம் இருந்தால் மருத்துவரிடம் பேசுவது நல்லது.

    • ஒவ்வாமை அழற்சி 'சைனஸிடிஸ்' நோயாக அறியப்படுகிறது.
    • சைனசுக்கான ஆரம்பகால சிகிச்சைக்கு ஆன்டிபயோட்டிக் போதுமானது.

    நம் முகத்துக்குள் இருக்கும் காற்றுப்பைகள் அல்லது அறைகளை 'சைனஸ்' என்று அழைக்கிறார்கள். இந்த சைனஸ் காற்றறைகள் தொற்றுக்கு உள்ளாகும்போது வரும் ஒவ்வாமை அழற்சி 'சைனஸிடிஸ்' நோயாக அறியப்படுகிறது.

    சுற்றுச்சூழல் காரணத்தினாலோ, தொற்று நோய் அல்லது தனிப்பட்ட உடல் இயல்பினாலோ ஒவ்வாமை ஏற்படும்போது, காற்றறைகள் வீக்கம் அடைகின்றன. இந்த வீக்கத்தால் காற்றறையின் உள்சுவர் பாதிப்படைந்து எதிர்வினையாக ஒருவகை நீரைச் சுரக்க ஆரம்பிக்கிறது.

    எதிர்ப்புச் சக்தி குறைவால், நாளடைவில் அந்த நீர் சளியாக மாறத் துவங்கும். இதன் காரணமாக தும்மல், தலைவலி, தலைபாரம் வரக்கூடும். இது தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் தூக்கமின்மையையும் சோர்வைவையும் உண்டாக்கும்... நாளடைவில் நுரையீரலில் பிரச்சினை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

    சைனசுக்கான ஆரம்பகால சிகிச்சைக்கு ஆன்டிபயோட்டிக் போதுமானது. அதுவே தீவிரமடையும்போது கூடுதல் சிகிச்சைகள் அவசியமாகிறது.

     சைனஸ் நோய்க்கான சித்தமருத்துவம்

    சளி வந்தால் செய்ய வேண்டியவை:

    * சளிக்கு ஆரம்பத்திலேயே துளசிச்சாறு 1 தேக்கரண்டி, தூதுவளைச்சாறு 1 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி கலந்து தினமும் மூன்று வேளை குடித்துவந்தால் சளி இரண்டொரு நாளில் குறையும். கப நோய்களுக்கு துளசிச்சாறு 100 மில்லி, ஆடாதோடைச்சாறு 100 மில்லி, வெற்றிலைச்சாறு 100 மில்லி, குப்பைமேனிச்சாறு 100 மில்லி எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி சித்தரத்தை, கண்டு பாரங்கி, ஜடாமாஞ்சில், சுக்கு, மிளகு, அக்ராகாரம், கோஷ்டம் இவைகள் ஒவ்வொன்றும் 5 கிராம் அளவு வாங்கி பொடியாக்கி ½ லிட்டர் நீர் ஊற்றி 100 மில்லி அளவு சுண்டக் காய்ச்சி மூலிகைச் சாறுகளுடன் கலந்து கொள்ள வேண்டும். 1 கிலோ சர்க்கரையை பாகு செய்து மூலிகைச்சாறும், கடைச்சரக்கு கசாயம் கலந்த கலவையை ஊற்றி பாகு கெட்டியாகி முறுகாமல் பதத்தில் (தேன் பதத்தில்) இறக்கி வைத்துக்கொண்டு, காலை, மாலை 10 மில்லி வீதம் கொடுத்துவர கபம் சம்பந்தமான நோய்கள் விலகும்.

    சளியுடன் வரும் இருமலுக்கு:

    * கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்றும் சேர்ந்தது திரபலையாகும். இவைகளுடன் அதிமதுரம் சேர்த்து ஒவ்வொன்றும் 50 கிராம் எடுத்து உலர்த்திப் பொடி செய்து வைத்துக்கொண்டு வேளைக்கு ½ டீஸ்பூன் வீதம் காலை, மாலை உண்டுவர சளி இருமல் குணமாகும்.

    * அதேபோல் சுக்கு, திப்பிலி, சிவதைவேர், கோஷ்டம், பேரரத்தை, கோரைக்கிழங்கு, அதிமதுரம், சித்தரத்தை இந்த எட்டுச்சரக்கிலும் 10 கிராம் வீதம் வாங்கிச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு சம எடை சர்க்கரைக்கலந்து மூன்று வேளையும் வேளைக்கு 2 சிட்டிகை அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வர சளி, குத்திருமல் நிற்கும்.

