search icon
என் மலர்tooltip icon

    கிசுகிசு

    முன்னணி நடிகையாக வலம் வருபவர் மற்ற நடிகர்களுடன் ரொமான்ஸ் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    முன்னணி நடிகையாக இருக்கும் போதே திருமணம் செய்துக் கொண்ட கதாநாயகி, தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறாராம். திருமணத்திற்குப் பிறகு நடிகை கவர்ச்சியாக நடித்தாலும் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மறுத்து வந்தாராம். இதற்கு கணவர் வீட்டார் கொடுத்த அழுத்தம் என்று பலரும் பேசி வந்தார்களாம்.

    தற்போது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்து இருக்கிறார்களாம். இதையடுத்து நடிகையை தொடர்பு கொள்ளும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்ற நடிகர்களுடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்களாம். நடிகையும் ஓகே என்று சொல்லி இருக்கிறாராம்.
    தமிழில் சமீபத்தில் அறிமுகமான நடிகை ஒருவர், இயக்குனர்களுக்கு கட்டளையிட்டு வருகிறாராம்.
    மலையாளத்தில் இருந்து வந்த நடிகை, தன்னுடைய முதல் படத்திலேயே பிரபல நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்து மிகவும் பிரபலமானாராம். இதன்பின் நடிகையின் வளர்ச்சி பிரகாஷமாக மாறி இருக்கிறதாம். பல படங்கள் நடிகையை தேடி வருகிறதாம்.

    நடிகையோ மகிழ்ச்சியாக கதை கேட்டு வருகிறாராம். இருப்பினும் தான் நடித்த ஒல்லி நடிகருடன் மீண்டும் படம் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் அவரை வைத்து படம் எடுத்து, மீண்டும் அவருடன் என்னை நடிக்க வையுங்கள் என்று கட்டளையிட்டு வருகிறாராம்.
    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்த நடிகை, பட வாய்ப்புகள் கிடைத்தும் வருத்தப்பட்டு வருகிறாராம்.
    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். இவர் கைவசம் தற்போது ஓரிரு படங்கள் இருக்கிறதாம். கோடிகளில் சம்பளம் வாங்கும் இவர், அடுத்ததாக நடிக்க இருக்கும் படங்களுக்கு ஒரு கோடி உயர்த்தி கேட்கிறாராம்.

    நடிகையின் சம்பளத்தை கேட்ட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், நடிகையை ஒப்பந்தம் செய்ய கால தாமதம் செய்கிறார்களாம். இதனால் நடிகை வருத்தப்பட்டு வருகிறாராம். மேலும் சம்பளத்தால் பட வாய்ப்பை இழந்துவிடுவோமோ என்ற பயமும் நடிகைக்கு இருக்கிறதாம். இதனால் என்ன செய்துவதென்று தெரியாமல் புலம்பி வருகிறாராம்.
    பிரபல நடிகையாக இருப்பவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருவதால், அதை நடிக்க மாட்டேன் என்று கூறி மறுத்து வருகிறாராம்.
    தமிழில் நடித்து பிரபலமான நடிகைகள், தெலுங்கு சினிமாவில் நுழைந்து அடுத்ததாக பாலிவுட்டுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து முயற்சி செய்து வருகிறார்களாம். ஆனால், அந்த வாய்ப்பு பல நடிகைகளுக்கு கிடைப்பது இல்லை. தற்போது ஒரு நடிகைக்கு வாய்ப்பு கிடைத்தும் பட வாய்ப்பை மறுத்து இருக்கிறாராம்.

    மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நடிகை தற்போது தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறாராம். இந்தநிலையில் நடிகைக்கு பிரபல நிறுவனம் ஒன்றிடமிருந்து இந்தியில் இரண்டு படங்களில் நடிப்பதற்கான அழைப்பு தேடிவந்ததாம். ஆனால் கொஞ்சமும் யோசிக்காமல் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம் நடிகை.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி இருக்கிறாராம்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் இதுவரை 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறாராம். இந்நிலையில், இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று நடிகையை அணுகி இருக்கிறார்களாம்.

    கதையை கேட்ட நடிகை, ரூ.4 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறாராம். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் இறுதியாக ரூ.3 கோடி கொடுக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார்களாம். முந்தைய படங்களில் நடிகை ரூ.2 கோடிதான் வாங்கி வந்தாராம். 
    சின்னத்திரையில் பிரபலமாக இருப்பவர் தற்போது படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகிறாராம்.
    சின்னத்திரையில் பாட்டுபாடி பிரபலமானவர், சில ஷோக்களில் கலந்துக் கொண்டு பலருடைய கவனத்தை ஈர்த்தாராம். வெகுளியான பெண் என்று பலரும் கூறி வரும் நிலையில், அவரை தொடர்புக் கொண்ட சிலர், எங்கள் கடையை திறக்க வேண்டும், விளம்பரம் செய்ய வேண்டும் என்று கேட்டால், லட்சக்கணக்கில் பணம் வேண்டும் என்று கேட்கிறாராம்.

    மேலும், படங்களில் நடிக்க அழைத்தால், பெரிய ஹீரோக்கள் படம் என்றால் தான் கதை கேட்பேன், ஹிட் இயக்குனர்கள் படம் தான் நடிப்பேன் என்று கண்டிசன் போடுகிறாராம். ஏன் இப்படி எல்லாம் என்று கேட்டால், நான் ரொம்ப பிரபலம் அப்படித்தான் இருப்பேன் என்று ஓவர் பில்டப் கொடுக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த நடிகை, நடிகரை சிபாரிசு செய்ய சொல்லி புலம்ப வைத்திருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் முன்னணி நடிகர், தன்னுடன் நடித்த நடிகைகளை மற்ற படங்களில் தன்னுடன் நடிக்க சிபாரிசு செய்து வருகிறாராம். இதில் ஒரு நடிகைக்கு மட்டும் 5க்கும் மேற்பட்ட படங்களில் சிபாரிசு செய்து அவருடன் இணைந்து நடித்துவிட்டாராம்.

    முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடித்தும், நடிகைக்கு மற்ற பட வாய்ப்புகள் வரவில்லையாம். இதனால், அடுத்த படத்திலும் முன்னணி நடிகருடன் நடிக்க ஆசைப்பட்டு அவரிடம் கேட்டு இருக்கிறாராம். மீண்டுமா என்று ஷாக் ஆகி, புதிய படத்தில் நடிகைக்கு சிபாரிசு செய்து இருக்கிறாராம். ஆனால் படக்குழுவினர் நடிகை வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்களாம். இதனால் நடிகர், நடிகைக்கு சிபாரிசு செய்து வெறுத்துவிடுவேன் போல என்று புலம்பி வருகிறாராம்.
    தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர், பிரபல நடிகர் ஒருவருக்கு கொக்கி போடும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் ராசி இல்லாத நடிகை ஓரங்கட்டப்பட்ட நடிகை தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறாராம். பல தமிழ் படங்களை தவிர்த்து வந்த நடிகை, தற்போது முன்னணி நடிகருக்கு ஜோடியாக தமிழில் நடித்து இருக்கிறாராம்.

    இதனால் நடிகையின் பெயர் பலருக்கும் தெரிந்துவிட்டதால், வேறொரு முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க திட்டம் போட்டு இருக்கிறாராம். இதனால், அந்த நடிகருக்கு கொக்கி போடும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம். மேலும் தெரிந்தவர்கள் மூலம் சிபாரிசு கேட்டும் வருகிறாராம்.
    கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர், திருமணத்தை தள்ளிப்போட்டு வருகிறாராம்.
    தமிழில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக இருப்பவர், தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறாராம். அதே சமயம், வயது அதிகமாகி வருவதால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் நடிகையை திருமணம் செய்ய வற்புறுத்துகிறார்களாம்.

    ஆனால், நடிகையோ திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வருகிறாராம். நடிகை நடித்த பல படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கிறதாம். அந்த படங்கள் வெளிவந்த பிறகும், ஒப்பந்தமான படங்களில் நடித்து முடித்த பிறகு தான் கல்யாணம் என்று நெருங்கியவர்களிடம் சொல்லுகிறாராம்.
    பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, வாய்ப்புக்காக தனது மனதை மாற்றி இருக்கிறாராம்.
    சங்கம் சம்மந்தமான படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து நல்ல பெயர் எடுத்து வந்தாராம். அந்த படங்கள் சூப்பர் ஹிட்டானதால், தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தினாராம். இதனால், நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததாம்.

    தன்னை தேடி வந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் சம்பளம் விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தாராம். இதனால் பட வாய்ப்பை இழந்த நடிகை, தற்போது வாய்ப்பை பிடிக்க தனது சம்பளத்தை பாதியாக குறைத்து இருக்கிறாராம். இதையறிந்த இளம் நடிகைகள் பலரும் வாய்ப்புக்காக இப்படியா கீழே இறங்குவது என்று புலம்பி வருகிறார்களாம்.
    சின்னத்திரையில் நடித்து வரும் ஒரு நடிகை, தான் பெரிய நடிகை நினைத்து ஓவர் பந்தா காண்பித்து வருகிறாராம்.
    சின்னத்திரையில் வெளியான ஒரு தொடர் மூலம் மிகவும் பிரபலமான நடிகைக்கு ரசிகர்கள் அதிகம் சேர்ந்து விட்டார்களாம். இதனால் தான் ஒரு பெரிய நடிகையாகிவிட்டோம் என்று நினைத்துக் கொண்டு செல்லும் இடங்களில் ஓவராக பந்தா காண்பித்து வந்தாராம். ஒரு விழாவில் நடிகை பேசியது சர்ச்சையானதாம்.

    இதனால், நடிகை பொது மேடைகளில் பேசுவதை குறைத்துக் கொண்டாராம். இருப்பினும் நடிகை பந்தா குறையாமல் தான் ஒரு பெரிய நடிகை என்று நினைத்துக் கொண்டு தன்னை தேடி வருபவர்களை வேண்டும் என்றே 2 மணி நேரத்திற்கும் மேலாக காக்க வைக்கிறாராம்.
    பிரபல நடிகை ஒருவர், நடிகர் சிபாரிசு செய்யும் படங்களில் நடிக்க மறுத்து வருகிறாராம்.
    தமிழ் சினிமாவின் தற்போது முன்னணி நடிகராக இருப்பவருடன் முதல் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை, சில காலங்களில் காணாமல் போயிருந்தாராம். அதன்பிறகு பெரிய முதலாளி வீட்டிற்கு சென்று மிகவும் பிரபலமானாராம். உடல் எடையையும் குறைத்து படங்களில் நடிக்க தயாரானாராம்.

    அதன்பிறகு தான் முதலில் நடித்த ஒல்லி நடிகருக்கு போன் செய்து வாய்ப்பு கேட்டாராம். நடிகரோ வாய்ப்பு தருகிறேன் என்று கூறி இதுவரை எதுவும் தரவில்லையாம். விடாமல் நடிகரை தொந்தரவு செய்ததால், நடிகைக்கு வேறு படங்களில் நடிக்க சிபாரிசு செய்தாராம் நடிகர். ஆனால், நடிகை உங்களுடன்தான் நடிப்பேன் என்று விடாபிடியாக இருக்கிறாராம்.
    ×