search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    • பலபேருக்கு இந்த பொருள் தெரிந்திருக்கலாம்.
    • இந்த விளக்கு ஏற்றுவது லட்சுமிநாராயண பூஜை செய்ததற்கு சமமானது

    பசும்பாலில் சந்திரனும், பசுந்தயிரில் வாயு பகவானும், கோமியத்தில் வருண பகவானும், பசுஞ்சாணத்தில் அக்னி தேவனும், பசு நெய்யில் சூரியபகவானும் வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் இந்துக்களின் பல்வேறு சடங்குகளிலும், பூஜைகளிலும், ஆலயங்களிலும் இதற்கென தனித்துவமான இடம் இருக்கிறது.

    பசுவிலிருந்து பெறப்படும் இந்த ஐந்து மூலப் பொருட்களும் ஒன்று கலக்கும் பொழுது அது தெய்வீக தன்மையை அடைகின்றது. அவ்வைந்து பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

    ஒன்று : பசுஞ்சாணம்

    இரண்டு : பசுவின் கோமியம்

    மூன்று : பசும்பால்

    நான்கு : பசுந்தயிர்

    ஐந்து : பசுநெய்

    பலர் தங்களது வீட்டில் வருடத்திற்கு ஒரு முறையாவது கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் என்று சிறிய ஹோமங்களை புரோகிதர்களை அழைத்து செய்து கொள்வார்கள். ஆனால் இதற்கான பணச்செலவும் வேலைப்பளுவும் சற்று அதிகம் தான். காலத்தின் மாற்றத்தால் இப்போதெல்லாம், வீடு கட்டும்போது முதன்முறையாக யாகம் நடத்தியதோடு சரி.

    வீட்டில் ஹோமம் நடத்தும் சூழ்நிலையானது தற்சமயம் இல்லை. என்ன செய்வது? அதற்கு ஈடு இணையாக வேறொரு பரிகாரத்தை தான் கட்டாயம் நாம் செய்ய வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம். ஹோமங்களின் பலன்களையும், புண்ணியங்களையும் தரக்கக்கூடிய ஒரு விளக்கு பஞ்சகவ்ய விளக்கு. பலபேருக்கு இந்த பொருள் தெரிந்திருக்கலாம். இந்த விளக்கைப் பற்றியம் அதன் பலன்கள் பற்றியும் ஒரு சிலர் அறிந்திருப்பார்கள்.

    இந்தப் பஞ்சகவ்ய விளக்கானது பால், தயிர், நெய், கோமியம், சாணம், இவைகளால் மட்டும் செய்யப்பட்டது.

    வாரம்தோறும் வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை போன்ற தினங்களில் வீட்டை துடைத்து சுத்தப்படுத்திவிட்டு, வீட்டில் ஏதாவது ஒரு பகுதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அங்கு சிறிது பன்னீர் தெளித்து, நன்றாக துடைத்துவிட்டு, அரிசிமாவில் கோலம் போட்டு, காவி தீட்டி, ஒரு தாம்பூலத்தின் மேல் பஞ்சகவ்ய விளக்கை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்றி இறைவனை வணங்க வேண்டும்.

    இவ்வாறு தீபம் ஏற்றுவதால் ஒரு ஹோமம் செய்வதால் எவ்வளவு பலன்கள் கிடைக்குமோ அவ்வளவு பலனும் இந்த ஒரு விளக்கினை ஏற்றுவதில் கிடைத்துவிடும். பஞ்சகவ்ய விளக்கு ஏற்றி பூஜை செய்த பின் அந்த விளக்கின் சாம்பலை நெற்றியில் வைத்துக்கொள்ளலாம். மீதம் உள்ள சாம்பலை செடியில் சேர்ப்பதன் மூலம் செடிக்கு உரமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த விளக்கு ஏற்றுவது லட்சுமிநாராயண பூஜை செய்ததற்கு சமமானது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது...

    இந்த விளக்கு ஏற்றுவதால் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை தீரும். செல்வம் பெருகும்.

    • ஏழரை ஆண்டு காலம் சனிபகவான் ஒருவருக்கு பாதிப்பை தருவார்.
    • கண்டக சனி என்பது கழுத்தைப் பிடிக்கும் சனி என்பார்கள்.

    ஏழரை சனியும் அஷ்டமத்து சனியும் ஒரு மனிதனை ஆட்டி படைத்து விடும். கண்டச்சனியும் அர்த்தாஷ்டம சனியும் மனிதர்களை அசர வைத்து விடும். சனியால் சங்கடத்திற்கு ஆளானவர்கள் சில பரிகாரங்களைச் செய்தால் போதும் சனிபகவானை சந்தோஷப்படுத்த முடியும்..அள்ளிக்கொடுப்பாராம் சனிபகவான்.

