என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அறிந்து கொள்ளுங்கள்
- இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
- இதர வங்கி சார்ந்த சலுகைகளை பெற முடியும்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 11 கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமானதில் இருந்து ஒன்பிளஸ் 11 விலை இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ரூ. 56 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய விலை குறைப்பை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இதில் ரூ. 3 ஆயிரம் விலை குறைப்பு மற்றும் ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி கூப்பன் அடங்கும்.
இதுதவிர விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது அமேசானில் வாங்கும் போது எக்சேன்ஜ் சலுகை அல்லது இதர வங்கி சார்ந்த சலுகைகளை பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன் எடர்னல் கிரீன் மற்றும் டைட்டன் பிளாக் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஒன்பிளஸ் 11 அம்சங்கள்:
6.7 இன்ச் 3216x1440 பிக்சல் QHD+ 2.75D flexible curved AMOLED LTPO டிஸ்ப்ளே
120Hz ரிப்ரெஷ் ரேட், HDR10+, டால்பி விஷன்
கார்னிங் கொரில்லா கிலாஸ் விக்டஸ் பாதுகாப்பு
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்
அட்ரினோ 740 GPU
8 ஜிபி LPDDR5X ரேம், 128 ஜிபி UFS 4.0 மெமரி
16 ஜிபி LPDDR5X ரேம், 256 ஜிபி, 512 ஜிபி UFS 4.0 மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, OIS
48MP அல்ட்ரா வைடு கேமரா
32MP டெலிபோட்டோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர் டால்பி அட்மோஸ்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
100 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்
- ஒன்பிளஸ் நிறுவன சாதனங்கள் எதுவும் விற்பனை செய்யப்பட மாட்டாது.
- ஏராளமான சிக்கல்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவன சாதனங்களை ஆஃப்லைன் கடைகளில் விற்பனை செய்ய மாட்டோம் என்று இந்தியாவின் ஒருங்கிணைந்த சில்லறை விற்பனையாளர்களின் கூட்டமைப்பு தெரிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து மே 1 ஆம் தேதியில் இருந்து நாடு முழுக்க பெரும்பாலான முன்னணி ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒன்பிளஸ் நிறுவன சாதனங்கள் எதுவும் விற்பனை செய்யப்பட மாட்டாது.
இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, இந்திய சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒன்பிளஸ் டெக்னாலஜி இந்தியா விற்பனை பிரிவு இயக்குநர் ரஞ்சித் சிங்கிற்கு கடிதம் எழுதப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தில் விற்பனை தொடர்பாக ஏராளமான சிக்கல்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்ததாக தெரிகிறது.
இந்தியாவில் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒன்பிளஸ் சாதனங்களை விற்பனை செய்யும் போது மிக குறைந்த லாபம் கிடைப்பதாகவும், வாரண்டி தொடர்பான சேவைகளில் கால தாமதம் ஏற்படுவதால் வாடிக்கையாளரகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற காரணங்களால் விற்பனை மோசமாக இருப்பதாக தெரிகிறது.
இதனால் மே 1 ஆம் தேதி முதல் குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் உள்ள சுமார் 4 ஆயிரத்து 500 ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒன்பிளஸ் சாதனங்களை விற்பனை செய்வதில்லை என சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர இம்மாத இறுதிக்குள் இந்த பிரச்சினைகள் குறித்து தீர்வு காண இந்திய சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக ஒன்பிளஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
- சிக்னல்களை கொண்டு காணாமல் போன சாதனங்களை கண்டறியும்.
- தேர்வு செய்யப்பட்ட சாதனங்களிலும் இந்த அம்சம் உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபைண்ட் மை டிவைஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த அப்டேட் ஆப்பிளின் ஃபைண்ட் மை டிவைஸ் வழங்குவதை போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
புது அப்டேட் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களின் காணாமல் போன சாதனங்களை எளிதில் கண்டறிய முடியும். குறிப்பிட்ட சாதனம் ஆஃப்லைனில் இருந்தாலும் இந்த அம்சம் சீராக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் ஃபைண்ட் மை டிவைஸ் போன்றே, கூகுளின் அப்டேட் செய்யப்பட்ட ஃபைண்ட் மை டிவைஸ் சேவையும் ப்ளூடூத் சிக்னல்களை கொண்டு காணாமல் போன சாதனங்களை கண்டறியும்.
