என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென் ஆப்பிரிக்காவில் மர்ம நோய்க்கு 60 பேர் பலி
Byமாலை மலர்13 Jan 2018 10:25 PM GMT (Updated: 13 Jan 2018 10:25 PM GMT)
தென் ஆப்பிரிக்காவில் லிஸ்டீரியோசிஸ் அல்லது லிஸ்டீரியா என்ற மர்ம நோய் தாக்கியதில் 60 பேர் பலியாகி உள்ளனர்.
நியூயார்க்:
தென் ஆப்பிரிக்காவில் லிஸ்டீரியோசிஸ் அல்லது லிஸ்டீரியா என்று அழைக்கப்படுகிற மர்ம நோய், மனிதர்களை தாக்கி வருகிறது.
இந்த நோய்க்கு அங்கு 60 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 750 பேருக்கு இந்த நோய் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவல்களை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்து உள்ளது.இந்த நோய்க்கு காரணமான பாக்டீரியா, மண், தண்ணீர், பால்பண்ணை பொருட் கள், கடல் உணவு, பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றில் இருப்பது தெரிய வந்து உள்ளது.சின்னஞ்சிறு குழந்தைகள்தான், பெரும்பாலும் இந்த நோயின் இலக்காக இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டியன் லின்ட்மீயிர் தெரிவித்து உள்ளார்.இந்த நோய் தாக்கியவர்களில் 40 சதவீதத்தினர் குழந்தைகள் தான் என்றும் அவர் கூறி உள்ளார்.
லிஸ்டீரியோசிஸ் கடுமையான நோய் என்றபோதிலும்கூட, அது தடுக்கக்கூடியது, குணப்படுத்தக்கூடியதுதான் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில், “இந்த நோய் மிகப்பெரிய சவாலாக அமைந்து உள்ளது. இது சுகாதாரத்துறையில் மட்டுமல்லாது எல்லா துறைகளையும் உள்ளடக்கியது” என்றும் கிறிஸ்டியன் லின்ட்மீயிர் கூறி உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் லிஸ்டீரியோசிஸ் அல்லது லிஸ்டீரியா என்று அழைக்கப்படுகிற மர்ம நோய், மனிதர்களை தாக்கி வருகிறது.
இந்த நோய்க்கு அங்கு 60 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 750 பேருக்கு இந்த நோய் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவல்களை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்து உள்ளது.இந்த நோய்க்கு காரணமான பாக்டீரியா, மண், தண்ணீர், பால்பண்ணை பொருட் கள், கடல் உணவு, பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றில் இருப்பது தெரிய வந்து உள்ளது.சின்னஞ்சிறு குழந்தைகள்தான், பெரும்பாலும் இந்த நோயின் இலக்காக இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டியன் லின்ட்மீயிர் தெரிவித்து உள்ளார்.இந்த நோய் தாக்கியவர்களில் 40 சதவீதத்தினர் குழந்தைகள் தான் என்றும் அவர் கூறி உள்ளார்.
லிஸ்டீரியோசிஸ் கடுமையான நோய் என்றபோதிலும்கூட, அது தடுக்கக்கூடியது, குணப்படுத்தக்கூடியதுதான் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில், “இந்த நோய் மிகப்பெரிய சவாலாக அமைந்து உள்ளது. இது சுகாதாரத்துறையில் மட்டுமல்லாது எல்லா துறைகளையும் உள்ளடக்கியது” என்றும் கிறிஸ்டியன் லின்ட்மீயிர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X