search icon
என் மலர்tooltip icon

    கிசுகிசு

    பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகை சிறிது காலம் சினிமாவில் இருந்து ஓய்வெடுத்து வந்தாராம். அதன்பின்னர் மீண்டும் நடிக்க வந்த நடிகை, பிரபல நடிகருடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டாராம். அந்த நடிகையின் பிறந்தநாளில் நடிகர் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தாராம்.

    அப்போது திடீரென நடிகை ஆண்டி ஆகிவிட்டார் என்றும் அவருக்கு வயது 31 கடந்து விட்டது என்றும் நடிகர் தெரிவித்தாராம். பொதுவெளியில் நடிகையின் வயதை கூறியதால் அவர் கோபத்தில் உள்ளாராம்.

    ஒரு சில படங்களில் நடித்து பெரிய அளவில் வெளியே தெரியாத நடிகை ஒருவர் தேசிய விருது வாங்கிய பின்னர் பிசியான நடிகையாக மாறினாராம். பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தாராம். திருமணம் ஆன பின்னரும் இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம்.

    இவரை இயக்குனர்களும், நடிகர்களும் முத்தக் காட்சி, ஆபாச காட்சிகளில் நடிக்க வற்புறுத்தி வந்தார்களாம். இதனால் கோபமான நடிகை என் கணவருக்கு இந்த மாதிரி காட்சிகளில் நடிப்பது பிடிக்காது என்றும் நான் இது போன்ற காட்சிகளில் நடிக்க விருப்பபடவில்லை என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம். இதனால் முத்த காட்சிகள் இடம்பெறும் கதைகள் அவரிடம் வந்தால் ஆளவிடுங்கடா சாமி என்று எஸ்கேப் ஆகிவிடுகிறாராம்.

    முன்னணி ஹீரோக்களுடன் நடித்த நடிகை ஒருவர் டாப் ஹீரோ ஒருவருடன் நடிக்காததை பெரிய குறையாக நினைத்து வந்தாராம். இவருக்கு போட்டியாக இருக்கும் நடிகை அந்த நடிகருடன் இணைந்து நடித்து கெமிஸ்ட்ரியில் பின்னிவிட்டாராம். இதனால் கடுப்பான நடிகை இந்த தடவை வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்று நினைத்து பலபேரை தூது அனுப்பினாராம்.

    தூது ஒர்க்கவுட் ஆகவே அந்த டாப் ஹீரோவும் நடிகையும் நேரில் சந்தித்தார்களாம். பின்னர் ஹீரோவுடன் மூன்று நாட்கள் தனிமையில் பொழுதை கழித்த நடிகைக்கு கிரீன் சிக்னல் கிடைத்துவிடவே தன் படத்தில் ஏற்கனேவே கமிட் செய்திருந்த ஹீரோயினை தூக்கி விட்டு நடிகையை புக் செய்துவிட்டாராம்.

    இதனால் குஷியான நடிகை ஹீரோவின் அடுத்தப்படத்திலும் நடிக்க தூது அனுப்பவே ஒரு முறைதான் வாய்ப்பு என ஹீரோ கண்டிப்பாக சொல்லிவிட்டாராம்.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் முன்னணி நடிகரின் படத்தில் நடித்த நடிகை ஒருவர், தெலுங்கு பக்கம் சென்றாராம். அங்கு முன்னணி நடிகரின் படத்தில் ஒப்பந்தமானாராம். அந்த படத்திற்காக பெரிய தொகையை சம்பளமாக கேட்டாராம். ஆனால் படக்குழு இதற்கு ஒப்புக் கொள்ளாமல் படத்தில் இருந்து விலக்கி விட்டார்களாம்.

    பின்னர் அந்த நடிகை, நான் அதிக படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதால் இந்த படத்தில் இருந்து நானே விலகி விட்டேன் என்று பில்டப் விட்டு வருகிறாராம்.

    தன் இடுப்பழகில் ரசிகர்களை கிறங்கடித்த முன்னணி நடிகையின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என பல நடிகர்கள் ஏக்கத்துடன் இருந்தார்களாம். ஆனால் நடிகையோ நடிகர் ஒருவரை காதலிக்க தொடங்கினாராம். நடிகையின் மூலம் தயாரிப்பாளரான நடிகர் தன் முதல் படத்தில் அந்த நடிகையை நடிக்க வைத்தாராம்.

    இதற்கு சம்பளம் கேட்ட நடிகையிடம் நீ என் வருங்கால மனைவி ஆகப்போகிறாயே என்று ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி வந்தாராம். பின்னர் சில வருடங்கள் இருவரும் உறவில் இருந்தார்களாம். அதன்பிறகு நடிகையின் மார்க்கெட் குறையவே நடிகர் கம்பி நீட்டிவிட்டாரம்.

    இதனால் நொந்துபோன நடிகை சொந்த ஊரில் மாப்பிளையை பார்த்து திருமணம் செய்து கொண்டாராம். ஆனால் இன்று வரை தன்னை ஏமாற்றிய அந்த நடிகர் மீது கடும் கோப்பத்தில் உள்ளாராம் நடிகை.

    டாப் ஹீரோக்களுடன் நடித்த நடிகை திடீரென திருமணம் செய்து கொண்டாராம். பின்னர் நடிக்க வந்த நடிகைக்கு வாய்ப்பு தர யாருக்கும் மனசு இல்லையாம். இதனால் விரக்தியடைந்த நடிகை என்ன செய்வது என்று யோசித்து நைட் பார்ட்டிக்கு ஹீரோக்களை அழைத்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம். அதுமட்டுமல்லாமல் சில இடங்களுக்கு அழையா விருந்தாளியாக செல்லும் நடிகை அட்ஜஸ்ட்மெண்ட் செய்யக்கூட தயார் என்று சொல்லியிருக்கிறாராம்.


    நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த நடிகை, திருமணத்திற்கு முன்பு இரண்டு படங்களுக்கு அட்வான்ஸ் தொகையாக ரூ.10 கோடி வாங்கினாராம். அதன்பிறகு படம் நடித்து தர தாமதிக்கிறாராம். இதனால் கொடுத்த பணத்தை படக்குழு திரும்பி கேட்டார்களாம். ஆனால் அவர்களுக்கு பதில் அளித்த நடிகை புதிய படத்தில் நடித்து தருகிறேன். பணத்தை திரும்பி கேட்காதீங்க என்று சொல்லாமல் சொல்லி விட்டாராம். இதனால் பணம் கொடுத்தவர்கள் குழம்பி பணத்தை எப்படி திரும்பி பெறுவது என்று யோசித்து வருகின்றார்களாம்.

    ஒரு படத்திலேயே பல இளசுகளை தன்வசப்படுத்திய நடிகைக்கு தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறாராம். அதற்கு நடிகையை வைத்து முதல் படத்தை இயக்கிய இயக்குனரே காரணமாம். அப்படி என்ன என்று விசாரித்தால், நடிகையை தேடி வரும் படங்களை எல்லாம், கதை சரியில்லை, அந்த ஹீரோ வேண்டாம், படம் நன்றாக வராது என்று பல காரணங்களை சொல்லி நடிகையை இயக்குனர் நடிக்க விடாமல் செய்து வருகிறாராம்.

    இயக்குனரின் இந்த செயல் நடிகையின் நல்லதுக்கா.... இல்லை... வேற எதுக்கா... என்று கோடம்பாக்கத்தினர் அரசல் புரசலாக பேசி வருகிறார்கள்.

    நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகை, பல படங்களில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சேமித்து வைத்திருந்தாராம். இந்த பணத்தை எல்லாம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில், அவரது கணவர், புதிய தொழில் ஒன்றை தொடங்கலாம் என்று ஐடியா கொடுத்தாராம். நடிகையும் நல்லா இருக்கே... என்று சம்மதம் தெரிவித்தாராம். இதற்காக பல கோடி முதலீடு செய்தாராம் நடிகை.

    ஆனால், எதிர்ப்பார்த்த படி அந்த தொழில் சூடு பிடிக்க வில்லையாம். இதனால், நொந்து போன நடிகை, கணவரை நம்பி பணத்தை முதலீடு செய்ய கூடாது என்று முடிவு செய்து இருக்கிறாராம். இருந்தாலும் நடிகையின் கணவர் பல ஐடியாக்களோடு வலம் வந்துக் கொண்டிருக்கிறாராம்.

    தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் உலகப்போர் நடிகரின் கைவசம் ஒரு படம் மட்டுமே இருக்கிறதாம். இவர் பொதுவாக பொது விழாக்களில் கலந்துக் கொள்ள மாட்டாராம். அப்படி இருக்கும் பட்சத்தில் இவர் சமீபத்தில் ஒரு நடிகரின் திருமண விழாவிற்கு சென்றாராம். அப்போது அவருடன் ஒரு இளம் பெண் சென்றிருக்கிறாராம்.

    இதைப்பார்த்த பலரும் நடிகரின் காதலி அவர் என்று பேச ஆரம்பித்துவிட்டார்களாம். இதைக்கேட்ட நடிகரும் கண்டுக்கொள்ளாமல் சென்று விட்டாராம். நடிகரின் இந்த மௌனம், அவருடன் வந்த பெண் காதலிதான் என்று பலரும் உறுதி செய்து விட்டார்களாம்.

    தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை தன் நடிப்பால் கவர்ந்து வரும் நடிகை ஒருவர் தயாரிப்பாளரால் கடுப்பாகி இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை ஒருவர், முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆசைப்பட்டு இருக்கிறாராம். இதற்காக பல தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னணி நடிகர்களுக்கு தூது அனுப்பி வருகிறாராம். நடிகையின் ஆசையை அறிந்த தயாரிப்பாளர் ஒருவர், நடிகையை தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க அழைத்தாராம்.

    நடிகையும் சந்தோஷத்தில் சந்திக்க தயார் என்று சொல்லியிருக்கிறாராம். ஆனால், தயாரிப்பாளரோ வெளிநாட்டில் சந்திக்க வேண்டும் என்று கூறியிருக்கிறாராம். இதைக் கேட்ட நடிகை கடுப்பாகி இருக்கிறாராம். தயாரிப்பாளரை திட்டி தீர்த்து வருகிறாராம்.
    தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், உச்ச நடிகை அளவிற்கு சம்பளம் கேட்டு இருக்கிறாராம்.
    தமிழ் சினிமாவில் பெரிய நம்பர் நடிகைதான் அதிக சம்பளம் வாங்குகிறாராம். இவர் அளவிற்கு யாரும் இன்னும் சம்பளம் வாங்கவில்லையாம். இந்நிலையில், இவர் வாங்கும் சம்பளம் அளவிற்கு தற்போது ஒரு கேட்டு இருக்கிறாராம். 

    சமீபத்தில் கணவருடன் சண்டை போட்ட நடிகைதான் தனக்கு அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்கிறாராம். நானும் முன்று, நான்கு மொழிகளில் நடிக்கிறேன். கவர்ச்சியாகவும் நடிக்கிறேன் என்று தயாரிப்பாளரிடம் கூறி இருக்கிறாராம். மேலும் பாலிவுட்டிலும் எனக்கு மவுசு இருக்கிறது என்றும் கூறியிருக்கிறாராம்.
    ×