இதன் மூலம் அருகாமையில் உள்ள ஆண்ட்ராய்டு சாதனங்களில் இண்டர்நெட் இணைப்பு இல்லை என்றாலும், கண்டறிய முடியும். தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்கு பின் வெளியான வெர்ஷன்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.
கூடுதலாக பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ என தேர்வு செய்யப்பட்ட சாதனங்களிலும் இந்த அம்சம் உள்ளது. மேலும், காணாமல் போன சாதனம் தொலைந்து போனாலும் அதனை ஃபைண்ட் மை டிவைஸ் மூலம் கண்டுபிடித்துவிட முடியும்.
புதிய ஃபைண்ட் மை டிவைஸ் நெட்வொர்க்கின் நோக்கம் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தான் என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது. காணாமல் போன சாதனங்களின் லொகேஷன் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு விடும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் கூகுள் மற்றும் இதரானவர்கள் லொகேஷன் விவரங்களை இயக்க முடியாது.
- சோனி நிறுவனம் விசேஷ கோடை கால சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- ரூ. 13 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சோனி இந்தியா நிறுவனம் தனது பிளே ஸ்டேஷன் 5 (CFI-1208A01R) மாடல்களுக்கு கோடை கால சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகைகளின் கீழ் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ. 13 ஆயிரம் வரையிலான பலன்களை பெற முடியும். இந்த சலுகை ஏப்ரல் 10 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 30 ஆம் தேதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படுகிறது.
தேர்வு செய்யப்பட்ட பி.எஸ். 5 மாடல்களுக்கு சோனி இந்தியா நிறுவனம் விசேஷ கோடை கால சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சோனி பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் (CFI-2000 மாடல் க்ரூப் - ஸ்லிம்) மாடலுக்கு பொருந்தாது.
அதன்படி பி.எஸ். 5 மாடல்களுக்கு ரூ. 13 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடி போக பி.எஸ். 5 விலை எவ்வளவாக இருக்கும் என்பது ஏப்ரல் 10 ஆம் தேதி விற்பனை துவங்கிய பின்பே தெரியவரும்.
வாடிக்கையாளர்கள் பி.எஸ். 5 மாடலை அமேசான், க்ரோமா, ப்ளிப்கார்ட், சோனி செண்டர், விஜய் சேல்ஸ், ப்ளின்கிட் மற்றும் இதர விற்பனையாளர்களிடம் சலுகை விலையில் வாங்கிட முடியும்.
தற்போது சோனி பி.எஸ். 5 மாடலின் ஸ்டாண்டர்டு எடிஷன் விலை ரூ. 54 ஆயிரத்து 990 என்றும் டிஜிட்டல் மாடல் விலை ரூ. 44 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- புகைப்படத்தில் இருக்கும் தேவையற்ற விஷயங்களை நீக்கும்.
- அதிக சிரமம் இன்றி எளிதாக நீக்கிவிட முடியும்.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஏ.ஐ. இரேசர் (AI Eraser) எனும் அம்சத்தை ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அறிவித்து இருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் மேஜிக் இரேசர் என்றே இந்த அம்சம் ஒரு புகைப்படத்தில் இருக்கும் தேவையற்ற விஷயங்களை நீக்கும்.
முதற்கட்டமாக இந்த அம்சம் ஒன்பிளஸ் 12, ஒன்பிளஸ் 12R, ஒன்பிளஸ் 11, ஒன்பிளஸ் ஓபன் மற்றும் ஒன்பிளஸ் நார்டு CE4 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு இம்மாதமே வழங்கப்படுகிறது. இது தொடர்பான அப்டேட்கள் விரைவில் வழங்கப்படும்.
