என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 வீரர்கள் பலி
Byமாலை மலர்21 Jan 2018 9:05 PM GMT (Updated: 21 Jan 2018 9:05 PM GMT)
அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ‘அப்பாச்சி’ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் ராணுவ வீரர்களான விமானியும், இணை விமானியும் உயிரிழந்தனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ்:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘அப்பாச்சி’ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது.
நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு நடந்த இந்த விபத்தில், ராணுவ வீரர்களான விமானியும், இணை விமானியும் உயிரிழந்தனர். அவர்களது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.
அவர்கள் இருவரும் கொலராடோவில் போர்ட் கர்சானை தலைமையிடமாக கொண்ட படைப்பிரிவில் பணியாற்றி வந்தவர்கள் என்றும், வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டபோதுதான் விபத்து நடந்து உள்ளது என்றும் அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், அரிசோனா மாகாணத்தில் உள்ள போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘ஏஎச்-64’ ரகத்தை சேர்ந்தது. இந்த விபத்து குறித்து அமெரிக்க ராணுவம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது என அதன் செய்தி தொடர்பாளர் ஜேசன் பிரவுன் ஒரு அறிக்கையில் கூறி உள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘அப்பாச்சி’ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது.
நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு நடந்த இந்த விபத்தில், ராணுவ வீரர்களான விமானியும், இணை விமானியும் உயிரிழந்தனர். அவர்களது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.
அவர்கள் இருவரும் கொலராடோவில் போர்ட் கர்சானை தலைமையிடமாக கொண்ட படைப்பிரிவில் பணியாற்றி வந்தவர்கள் என்றும், வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டபோதுதான் விபத்து நடந்து உள்ளது என்றும் அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், அரிசோனா மாகாணத்தில் உள்ள போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘ஏஎச்-64’ ரகத்தை சேர்ந்தது. இந்த விபத்து குறித்து அமெரிக்க ராணுவம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது என அதன் செய்தி தொடர்பாளர் ஜேசன் பிரவுன் ஒரு அறிக்கையில் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X