search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    • டாப் எண்ட் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும்.
    • காரில் வேறு எந்த மாற்றமும் இல்லை.

    ஸ்கோடா நிறுவனம் தனது கோடியக் எஸ்.யு.வி.-இன் வேரியன்ட்களை மாற்றியுள்ளது. முன்னதாக மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த கோடியக் தற்போது டாப் எண்ட் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். மேலும், இதன் அம்சங்களும் மாற்றப்பட்டுள்ளன.

    ஸ்கோடா கோடியக் L&K வேரியண்ட் ரூ. 41 லட்சத்து 99 ஆயிரம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இதன் விலை தற்போது ரூ. 2 லட்சம் குறைக்கப்பட்டு ரூ. 39 லட்சத்து 99 ஆயிரம் என மாற்றப்பட்டு இருக்கிறது. விலை, வேரியண்ட் மாற்றப்பட்டது தவிர காரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     


    கோடியக் மாடலில் 190 ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4-வீல் டிரைவ் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலாக கோடியக் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் டொயோட்டா பார்ச்சூனர், ஜீப் மெரிடியன், ஹூண்டாய் டக்சன் மற்றும் எம்.ஜி. குளோஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • பயனர்களுக்கு ரூ. 27 ஆயிரம் மதிப்பிலான பலன்களை வழங்குகிறது.
    • 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டி வழங்கப்படுகிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது விடா V1 ப்ரோ வாங்குவோருக்கு புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. ஹீரோவின் எலெக்ட்ரிக் வாகன பிரிவு விடா பிராண்டு விடா அட்வான்டேஜ் பேக்கேஜ் அறிவித்து இருக்கிறது. இதில் பயனர்களுக்கு ரூ. 27 ஆயிரம் மதிப்பிலான பலன்களை வழங்குகிறது.

    ஏற்கனவே விடா V1 ப்ரோ பயன்படுத்துவோர் புதிய அட்வான்டேஜ் பேக்கேஜை எவ்வித கட்டணமும் இன்றி ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் பெற முடியும். இதில் இரண்டு பேட்டரிகளுக்கும் ஐந்து ஆண்டுகள் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டி வழங்கப்படும்.

     


    இத்துடன் 2 ஆயிரத்திற்கும் அதிக சார்ஜிங் பாயிண்ட்களை இலவசமாக பயன்படுத்தும் வசதி, விடா வொர்க்ஷாப்களில் இலவச சர்வீஸ், 24x7 ரோடு சைடு அசிஸ்டன்ஸ், மை விடா செயலியில் உள்ள அனைத்து கனெக்டிவிட்டி மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய விடா V1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சத்து 26 ஆயிரத்து 200, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 165 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    • வாடிக்கையாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
    • பரிசோதனையில் 34-க்கு 20.86 புள்ளிகளை பெற்றது.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது eC3 எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தியது. இந்த சோதனையின் முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    முன்புறம் ஓட்டுநர் மற்றும் பயணி இருக்கைகளில் ஏர்பேக், பெல்ட் லோடு லிமிட்டர் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் சிட்ரோயன் eC3 குளோபல் NCAP கிராஷ் டெஸ்டில் ஓரு நட்சத்திர குறியீடையும் பெறாவில்லை. இது சிட்ரோயன் வாடிக்கையாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

     


    சிட்ரோயன் eC3 மாடல் பெரியவர்கள் பாதுகாப்புக்கான பரிசோதனையில் 34-க்கு 20.86 புள்ளிகளை பெற்றது. சிறுவர்கள் பாதுகாப்புக்கான பரிசோதனையில் 49-க்கு 10.55 புள்ளிகளையே பெற்றது. இந்த கார் அதன் ஓட்டுநர் மற்றும் அவரின் அருகாமையில் அமரும் பயணிக்கு தலை மற்றும் கழுத்து பகுதிகளில் நல்ல பாதுகாப்பை வழங்கியதாக குளோபல் NCAP தெரிவித்தது.

    எனினும், பக்காவாட்டுகளில் தலை பகுதிக்கு பாதுகாப்பு அளிப்பதை ஆப்ஷனாகவும் சிட்ரோயன் வழங்கவில்லை. காரின் ஒட்டுமொத்த உருவம் திடமாக இருந்தது என்று குளோபல் NCAP தெரிவித்துள்ளது.