    சளியுடன் தும்மல் இருமலுக்கு மற்றும் மூக்கில் நீர் வடிதலுக்கு:

    * திருநீற்றுப் பச்சிலைச் சாறு எடுத்து, 15 கிராம் மிளகு மூழ்கும்வரை விட்டு உலர்த்தி, அதை பொடி செய்து, நுண்ணிய பொடியாக சலித்து வைத்துக் கொண்டு சளி, தும்மல். இருமல் இருக்கும் போது மூக்குப்பொடிபோல் மூக்கில் விட்டு உறிஞ்ச குணமாகும்.

    * தும்பை இலைச் சாற்றைக் கசக்கி மூக்கில் 2 சொட்டு விட்டாலும் கபம் சரியாகும். மூக்கில் நீர்வடிதல் மற்றும் தலைவலியும் குணமாகும். ஜாதிக்காயை குழம்பு போல் அரைத்து மூக்கின் மேல் பற்றுப் போட்டாலும் மூக்கில் நீர் வடிதல், தும்மல் குணமாகும்.

    மூக்கில் ரத்தம் வடிதலுக்கு:

    * தோல் சீவிய சுக்கு, மிளகு இரண்டிலும் ஒவ்வொன்றும் 100 கிராம் வீதம் வாங்கி கற்பூரம் 200 கிராமுடன் கலந்து புது சட்டியில் வைத்துக் கொளுத்திவிடவும். இவையாவும் எரிந்து சாம்பலாகிவிடும். இதை அரைத்து புட்டியில் வைத்துக் கொள்ளவும். தினம் ஒரு வேளை 1 சிட்டிகை அளவு தேனில் உட்கொள்ள தும்மல், இருமல், சுரம் குணமாகும்.

    பல்வேறு காரணங்களால் மூக்கில் ரத்தம் வரும். அதற்கு நம்பகமான மூலிகை மருத்துவம், ஆடாதோடை சாறு ½ லிட்டர், மிளகு, சீரகம், ஓமம், சுக்கு, அதிமதுரம், சிற்றரத்தை ஒவ்வொன்றும் 25 கிராம் வீதம் பொடி செய்து, ஆடாதோடைச் சாற்றில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் ½ கிலோ கலந்து மீண்டும் காய்ச்சி குழம்பு பதம் வந்ததும் புட்டியில் பத்திரப்படுத்தவும். தினம் காலை, மாலை தேக்கரண்டி அளவு சாப்பிட மூக்கில் ரத்தம் வடிதல், ஷயரோகம் ஆகியவை குணமாகும்.

    கோஷ்டம், வில்வவேர், திப்பிலி, திராட்சை இவைகள் யாவும் சம எடையாகப் பொடி செய்து நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி வைத்துக்கொண்டு தினம் இரண்டு மூக்கிலும் 5 துளி வீதம் விட்டுவர தும்மல் விலகும்.

    மூக்கில் ரத்தக் குழாய் உடைந்து கொட்டும் ரத்தத்திற்கு:

    * நெய்யில் நெல்லி வற்றலைப் பொடித்து அதைக் காடியில் அரைத்துப் பிழிந்து இரண்டு மூக்கிலும் இரண்டொரு சொட்டு விட நாசியில் வடியும் ரத்தம் நிற்கும்.

    * படிகாரத்தைப் பொரித்து நீரில் கலந்து இரண்டொரு சொட்டு விட்டாலும் ரத்தம் வருவது நிற்கும்.

    சைனஸ் என்ற பீனிச நோய்க்கு:

    * சைனஸ்தான் மூக்கை வருத்தும் மிகக் கொடிய நோய் எனப் பார்த்தோம். அதற்கான எளிய நிவாரணம். குங்குமப்பூ, இஞ்சி, மிளகு, கோஷ்டம். அதிமதுரம் இவைகளைத் தேவையான அளவு எடுத்துப் பொடி செய்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி இரண்டொரு சொட்டு பீனிசம் உள்ள மூக்கில் விட்டு சிறிது உச்சந்தலையில் தேய்த்துவர நிவாரணம் கிடைக்கும்.

