search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் சாம்சங்
    X

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் சாம்சங்

    சாம்சங் நிறுவனம் அடுத்து வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போனுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    சீயோல்:

    சாம்சங் நிறுவனத்தின் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்ப உதவியுடன் இயங்கும் உதவியாளர் மென்பொருள் சார்ந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த மென்பொருள் சேவையின் பெயர் 'பிக்ஸ்பி' (Bixby) என்பது தெரியவந்துள்ளது. இத்தகவல் சாம்சங் பே சேவை சார்ந்த அதிகாரப்பூர்வமான தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது. சாம்சங் விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவை அந்நிறுவனத்தின் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.  

    விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவை சார்ந்து வெளியாகியுள்ள புகைப்படத்தில் சாம்சங் பே மினி (mini) என்ற சேவை உருவாகி வருவதும் தெரியவந்துள்ளது. இந்த ஆப்ஷன் சாம்சங் பே சேவையின் புதிய பதிப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  

    சாம்சங் நிறுவனத்தின் மொபைல் தகவல் பரிமாற்ற பிரிவின் துணை தலைவர் லீ கீயோங்-தே அடுத்து வெளியாக இருக்கும் உயர் ரக கேலக்ஸி ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு அம்சம் வழங்கப்படும் என கடந்த ஆண்டே தெரிவித்தார். சாம்சங் புதிய செயற்கை நுண்ணறிவு அம்சம் ஆண் மற்றும் பெண் குரல்களை கொண்டிருக்கும் என முன்னதாக வெளியான தகவல்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

    புதிய கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனின் செயலிகள் சாம்சங் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. விவ் லேப்ஸ் எனும் அமெரிக்க நிறுவனத்தை கைப்பற்றி செயற்கை நுண்ணறிவு சார்ந்த பிரிவை சாம்சங் நிறுவனம் துவங்கியது. இதே நிறுவனம் தான் ஆப்பிளின் சிரி செயற்கை நுண்ணறிவு மென்பொருளையும் கண்டறிந்தது.  

    சாம்சங் பே மினி சேவை என்பது ஆன்லைன் கட்டண முறையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சாம்சங் கேலகக்ஸி S8 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் புதிய தகவல்களில் புதிய சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×