    ஏழரை ஆண்டு காலம் சனிபகவான் ஒருவருக்கு பாதிப்பை தருவார். ராசிக்கு 12ஆம் வீட்டில் வரும் போது விரைய சனியாகவும் ராசியில் அமரும் போது ஜென்ம சனியாகவும், ராசிக்கு இரண்டாம் வீட்டில் அமரும் போது பாத சனியாகவும் மொத்தம் ஏழரை ஆண்டு காலம் உலகத்தின் உண்மை நிலையை உணர வைத்து விடுவார். அதே போல சனி பகவான் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமரும் போது கண்டச்சனியாகவும்..8ஆம் வீட்டில் அமரும் போது அஷ்டமத்து சனியாகவும் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்யும் போது அர்த்தாஷ்டம சனியாகவும் பலன்களைத் தருவார் சனிபகவான்.

    நம்முடைய ஜாதகத்தில் எத்தகைய சனி நிகழ்ந்தாலும் நம்முடைய வினை பயன் மூலமே நன்மையோ தீமையோ நிகழ்கிறது. ஜாதகத்தில் என்ன வகையான சனிகள் இருக்கின்றன.. அவை என்னவெல்லாம் பலன்களை நமக்குக் கொடுக்கும் என்பதைப்பற்றி தான் நாம இந்தக் கட்டுரையில் பார்க்கப்போறோம்.

    ஏழரை சனி

    ஏழரை சனி என்பதனை தோஷமாக கருதுவது தவறு என்பதனை நாம் முதலில் உணர வேண்டும். ஏழரை சனியை ஒருவர் தன் வாழ்நாளில் மூன்று முறை சந்திப்பார்கள். 22 வருடங்களுக்கு ஒருமுறை ஒருவருடைய ஜாதகத்தை ஏழரை சனி ஆட்சி செய்கிறது. இந்த சனி காலத்தில் சிறு சிறு தடங்கல்கள் மட்டுமே ஏற்படுமே தவிர, பெரிய தடங்கல்கள் ஏதும் ஏற்படாது. அவ்வாறு ஏற்பட்டாலும் அது தற்காலிகமே தவிர நிரந்தரமானது இல்லை. ஏழரை சனி ஏற்படும் ஜாதககாரர்களுக்கு ஏற்படும் பெரிய ஆபத்தை சிறிய தடைகள் மூலம் தடுத்து நிறுத்துவதே ஏழரை சனியின் வேலையாகும். ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னும் பின்னும் சனிபகவான் ஆட்சி செய்யும் போது ஏழரை சனியானது பிறக்கிறது. சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து எள்ளுபொடி கலந்த தயிர் சாதத்தைக் காக்கைகளுக்கு படைத்துவர ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

    ஜென்ம சனி

    ஜென்ம சனி என்பது, ஒருவரின் ராசியில் சனிபகவான் ஒன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கும் பொழுது பிறக்கிறது. ஒருவருடைய ஜாதகத்தில் ஜென்மசனி நிகழும் போது, பல்வேறு இழப்புகள் அல்லது அதற்கு ஏற்றார்போல துன்பங்கள் ஏற்படும் என்பது ஜோதிட வல்லுநர்கள் சொல்லும் வாக்கு. ராகு கேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும், சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் ஜென்ம சனியின் தாக்கத்தைக் கட்டுபடுத்த உதவும். வியாழக்கிழமை தோறும் தஷிணாமூர்த்திக்கு சுண்டல் மாலை சாத்தி வழிபட்டால் நன்மை உண்டாகும்.

    அஷ்டம சனி

    அஷ்டம சனி என்பது, முன் ஜென்மத்தில் ஒருவர் செய்யும் வினைகளைப் பொறுத்து சனி பகனான் அவர்களுக்கென தண்டனையை கொடுப்பதாகும். வயதிற்கேற்ப அஷ்டமத்து சனி பிரச்னைகளைக் கொடுக்கும். அந்த வகையில், 4 முதல் 15 வயதுள்ளோருக்கு அஷ்டமத்து சனி நிகழ்ந்தால் படிப்பில் சற்று மந்தமாக இருப்பார்கள் மற்றும் 40 வயட்திற்குட்பட்டவர்களுக்கு அஷ்டமத்து சனி நிகழ்ந்தால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும் என்றும் கூறுகிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். அஷ்டமத்து சனியில் இருந்து தங்களை பாதுக்காத்துக்கொள்ள சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய், எள் சேர்த்து விளக்கேற்ற வேண்டும்.