    * அதேபோல் வட்டத்திருப்பி, மஞ்சள், மரமஞ்சள், மருள், கிழங்கு, திப்பிலி, ஜாதி மல்லிகைக் கொழுந்து இவைகளை, சிறிது எடுத்து நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி வடித்து நசியமிட பீனிச நோய் சாந்தப்படும்.

    * கிராம்பு, வில்வக்காய், திப்பிலி, கோஷ்டம், திராட்சை, சுக்கு இவைகள் ஒவ்வொன்றும் 10 கிராம் வீதம் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து ¼ லிட்டர் பசுநெய்யில் கலந்து, காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு தினமும் காலை , இரவு இரண்டு வேளையும் 5 துளி வீதம் மூக்கில் விட பீனிசம், அதனால் வரும் தும்மல் ஆகியவை போகும்.

    * தோல் நீக்கிய சுக்கு, வறுத்த மிளகு, அக்கராகாரம், கோஷ்டம். கண்டங்கத்திரிவேர், ஆடாதோடை வேர், மூக்கிரட்டைவேர். கொடிவேலி வேர், நன்னாரி வேர், அதிமதுரம் ஆகியவைகள் ஒவ்வொன்றும் 5 கிராம் வீதம் நன்றாக இடித்து சலித்துச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு காலை, மாலை வேளைக்கு ½ டீஸ்பூன் வீதம் பாலில் கலந்து உண்டுவர பீனிசம், தலைவலி ஆகியவை குணமாகிவிடும்.

    • சுவாச மண்டலத்தின் முக்கியமான பகுதி மூக்கு.
    • மூக்கின் வெளிப்பகுதி மடியக்கூடிய குறுத்தெலும்பால் ஆக்கப்பட்டுள்ளது.

    சுவாச மண்டலத்தின் முக்கியமான பகுதி மூக்கு. அதோடு வாசனையைப் பகுத்தறியும் உறுப்பும் மூக்குதான். மூக்கு முகத்திற்கு அழகைத் தருவதில் பெரும்பங்கு வகிக்கிறது எனலாம். செவிமடல்களைப் போல் மூக்கின் வெளிப்பகுதி மடியக்கூடிய தன்மையுள்ள குறுத்தெலும்பால் ஆக்கப்பட்டுள்ளது.

    உட்பகுதி மென்மையான சிலேத்தும் படலத்தால் உண்டாக்கப்பட்டுள்ளது. பக்கத்திற்கு ஒன்றாக அமைந்துள்ள மூக்குத் துவாரம் தொண்டையில் இணைகிறது. காதுத் துவாரமும் தொண்டையில் குழாய் போன்ற அமைப்புடன் இணைகிறது.

    மூக்கின் மேல் பகுதியில் கண்ணுக்குத் தெரியாத ரோம அமைப்பில் வாசனையை அறியும் உணர் இழைகள் அமைந்துள்ளன. அவை நுண்ணிய நரம்புகள் மூலம் மூளையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. இவ்வுணர் இழைகள் ஆயிரக்கணக்கில் சிலேத்தும் படலத்தில் பதித்து வைக்கப்பட்டுள்ளன. மண்டை ஓட்டிற்கும் மூக்கின் இணைப்புத் தசைகளுக்கும் இடையே மூக்கைச் சுற்றி வெற்றிடங்கள் உண்டு. இவைகளைத்தான் சைனஸ் (காற்றறைகள்) என அழைக்கிறோம்.

    மூக்கு வாசனை அறிய உதவும் உணர்ச்சி மிகுந்த உறுப்பாக இருப்பதால் உட்பகுதியில் சிலேத்தும் படலத்திற்கு அருகே நிறைய ரத்தக் குழாய்களும் நரம்புக்கற்றைகளும் நிறைந்துள்ளன. இவை காற்றை வடிகட்டி அனுப்பும் தன்மையைக் கொண்டவை. அவ்வாறு வடிகட்டப்பட்ட காற்றில் நச்சுக் கிருமிகள் இருந்தால் அவற்றைத் தடுத்து அழிக்கவே மூக்கின் பின் பகுதியில் தொண்டைக்கு அருகே அடிநாய்டு என்னும் தசைக்கோளம் உள்ளது.

    நுண்ணிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்ட மூக்கை பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. சளிதான் மூக்கை அடிக்கடி பிடிக்கும் நோய்.

