search icon
என் மலர்tooltip icon

    கூட்டணி

    தமிழக சட்டமன்றத் தேர்தலின் புதிய திருப்பமாக மக்கள் நல கூட்டணி-தே.மு.தி.க. அணியில் த.மா.கா. இணைந்துள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தலில் 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் ஜி.கே.வாசன் தலைமையிலான த.மா.கா.வின் கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. இடம்பெறும் என்று கடந்த சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமை நிபந்தனை விதித்ததால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    அதன் பின்னர் தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. ஆகிய அணிகளில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன. ஆனால், அதுவும் தடைபட்டது. கடைசியாக தே.மு.தி.க–மக்கள் நலக் கூட்டணியில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது. நேற்று மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோவுடன் த.மா.கா. தலைவர் வாசன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தே.மு.தி.க. கூட்டணியில் சேர விரும்புவதாக வாசன் தெரிவித்தார். அப்போது அவர் த.மா.கா.வுக்கு 40 தொகுதிகள் வரை ஒதுக்கித்தர வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.

    இதைத் தொடர்ந்து வைகோ உடனே விஜயகாந்தை சந்தித்து த.மா.கா.வும் கூட்டணிக்கு வர இருக்கும் தகவலை தெரிவித்தார். த.மா.கா.வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கலாம்? அந்த தொகுதி பங்கீட்டை எப்படி மேற்கொள்வது என்று இருவரும் ஆலோசித்தனர்.

    இந்நிலையில் கூட்டணி குறித்து இறுதி செய்வதற்காக மக்கள் நல கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் இன்று பிற்பகல் வாசனை சந்தித்தனர். அப்போது கூட்டணி குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டு கூட்டணி உறுதியானது. இதையடுத்து வாசன் மற்றும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்குக் சென்று விஜயகாந்தை சந்தித்தனர்.

    இந்த சந்திப்பின்போது, மக்கள் நல கூட்டணி-தே.மு.தி.க. அணியில் த.மா.கா. இணைவது உறுதி செய்யப்பட்டது. த.மா.கா.வுக்கு 26 தொகுதிகளை வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    தே.மு.தி.க – மக்கள் நலக் கூட்டணி இடையே தே.மு.தி.க. 124 தொகுதிகளிலும் மக்கள் நலக்கூட்டணி 110 இடங்களிலும் போட்டியிடுவது என்று ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதில் மக்கள் நலக்கூட்டணியில் மொத்தம் உள்ள 110 தொகுதிகளில் ம.தி.மு.க.வுக்கு 32 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய 3 கட்சிகளுக்கு தலா 26 இடங்கள் என்று முடிவு செய்திருந்தனர்.

    தற்போது த.மா.கா. இணைந்ததையடுத்து தே.மு.தி.க, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் ஆகிய 5 கட்சிளும் தங்கள் தொகுதிகளில் இருந்து த.மா.கா.வுக்கு தொகுதிகளை பகிர்ந்து அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தே.மு.தி.க. தன்னிடம் உள்ள 124 தொகுதிகளில் 20 தொகுதிகளை த.மா.கா.வுக்கு கொடுத்துள்ளது.

    அதுபோல ம.தி.மு.க. 3 தொகுதிகளையும், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய ஒரு தொகுதிகளையும் த.மா.கா.வுக்காக விட்டுக்கொடுத்துள்ளது. இதன்மூலம் த.மா.கா.வுக்கு 26 தொகுதிகள் கிடைத்துள்ளன.