    அர்த்தாஷ்டம சனி

    அர்த்தாஷ்டம சனியானது சனிபகவான் ராசியின் நான்காம் இடத்தில் சஞ்சரிக்கும்போது பிறக்கிறது. பொருள் மற்றும் நிதி செலவுகளை ஏற்படுத்தும் சனியாகும். தொழில் பாதையை இச்சனியானது பார்ப்பதனால் தொழில் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது அவசியமாகும். இச்சனியின் தாக்கத்தை தாங்குவதற்கு ஞாயிற்றுகிழமைகளில் சொர்ண ஆகர்ஷண பைரவரையும் சனிக்கிழமைகளில் சிவாலயங்களுக்கு சென்றும் வழிபடுதல் வேண்டும்.

    கண்டக சனி

    கண்டக சனி என்பது கழுத்தைப் பிடிக்கும் சனி என்பார்கள். குரல்வளையை இறுகப்பிடித்தால் நாம் எப்படி திணறுகிறோமோ அதே போல் ராசியில் ஏழாம் இடத்தில் வரும் இந்த கண்டக சனியால் வரும் இடர்பாடுகள் இருக்கும் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னால் யோசித்து செயல்பட்டால் இச்சனிகாலத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

    • முருகனுக்கு உகந்தது செவ்வாய்க்கிழமை.
    • செவ்வாய் தலங்களாக வைத்தீஸ்வரன் கோவிலும், பழனியும் கருதப்படுகின்றன.

    * செவ்வாய் கிரகத்திற்குரிய அதிதேவதை முருகன்.

    * பிரபலமான செவ்வாய் தலங்களாக வைத்தீஸ்வரன் கோவிலும், பழனியும் கருதப்படுகின்றன.

    * வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமி சன்னிதிக்கும், பழனி தண்டாயுதபாணி சன்னிதிக்கும் சென்று வந்தால் மன ஆறுதல் கிடைப்பதுடன் செவ்வாய் தோஷத்தால் தடைபடும் திருமணங்கள் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.

    * இது தவிர மயிலாடுதுறை அருகிலுள்ள சிறுகுடி மங்களநாதர் கோவிலில் செவ்வாய் அருள்பாலிக்கிறார். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

    * முருகனுக்கு உகந்தது செவ்வாய்க்கிழமை. இந்த நாளில் விரதமிருந்து அருகில் உள்ள சிவன் கோவில் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபடலாம்.

    * இவ்வாறு தொடர்ந்து (ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை) விரதமிருந்து நெய் தீபம் ஏற்றி வந்தால் தடைபடும் திருமணம் விரைவில் நடைபெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

    -கு.அருணாசலம், தென்காசி.

    • வராஹி தேவிக்கு உகந்தது பஞ்சமி திதி.
    • கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள்.

    சப்தமாதர்களில் நடுநாயகமாகத் திகழ்கிறாள் வராஹி தேவி. படைகளின் தலைவியாகத் திகழ்கிறாள் தேவி என்கிறது வராஹி புராணம். வலிமை மிக்கவள். நமக்கெல்லாம் வலிமையைக் கொடுப்பவள்.

    வராஹி தேவிக்கு உகந்தது பஞ்சமி திதி. வராஹியை வழிபடுவதும் தரிசிப்பதும் மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்வதும் உன்னதப் பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    வீட்டில் விளக்கேற்றி வராஹியின் மூலமந்திரத்தைச் சொல்லி, ஏதேனும் இனிப்பை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால் வேண்டியதையெல்லாம் தந்தருளுவாள் தேவி.

    ஓம் ஐம் க்லெளம் ஐம்

    நமோ பகவதீ வார்த் தாளி . வார்த்தளி

    வராஹி வாராஹமுகி வராஹமுகி

    அந்தே அந்தினி நம :

    ருத்தே ருந்தினி நம :

    ஜம்பே ஜம்பினி நம :

    மோஹே மோஹினி நம :

    ஸதம்பே ஸ்தம்பினி நம:

    ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்

    ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி

    ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு

    சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்

    ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்

    என்று சொல்லி வழிபடலாம்.

    ஓம் வாம் வராஹி நம:

    ஓம் வ்ரூம் ஸாம் வராஹி கன்யகாயை நம:

    எனும் மந்திரத்தை 108 முறை ஜபித்து தேவியை வணங்கித் தொழுதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

    ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வராஹி தேவ்யை நம:

    க்லீம் வராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி – ஸ்ரீம்

    தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.

    எனும் மந்திரத்தைச் சொல்லி வந்தால், வீட்டில் தனம் தானியம் பெருகும். சகல ஐஸ்வரியங்களும் பெருகும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். அதேபோல்,

    லூம் வராஹி லூம் உன்மத்த பைரவீம்

    பாதுகாப்பாம். ஸ்வாஹா

    எனும் மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம்.