புதிய ஏ.ஐ. இரேசர் அம்சம் செயற்கை நுண்ணறிவு மற்றும் இதர மேம்பட்ட அல்காரிதம்களை பயன்படுத்துகிறது. இந்த அம்சம் போட்டோ கேலரியில் உள்ள தேவையற்ற பொருட்களை அதிக சிரமம் இன்றி எளிதாக நீக்கிவிட முடியும்.
பயனர்கள் புகைப்படத்தில் இருக்கும் தேவையற்ற பொருட்கள் அல்லது இடையூறுகளை குறிப்பிட்டதும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அவற்றை நீக்கி செயற்கையாக பேக்கிரவுண்டு ஒன்றை உருவாக்கும். இதற்காக உருவாக்கப்படும் பேக்கிரவுண்டு ஒட்டுமொத்த புகைப்படத்துடன் ஒற்று போகும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
- புது ஐபேட்கள் இருவித அளவுகளில் கிடைக்கும்.
- இதுவே வெளியீட்டை தாமதப்படுத்தி இருக்கிறது.
ஆப்பிள் நிருவனம் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களை மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், புது ஐபேட் மாடல்களின் வெளியீடு தாமதமாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி புதிய ஆப்பிள் டேப்லெட் மாடல்கள் மே மாத வாக்கில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இது குறித்து ஆப்பிள் வல்லுநரான மார்க் குர்மேன் வெளியிட்டுள்ள தகவல்களில், "ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களை மே மாத துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது."
"புது ஐபேட் ப்ரோ மாடல்களில் OLED டிஸ்ப்ளே தொழில்நுட்பம், மேஜிக் கீபோர்டு, புதிய M3 சிப்செட்கள் வழங்கப்படலாம். புதிய ஐபேட் ஏர் மாடல்கள் 11.9 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய ஐபேட் மாடல்களின் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். புது ஐபேட் ப்ரோ மாடல்களில் உள்ள OLED டிஸ்ப்ளேவை அசெம்பில் செய்ய சிக்கலான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியிருப்பதே, வெளியீட்டை தாமதப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு ஜூன் 10 ஆம் தேதி துவங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தது. இந்த நிகழ்வு ஆப்பிள் பார்க் வளாகத்தில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. ஜூன் 10 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் டெவலப்பர்கள் ஆப்பிள் குழுவினரை நேரில் சந்தித்து உரையாட சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- சந்தா முறையை எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் கொண்டுவந்தார்.
- முன்னணி சமூக வலைதள நிறுவனங்களும் பின்பற்ற துவங்கின.
டுவிட்டர் தளத்தை வாங்கி அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்தவர் எலான் மஸ்க். இதில் பிரபல சமூக வலைதளத்தை எக்ஸ் என பெயர் மாற்றம் செய்ததும் அடங்கும். பெயர் மாற்றத்தோடு கட்டண முறையில் பயனர்களுக்கு விசேஷ அம்சங்களை வழங்கும் சந்தா முறையை எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் கொண்டுவந்தார்.
பிறகு, இதேபோன்ற திட்டத்தை மற்ற முன்னணி சமூக வலைதள நிறுவனங்களும் பின்பற்ற துவங்கின. இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் கட்டண முறையில் வழங்கப்பட்டு வரும் எக்ஸ் பிரீமியம் சந்தாவை பயனர்களுக்கு இலவசமாக வழங்க எலான் மஸ்க் முடிவு செய்திருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "எக்ஸ் தளத்தில் 2500-க்கும் அதிக வெரிஃபைடு சந்தாதாரர்களை ஃபாளோவர்களாக கொண்டிருக்கும் அக்கவுண்ட்களுக்கு பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படும். மேலும் 5000-க்கும் அதிக வெரிஃபைடு சந்தாதாரர்களை ஃபாளோவர்களாக கொண்ட அக்கவுண்ட்களுக்கு பிரீமியம் பிளஸ் சந்தா இலவசமாக வழங்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இலவச பிரீமியம் சந்தா பெறுவது எப்படி?
