search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டது: இப்போ வாங்குவீங்களா?
    X

    இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டது: இப்போ வாங்குவீங்களா?

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A9 ப்ரோ இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் நிலையில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாம்சங் கேலக்ஸி A9 ப்ரோ விலை ரூ.2,590 குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரூ.32,490க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேலக்ஸி A9 ப்ரோ ரூ.29,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    சாம்சங் கேலக்ஸி A9 ப்ரோ இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. சிறப்பம்சங்களை பொருத்த வரை 6.0 இன்ச் 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள கேலக்ஸி A9 ப்ரோ ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.  



    இதச்துடன் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 பிராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 32 ஜபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

    மேலும் 4ஜி, வை-பை, ப்ளூடூத், யுஎஸ்பி 2.0 உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வசதிகளை வழங்கும் சென்சார்களும் வழங்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×