    வராஹி தேவியை வணங்கி வந்தால், எதிர்ப்புகள் விலகும். தடைகள் அகலும். வராஹி தேவியை போற்றுவோம். துதிப்போம். மனதாரப் பிரார்த்திப்போம். மங்கல காரியங்களைத் தருவாள். மங்காத செல்வங்களையெல்லாம் வழங்குவாள்.

    • இஷ்டப்பட்டு செய்யும் வேலையில் தான் நம்மால் முன்னேற்றம் காண முடிகிறது.
    • ஆசைப்பட்ட திருப்தியான வேலை நமக்கு கிடைக்க பிள்ளையாருக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை பார்க்கலாம்.

    எல்லோருக்கும் ஆசைப்பட்ட வேலை கிடைப்பது கிடையாது. மேலும் கிடைத்த வேலையை தக்க வைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருப்பார்கள். மனதிற்கு பிடித்த வேலை செய்யும் பொழுது தான் அந்த வேலையில் இருக்கும் சுமை நமக்கு தெரியாமல் இருக்கும். இஷ்டப்பட்டு செய்யும் வேலையில் தான் நம்மால் முன்னேற்றம் காண முடிகிறது. எனவே நல்ல வேலையும், ஆசைப்பட்ட திருப்தியான வேலை நமக்கு கிடைக்க பிள்ளையாருக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை அறிந்து கொள்ளலாம்.

    பிள்ளையாருக்கு கற்பூரவள்ளி இலையின் மீது அதீத பிரியம் உண்டு. இந்த கற்பூரவள்ளி இலையில் பிள்ளையாரின் ஸ்வரூபம் இருக்கிறது. 9 கற்பூரவள்ளி இலைகளை மாலையாக கோர்த்து பிள்ளையாருக்கு போட்டு வாரம் தோறும் புதன் கிழமையில் வழிபடலாம். ஆசைப்பட்ட வேலை வேண்டி பிரார்த்திப்பவர்கள் புதன்கிழமையில் வழிபடுவது நல்லது.

    கற்பூரவல்லி இலைகளுக்கு பதிலாக 9 செவ்வாழை பழங்களை மாலையாக கோர்த்தும் 12 வாரங்கள் விநாயகருக்கு சாற்றி வழிபடலாம். கற்பூரவல்லி இலையை விட செவ்வாழைக்கு அதிக சக்தி உண்டு. இந்த 9 செவ்வாழை பழங்களை இடைவெளி விட்டு நூலில் மாலை போல கட்டிக் கொள்ளுங்கள்.

    இதை விநாயகப் பெருமானுக்கு மாலையாக போட்டு வாரம் தோறும் புதன்கிழமையன்று வழிபட்டு வர வேண்டும். தொடர்ந்து 12 வாரங்கள் வழிபட்ட பின்பு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைத்து வழிபாட்டை முடித்துக் கொள்ள வேண்டும்.

    இது போல நீங்கள் ஒவ்வொரு வாரமும் தவறாமல் செய்து வரும் பொழுது 12 வாரத்திற்குள் உங்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். வேலை தேடி ஒவ்வொரு வாரமும் நேர்காணலுக்கு சென்று அலைந்து, திரிந்து, ஓய்ந்து போனவர்களுக்கு விநாயகப் பெருமான் நல்லாசி வழங்குகிறார்.

    வாரம் தோறும் விரதம் இருந்து அசைவ உணவு எடுத்துக் கொள்ளாமல் பிள்ளையாரை முழுமனதாக ஏற்று நம்பி இந்த 9 செவ்வாழை பழ

    மாலையை சாற்றி உண்மையான பக்தியுடன் மனதிற்குள் வேண்டி வணங்கிக் கொள்ளுங்கள். நிச்சயம் எதிர்பார்த்த வேலையும், இஷ்டப்பட்ட வேலையும் மன நிறைவுடன் உங்களுக்கு கிடைக்கும்.

    • ராசிக்கு ஏற்ற மந்திரத்தை அதற்கேற்ற கிழமைகளில் உச்சரித்தால் திருமண தடை நீங்கும்.
    • 12 ராசிகளுக்கு மந்திரத்தை இங்கு பார்ப்போம்.

