search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • முதலில் ஆடிய மும்பை அணி 179 ரன்கள் எடுத்தது.
    • ராஜஸ்தான் அணியின் சந்தீப் ஷர்மா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் எடுத்தனர்.

    ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும், சாஹல், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், மும்பை அணியின் முகமது நபி 23 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் ஐ.பி.எல். வரலாற்றில் சாஹலின் 200-வது விக்கெட்டாக பதிவானது.

    இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை சாஹல் படைத்துள்ளார்.

    • இறுதிப்போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், சிட்சிபாசுடன் மோதினார்.
    • இதில் காஸ்பர் ரூட் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.

    மேட்ரிட்:

    பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோதினார்.

    இதில் காஸ்பர் ரூட் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    • ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் குவித்தனர். ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான பட்லர்- ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் குவித்தது. அந்த நிலையில் சாவ்லா பந்து வீச்சில் பட்லர்(35) அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சாம்சன் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார்.

    ஒரு முனையில் அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 104 ரன்னிலும் சாம்சன் 38 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் சாவ்லா 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

    இந்த தோல்வியின் மூலம் 13-வது ஆண்டாக ஜெய்ப்பூரில் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு ஜெய்ப்பூர் மைதானத்தில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலுமே மும்பை அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதியுள்ளன. இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் துஷாரா இடம் பிடித்துள்ளார்.

    அதன்படி, மும்மை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில், அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்களை குவித்தார். தொடர்ந்து, நேஹல் வதேரா 49 ரன்களும், முகமது நபி 23 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 10 ரன்களும் எடுத்தனர்.

    ரோகித் சர்மா 6 ரன்களும், ஹர்திக் பாண்டியா 10 ரன்களும், டிம் டேவித் 3 ரன்களும் எடுத்தனர். இந்நிலையில், மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

    ராஜஸ்தான் தரப்பில் அபாரமாக பந்து வீசிய சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதில் கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    இதனால், 180 ரன்கள் வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களத்தில் இறங்குகிறது.

    • இந்த சீசனில் நான்காவது முறையாக 200+ ஸ்கோரும், மூன்றாவது முறையாக 250+ ஸ்கோரையும் ஹைதராபாத் அணி எடுத்துள்ளது
    • ஐ.பி.எல் வரலாற்றில் 287 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோரை இந்த சீசனில் ஹைதராபாத் அணி பதிவு செய்தது.

    நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றியுடன் 3வது இடத்தில உள்ளது.

    இந்த சீசனில் நான்காவது முறையாக 200+ ஸ்கோரும், மூன்றாவது முறையாக 250+ ஸ்கோரையும் எடுத்து ஹைதராபாத் அணி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது. குறிப்பாக ஐ.பி.எல் வரலாற்றில் 287 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோரை இந்த சீசனில் ஹைதராபாத் அணி பதிவு செய்தது.

    இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்களை தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு சந்தித்துள்ளார்.

    இது தொடர்பான புகைப்படங்களை ஹைதராபாத் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

    • 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர்.
    • இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் துஷாரா இடம் பிடித்துள்ளார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் துஷாரா இடம் பிடித்துள்ளார்.

    • கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி 1 ரன்னில் தோல்வியடைந்தது.
    • தோல்வியடைந்ததை தாங்க முடியாத ரசிகர் ஒருவர் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஐ.பி.எல். 2024 தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் சிறப்பாக பந்துவீசிய யாஷ் தயால் மற்றும் கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், பெர்குசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. கொல்கத்தா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆன்ட்ரெ ரசல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஆர்சிபி அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 1-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதன்மூலம் ஆர்சிபி அணி பிளே சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினமாகி உள்ளது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் மிகவும் வருத்தத்துடன் உள்ளனர்.

    இந்நிலையில் ஆர்சிபி அணி 1 ரன்னில் தோல்வியடைந்ததை தாங்க முடியாத ரசிகர் ஒருவர் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். அவருக்கு அருகில் இருந்த காவலர் ஆறுதல் கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ நேற்று போட்டியில் நடந்ததா அல்லது மற்ற ஐபிஎல் சீசனில் நடந்ததா என்பது குறித்து முழு விவரம் தெரியவில்லை.

    இதனை பார்க்க எங்களுக்கே கஷ்டமாக உள்ளது என சிஎஸ்கே அணி ரசிகர்கள் கமெண்ட் செய்தனர். மேலும் விராட் கோலிக்காகவாவது ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர்.
    • பயிற்சியை முடித்து கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஹோட்டலுக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் அணி வீரர்கள் பயிற்சி செய்து விட்டு ஓய்வு எடுக்க ஹோட்டலுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் பயிற்சியை முடித்து கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற பஸ் டிராபிக்கிள் சிக்கியது.

    அப்போது அந்த இடத்திற்கு ஹூரோ மாதிரி வந்த சன்னி என்ற ரசிகர் டிராபிக்கை சரி செய்தார். அவரது செயலை பஸ்சில் இருந்து பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் அவருக்கு நன்றியும் தெரிவித்தனர்.

    இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அந்த வீடியோவில் நன்றி சன்னி பாய் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    • 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றனர்.
    • இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் ஜெய்ப்பூர் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஆண்டுகளாக தோல்வியை சந்தித்து வருகிறது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு ஜெய்ப்பூர் மைதானத்தில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் மோதிய அனைத்து போட்டிகளிலுமே மும்பை அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது.

    இதனால் இன்றைய போட்டியிலாவது மும்பை அணி வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.

    • குகேஷ் தனது 12 வயதில் சாதாரண மாஸ்டர் பட்டத்தை வென்றார்.
    • 17 வயதில் கேன்டிடேட் போட்டியில் பட்டம் வென்று இளம் வீரர் என்ற வரலாற்றினை படைத்தார்.

    கேன்டிடேட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேசுக்கு ரூ.78.5 லட்சம் பரிசுத் தொகை கிடைத்தது.

    குகேஷ் தனது 12 வயதில் சாதாரண மாஸ்டர் பட்டத்தை வென்றார். இதன் மூலம் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டரான உலகின் 3-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். தற்போது 17 வயதில் கேன்டிடேட் போட்டியில் பட்டம் வென்று இளம் வீரர் என்ற வரலாற்றினை படைத்தார்.

    மேலும் உலக செஸ் சாம்பியன் போட்டியில் விளையாடும் இளம் வீரர் என்ற புதிய வரலாற்றையும் படைத்துள்ளார்.

    • நீங்கள் இரவு நேர பார்ட்டியில் கலந்து கொண்டால், காலையில் உங்களால் எப்படி விளையாட முடியும்?.
    • மே-ஜூன் மாதம் அடிக்கும் வெயிலில் எப்படி மதியம் போட்டியில் விளையாட முடியும்?.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா பிரபலமான வீரராக திகழ்ந்தவர். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இவரது பெயர் இடம் பிடித்துள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியில் இருந்துள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா, சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. ஆர்சிபி, டெல்லி, பஞ்சாப், லஎஸ்ஜி அணிகள் கோப்பையை இதுவரை வென்றதில்லை.

    இந்த நிலையில் நைட் பார்ட்டியில் கலந்து கொள்ளும் அணிகள்தான் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என ரெய்னா தெரிவித்துள்ளார்.

    ஒரு பேட்டியின்போது அவர் கூறியதாவது:-

    சென்னை ஒருபோதும் பார்ட்டியில் கலந்து கொண்டது கிடையாது. இதனால்தான் அவர்கள் மிகவும் வெற்றி பெற்ற அணியாக திகழ்கிறார்கள். 2 முதல் 3 அணிகள் பார்ட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. அதனால்தால் அவர்கள் இன்னும் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை. ஆர்சிபி-ஐ கூறுகிறீர்களா? என்ற கேட்டதற்கு, இல்லை. அங்கு சில அணிகள் கோப்பைகளை வெல்லவில்லை. அவர்கள் பார்ட்டியில் மிகப்பெரிய அளவில் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதைச் செய்யாது. அதனால்தான் ஐந்து ஐபிஎல் சாம்பியன்ஸ், 2 சாம்பியன்ஸ் டிராபி லீக் டிராபிகள் ஆகியவற்றை வென்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐந்து கோப்பைகள் வென்றுள்ளது.

    நீங்கள் இரவு நேர பார்ட்டியில் கலந்து கொண்டால், காலையில் உங்களால் எப்படி விளையாட முடியும்?. இரவு முழுவதும் பார்ட்டியில் கலந்து கொண்டால், மே-ஜூன் மாதம் அடிக்கும் வெயிலில் எப்படி மதியம் போட்டியில் விளையாட முடியும்?.

    மொத்த அணியும் நள்ளிரவு பார்ட்டியில் கலந்து கொள்ளாமல் இருந்தது. நாங்கள் இந்தியாவுக்காக விளையாடியுள்ளோம். அது எங்கள் மனதில் இருக்கும்.

    இவ்வாறு சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ, குஜராத் அணிகள் தலா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடம் வகிக்கிறது.

    ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் ஆர்சிபி-யை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீழ்த்தியிருந்தது. 2-வது போட்டியில் பஞ்சாப் அணியை குஜராத் டைட்டன்ஸ் வீழ்த்தியிருந்தது.

    ஆர்சிபி-யை வீழ்த்தியன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா 7 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று 2-வது இடம் வகிக்கிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ஏழு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தாவிற்கு அடுத்த இடமான 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏழு போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ, குஜராத் அணிகள் தலா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் சிஎஸ்கே (ரன்ரேட்= +0.529), லக்னோ (ரன்ரேட்= +0.123), குஜராத் (ரன்ரேட்= -1.055) அணிகள் முறையே 4 முதல் 6 இடங்களை பிடித்துள்ளன.

    மும்பை 3 வெற்றிகள் மூலம் (ரன்ரேட்= -0.133) 7-வது இடத்தையும், டெல்லி 3 வெற்றிகள் மூலம் (ரன்ரேட்= -0.477) 8-வது இடத்தையும், பஞ்சாப் அணி 2 வெற்றிகள் மூலம் 9-வது இடத்தையும் பிடித்துள்ளன. ஆர்சிபி 8 போட்டிகளில் விளையாடி ஒரேயொரு வெற்றி மூலம் கடைசி இடததை பிடித்துள்ளது.

    ×