எலான் மஸ்க்-இன் புதிய அறிவிப்பின் படி எக்ஸ் தளத்தில் 2500 ஃபாளோவர்களை வைத்திருப்போருக்கு பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படாது. மாறாக 2500 ஃபாளோவர்கள் இருப்பின் அவர்கள் எக்ஸ் தளத்தின் பேசிக், பிரீமியம் அல்லது பிரீமியம் பிளஸ் சந்தாக்களில் எதையேனும் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
இதே போன்று பிரீமியம் பிளஸ் சந்தாவை இலவசமாக பெற, குறிப்பிட்ட எக்ஸ் அக்கவுண்ட்-ஐ குறைந்தபட்சம் 5000 ஃபாளோவர்கள் இந்த சந்தாக்களில் எதையேனும் வாங்கியிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
- 140-க்கும் அதிக வங்கிகளை பயன்படுத்த முடியும்.
- யு.பி.ஐ. பேமண்ட் கடந்த 2020 ஆண்டு அறிமுகம்.
வாட்ஸ்அப் நிறுவனம் சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட்களை மேற்கொள்ளும் வசதியை இந்திய பயனர்களுக்கு வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக வெளியான ஸ்கிரீன்ஷாட்களில் புது வசதி யு.பி.ஐ. செட்டிங்ஸ் (UPI Settings) பகுதியில் இன்டர்நேஷனல் பேமண்ட்ஸ் (International Payments) ஆப்ஷனில் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.
இதனை தேர்வு செய்யும் போது, சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்து, எவ்வளவு காலம் இது செயல்படுத்த வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். யு.பி.ஐ. பேமண்ட் வசதியை வழங்கும் போன்பே (PhonePe) மற்றும் ஜிபே (GPay) உள்ளிட்டவைகளில் இந்த வசதி ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது.
அந்த வரிசையில் தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப்-இல் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் யு.பி.ஐ. பேமண்ட் சேவை கடந்த 2020 நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 140-க்கும் அதிக வங்கிகளை பயன்படுத்த முடியும்.
சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட் மேற்கொள்ளும் வசதி தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போதைக்கு இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இதர விவரங்கள் மற்றும் வெளியீட்டு அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
- பதவியை ராஜினாமா செய்து அமேசான் நிறுவனத்தில் இணைந்தார்.
- மிகைல் பராகின் விண்டோஸ் பிரிவுக்கு தலைமை வகித்தார்.
ஐ.ஐ.டி. மெட்ராஸ் முன்னாள் மாணவர் பவன் தவுலுரி மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பொறுப்பில் பனோஸ் பனய் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு பனோஸ் தனது பதவியை ராஜினாமா செய்து அமேசான் நிறுவனத்தில் இணைந்தார்.
முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் குழுக்களை தனியாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனி அதிகாரிகளை தலைமை பதவிகளில் நியமித்து இருந்தது. அதன்படி தவுலுரி சர்பேஸ் பிரிவுக்கு தலைமை வகித்து வந்தார். மிகைல் பராகின் விண்டோஸ் பிரிவுக்கு தலைமை வகித்தார்.
பராகின் புதிய பதவிகளில் பணியாற்ற விரும்பியதை அடுத்து, தவுலுரி விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவுகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தவுலுரி ஐ.ஐ.டி. மெட்ராஸ்-இல் பட்டம் பெற்றவர் ஆவார். இதன் மூலம் இவர் உலகளவில் தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமை பொறுப்பேற்ற இந்தியர்கள் பட்டியலில் தவுலுரி இணைந்துள்ளார்.
- பயனர்கள் எளிதில் மிகமுக்கிய தகவல்களை இயக்கிட முடியும்.
- சமீபத்தில் பின் செய்யப்படும் தகவல் சாட்களில் முதலில் தெரியும்.