    திருமண தடை பெற்றோரை மட்டுமல்லாமல், பிள்ளைகளையும் மன ரீதியாக மிகவும் பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. சரியான வயதில் திருமணம் நடக்காதவர்கள், சில தோஷங்களால் திருமண தடையை எதிர் கொள்ளக்கூடியவர்கள் ஒவ்வொரு ராசிக்கு ஏற்ற மந்திரத்தை உச்சரித்தால் திருமண தோஷம் நீங்கும். ராசிக்கு ஏற்ற மந்திரத்தை அதற்கேற்ற கிழமைகளில் உச்சரித்தால் திருமண தடை நீங்கும்.

    ஒருவருக்கு சரியான வயதில் திருமணம் நடந்தால் தான், அவரின் வாழ்க்கையை சரியாக வழிநடத்திச் செல்ல முடியும். திருமண தடைக்கான தோஷத்தை நீக்கக்கூடிய 12 ராசிகளுக்கு மந்திரத்தை இங்கு பார்ப்போம்.

    மேஷம் :

    தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் 'ஓம் சும் சுக்ராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    ரிஷபம் :

    தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் 'ஓம் அங் அங்காரகாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    மிதுனம் :

    தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் 'ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    கடகம் :

    தினமும் அல்லது சனிக்கிழமைகளில் 'ஓம் சம் சனைச்சராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    சிம்மம் :

    தினமும் அல்லது சனிக்கிழமைகளில் 'ஓம் சம் சனைச்சராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    கன்னி :

    தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் 'ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    துலாம் :

    தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் 'ஓம் அங் அங்காரகாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    விருச்சிகம் :

    தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் 'ஓம் சும் சுக்ராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    தனுசு :

    தினமும் அல்லது புதன்கிழமைகளில் 'ஓம் பும் புதாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    மகரம் :

    தினமும் அல்லது திங்கட்கிழமைகளில் 'ஓம் சோம் சோமாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    கும்பம் :

    தினமும் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 'ஓம் ஹ்ராம் சூர்யாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    மீனம் :

    தினமும் அல்லது புதன்கிழமைகளில் 'ஓம் பும் புதாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.

    • அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
    • சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கும்.

    முற்பிறவியில் செய்த பாவத்தால் இப்பிறவியில் தீராத துன்பங்களை அனுபவித்து அவதிப்படுபவர்கள், சிவாலயங்களுக்கு சென்று முறையாக வழிபட்டால் தங்கள் முற்பிறவி பாவங்களில் இருந்து விடுபடலாம் என்பது முன்னோர் கூற்று.

    முற்பிறவி பாவங்களை போக்கும் சிவாலயங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தாலும் இதில் முக்கிய இடத்தை பிடிக்கும் சிவாலயமாக நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது.

    குறிப்பாக மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வை அடைந்து அனைத்து பேறுகளையும் பெற சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரை தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது வழிபட வேண்டும்

    மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ஒரு அற்புத ஆலயம்தான், நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள சீயாத்தமங்கை சிவாலயம் ஆகும். மேற்கு நோக்கி உள்ள சிவலாயத்தை வணங்கினால், 100 சிவாலயத்தை வணங்கியதற்கு சமம் என்பர்.

    சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சிவனுக்கும், அன்னைக்கும் தனித்தனி சன்னதி உள்ளது.

    சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில் இறைவனின் திருமேனியில் சிலந்தி ஊர்ந்ததும் மூல நட்சத்திர நாளில்தான். எனவே மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கி நலம்பெற வேண்டிய திருத்தலம் இந்த கோவில் ஆகும்.

    ஆவணி மாத மூல நட்சத்திர நாளில் இங்கு நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை தரிசித்து அந்த நாளில் நடைபெறும் ருத்ர வியாமளா தந்திர பூஜையில் பங்கேற்றால் திருமணத்தடை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பவுர்ணமியில் இந்த கோவிலில் உள்ள சூரிய-சந்திர தீர்த்தத்தில் நீராடி அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    குழந்தை பாக்கியம், கல்வி, திருமணம் வேண்டுவோர் 5 பவுர்ணமிகளில் சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கும்.

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து அங்கிருந்து நாகை- கும்பகோணம் சாலையில் உள்ள திருமருகலுக்கு சென்று திருமருகலில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலை அடையலாம்.

    தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்களும் நாகப்பட்டினத்துக்கு வந்த மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம். நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 13 கி.மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது.

    • சிவன் பார்வதி படத்திற்கு விளக்கேற்றி வணங்க வேண்டும்.
    • இந்த பரிகாரத்தை 40 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

    களத்திர தோஷத்தால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் திருமணம் நடைபெறாமல் அவதிப்படுகின்றனர். திருமண தடை நீங்க இந்த பரிகாரம் நல்ல பலனைத்தரும் என்று நிச்சயம்.

