என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் பலி
Byமாலை மலர்21 Jan 2018 1:20 PM GMT (Updated: 21 Jan 2018 1:20 PM GMT)
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஹெராத் மாகாணத்தில் வேலை செய்வதற்காக ஒரு வாகனத்தில் 10-க்கு மேற்பட்டோர் இன்று பயணம் செய்து கொண்டிருந்தனர்.
குல்ரான் மாவட்டம் அருகே வந்த போது, அந்த வாகனத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த திடீர் தாக்குதலில் அதில் பயணம் செய்த அப்பாவி பொதுமக்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.
இதுதொடர்பாக மீட்பு படையினர் கூறுகையில், ஹெராத் மாகாணத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரிவித்துள்ளனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X