search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • யூ ட்யூபில் இதுவரை 2.5 மில்லியன் வியூஸ்களை அள்ளியுள்ளது கள்வன் படத்தின் டிரெயிலர்.
    • இந்நிலையில் படத்தின் பாடலான 'அட கட்டழகு கருவாச்சி' வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    ஒளிப்பதிவாளர் பி வி ஷங்கரின் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் கள்வன். ஜனவரி மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது. பாரதிராஜா, இவானா மற்றும் தீனா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 4 வெளியாகவுள்ளது.

    டில்லி பாபு இப்படத்தை தயாரித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராட்சசன், மரகத நாணயம், முண்டாசுப்பட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இப்படத்தின் இயக்குனரான பி.வி.ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் டிரெயிலர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. படத்தின் டிரெயிலருக்கு மக்களிடையெ மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. யூடியூபில் இதுவரை 2.5 மில்லியன் வியூஸ்களை அள்ளியுள்ளது கள்வன் படத்தின் டிரெயிலர்.

    இந்நிலையில் படத்தின் பாடலான 'அட கட்டழகு கருவாச்சி' வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடல் வெளியானபோதே  மிக ஹிட்டாகியது. தற்பொழுது இப்பாடலின் வீடியோ வெளியிடப்பட்டதால் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இப்பாடலின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'லைகா புரொடக்சன்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குனராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாக உள்ளார்
    • லைகாவில் வாய்ப்பு கிடைத்து உள்ளது பற்றி சினிமா உலகம் மிகுந்த வியப்பு அடைந்து உள்ளது.

    பிரபல நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். தற்போது GOAT படத்தில் நடித்து வருகிறார். மேலும் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் படிப்பை முடித்து உள்ளார். சினிமா தொடர்பான படிப்புகளும் அவர் படித்து உள்ளார்.சினிமா இயக்குவதில் ஆர்வமாக உள்ளார்.

    இதை யொட்டி 'லைகா புரொடக்சன்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குனராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாக உள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் அந்த நிறுவனத்துடன் அவர் கையெழுத்திட்டு உள்ளார்.




    லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் 2.0, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்து உள்ளது. மேலும் லைகா தயாரிப்பில் கத்தி படத்தில் விஜய் நடித்து உள்ளார்.

    மேலும் அதுபோல விஜய் மகனுக்கும்லைகாவில் வாய்ப்பு கிடைத்து உள்ளது பற்றி சினிமா உலகம் மிகுந்த வியப்பு அடைந்து உள்ளது.

    இந்தப்படம் 'கிரிக்கெட்' மையமாக கொண்ட கதையாகும். அது தொடர்பான 'ஸ்க்ரிப்ட்' உருவாக்கும் பணியில் சஞ்சய் தற்போது தீவிரமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • 2023 ஆம் ஆண்டு வெளிவந்த ’ஃபைட் கிளப்’ படத்தை ஜி ஸ்குவாட் நிறுவனம் வெளியிட்டது.
    • இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார்

    லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிப்பில் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. ரஜினிகாந்த ஒரு ரெட்ரோ கேங்ஸ்டர் லுக்கில் மாசாக இருந்தார்.

    லோகேஷ் கனகராஜ் கடந்த ஆண்டு 'ஜி ஸ்குவாட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். அவரின் எக்ஸ் பக்கத்தில் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் நோக்கத்தை பற்றி அவர் விளக்கிருந்தார். அதில், "எனது முதல் சில படங்களை நெருங்கிய நண்பர்கள் மற்றும் என்னுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்களின் கதையை தேர்வு செய்து தயாரிக்க போகிறேன்," என்று குறிப்பிட்டு இருந்தார்.

    அபாஸ் ஏ ரகுமான் இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஃபைட் கிளப்' படத்தை ஜி ஸ்குவாட் நிறுவனம் வெளியிட்டது. அந்த படத்தில் உறியடி விஜய குமார் மற்றும் மோனிஷா மேனன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

    அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் ரத்ன குமார் இயக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளார். ரத்ன குமார் லோகேஷ் கனகராஜின் படங்களில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரத்ன குமார் முன்னதாக மேயாத மான், ஆடை மற்றும் குலுகுலு போன்ற படங்களை இயக்கி இருந்தார்.

    இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இப்படம் ஹாரர் கதை களத்தில் உருவாகவுள்ளது. இப்படத்தில் நயன்தாராவை முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாக தவலல்கள் வெளியாகியுள்ளது.