    சந்தன கட்டிகள் 7, வெள்ளை கற்கண்டு 7, ஒரு ரூபாய் நாணயம் 7, பச்சரிசி சரியாக 70 கிராம், லவங்கம் 7, பூநூல் 7 மச்சள் தடவாமல் , வெள்ளை மலர் 7, வெள்ளை பட்டு 70 cm

    மேற்கண்ட பொருள் அனைத்தையும் மஞ்சள் துணியில் முடிந்து சிவன் பார்வதி இணைந்த படத்திற்கு முன்பாக வைத்து நெய் தீபம் ஏற்றி தனக்கு திருமணம் விரைவாக அமைய வேண்டும் என்று மானசீகமாக வேண்டிய பின் , அந்த முடிச்சினை சிவன் பார்வதி படத்திற்கு பின்புறம் வைக்க வேண்டும்.

    40 நாட்கள் தொடர்ந்து அந்த சிவன் பார்வதி படத்திற்கு விளக்கேற்றி வணங்க வேண்டும். 40-து நாள் நாள் காலை குளித்து விநாயகரை வணங்கி சிதறு தேங்காய் ஒன்று உடைத்து, குலதெய்வத்தை மனதார எண்ணி, குலதெய்வம் அருகில் இருந்தால் கோவிலுக்கு சென்று வரவும். பின் காணிக்கை முடிச்சை சிவன் பார்வதி இணைந்து(தனித்தனி சந்நிதியில் இருந்தாலும் செய்யலாம்) உள்ள கோவில் அர்ச்சகருக்கு தரலாம் அல்லது கோவில் விருட்சத்தின் கிளையில் கட்டலாம்.

    இதனை காலை நேரத்தில் செய்வது சிறப்பு. நிச்சயமாக எப்பேற்பட்ட களத்திர தோஷமும் நீங்கி திருமண பாக்கியத்தை பெறலாம்.

    • சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும்.
    • நெய் அபிஷேகம் செய்தால் நோய் நீங்கி வம்ச விருத்தி ஏற்படும்.

    சிவனைத் தூய நல்லெண்ணையில் வாசனைத் திரவியங்கள் கலந்து நூறு குடம் அபிஷேகம் செய்தால் வாழ்வில் நோய் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

    கோமூத்திரம் கலந்த பஞ்சகவ்யத்தைப் பத்துக்குடம் அபிஷேகம் செய்தால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி, மாசு மருவற்ற தேத்தினைப் பெறலாம்.

    சுத்தமானப பசுவின் கறந்த பால் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் தீர்க்காயுசு கிடைக்கும்.

    சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் மன துக்கமும், இனிய கானம் பாடும் திறமையும், குயிலினும் இனிய குரலும் கிடைக்கும்.

    எலுமிச்சம்பழம் ஆயிரம் கொண்டு அபிஷேகம் செய்தால் அஞ்ஞானம் நீங்கிவிடும்.

    சர்க்கரையினால் நூறு மூட்டை அபிஷேகம் செய்ய வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு உண்டாகும்.

    இளநீர் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் பேரானந்தமும், கைலாசவாசனின் காலடியில் வாழும் பேறும் கிட்டும்.

    பத்தாயிரம் பழங்கள் சேர்த்து செய்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் வீரத்துடன் எதையும் சாதிக்கும் மனோபலமும், சகல காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.

    தயிர் நூறு குடம் அபிஷேகம் செய்தால் மேலான சம்பத்து கிடைக்கும்.

    கரும்புச்சாறு நூறு குடம் அபிஷேகம் செய்தால் தேக ஆரோக்கியம், உடல் வலிமை பெற்று விளங்கும்.

    மஞ்சள் தூளினால் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும்.

    திராட்சை ரசம் செல்வத்தினை அளிக்கும்.

    பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் இகபரசுகங்களில் இருந்து நம்மை விடுவித்து சுவர்க்க நிலையை நமக்கு அளிக்கும்.

    அரிசிமாவினால் அபிஷேகம் செய்தால் எத்தகைய கடன்கள் இருந்தாலும் அவற்றில் இருந்து நம்மை விடுவிக்கும்.

    அன்னாபிஷேகம், பதினொரு மூட்டை அரிசியால் அன்னம் சமைத்து அதனை லிங்கஸ்வரூபமான சிவனுக்கு அபிஷேகம் செய்தால் வயிற்றில் உண்டாகும் சகலவிதமான நோய்களும் பஞ்சாகப் பறந்துவிடும்.

    தூய்மையான மங்களகரமான கங்கை நீர் நூறு குடம் கொண்டு அபிஷேகம் செய்தால் மனத்திலுள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி , பயம் போய், மனநிம்மதி உண்டாகும்.

