search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    செயற்கை தோலை உருவாக்கும் பயோபிரின்டர் கண்டுபிடிப்பு
    X

    செயற்கை தோலை உருவாக்கும் பயோபிரின்டர் கண்டுபிடிப்பு

    ஸ்பெயின் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் பிரத்தியேக 3D பயோபிரின்டர் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த சாதனம் மூலம் மனித உடலில் பொருந்தி இயங்கும் செயற்கை தோலை உருவாக்க முடியும்.
    மேட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வித்தியாசமான 3D பயோபிரின்டர் சாதனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் மனித உடலில் கச்சிதமாக பொருந்தி இயங்கக் கூடிய 'செயற்கை தோலை' உருவாக்க முடியும். இந்த செயற்கை தோல் கொண்டு ஆராய்ச்சி பணிகளை தவிர்த்து ஒப்பனை மற்றும் இரசாயனம் சார்ந்த பொருட்களை சோதிக்கவும், மனித உடலில் பொருத்தி கொள்ளவும் முடியும். 

    ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கும் புதிய பயோபிரின்டர் மூலம் உருவாக்கப்படும் தோல் மனித உடலில் ஏற்கனவே இருக்கும் தோல் பகுதியின் மேல்புறமாக பொருத்தப்படும், இது உள்ளிருக்கும் தோல் பகுதியை வெளிப்புற சூழ்நிலைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. 

    இந்த செயற்கை தோலினை நோயாளிகள் மீது பயன்படுத்த முடியும் என்பதோடு வியாபார ரீதியாக இரசாயன பொருட்களை சோதனை செய்யவும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ள புதிய செயற்கை தோல் இரு விதங்களில் உருவாக்கப்படுகின்றது. 

    முதல் விதமாக அல்லோஜெனிக் தோல் உருவாக்கப்படுகின்றது. இது தொழில்துறை பயன்பாடுகளுக்காக அதிகளவில் உருவாக்கப்படுகின்றது. இரண்டாவது விதமாக ஆட்டோலோகஸ் தோல் மனிதர்களின் உடலில் ஏற்பட்ட தோல் சார்ந்த காயங்களை குணப்படுத்தி இந்த புதிய தோலினை குறிப்பிட்ட பாகத்தில் பொருத்த முடியும். 

    தற்சமயம் ஆராய்ச்சியாளர்கள் மனித உடலில் இருக்கும் திசுக்கள் மற்றும் உயிரணுக்களை கொண்டு உயிரியக்க தோல் வகைகளை உருவாக்கி வருகின்றனர். இது மற்ற முறைகளில் பயன்படுத்தக் கூடிய விலங்கு கொலாஜென்களை பயன்படுத்துவதை தவிர்க்கிறது. மனித தோல்களை அச்சடிக்கும் வழிமுறைக்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் புதிய வழிமுறைகள் குறைந்த செலவில் செய்யக் கூடியது என்றும் இவற்றை வணிகம் செய்யும் உரிமைக்கான பேச்சுவார்த்தைகள் பல்வேறு நிறுவனங்களுடன் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×