    இப்படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ளார். ரத்ன குமார் அக்கதையை இயக்குகிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதை பார்த்த ரசிகர்கள், நண்பர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்
    • "வாழ்நாள் முழுவதும் திருமண ஜோடிகள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்' என்று தெரிவித்து உள்ளார்.

    நடிகர் சித்தார்த் 'ஆயுத எழுத்து' படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து பாய்ஸ், அரண்மனை, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட படங்களில் நடித்து முக்கிய நடிகரானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'சித்தா' படம் ரசிகர்களிட நல்ல வரவேற்பு பெற்றது.

    இந்நிலையில் நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ்வை காதலித்து வந்தார். இவர் செக்க சிவந்த வானம், காற்று வெளியிடை, சைக்கோ போன்ற தமிழ் படங்களில் நடித்து உள்ளார்.

    இந்நிலையில் சித்தார்த்தும், அதிதி ராவும் தெலுங்கானாவில் ஒரு கோவிலில் ரகசிய திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இது திருமணம் அல்ல, நிச்சயதார்த்தம் என்று இருவரும் பதில் அளித்து உள்ளனர். இது வைரலாக பரவியது.

    இதை பார்த்த ரசிகர்கள், நண்பர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவும் சித்தார்த்- அதிதி ஜோடிக்கு இணைய தளத்தில் வாழ்த்துக்கள் கூறி உள்ளார். அதில் "வாழ்நாள் முழுவதும் திருமண ஜோடிகள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்' மனமாற வாழ்த்துக்கள் என்று தெரிவித்து உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஷாருக்கானுடன் பிரியாமணி நடித்த ‘ஜவான்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.
    • தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

    கார்த்தி நடித்த பருத்தி வீரன் படத்தில் 'முத்தழகு' என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் பிரியாமணி. தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

    ஷாருக்கானுடன் பிரியாமணி நடித்த 'ஜவான்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. சமீபத்தில் இந்தியில் வெளியான ஆர்டிகிள் 370 படத்திலும் நடித்திருந்தார். இந்த படமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில் இந்தி திரை உலகில் தென்னிந்திய நடிகையாக பணிபுரியும் போது எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி அவர் கூறியதாவது:- இந்தி தயாரிப்பாளர்கள் சிலர் எங்களிடம் இது ஒரு தென்னிந்திய கதாபாத்திரம் என்பதால் நாங்கள் உங்களை நடிக்க வைக்க விரும்புகிறோம் என்று கூறுவார்கள். விரைவில் இந்த நிலைமாறும் என நம்புகிறேன். நாங்களும், மற்றவர்களை போலவே அழகாக இருக்கிறோம்.

    தென்னிந்தியாவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்தி மொழியை எங்களால் மிகவும் சரளமாக பேச முடியும். எங்களுடைய தோல் நிறம் இந்தி நடிகைகள் போல் பிரகாசமாகவும் வெளிர் நிறமாகவும் இல்லை தான். நடிப்பை பொருத்தமட்டில் அது ஒரு பொருட்டல்ல. தெற்கில் இருந்து வரும் ஆண்களாலும் பெண்களாலும் இந்தியை சரளமாக பேசமுடியும். வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு மாற வேண்டும். நாங்கள் எப்போதும் இந்திய நடிகர்கள் தான். இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார்.
    • தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

    நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி உள்ளார்.அவரது இயக்கத்தில் 3- வது முறையாக விஷால் இதில் இணைந்து உள்ளார். இது விஷாலுக்கு 34- வது படமாகும். இயக்குனர் ஹரி வேகமாகவும் விறுவிறுப்பாகவும் திரைக்கதை எழுதுவதில் திறம் பெற்றவர்.

    இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌதம் மேனன், நடித்து உள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கவிஞர் விவேகா பாடல் வரிகள் எழுதி உள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்து 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தின் முதல் 'சிங்கிள்' கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.'டோன்ட் வோரி டா மச்சி' என்ற வரிகளுடன் இந்த பாடல் அமைந்தது. ரசிகர்களிடம் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் செகண்ட் சிங்கிளான "எதனால " பாடல் வெளியாகியுள்ளது. பின்னணி பாடகரான சிந்தூரி விஷால் இப்பாடலை பாடியுள்ளர். இப்படம் வருகிற ஏப்ரல் 26- ந்தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தின் டிரைலர் அமைந்துள்ளது.
    • என் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன்.