    இவைதவிர சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் ஹேச்பேக் காரில் ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி. போன்ற பாதுகாப்பு அம்சங்கள், ரிவர்ஸ் பார்கிங் சென்சார்கள், ரியர் டோர் மேனுவல் சைல்டு லாக், ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், ஸ்பீடு சென்சிடிவ் ஆட்டோ டோர் லாக் வசதியும் வழங்கப்படுகிறது.

    • பி.எம்.டபிள்யூ. காப்புரிமையில் தெரியவந்துள்ளது.
    • மோட்டார்சைக்கிள்களில் கொண்டுவர திட்டமிடுகிறது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது எதிர்கால மோட்டார்சைக்கிள் மாடல்களில் கிம்பலில் மவுன்ட் செய்யக்கூடிய எல்.இ.டி. ஹெட்லைட் வழங்க இருக்கிறது. இது தொடர்பான விவரங்கள் பி.எம்.டபிள்யூ. காப்புரிமையில் தெரியவந்துள்ளது.

    காப்புரிமை விவரங்களின் படி எல்.இ.டி. ஹெட்லைட் 3-ஆக்சிஸ் கிம்பலில் மவுன்ட் செய்யப்பட்டு இருக்கிறது. ஒளிப்பதிவு துறையில் கேமரா ஆடினாலும், காட்சிகள் ஆடாமல் பார்த்துக் கொள்ளவே கிம்பல் பயன்படுத்தப்படுகிறது. இதே பாணியை பி.எம்.டபிள்யூ. தனது மோட்டார்சைக்கிள் மாடல்களில் கொண்டுவர திட்டமிடுகிறது.

     


    மோட்டார்சைக்கிள் எந்த பக்கம் திரும்பினாலும் அல்லது கடுமையாக பிரேகிங் செய்யும் போதும் பி.எம்.டபிள்யூ. சிஸ்டத்தில் எல்.இ.டி. ஹெட்லைட் எந்த பக்கமும் அசையாது. இதுதவிர ஹெட்லைட் கார்னெரில் மட்டும் ஒளியை பாய்ச்சும். இதனால் ரைடிங்கின் போது அதிக பாதுகாப்பு கிடைக்கும்.

    இந்த ஹெட்லைட் சிஸ்டம் முழுவதும் இனெர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட் (IMU) மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதே போன்ற யூனிட் தான் மோட்டார்சைக்கிளின் இதர பாதுகாப்பு வசதிகளான கார்னரிங் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் கார்னெரிங் ஏ.பி.எஸ். உள்ளிட்டவைகளையும் கட்டுப்படுத்துகிறது. புதிய கிம்பல் ஹெட்லைட் சிஸ்டம் பி.எம்.டபிள்யூ. உற்பத்தி செய்யும் எதிர்கால GS சீரிஸ் மாடல்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • முந்தைய கார் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டுமே கிடைத்தது.
    • புதிய கார் மணிக்கு 100 கிமீ வேகத்தை 7.9 நொடிகளில் எட்டிவிடும்.

    ஜெர்மனியை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளர் பி.எம்.டபிள்யூ. இந்திய சந்தையில் தனது 620d M ஸ்போர்ட் சிக்னேச்சர் கார் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பி.எம்.டபிள்யூ. M காரின் விலை ரூ. 78 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டும் கிடைத்த நிலையில், இந்த வெர்ஷன் டீசல் பவர்டிரெயின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

    புதிய பி.எம்.டபிள்யூ. காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய 620d M ஸ்போர்ட் சிக்னேச்சர் எடிஷன் மாடல்- மினரல் வைட், டான்சனைட் புளூ, ஸ்கை ஸ்கிரேப்பர் கிரே மற்றும் கார்பன் பிளாக் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

     


    அம்சங்களை பொருத்தவரை இரட்டை 12.3 இன்ச் ஸ்கிரீன்கள்- ஒன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ரியர்வியூ கேமரா, பார்க் அசிஸ்ட், ரிமோட் கண்ட்ரோல் பார்க்கிங் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜர், ஸ்மார்ட்போன் ஹோல்டர், பேடில் ஷிஃப்டர்கள், பானரோமிக் சன்ரூஃப், 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    பி.எம்.டபிள்யூ. 620d M ஸ்போர்ட் சிக்னேச்சர் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 188 ஹெச்.பி. பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 7.9 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் கம்ஃபர்ட், கம்ஃபர்ட் பிளஸ், ஸ்போர்ட் , இகோ ப்ரோ மற்றும் அடாப்டிவ் என ஐந்துவித டிரைவிங் மோட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    • ஹூண்டாய் தொடர்பு கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • வாகனங்களை ஹூண்டாய் இலவசமாக சரிசெய்து கொடுக்கும்.