    காற்றில் உள்ள வைரஸ் கிருமிகள் மூச்சுக் காற்றுடன் மூக்கினுள் சென்று சிலேத்துமப் படலங்களில் படிகிறது. நோய் எதிர்ப்பாற்றல் சக்தி இயற்கையிலேயே மனிதனுக்கு இருப்பதால் அவை வைரஸ்களை அழிக்கும். அச்சக்தி சிலருக்கு அல்லது சில நேரங்கள் குறைவு பட்டிருக்கும்போது வைரசின் ஆதிக்கம் அதிகமாகும். அதனால் மூக்கினுள் சிலேத்துமப் படலங்கள் அழற்சியுற்று சளி உண்டாகிறது.

    முதல் அறிகுறியாக தும்மல், மூக்கில் நீர்வடிதல், கண்களின் நீர் கட்டுதல், மூக்கில் வலி, அடைப்பு போன்றவை தோன்ற ஆரம்பித்துவிடும், சளிக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது ஆங்கில மருத்துவர்களின் கூற்றாகும். மூலிகை மருத்துவத்தில் சளியை ஆரம்பத்திலே கண்டு சிகிச்சை செய்தால் விரைவில் சரி செய்யலாம்.

    அடிநாய்டு என்னும் மூக்கில் உள்ள கோளம் நோயுற்றால் வாசனைத் திறனை மூக்கு இழந்துவிடும். மூக்கு, காது, தொண்டை துவாரங்கள் சந்திக்கும் இடத்திற்கு சற்று பின்பக்கம் இக்கோளம் அமைந்துள்ளது. இது நிணநீர் திசுக்களால் ஆனது. வெளிக்காற்றில்

    இருந்து வரும் கிருமிகளை இது தடுத்து நிறுத்தும், அப்போது ஏற்படும் போரின் விளைவாக அடிநாய்டு வீங்கும். இது குழந்தைகளை அடிக்கடி பாதிக்கும் பிரச்சினையாகும்.

    இதன் பாதிப்பு வாயில் மூச்சுவிடச் செய்யும், காதில் தொற்று நோயை உண்டாக்கும். மூளைவரை கூட இத்தொற்று பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. இது அடிக்கடி நோயற்றால் மூக்கடைப்பு வரும். எனவே இதை அறுவைசிகிச்சையின் மூலம் நவீன மருத்துவத்தில் நீக்கப்படுகிறது.

    மூக்கின் அருகில் உள்ள காற்றறைகளில் அழற்சி, கிருமித்தொற்று, சளி தங்குதல் போன்றவற்றை சைனஸ் என அழைப்பதாகப் பார்த்தோம். இதைத்தான் சித்த மருத்துவத்தில் வாதம், பித்தம், கபம் என்ற முக்குற்ற அடிப்படையில் பீனிசம் என்று அழைக்கப்படுகிறது. இப்பீனிச நோயில் 8 வகை இருப்பதாகவும் அறிகிறோம்.

    மேலும் இந்நோய்க்கு சளி மட்டுமே காரணமல்ல, மேக நோயும் காரணம் எனப்படுகிறது. உடலில் உஷ்ணம் அதிகமாகி அது மூலாதாரக் கொதிப்பை உண்டாக்கி, பித்த நீரை உண்டாக்கி, அவைகள் (சைனஸ்) காற்றறைகளில் தங்கி தும்மல், மூக்கில் நீர் வடிதல், மூக்கில், கன்னத்தில், கண்களில் வலி போன்றவற்றை உண்டாக்குவதாக விளக்கப்பட்டுள்ளது.

    மேலும் சுகாதாரமற்ற காற்று. புகைப்பழக்கம், பல் நோய், டான்சில் மற்றும் அடினாய்டு தொந்தரவு போன்றவைகளாலும் பீனிசம் வரும்.

    ஒவ்வாமையும் பீனிசத்தை உண்டாக்கும். நாள்பட்ட பீனிசத்தால் காற்றறைகள் புண்ணாகி சளியுடன் கலந்து சீழும் ரத்தமும் துர்நாற்றத்துடன் வெளியேறும். சிலசமயம் கட்டிகள் மற்றும் மூக்கில் சதை வளர்ச்சியைக் கூட இது உண்டாக்கும். இத்தகைய மூக்குப் பிரச்சினைகளுக்கு நம்பகமான சிகிச்சைமுறைகள் உண்டு.