    அக்ஷய் குமார் - டைகர் ஷெராப் கூட்டணியில் உருவாகி இருக்கும் படே மியன் சோட்டே மியன் படத்தின் டிரைலர் வெளியானது. இப்படம் படே மியன் சோட்டே மியன் இடையிலான தோழமை மற்றும் அவர்களின் வாழ்க்கை பற்றி பேசும் படமாக இது உருவாகியுள்ளது.

    தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி மற்றும் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாஃபர் இணைந்து ரசிகர்களுக்கு புதுவித அனுபவம் கொடுக்கும் ஆக்ஷன் கலந்த விறுவிறுப்பான படத்தை எடுத்துள்ளனர். இப்படத்தின் மிக முக்கியமான ஆக்ஷன் காட்சிகள் எப்படி இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் இப்படத்தின் டிரைலர் அமைந்துள்ளது.

     


    இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசிய அக்ஷய் குமார், "ஆக்ஷன், காமெடி கலந்த கதையில் உண்மையான சண்டைகள் இப்படத்தை என் மனதுக்கு நெருக்கமான உணர்வை கொடுக்கிறது. இப்படத்தில் நான் முன்பைவிட அதிக திறமையை வெளிப்படுத்த முயற்சித்து இருக்கிறேன்."

    "அருமையான படக்குழு உடன் இணைந்து உண்மையான சண்டை காட்சிகளில் நடித்ததை என் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன். இப்படத்தில் பணியாற்றியதை சிறப்பாக கருதுகிறோம். இதேபோன்று இப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும்," என்று அக்ஷய் குமார் தெரிவித்தார்.

    இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. இப்படம் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட இருக்கிறது.

    ஏ.ஏ.இசட். ஃபிலிம்ஸ் சார்பில் வாஷூ பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் இணைந்து படே மியன் சோட்டே மியனை வழங்குகின்றன. இந்த படத்தை அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ்
    • வித்தியாசமான கதைக் களங்களில் படம் எடுப்பதில் கார்த்திக் சுப்பராஜ் திறம் பெற்றவர்

    பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்பராஜ். வித்தியாசமான கதைக் களங்களில் படம் எடுப்பதில் கார்த்திக் சுப்புராஜ் திறம் பெற்றவர்.

    இவர் படம் இயக்கும் பாணி ஹாலிவுட்டின் பிரபல இயக்குனரான குவெண்டின் டேரண்டின்னோவை பிரதிபலிக்கும். ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா பாகம் 2 திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார்.

    மக்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்தப்படம்.ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா போட்டி போட்டு நடித்துருப்பர்

    சினிமாவையே கதைக்களமாக வைத்து திரைப்படம் இயக்குவதில் கார்த்திக் சுப்புராஜ் வல்லமை வாய்ந்தவர். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் அடுத்தபடம் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

    சூர்யாவின் 44 ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதீகாரப்பூர்வ அறிவிப்பை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இந்தப்படம் கேங்க்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியில் கதைக்களமாக உருவாகவுள்ளது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திலிருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இப்படத்தின் மேல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் உடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சூர்யா புதிய தொடக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஷங்கர் என இரண்டு மகள்கள் உள்ளனர்
    • அதில, மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது

    தமிழக் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை சந்தித்து தனது மகள் திருமணத்திற்கு இயக்குநர் ஷங்கர் அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

    இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஷங்கர் என இரண்டு மகள்கள் உள்ளனர். அதில, மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது.

    ஷங்கரின் உதவி இயக்குநர் தருண் கார்த்திக் ஐஸ்வர்யாவை கரம் பிடிக்க இருக்கிறார். அண்மையில் கோலாகலமாக நடந்த இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்நிலையில், இன்று இயக்குனர் ஷங்கர் தனது மனைவி ஈஸ்வரியுடன், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

    விரைவில் இவர்களது திருமணத்திற்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக 2022-ஆம் ஆண்டு ஐஸ்வர்யாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் விவாகரத்து பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • "கிளவர்" என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது.
    • இரண்டு நாய்கள் மட்டுமே நடித்துள்ளன.

    இரண்டு நாய்கள் மட்டுமே நடித்த ஒரு முழு நீள திரைப்படத்தை கார்த்திகேயன் பிரதர்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் திப்பம்மாள் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு "கிளவர்" என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது.

