search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மடித்து பாக்கெட்டில் வைத்து கொள்ளும் சாம்சங் ஸ்மார்ட்போன்
    X

    மடித்து பாக்கெட்டில் வைத்து கொள்ளும் சாம்சங் ஸ்மார்ட்போன்

    பணம் வைக்கும் பர்ஸ் போன்று இரண்டாக மடித்து பாக்கெட்டில் வைக்கும் வசதி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
    சீயோல்:

    சாம்சங் நிறுவனத்தின் ஃபோல்டபில் டிஸ்ப்ளேக்கள் புகைப்படங்களாக அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வந்தது. இந்நிலையில் சாம்சங் நிறுவனத்தின் மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு வாக்கில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தமாக 100,000 மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது. 

    தொழில்நுட்ப ரீதியாக பணிகள் நிறைவுற்ற போதிலும் இந்த ஸ்மார்ட்போனினை வெளியிடுவது குறித்த இறுதி முடிவுகளை சாம்சங் இன்னும் மேற்கொள்ளவில்லை என்றே தெரிகிறது. சாம்சங் நிறுவனம் மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை ஏற்கனவே தயாரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மடிக்கும் ஸ்மார்ட்போன்களை சாதாரணமாக இருக்கும் போது 7 இன்ச் டேப்லெட் போன்று பயன்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது. 

    சாம்சங் நிறுவனம் போன்றே எல்ஜி நிறுவனமும் 100,000 மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டு நான்காம் காலாண்டு வாக்கில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் பணிகளை எல்ஜி நிறுவனம் 2-3 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டதாகவும் இது சாம்சங் நிறுவனத்தின் டிஸ்ப்ளேவை விட அதிநவீன வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.  

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான தகவல்களில் சாம்சங் நிறுவனம் இரண்டு மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருவதாக கூறப்பட்டது. இவை இந்த ஆண்டு வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டது. அவ்வாறு வெளியான தகவல்களில் வளையும் தன்மையுடன் OLED டூயல்-ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போனினை சாம்சங் தயாரித்து வருவதாக கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×