வாட்ஸ்அப் செயலியில் ஒரே சமயம் மூன்று குறுந்தகவல்களை பின் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் உரையாடல், காண்டாக்ட் அல்லது க்ரூப்-இல் ஒற்றை மெசேஜை பின் செய்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மார்க் ஜூக்கர்பர்க் தனது அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலில் வெளியிட்டுள்ள தகவலின் படி பயனர்கள் சாட் ஒன்றில் அதிக குறுந்தகவல்களை பின் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பயனர்கள் எளிதில் மிகமுக்கிய தகவல்களை இயக்கிட முடியும்.
பயனர்கள் டெக்ஸ்ட் (Text), புகைப்படம் (Image) அல்லது கருத்து கணிப்பு (Polls) உள்ளிட்டவைகளை பின் செய்ய முடியும். இப்படி பின் செய்யப்படும் மெசேஜ்கள் 24 மணி நேரம், 7 நாட்கள் அல்லது 30 நாட்கள் வரை சாட்களின் மேல் பேனர் போன்று காட்சியளிக்கும். அதிக குறுந்தகவல்களை பின் செய்யும் போது, சமீபத்தில் பின் செய்யப்படும் தகவல் சாட்களில் முதலில் தெரியும்.
குறுந்தகவல்களை பின் செய்ய, குறிப்பிட்ட மெசேஜ்-ஐ அழுத்தி பிடித்து "பின்" (Pin) ஆப்ஷனை க்ளிக் செய்து எவ்வளவு நேரம் பின் செய்யப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
ஆண்ட்ராய்டில் இந்த அம்சத்தை இயக்க மெசேஜ்-ஐ அழுத்தி பிடித்து மோர் ஆப்ஷன்ஸ் (More Options) - பின் (Pin) - எவ்வளவு நேரம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்து பின் (Pin) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
ஐபோனில் இந்த அம்சத்தை இயக்க மெசேஜ்-ஐ அழுத்தி பிடித்து மோர் ஆப்ஷன்ஸ் (More Options) - பின் (Pin) - எவ்வளவு நேரம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
வெப் மற்றும் டெஸ்க்டாப்-இல் இந்த அம்சத்தை இயக்க மெசேஜ்-ஐ க்ளிக் செய்து மெனு ஆப்ஷனில் பின் மெசேஜ் (Pin Message) - எவ்வளவு நேரம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்து பிறகு பின் (Pin) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
க்ரூப் சாட் பின் செய்யும் முறை:
க்ரூப் சாட்களில் மெசேஜ்களை பின் செய்ய க்ரூப் அட்மின்கள் அனுமதிக்க முடியும். மெசேஜ் பின் செய்யப்படுவதை சிஸ்டம் மெசேஜ் க்ரூப் பயனர்களுக்கு தெரிவிக்கும். எனினும், மெசேஜ் பின் செய்யப்பட்ட பிறகு க்ரூப்-இல் சேர்க்கப்படுவோருக்கு இது தெரியாது.
- சலுகைகளின் பலன்களும் மாற்றப்பட்டு இருக்கின்றன.
- அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரை ஒட்டி சிறப்பு சலுகைகள் மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு, பழைய சலுகைகள் விலை மாற்றப்பட்டு, அவற்றின் பலன்களும் மாற்றப்பட்டு இருக்கின்றன.
ஏர்டெல் ரூ. 49 மற்றும் ரூ. 99 சலுகைகளின் விலை முறையே ரூ. 39 மற்றும் ரூ. 79 என மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த இரு சலுகைகளும் ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடருக்காக மாற்றப்பட்டு இருப்பதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த சலுகைகள் பயனர்களுக்கு தடையற்ற கனெக்டிவிட்டி வழங்கும்.
ஏர்டெல் ரூ. 39 விலை சலுகையில் 20 ஜி.பி. டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 20 ஜி.பி. டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டு விடும். ஏர்டெல் ரூ. 49 விலை சலுகையில் வின்க் பிரீமியம் சந்தா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் நாள் ஒன்றுக்கு அன்லிமிடெட் டேட்டா (அதிகபட்சம் 20 ஜி.பி.) வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ. 79 சலுகையில் அன்லிமிடெட் டேட்டா (அதிகபட்சம் 20 ஜி.பி.) இரண்டு நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 20 ஜி.பி. தீர்ந்ததும், டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டு விடும். இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தமாக 40 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.
- ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இதுவே முதல் முறை ஆகும்.
- திட்டத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
நத்திங் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் இதுவரை நடந்திராத முதல் முறை திட்டத்தை அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த திட்டம் தொடர்பான டீசர் வெளியானது. தற்போது இந்த திட்டம் பற்றிய விவரங்களை நத்திங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
அதன்படி நத்திங் நிறுவனம் "கம்யுனிட்டி எடிஷன் திட்டம்" என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் நத்திங் போன் 2a மாடலில் தாங்கள் விரும்பும் வகையில் டிசைன் செய்யலாம். இந்த திட்டத்தில் நத்திங் கம்யுனிட்டி மற்றும் நத்திங் குழு இணைந்து செயல்படும் என்று நத்திங் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய் தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் கம்யுனிட்டியை ஈடுபட வைப்பது சந்தையில் இதுவே முதல் முறை ஆகும். முதற்கட்டமாக ஸ்மார்ட்போன், அதன்பிறகு ஒ.எஸ். உள்ளிட்டவைகளை டிசைன் செய்வதிலும் கம்யுனிட்டியை ஈடுபட வைக்க நத்திங் திட்டமிட்டுள்ளது. புதிய கம்யுனிட்டி எடிஷன் திட்டத்தில் பயனர்கள் டிசைன், வால்பேப்பர் மற்றும் பேக்கேஜ் செய்வது தொடர்பான யோசனைகளை நத்திங் நிறுவனத்திடம் தெரிவிக்க முடியும்.
இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ள முடியும். விருப்பமுள்ளவர்கள் நத்திங் போன் 2a புதிய வேரியண்ட் தொடர்பான யோசனைகளை நத்திங் கம்யுனிட்டி தளத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் விசேஷ வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த திட்டம் ஆறு மாத காலத்திற்கு செயல்பாட்டில் இருக்கும். இதில் நான்கு நிலைகள் உள்ளன.
இந்த திட்டத்தில் முதல் நிலை- ஹார்டுவேர் டிசைன் சார்ந்தது ஆகும். பயனர்கள் புதிய ஸ்மார்ட்போனின் ஹார்டுவேர் தொடர்பான யோசனைகளை மார்ச் மாதத்திற்குள் சமர்பிக்க வேண்டும். இதைத் தொடர்ந்த மே மாத வாக்கில் வால்பேப்பர் டிசைன் பற்றிய யோசனைகளையும், ஜூன் மாதத்திற்குள் பேக்கேஜ் டிசைன் தொடர்பான யோசனைகளையும், விளம்பரம் தொடர்பான யோசனைகளை ஜூலை மாதத்திற்குள் சமர்பிக்க வேண்டும்.
பயனர்கள் விரும்பும் வகையில், அவர்களது யோசனைகள் தெளிவாக புரியும்படி எந்த வடிவில் வேண்டுமானாலும் பதிவேற்றம் செய்யலாம் என நத்திங் தெரிவித்துள்ளது. பயனர்கள் சமர்பிக்கும் யோசனைகள் தேர்வாகும் படச்த்தில் அவை கம்யுனிட்டி எடிஷன் திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
யோசனைகளை சமர்பிப்பதற்கான அவகாசம் நிறைவு பெற்றதும், யோசனைகள் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படும். வாக்கெடுப்பிலும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். சமர்பிக்கப்பட்ட யோசனைகள் அனைத்தையும், இந்த திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக குழு மதிப்பீடு செய்து ஒவ்வொரு நிலையிலும் வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவர்.
நத்திங் கம்யுனிட்டி எடிஷன் திட்டம் ஆறு மாதங்கள் நடைபெறும். இந்த திட்டத்தில் நான்கு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு புதிய சாதனம் உருவாக்கப்பட இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்