    தே.மு.தி.க. - மக்கள் நல கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் வருமாறு:

    தே.மு.தி.க. - 104
    ம.தி.மு.க. -29
    விடுதலை சிறுத்தைகள் - 25
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 25
    இந்திய கம்யூனிஸ்ட் - 25
    தமிழ் மாநில காங்கிரஸ்-26.
    மக்கள் நல கூட்டணி தலைவர்கள் இன்று பிற்பகல் வாசனை சந்தித்தனர். அப்போது கூட்டணி குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் த.மா.கா., மக்கள் நல கூட்டணி-தே.மு.தி.க. அணியில் இணைவது உறுதியானது.
    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தலில் 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் ஜி.கே.வாசன் தலைமையிலான த.மா.கா.வின் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாக இருந்தது. அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. இடம்பெறும் என்று கடந்த சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமை நிபந்தனை விதித்ததால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    இதேபோல் தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. ஆகிய அணிகளிலும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன. ஆனால், அதுவும் தடைபட்டது. எனவே, தே.மு.தி.க–மக்கள் நலக் கூட்டணியில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது. நேற்று மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோவுடன் த.மா.கா. தலைவர் வாசன் தொடர்பு கொண்டு பேசினார். தே.மு.தி.க. கூட்டணியில் சேர விரும்புவதாக வாசன் தெரிவித்தார். அப்போது அவர் த.மா.கா.வுக்கு 40 தொகுதிகள் வரை ஒதுக்கித்தர வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.

    இதைத் தொடர்ந்து வைகோ உடனே விஜயகாந்தை சந்தித்து த.மா.கா.வும் கூட்டணிக்கு வர இருக்கும் தகவலை தெரிவித்தார். த.மா.கா.வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கலாம்? அந்த தொகுதி பங்கீட்டை எப்படி மேற்கொள்வது என்று இருவரும் ஆலோசித்தனர்.

    இந்நிலையில் கூட்டணி குறித்து இறுதி செய்வதற்காக மக்கள் நல கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் இன்று பிற்பகல் வாசனை சந்தித்தனர். அப்போது கூட்டணி குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் த.மா.கா., மக்கள் நல கூட்டணி-தே.மு.தி.க. அணியில் இணைவது உறுதியானது. இதையடுத்து 5 தலைவர்களும் விஜயகாந்தை சந்திப்பதற்காக புறப்பட்டனர். விஜயகாந்த்துடனான சந்திப்பில் கூட்டணி இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

    தி.மு.க. கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவப் படை அமைப்பு, ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் இன்று கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார்.  அப்போது பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டார்.

    பெரம்பூர் தொகுதி கடந்த தேர்தலில் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. என்.ஆர்.தனபாலன் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இப்போது அவர் மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

    கருணாநிதியை சந்தித்த பின்பு என்.ஆர்.தனபாலன் கூறுகையில், பெரம்பூர் தொகுதியில் மீண்டும் நான் போட்டியிடுகிறேன். இந்த முறை நான் வெற்றி பெறுவேன். 234 தொகுதியிலும் தி.மு.க. வெற்றி பெறும். கருணாநிதி முதல்-அமைச்சராக பதவி ஏற்பார் என்றார்.

    தி.மு.க. கூட்டணியில் இணைந்த சமூக சமத்துவப் படைக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இன்று அந்த அமைப்பின் தலைவர் சிவகாமி கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.  பின்னர் சிவகாமி கூறுகையில், பெரம்பலூர் தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவேன் என்றார்.

    அதன்பிறகு பின்னர் விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் பொன்.குமார் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார். அவருக்கு எத்தனை தொகுதி என்று விரையில் ஒதுக்கப்படும்.
    திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தி.மு-.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகள் பட்டியல் நேற்று வெளியானது.

    தி.மு.க. கூட்டணியில் நேற்று புதிய தமிழகம் கட்சி இணைந்தது. அந்தகட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று பகல் 11.30 மணிக்கு அண்ணா அறிவலாலயம் சென்றார்.

    அங்கு அவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்துப் பேசினார். தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றி ஆலோசனை நடத்தினார். இதில் அவர் விரும்பும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
    இதைத்தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியை கிருஷ்ணசாமி சந்தித்து தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி பட்டியல் உடன்பாட்டில் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டார். அப்போது மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

    பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறுகையில், “புதிய தமிழகம் கட்சிக்கு ஒட்டப்பிடாரம், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தாங்கள் விரும்பிய தொகுதியே கிடைத்து இருக்கிறது. எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பதை நாளை அறிவிப்பேன்” என்றும் தெரிவித்தார்.

    ×