    • கர்ப்பகாலத்தில் ப்ரீக்ளாம்சியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
    • உணவு முறையில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

    கர்ப்ப கால மன அழுத்தம் என்பது, ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆளாகலாம். இதில் கவலை அல்லது மன அழுத்தமும் ஒன்று. இது சாதாரணமானது.

    பொதுவான காரணங்கள்:

    * கர்ப்ப இழப்பு

    * கர்ப்பம் குறித்த பயம்

    * பிரசவ பயம்

    * குமட்டல்

    * சோர்வு

    * மனநிலை மாற்றங்கள்

    * தாங்கமுடியாத முதுகுவலி

    * குழந்தையை நல்லபடியாக வளர்க்க முடியுமா என்னும் பயம் போன்றவை பொதுவான காரணங்களாக சொல்லப்படுகிறது.

    கர்ப்பகாலத்தில் மன அழுத்தம் உடலில் தலைவலி, தூங்குவதில் சிக்கல் அல்லது அதிகப்படியான உணவை எடுத்துகொள்ளும் நிலையை உண்டாக்க கூடும். இது வயிற்றில் வளரும் குழந்தையை பாதிக்கும். இதனால் ப்ரீக்ளாம்சியா அதுகுறித்த பயம் இன்னும் மன அழுத்தத்தை உண்டாக்கும். குறிப்பாக கர்ப்பிணிக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் இருந்தால், கர்ப்பகாலத்தில் ப்ரீக்ளாம்சியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

    கர்ப்பிணி பெண்களை குடும்பத்தில் இருப்பவர்களும் நட்பு வட்டமும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். அதை ஏற்றுகொள்ளும் விதமாக கர்ப்பிணி பெண்களும் ஒத்துழைக்க வேண்டும். உணவு முறையில் சீரான சத்தான உணவுகளை எடுத்துகொள்ளுங்கள். கர்ப்ப காலத்தில் என்ன மாதிரியான உணவுகளை எடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். இது குறித்து டயட்டீஷியனிடம் ஆலோசனை மேற்கொள்ளலாம்.

    நாவிற்கு சுவை அளிக்கும் ஜங்க் ஃபுட் உணவுகளை தவிருங்கள். கார்பனேட்டட் பானங்கள் தவிர்த்து பழச்சாறுகள், திரவங்கள் அதிகமாக எடுத்துகொள்ள வேண்டும். உணவை பகுதி பகுதியாக பிரித்து உண்ணுங்கள். உடலை சுகாதாரமாக வைத்துகொள்ளுங்கள். தினமும் இரண்டு வேளை வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்.

    மனதுக்கு பிடித்த இசையை கேளுங்கள். புத்தகம் படியுங்கள். துணையுடன் நேரம் செலவிடுங்கள். வயிற்றில் குழந்தையுடன் பேசுங்கள். வேகமான உடற்பயிற்சி இல்லாவிட்டாலும் மிதமான நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். யோகா, தியானம் போன்றவை மன அழுத்தத்தை குறைக்க கூடுதலான பலன் அளிக்கும்.

    • அம்மான் பச்சரிசி இலையை கீரையாக சாப்பிட்டு வர வேண்டும்.
    • தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி அல்லது லேகியம்

    புரொலெக்டின் ஹார்மோன் மற்றும் ஆக்சிடோசின் ஹார்மோன் சீராக இருந்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும்.

    பால் சுரப்பை அதிகரிக்க உதவும் சித்த மருந்துகள் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள்:

    1) தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி அல்லது லேகியம்: காலை, இரவு ஒரு டீ ஸ்பூன் வீதம் சாப்பிட வேண்டும்,

    2) சவுபாக்கியசுண்டி லேகியம்: காலை, இரவு ஒரு டீ ஸ்பூன் வீதம் சாப்பிடலாம்,

    3) வெந்தயத்தை பொடித்து, பனை வெல்லம், நல்லெண்ணெய் சேர்த்து களியாக கிண்டி காலை இரவு இருவேளை கொடுக்க வேண்டும். இது போன்று உளுந்தங்களி செய்து சாப்பிடலாம்.

    4) பூண்டு, பால் சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். அல்லது பூண்டு குழம்பு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    5) அம்மான் பச்சரிசி இலையை கீரையாக சாப்பிட்டு வர வேண்டும்.