    ஹூண்டாய் நிறுவனம் தனது வெர்னா செடான் மாடலின் தேர்வு செய்யப்பட்ட iVT மாடல்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ரிகால் செய்யப்பட வேண்டிய கார்களை பயன்படுத்துவோரை ஹூண்டாய் தொடர்பு கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    காரில் உள்ள எலெக்ட்ரிக் ஆயில் பம்ப் கண்ட்ரோலரில் பிரச்சினை ஏற்பட்டதே ரிகால் செய்வதற்கான காரணம் ஆகும். பிரச்சினை சரி செய்வதற்காக அருகாமையில் உள்ள ஹூண்டாய் டீலர்ஷிப்கள் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும்.

    பாதிக்கப்பட்ட வாகனங்களை ஹூண்டாய் இலவசமாக சரிசெய்து கொடுக்கும். முன்னதாக கியா நிறுவனம் தனது செல்டோஸ் எஸ்.யு.வி.-யை இதே பிரச்சினையை சரி செய்வதற்காக 4 ஆயிரத்து 300 யூனிட்களை ரிகால் செய்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ஹூண்டாய் தனது முற்றிலும் புதிய வெர்னா மாடலை அறிமுகம் செய்தது. இந்த கார் EX, S, SX மற்றும் SX(O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    • இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஹெட்-அப் டிஸ்ப்ளேவை பொருத்திக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

    ஆடி நிறுவனத்தின் முற்றிலும் புதிய கியூ6 இ டிரான் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆடியின் புதிய எலெக்ட்ரிக் கார் பி.பி.இ. பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடல் டூயல் மோட்டார் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இந்த கார் மாடல் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கியூ6 இ டிரான் மாடல் ஆடியின் முற்றிலும் புதிய டிசைன் மற்றும் ஸ்ப்லிட் ஹெட்லைட் செட்டப் கொண்டிருக்கிறது. இந்த காரின் முன்புறம் க்ளோஸ்டு ஆஃப் கிரில், அழகிய தோற்றம் கொண்ட டி.ஆர்.எல்.கள், முன்புறம் அகலமான ஏர் இன்டேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த காரில் ஆடியின் முற்றிலும் புதிய டிஜிட்டல் லைட் சிக்னேச்சர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    இந்த காரின் உள்புறம் பானரோமிக் டிஸ்ப்ளே, 11.9 இன்ச் ஆடி விர்ச்சுவல் காக்பிட், 14.5 இன்ச் MMI டச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஸ்டீரிங் வீலில் பட்டன்களுக்கு மாற்றாக டச் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. பயனர்கள் விரும்பும் பட்சத்தில் இந்த எஸ்.யு.வி.-யில் ஆக்மென்டெட் ரியாலிட்டி ஹெட்-அப் டிஸ்ப்ளேவை பொருத்திக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.


     

    பவர்டிரெயினை பொருத்தவரை ஆடி கியூ6 இ டிரான் மாடலில் 382 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் டூயல் மோட்டார் செட்டப் உள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.9 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதில் உள்ள 100 கிலோவாட் ஹவர் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 625 கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது.

    • புது வால்வோ காரின் முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும்.
    • மணிக்கு அதிகபட்சம் 180 கி.மீ. வேகத்தில் செல்லும்.

    வால்வோ கார் இந்தியா நிறுவனம் தனது XC40 ரிசார்ஜ் சிங்கில் வேரியண்டுக்கான முன்பதிவுகளை துவங்கியது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வேரியண்டின் விலை ரூ. 54 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும். முன்பதிவு வால்வோ இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது.

    புதிய வேரியண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் XC40 ரிசார்ஜ் டூயல் மோட்டார், ஆல்வீல் டிரைவ் வேரியண்டின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.


     

    புதிய வேரியண்ட்-இல் பிக்சல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள், 360 டிகிரி கேமரா, ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் வழங்கப்படவில்லை. மாற்றாக இந்த காரில் 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 2-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 12 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் உள்ளது.

