என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாய்லாந்தில் பைக் வெடிகுண்டு தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்22 Jan 2018 6:24 AM GMT (Updated: 22 Jan 2018 6:24 AM GMT)
தாய்லாந்தின் மார்க்கெட் பகுதியில் இன்று நிகழ்ந்த பைக் குண்டுவெடிப்பில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலியாகினர்.
யாலா:
தாய்லாந்தில் மலேசிய எல்லையை ஒட்டியுள்ள மூன்று மாகாணங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்த மாகாணங்களுக்கு கூடுதல் சுயாட்சி கேட்டு கடந்த 2004-ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெறுகிறது. இந்த மோதல் மற்றும் வன்முறைத் தாக்குதல்களில் இதுவரை சுமார் 7000 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் புத்தர்கள் மற்றும் முஸ்லிம்கள் பரவலாக வசிக்கும் யாலா நகரின் மார்க்கெட் வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் இன்று திடீரென வெடித்துச் சிதறியது. இதில் கடைகள் மற்றும் கடைகளின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் கடுமையாக சேதம் அடைந்தன.
பொதுமக்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யாலா நகரில் இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். #Tamilnews
தாய்லாந்தில் மலேசிய எல்லையை ஒட்டியுள்ள மூன்று மாகாணங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்த மாகாணங்களுக்கு கூடுதல் சுயாட்சி கேட்டு கடந்த 2004-ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெறுகிறது. இந்த மோதல் மற்றும் வன்முறைத் தாக்குதல்களில் இதுவரை சுமார் 7000 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் புத்தர்கள் மற்றும் முஸ்லிம்கள் பரவலாக வசிக்கும் யாலா நகரின் மார்க்கெட் வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் இன்று திடீரென வெடித்துச் சிதறியது. இதில் கடைகள் மற்றும் கடைகளின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் கடுமையாக சேதம் அடைந்தன.
பொதுமக்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யாலா நகரில் இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X