    6) பெருஞ்சீரகம் பால் சுரப்பை அதிகரிக்கும், பெருஞ்சீரக டீ அல்லது பெருஞ்சீரகத்தை வறுத்து சாப்பிடலாம்.

    7) பாதாம் பால் குடிக்கலாம். கருப்பட்டியில் செய்த கருப்பு எள்ளுருண்டை சாப்பிட வேண்டும்.

    8) பசலைக்கீரை, அரைக்கீரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 9) பப்பாளிக்காயை கூட்டு வைத்து சாப்பிட வேண்டும்.

    10) பால், தயிர், கேரட், கேழ்வரகு, முருங்கைக்காய், பாலாடைக்கட்டி, சுறா மீன், பாறை மீன், ஓட்ஸ் கஞ்சி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு.

    பூசணி சாறு, பூசணி விதை, ஆளி விதை. ப்ளாக் சீட்ஸ் எனப்படும் அலிசி விதை, பருத்திப் பால், பார்லி கஞ்சி, பாதாம் பருப்பு, செவ்விளநீர், கடல் பாசி இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    11) குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு தூங்க வேண்டும். பால் இல்லை என்றாலும் குழந்தையை அணைத்து பால் குடிக்க வைக்க வேண்டும்.

    தொடர்ச்சியாக இவ்வாறு செய்வதன் மூலமாக, புரொலெக்டின் மற்றும் அன்புக்குரிய ஹார்மோன் ஆக்சிடோசின் போன்றவை அதிகரித்து பால் சுரப்பை அதிகப்படுத்தும்.

    • சுமார் 7 மணி நேரம் இரவில் நன்கு தூங்க வேண்டும்.
    • ஒருவர் படுத்து 15 நிமிடங்களுக்குள் தூங்க வேண்டும்.

    பல விலங்குகள், பறவைகள் நின்றுகொண்டே தூங்கும் வழக்கம் உள்ளவை. ஆனால், மனிதன் உட்கார்ந்து கொண்டே தூங்குவது என்பது இயற்கையான செயல் அல்ல. அதிக உடல் எடை, மிகப்பெரிய தொப்பை, சுவாசக்கோளாறு போன்றவை உள்ளவர்கள், இரவு நேர வேலை செய்பவர்கள், தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் உட்கார்ந்த சில நிமிடங்களிலேயே தூங்கி விடுவதுண்டு.

    20 வயது நிரம்பிய ஒருவர் சுமார் 7 மணி நேரம் இரவில் நன்கு தூங்க வேண்டும் என்பது ஒரு அறிவியல் கணக்கு. உடலியல் கணக்கும் கூட. ஒருவர் உட்கார்ந்த இடத்தில் எல்லாம் சுமார் 5 நிமிடங்களில் தூங்கி விடுகிறார் என்றால் அவரது உடலில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.

    உட்கார்ந்த நிலையில் தூங்கும் போது இடுப்பு, கழுத்து, முதுகு பகுதிகளில் வலி, தசை-மூட்டுகள்- தோள்பட்டை இறுக்கம் போன்ற பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக வர ஆரம்பித்துவிடும்.

    உட்கார்ந்து கொண்டே அசைவற்ற நிலையில் தூங்கும் போது உடலின் எல்லா பாகங்களுக்கும் முறையாக ஒழுங்காக கிடைக்க வேண்டிய ரத்த ஓட்டம் சற்று குறைய நேரிடும். இது எல்லாவற்றையும் விட 'டி.வி.டி' என்று சொல்லக்கூடிய `ஆழ்சிரை ரத்த உறைவு' என்கிற மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

    சாய்வு நாற்காலியில் முக்கால்வாசி படுத்தது போன்று தூங்கலாம். கர்ப்பிணி பெண்களுக்கு, தூக்கத்தில் மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கு, நெஞ்செரிச்சல், வயிற்றில் அமிலப்பின்னோட்ட நோய் உள்ளவர்களுக்குத் தான் இது உபயோகமாக இருக்கும். சாதாரணமாக இருப்பவர்களுக்கு அல்ல.

     உட்கார்ந்து கொண்டே தூங்கும் பழக்கத்தை எப்படி நிறுத்துவது?

    1) நீங்கள் உட்கார்ந்திருக்கும் அறையில் உள்ள விளக்குகளை எரிய விடுங்கள்.

    2) பக்கத்தில் இருக்கும் யாரிடமாவது எதையாவது பேச ஆரம்பித்துவிடுங்கள்.