    இத்துடன் பார்க் அசிஸ்ட், 19 இன்ச் அலாய் வீல்கள், பானரோமிக் சன்ரூஃப், முன்புறம் பவர்டு இருக்கைகள், வயர்லெஸ் போன் சார்ஜிங் போன்ற வசதிகள் உள்ளன. பாதுகாப்பிற்கு 7 ஏர்பேக், லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், கிராஸ் டிராஃபிக் அலர்ட்கள், ரியர் கொலிஷன் வார்னிங் போன்ற வசதிகளை வழங்கும் ADAS சூட் உள்ளது.


     

    இதில் உள்ள வால்வோ ஒற்றை மோட்டார் 238 ஹெச்.பி. பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 180 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.

    வால்வோ XC40 ரிசார்ஜ் புதிய வேரியண்டில் 69 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 475 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளது.

    • உற்பத்தி நிலையை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
    • உற்பத்தி விலையை கட்டுக்குள் வைக்க முடியும்.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய சி.என்.ஜி. பைக் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. டெஸ்டிங் புகைப்படங்கள் பலமுறை வெளியாகிவிட்ட நிலையில், இந்த மாடல் அதன் உற்பத்தி நிலையை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

    தற்போதைய ஸ்பை படங்களின் படி பஜாஜ் சி.என்.ஜி. பைக்கில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், பல்பு இன்டிகேட்டர்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு செய்யும் போது, பைக்கிற்கு நவீன அம்சம் வழங்குவது மற்றும் உற்பத்தி விலையை கட்டுக்குள் வைக்க முடியும்.

     


    ஹார்டுவேர் அம்சங்களை பொருத்தவரை டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், மோனோஷாக் யூனிட், முன்புறம் ஒற்றை டிஸ்க், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்படும் என்று தெரிகிறது. மேலும் இந்த பைக்கில் சி.என்.ஜி. டேன்க் வைப்பதற்கான இடவசதி உள்ளது. இதற்காக மோட்டாரின் மேல் இடம் ஒதுக்கப்படுகிறது.

    புதிய சி.என்.ஜி. பைக் 100 முதல் 160 சிசி பிரிவில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. இதுதவிர இந்த பைக்கில் ஹேண்டில் கார்டுகள், ஹெட்லைட் கவுல், என்ஜின் கிராஷ் கார்டு, கிராப் ரெயில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. பஜாஜ் நிறுவனத்தின் புதிய சி.என்.ஜி. பைக் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.

    • புதிய கார் பற்றிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே உள்ளது.
    • முக்கிய அறிவிப்பை வெளியிட எம்.ஜி. மோட்டார்ஸ் திட்டம்.

    எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பயன்படுத்துவதற்காக புதிய பெயரை டிரேட்மார்க் செய்துள்ளது. இந்த பெயரில் தான் எம்.ஜி. நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

    புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் எக்செல்லார் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது. சர்வதேச சந்தையில் எம்.ஜி. நிறுவனம் எந்த மாடலுக்கும் எக்செல்லார் பெயரை பயன்படுத்துவதில்லை. அந்த வகையில், இந்த வாகனம் பற்றிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே உள்ளது.

     


    இந்த எலெக்ட்ரிக் கார் கொமெட் மற்றும் ZS EV மாடல்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தப்படும் என்று தெரிகிறது. புதிய எலெக்ட்ரிக் கார் டாடா நெக்சான் EV மாடலுக்கு போட்டியாக அமையும். மார்ச் 20-ம் தேதி மிக முக்கிய அறிவிப்பை வெளியிட எம்.ஜி. மோட்டார்ஸ் திட்டமிட்டு வருகிறது.

    அந்த வகையில், புதிய எக்செல்லார் எலெக்ட்ரிக் கார் பற்றிய விவரங்கள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. புதிய எலெக்ட்ரிக் கார் மட்டுமின்றி எம்.ஜி.மோட்டார்ஸ் நிறுவனம் தனது குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை டெஸ்டிங் செய்து வருகிறது. வரும் மாதங்களில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.