    தேவர் பிலிம்ஸ் படங்களிலும் இராமநாராயணன் இயக்கிய படங்களிலும் நடிகர்களுடன் பாம்பு, குரங்கு, நாய், மாடு முதலான விலங்குகள் நடித்து பல படங்கள் வந்துள்ளன. அதன் பிறகு விலங்குகளை வைத்து ஒரு சில படங்களே வந்துள்ளன. சிறிய இடை வெளிக்கு பிறகு கிளவர் என்ற படம் உருவாகி இருக்கிறது.

     


    இந்தப் படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை இரண்டு நாய்கள் மட்டுமே நடித்துள்ளன. மதுரை மாவட்டத்தில் உள்ள டி.இராமநாதபுரம் கிராமத்தை சுற்றி உள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்திற்கு வாசு ஒளிப்பதிவையும் முத்துமுனியசாமி படத்தொகுப்பையும், ரகுநாத் இசையையும், தீபக்கார்த்திகேயன் மற்றும் சஞ்சய் கார்த்திகேயன் இருவரும் இணைத்தயாரிப்பையும் கவனித்துள்ளனர்.

    இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ள செந்தில்குமார் சுப்ரமணியம் படத்தை பற்றி கூறுகையில், " உலக திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக இரண்டு நாய்களை மட்டுமே நடிக்க வைத்து இந்தப் படத்தை இயக்கி உள்ளேன்."

    "அம்மா நாயிடமிருந்து குட்டி நாயை ஒரு சைக்கோ திருடி சென்றுவிடுகிறான். தனது குட்டியை மீட்க அம்மா நாய் எப்படி கண்டுபிடித்து மீட்டு வருகிறது என்பதை கதைக்களமாக்கி அதை விறுவிறுப்பான திரைக்கதையில் திகிலும், திரில்லும் கலந்து படத்தை இயக்கியுள்ளேன்."

    "புது முயற்சியாய் இந்த படத்தில் இரு நாய்களை தவிர வேறு யாரையும் நடிக்க வைக்கவில்லை. கமர்ஷியலாக படத்தை மக்கள் பார்த்து ரசிக்கும்படி என் முதல் படமான கிளவர் படத்தை இயக்கி உள்ளேன். இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது," என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வசூல் ரீதியிலும் இந்த படம் லாபகரமாக அமைந்தது.
    • இந்த படம் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

    தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியிலும் இந்த படம் லாபகரமாக அமைந்தது.

    இந்த நிலையில், லியோ படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. எனினும், இந்த படம் தொடர்பாக வேறு எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.

    அந்த வகையில், ரஜினிகாந்த் 171 படம் தொடர்பான புது அப்டேட்-ஐ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு உள்ளார். அப்டேட் உடன் "தலைவர் 171" படத்திற்கான ரஜினிகாந்த் தோற்றத்தை வெளிப்படுத்தும் புகைப்படத்தை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் பகிர்ந்து இருக்கிறார்.

    மேலும், தலைவர் 171 படத்தின் தலைப்பு கொண்ட டீசர் வீடியோ ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து உள்ளார். யாரும் எதிர்பாராத நேரத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    மேலும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நிலையில், அனிருத் இசையமைக்கிறார்.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் தற்போது ‘அஞ்சான்' திரைப்படம் 'ரீ எடிட்' செய்யப்பட்டு உள்ளது
    • விரைவில் தியேட்டர்களில் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்து உள்ளார்.

    இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர் லிங்குசாமி .இவர் 2001-ம் ஆண்டில்  'ஆனந்தம்' திரைப்படத்தை  இயக்கியதன் மூலம் பிரபல இயக்குனரானார். மேலும் 'திருப்பதி புரொடக்ஷன்ஸ்' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் பிரபல நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து 2014- ம் ஆண்டில் வெளிவந்த படம் அஞ்சான் படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கினார். 'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனம் சார்பில் லிங்குசாமி இதனை தயாரித்தார்.




    சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை சமந்தா, வித்யூத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் நடித்தனர். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார்.இந்த படம் 2014 ஆகஸ்ட் 15- ல் வெளியிடப்பட்டது. இப்படம் தெலுங்கு மொழியில் "சிகந்தர்" எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

    இந்நிலையில் தற்போது 'அஞ்சான்' திரைப்படம் 'ரீ எடிட்' செய்யப்பட்டு உள்ளது. விரைவில் தியேட்டர்களில் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்து உள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×