    3) உடனடி சக்தி கொடுக்கக்கூடிய ஏதாவது ஒரு பானத்தைக் குடித்து, உடலுக்கு சக்தியை உடனே வரவழையுங்கள்.

    4) ஒரு பெருமூச்சை இடையில் இடையில் இழுத்து விட்டுக்கொண்டு சில விநாடிகள் அல்லது சில நிமிடங்கள் ஓய்வாக இருங்கள்.

    5) கண்களுக்கு வேலை கொடுங்கள்.

    6) உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்து எழுந்து வீட்டிற்குள்ளோ, அலுவலகத்திற்குள்ளோ ஒரு ரவுண்டு சுற்றி வாருங்கள்.

    ஒருவர் படுத்து 15 நிமிடங்களுக்குள் தூங்க வேண்டும். இதுதான் இயற்கையான தூக்க முறை. ஒருவர் ½ மணி நேரத்திற்கு மேலும் தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறார் என்றால், அது தூக்கமின்மை நோயின் ஆரம்ப அறிகுறி ஆகும். இது உடல் பிரச்சினையாகவும் இருக்கலாம், மனப்பிரச்சினையாகவும் இருக்கலாம். உங்கள் குடும்ப டாக்டரை சந்தித்து ஆலோசனை மற்றும் சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள். பயப்படத் தேவையில்லை.

    • ஐஸ்கிரீமை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
    • அதிகமான அளவு ஐஸ்கிரீம் உட்கொள்ள கூடாது.

    ஐஸ்கிரீமை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சர்க்கரை நோயாளிகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அவர்கள் ஐஸ்கிரீமை சாப்பிடவே கூடாது என்பதல்ல. தங்கள் ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும் போது ஐஸ்கிரீமை எப்பொழுதாவது சாப்பிடலாம். ஒரு அரை கப் ஐஸ்கிரீமில் 137 கலோரிகள், 7 கிராம் கொழுப்பு, 16 கிராம் கார்போஹைட்ரேட், 14 கிராம் இனிப்பு இருக்கிறது.

    ஐஸ்கிரீமில் அதிகமான அளவு கார்போஹைட்ரேட், சர்க்கரை, கலோரி மற்றும் நிறைவுற்ற கொழுப்பு இருப்பதாலும், ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பதாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த உணவாக கருதப்படுவதில்லை. இருப்பினும் சர்க்கரை நோயாளிகள் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டால் மூன்று வாரத்துக்கு ஒருமுறை, அரை கப் ஐஸ்கிரீம் சாப்பிடலாம். அப்போது அவர்கள் கீழ்கண்டவற்றை பின்பற்ற வேண்டும்.

    1) ஐஸ்கிரீம் சாப்பிடும் போது குறைந்த கார்போஹைட்ரேட், கலோரி, சுகர், கொழுப்பு மற்றும் அதிக புரதம் உள்ள ஐஸ்கிரீம்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    2) உணவுக்கு பின் ஐஸ்கிரீம் சாப்பிடுவது நல்லது. அப்போது ஐஸ்கிரீமில் உள்ள அதிக கார்போஹைட்ரேட் அளவை சமன் செய்ய அன்று உட்கொள்ளக்கூடிய உணவில் கார்போஹைட்ரேட் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

    3) ஐஸ்கிரீமின் மேலே டாப்பிங்ஸாக பாதாம், பிஸ்தா போன்றவற்றை உபயோகிக்க வேண்டும். இது ஐஸ்கிரீம் சாப்பிட்ட உடனே ஏற்படும் சுகர் ஸ்பைக்ஸை திடுக்க உதவுகிறது.

    4) அதிகமான அளவு ஐஸ்கிரீம் உட்கொள்ள கூடாது.

    5) ரத்த சர்க்கரை அதிகமாக இருக்கும் போது, அந்த சூழலில், ஐஸ்கிரீம் உண்ண முயற்சிக்க கூடாது.

    ஐஸ்கிரீமில் உள்ள டிரிப்டோபான் எனும் அமினோஆசிட் "பீல் குட்" ஹார்மோன் என்று அழைக்கப்படும் "செரட்டோனின்" சுரப்பதை அதிகப்படுத்துகிறது. இது மன அழுத்தத்தை குறைத்து உற்சாகமாக வைத்திருக்க உதவுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    ×