    • டெஸ்டிங் செய்யப்படும் மாடலில் டிஜிட்டல் டேஷ்போர்டு உள்ளது.
    • இந்த யூனிட்-இல் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படலாம்.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது பல்சர் சீரிஸ் மாடல்களை முற்றிலுமாக மாற்றியமைத்து வருகிறது. அந்த வகையில் பல்சர் N250 மோட்டார்சைக்கிள் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. டெஸ்டிங் செய்யப்படும் மாடலில் டிஜிட்டல் டேஷ்போர்டு உள்ளது.

    சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பல்சர் N150 மற்றும் பல்சர் N160 மாடல்களிலும் இதே போன்ற டிஜிட்டல் யூனிட் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது இவை பல்சர் சீரிசின் பெரிய மாடல்களிலும் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. இந்த யூனிட்-இல் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படும் என்று தெரிகிறது.

     


    முந்தைய ஸ்பை படங்களில் புதிய பல்சர் N250 மாடலில் யு.எஸ்.டி. ஃபோர்க் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது பல்சர் NS160 மற்றும் பல்சர் NS200 மாடல்களில் உள்ளதை போன்றே இருக்கும் என்றும் N250 மாடலுக்கு ஏற்ற டியூனிங் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட மற்ற பஜாஜ் பல்சர் மோட்டார்சைக்கிள்களை போன்றே புதிய 250 சீரிஸ் மாடல்களிலும் மெக்கானிக்கல் மாற்றங்கள் செய்யப்படாது என்றே தெரிகிறது. புது அப்டேட்களுக்கு ஏற்ப புதிய பல்சர் 250 மாடல்களின் விலையும் சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • இந்திய ராணுவத்திற்காக விசேஷமாக உருவாக்கி இருக்கிறது.
    • பாதுகாப்பு மற்றும் பல்வேறு இதர பணிகளில் இதனை பயன்படுத்த முடியும்.

    இந்திய ராணுவத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஆயுதம் தாங்கிய இலகுரக வாகனம்- அர்மாடோ (Armoured Light Specialist Vehicle-ASLV) 2024 குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டது. மஹிந்திரா நிறுவனம் இந்த வாகனத்தை இந்திய ராணுவத்திற்காக மிகவும் விசேஷமாக உருவாக்கி இருக்கிறது.

    முழுக்க முழுக்க இந்தியாவிலேயே டிசைன் செய்யப்பட்ட மஹிந்திரா அர்மாடோ ராணுவ பயன்பாட்டுக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பங்கள், அதிகளவு பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கிறது. பலவிதங்களில் பயன்படுத்தக்கூடிய மிக முக்கிய வாகனங்களில் ஒன்றாக ஆயுதம் தாங்கிய இலகுரக வாகனம் விளங்குகிறது.

     


    அந்த வகையில், மஹிந்திரா உருவாக்கும் அர்மாடோ மாடலில் பி7 மற்றும் ஸ்டனாக் லெவல் II பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதிநவீன வாகனம் என்ற வகையில், இது சிறப்பு படையினர், தீவிரவாத தடுப்பு படை, எல்லை பாதுகாப்பு மற்றும் பல்வேறு இதர பணிகளில் இதனை பயன்படுத்த முடியும். அர்மாடோ மாடலில் 3.2 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டைரக்ட் இன்ஜெக்ஷன் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் பலவித எரிபொருள்களில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. செயல்திறனை பொருத்தவரை இந்த யூனிட் 215 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ஆல்-வீல் டிரைவ் வசதி மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

     


    வாகனத்தில் 1000 கிலோ எடை ஏற்றப்பட்ட நிலையிலும் அர்மாடோ மாடல் மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த வாகனத்தின் டயர்களில் காற்று இல்லாமலோ அல்லது பன்ச்சர் ஆன நிலையில்கூட 50 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும். கடினமான சூழலிலும் பயன்படுத்த ஏதுவாக இதில் செல்ஃப்-கிளீனிங் எக்சாஸ்ட் மற்றும் ஃபில்ட்ரேஷன் சிஸ்டம் உள்ளது.

    இவைதவிர அர்மாடோ மாடலில் ஆயுதங்களை பொருத்திக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் ஹம்மர் போன்ற டிசைன் கொண்டிருக்கும் அர்மாடோ அசாத்திய செயல்திறன், அதிநவீன தொழில்நுட்பத்துடன் ராணுவ பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா அர்மாடோ குறித்த பதிவை தனது எக்ஸ் அக்கவுண்டில் பகிர்ந்து இருக்கிறார்.



    ×