    சந்தனக்குழம்பினைப் பன்னீரில் கரைத்து அபிஷேகம் செய்தால் இறைவனிடம் மாசற்ற பக்தி உண்டாகி அஞ்ஞானம் விலகும்.

    ருத்ரம் ஜபித்த ஆயிரம் கலசங்களில் வைக்கப்பட்டுள்ள கங்கை நீரால் கங்காதரனைக் குளிர்வித்தால் மந்திரசித்தி ஏற்படும்.

    ஈசனின் திருமேனியில் இருந்து தோன்றிய விபூதியினால் அபிஷேகம் செய்ய சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

    தங்கத்தாமரை மொட்டுகள் செய்து அதனால் அபிஷேகம் செய்தால் சொவர்க்க போகம் கிடைக்கும்.

    மாதுளை - அரச பதவி கொடுக்கும்

    நெய் - மோட்சத்தைக் கொடுக்கும்

    அன்னம் - வயிற்று நோயை நீக்கும்

    நெல்லிக்கனி - பித்தம் நீக்கும்

    பழ ரசங்கள் - வறட்சியைப் போக்கும்

    நெய் அபிஷேகம் செய்தவுடன் ஆறிய வெந்நீர் அபிஷேகம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் வாசனை கலந்த சுத்த தண்ணீரால் அபிஷேகம் செய்து, அடுத்தது தொடங்க வேண்டும்.

    ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் வகை வகையான மலர்களை சிவன் தலையில் வைக்க வேண்டும். ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது சல்லடைக்கண்கள் உள்ள தாராபாத்திரத்தில் அபிஷேகம் செய்யதால் நன்மைகள் பல உண்டு.

    சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும். சுகம், குழந்தை பாக்கியம் ஏற் படும்.

    நெய் அபிஷேகம் செய்தால் நோய் நீங்கி வம்ச விருத்தி ஏற்படும்.

    சர்க்கரை கலந்த பாலாபிஷேகம் செய்ய மந்திர ஏவல்களால் பாதிப்பு ஏற்படாது.

    வாசனைத் திரவியங்களோடு கூடிய தயிர் அபிஷேகம் எதிரிகளை அழிக்கும்.

    தேன், வியாதிகளை நீக்கும், கரும்புச்சாறு துக்கங்களை நீக்கி சந்தோஷத்தை கொடுக்கும்.

    • இந்த மந்திரத்தை தினமும் 11 முறை பாராயணம் செய்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.
    • கணவர் - மனைவி அனுமனின் அருளால் ஒன்று சேருவார்கள்.

    கணவன் - மனைவி ஒற்றுமை ஏற்பட தினமும் சுந்தர காண்டம் பாராயணம் செய்யலாம். ராமர் - சீதையை சேர்த்து வைத்தது போல் பிரிந்திருக்கும் கணவர் - மனைவி அனுமனின் அருளால் ஒன்று சேருவார்கள். கீழே உள்ள மந்திரத்தை தினமும் காலையிலும், மாலையிலும் குளித்து விட்டு 11 முறை பாராயணம் செய்தால் நல்ல மாற்றம் ஏற்படும். இந்த சக்தி வாய்ந்த மந்திரங்களை எத்தனை முறை முடியும் அத்தனை முறை சொல்வதால் வாழ்க்கையில் நல்ல பல மாற்றங்கள் ஏற்படும்

    ஓம் ஏகவீரம் மிளித்வாஸெள க்ருஹமாபீய சாதராத்

    புண்யே(அ) ஹ்நி காரயாமாஸ, விவாஹம் விதிபூர்வகம்

    பாரிபர்ஹம் ததோ தத்வா, ஸம்பூஜ்ய விதிவத்ததா

    புத்ரீம் விஸர்ஜயாமாஸ, யசோவத்யா ஸமந்விதாம்

    ஏவம் விவாஹே ஸ்ம்வ்ருத்தே, ரமாபுத்ரோ முகாந்விதஹ

    க்ருஹம் ப்ராப்ய பஹீந் போகாந், புபுஜே ப்ரியயாஸஹ

    இந்த மந்திரத்தை சொல்ல முடியாதவர்கள் 7 பேருக்கு சுந்தரகாண்ட புத்தகத்தை வாங்கி கொடுக்கவும்

    • ஒருவரை வசப்படுத்திக் கொள்ளவும், நம்மீது அன்பு பெருக செய்யவும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
    • இந்த பரிகாரம் செய்ய நாள், நட்சத்திரம், நேரம், காலம் எல்லாம் ஒன்றும் கிடையாது.

    கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க உப்பு மற்றும் மிளகு சிறந்த பரிகாரமாக இருக்கிறது. தாந்திரீகம் மற்றும் மாந்திரீகம் போன்ற விஷயங்களில் உப்பு, மிளகு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. எவரையும் வசியம் செய்யும் சக்தி இந்தக் கல் உப்பு மற்றும் மிளகிற்கு நிச்சயம் உண்டு. ஒருவரை வசியம் செய்யவும், அவரை நம் வசப்படுத்திக் கொள்ளவும், நம்மீது அன்பு பெருக செய்யவும் உப்பு, மிளகு சிறந்த பரிகாரமாக உள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு நாள், நட்சத்திரம், நேரம், காலம் எல்லாம் ஒன்றும் கிடையாது.

    கணவன், மனைவிக்குள் இருக்கும் தீராத சண்டை, சச்சரவுகள் தீர்வதற்கு ஒருவரை ஒருவர் முதலில் அமைதியான நிலையில் அமர்ந்து மனம் விட்டு பேச வேண்டும். சண்டையை தீர்த்துக் கொள்ள முடிவு எடுத்துவிட்டால் எவ்வளவு சண்டை, சச்சரவுகள், எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதனை தாங்கிக் கொள்ளும் மனோதிடமும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    உங்களால் முடிந்த நேரத்தில் நீங்கள் சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் ஒரு கண்ணாடி தம்ளரை எடுத்துக் கொண்டு போய் அமைதியாக அமர்ந்து கொள்ளுங்கள். அதில் முக்கால் பாகம் தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். குண்டு குண்டாக இருக்கும் 27 மிளகுகள் மற்றும் இருபத்தி ஏழு கல் உப்புகளை எண்ணி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி இடையே சண்டை தீர வேண்டும் என்று மனதார நினைத்துக்கொண்டு கண்ணாடி டம்ளருக்குள் இருக்கும் தண்ணீரில் முதலில் ஒவ்வொரு கல் உப்பையும் எடுத்து போட்டு கொண்டே வர வேண்டும்.

    எல்லா மிளகு மற்றும் கல் உப்புகளையும் போட்டு முடித்த பின்பு நீங்கள் மனதார உங்கள் பிரச்சனையை நினைத்து வேண்டிக் கொள்ள வேண்டும். என்னுடைய கணவன் அல்லது மனைவி என் மேல் மீண்டும் பழைய அன்புடன் அதே போல இருக்க வேண்டும். எல்லோரையும் போல நாங்களும் ஒருமித்த தம்பதிகளாக வாழ வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்ட பின் கண்ணாடி தம்ளரை எடுத்துக் கொண்டு போய் அப்படியே ஓடும் தண்ணீரில் கரைத்து விடுங்கள். நீர் நிலைகள் இல்லாத பட்சத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் சிங்கிள் கொட்டி விடலாம். அல்லது கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்த கொஞ்ச நாட்களிலேயே உங்களுக்கு நிச்சயம் நல்லதொரு மாற்றம் தெரியும்.

    • பாடலீஸ்வரரை விரதமிருந்து மனமுருகி வேண்டினால், நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும்.
    • குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் உள்ள இறைவனின் பெயர் பாடலீஸ்வரர். பாடலீஸ்வரரை விரதமிருந்து மனமுருகி வேண்டினால், நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீருவதோடு, மனநிம்மதியும் கிடைக்கும். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பாடலீஸ்வரருக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், சந்தனம், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். இது தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். சாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம், சேலை சாத்துதலும் செய்யலாம்.

    அமாவாசை அன்று கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.இது தவிர பாடலீஸ்வரருக்கு ஒவ்வொரு கார்த்திகை 5 திங்கட்கிழமைகளிலும் சங்காபிஷேகம், கலசாபிஷேகம் செய்யப்படுகிறது. தங்க கவசம் செலுத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் தல விருட்சமாக பாதிரி மரம் உள்ளது. இந்த மரத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. மற்ற மரங்களை போல பாதிரி மரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. விதை மற்றும் காய் இல்லாமல் இந்த பாதிரி மரம் வளரும். ஊதா, சந்தனம், சிவப்பு என வெவ்வேறு நிறத்தில் பூ பூக்கும்.

    இந்த பாதிரி பூ வருடத்தில் பங்குனி, சித்திரை ஆகிய 2 மாதத்தில் மட்டுமே மலரும். இந்த பூவை பாடலீஸ்வரருக்கு பூஜையின் போது, பயன்படுத்தப்பட்டு வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

    தற்போது இந்த மரம் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோவிலில் உள்ள இந்த பாதிரி மரத்தை வலம் வந்தால், சாபம், தோஷம் நீங்கும் என்று இன்றளவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

    ×